Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனக் குரங்கு - அனுபவப் பகிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மனம் ஒரு குரங்கு என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். பெண்கள் பொது வேளைகளில் ஈடுபட்டாலே ஆண்களுக்கு அவர்கள் மேல் ஒரு எகத்தாளம் தோன்றிவிடுகிறது. மாவீரர் மாதத்தில் நிகழ்வுகள் பழகுவதற்காக இரவில் நேரம் பிந்தியே வீடு வரவேண்டி இருக்கும். சிலவேளைகளில் தொடருந்து இல்லாவிடில் கூடவரும் நண்பர்கள் வீட்டிலேயே எம்மைப் பத்திரமாகக் கொண்டுவந்து விடுவார்கள். அப்படி எம்மைக் கூட்டிக்கொண்டு வருபவர் சமூகத்தில் நல்ல பெயரோடு வாழ்பவர். ஒருநாள் அவருடன் வரும்போது ஒருவிடைத்தைப் பற்றி அலசிக்கொண்டு வந்தோம் .அவர் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லாததால் நான் அவருடன் அதிக தர்க்கம் செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அவரைத் திட்டியபின் எனக்கே பாவமாக இருந்ததால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ அண்ணா எண்டு சொன்னன். உடனே அவர் நீங்கள் என்னை அடித்தால்க் கூட எனக்கு உங்கள் மேல் கோபம் வராது என்று கூறியதில் எனக்கே பாவமாக் கிடந்தது.

அடுத்த வாரமும் அவரே எம்மைக் கூட்டிப் போவதாகச் சொன்னபோது ரெயின் ஓடுதுதானே நாங்கள் அதில போறம் என்று சொன்னேன். இந்த இருட்டுக்கை நாங்கள் தான் எல்லாருக்கும் பொறுப்பு கவனமா வீட்டை சேர்க்கவேணும் எண்டார் அவர். நான் என்ன குமர்ப் பெட்டையே எனக்குப் பயமில்லை என்றேன் நான். என் பிள்ள நீங்கள் இருக்கிற இடத்தில தானே அவரும் இருக்கிறவர்.போய் வாசல்ல இறங்கிறதுக்கு பிகு பண்ணுறியள் எண்டதோட நான் காரில் போகச் சம்மதித்தேன்.

எனக்குக் காரில அல்லது பஸ்சில பின்னால இருந்தால் தலை சுற்றும். அதனால அவற்றை கார்ல முனனால் போய் ஏறினான். எனது மகளும் இன்னொரு தாத்தாவும் பின் இருக்கையில். இரவு பத்தரை.விடியத்தொடங்கி ரிகேர்சல் பார்த்ததால் களைப்பு. சரி காரும் நல்லதுதான் என மனதுள் நினைத்தபடி வடிவாச் சாய்ந்து கண்களை மூடுகிறேன். ஒரு பத்துப் பதினைந்து நிமிடம் போயிருக்கும். இயக்கப் பாட்டுப் போட்டிருந்தவர் பக்கென்று நிண்டுது. என் காலில் உரசியபடி டாச்போட்டைத் திறந்தவுடன் நான் திடுக்கிட்டுப் போய் விளித்து என்ன அண்ணா என்றேன். cd தேடினனான் என்றார். சொல்லிப்போட்டுச் செய்யுங்கோ அண்ணா என்றுவிட்டு என் காலை காரின் இடப்பக்கமாக ஒட்டியபடி வைத்துக்கொண்டு இருந்தேன்.

எனது மகளும் ஐயாவும் நித்திரையாகி விட்டினம். இவர் போட்ட பாட்டு காதல்ப் பாட்டுகள் எனக்குச் சினமாக இருந்தாலும் என் அண்ணா இயக்கப் பாட்டு போடுங்கோவன் என்றேன். நீங்கள் ஒருத்தரும் கதைக்கிறியல் இல்லை இந்தப் பாடுகள் தான் நித்திரை தூங்காது எண்டு அவர் சொல்லவும் தூங்காத கண்ணென்று ஒன்று என்ற பாடல் தொடங்கிச்சுது. இது என்னடா கோதாரி எண்டு மனதுக்குள்ளை சொல்லிக்கொண்டு கண்ணை மூடிக் கிடந்தான். நல்ல பாட்டேல்லே சுகி என்று அவர் கேட்க ஓம் அண்ணா என்று அண்ணாவில் கொஞ்சம் அழுத்தம் குடுத்துச் சொன்னேன். அந்தப் பாட்டுமுடிய ஆயிரம் நிலவேவா.சுகி நல்ல பாட்டு கேக்கிறியளோ என்றார். ஓம் என்று ஒற்றைப் பதிலைச் சொல்லிவிட்டு பேசாமல் நித்திரைபோல் இருந்தேன். அடுத்தபாட்டு நாணமோ இன்னும் நாணமோ. அதுக்கு அவரும் சேர்ந்து படத் தொடங்கீட்டார். என்பக்கம் திரும்பி அவர் பாடுவது எனக்குத் தெரிகிறது. மூதேவி உன்னைப் பாத்து எனக்கேன் நாணம் என்று மனதுள் திட்டியபடி பேசாமல் இருக்கிறேன். அதுமுடிய உயிரே உயிரே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு எண்ட பாட்டு. எனக்கு அந்தப் பாட்டு நல்லாப் பிடிக்கும். மனதுள் பாட்டை இரசிக்க நினைத்த உடனேயே கர்ண கடூரக் குரலில் அவர் தானும் சேர்ந்து பாட வெளிக்கிட்டுட்டார். எனக்கு வந்த கோவத்துக்கு அண்ணா நித்திரை வாறநேரம் அந்தப் பாட்டையே கேட்க முடியேல்ல அதுக்குள்ளே நீங்கள் வேற. நிப்பாட்டுங்கோ அண்ணா பாட்டை என்று நான் கொஞ்சம் உறுக்கியே சொல்லிப் போட்டன்போல. அதோட cd உம் நிண்டிட்டுது.அவற்றை பாட்டும் நிண்டிட்டிது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை என்றுமே ஒரு எல்லைக்குமேல் அனுமதிக்கக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டிய பதிவு..! நன்றிகள் சுமோ(கி) அக்கா..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு பேப்பரில் எழுதும் சுகி அக்காவோ?

நம்ப மாட்டன் .அதுவும் அந்த மாதத்தில் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை,ரதி,அர்ஜுன் அண்ணா, நீங்கள் நம்பாவிட்டால் நான் இனி வீடியோவைத்தான் சுத்திக் காட்ட வேணும் அர்ஜுன் அண்ணா. நான் சுகியில்லை ரதி. சும்மா வாயில் வந்த பெயரைப் போட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச விட்டுப் பிடிச்சு செருப்படி குடுத்திருக்கலாம் (ஒரு தூண் கிழிஞ்சிருக்கும் )

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் கிடைத்தால் சில ஆண்கள் சஞ்சலம் கொள்வதுண்டு.

அனுபவத்தை பகிர்ந்து கொண்டது மற்றவையளுக்கும் ஒரு விழிப்பு உணர்வைத் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாய் சாய் நாட்டில வர வர ஒருத்தனுக்கும் taste இல்லாம போகுது......

என்ன கொடுமை இது

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சுமோ!

குரங்கு மரத்திற்கு மரம் தாவுகின்றது, அதன் வயிற்றிற்காக!

குரங்கை உதாரணமாகக் காட்டிக், குரங்கைக் கேவலப் படுத்தியதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்! :D

நீங்கள், உங்கள் செருப்பைப் பாவித்திருக்க வேண்டும், என்பதே எனது கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சும்மா பிரின்ட்லி ஆ பேசி இருக்கலாம் தானே ஏன் பாஸ் செருப்ப தூக்கணும் அது இதெண்டு மிரட்டுரிங்க? எங்க தமிழ் பொண்ணுங்களே இப்பிடி தான் எல்லாத்தையும் சீரியஸ் ஆ எடுக்கிறது :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இன்னும் சுண்டலைக் காணேல்லை எண்டு பாத்துக்கொண்டு நிண்டனான்.

இனிமேல் நான் குரங்கைக் கூப்பிடமாட்டன் புங்கை. என்னிலையும் பிழை இருக்குத்தானே. கண்டவனின் வாகனத்தில் முன்னுக்குப் போய் இருக்காமல் ரெயினிலேயே போய் இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

[ஃஉஒடெ நமெ='மெசொபொத்தேமியா சுமேரியர்' டிமெஸ்டம்ப்='1351808005' பொஸ்ட்='819568']

என்னடா இன்னும் சுண்டலைக் காணேல்லை எண்டு பாத்துக்கொண்டு நிண்டனான்.

இனிமேல் நான் குரங்கைக் கூப்பிடமாட்டன் புங்கை.

[/ஃஉஒடெ]

அப்ப சுண்டலை கூப்பிடப் போறீங்களா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீச் சீ கேள்விப்பட்டா குரங்கு கோவிக்கும் எல்லோ :D

  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமாரனின் எழுத்துக்களில் இருந்து:

வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் பழகிக்கொண்டிருக்கும் வேளையில் பெண் மனது எப்படியோ ஆனால் ஆணின் மனதில் ஏதாவது ஒரு மூலையில் கண நேரமாவது சபல எண்ணமோ, காம எண்ணமோ வந்து நிற்கும். அதட்டினால் மின்னலென மறையும். சகோதர பாசத்தோடு பழகினால் கூட இந்த எண்ணம் எட்டிப் பார்த்து மறைகிறது. இது சராசரி மனிதன் எல்லோருக்கும் பொதுவானது. நல்ல மனதுடையவன் தோன்றிய எண்ணத்தை அடக்கி மிரட்ட மறையும், அசிங்க எண்ணமுள்ளவனோ அதனை ஏற்று ஆராதித்து கற்பனையிலேயே இரசிக்கவும் செய்கிறான்.

-------------

நான் poker face ஐ (எண்ணங்களையும், உணர்வுகளையும் முகத்தில் வெளிப்படையாக காட்டாமல் இருப்பது) வைப்பதில் அடிக்கடி தோல்வியடைந்ததை என்னுடன் பழகிய பெண்களின் முகங்களில் கண்டிருக்கின்றேன். :icon_mrgreen:

பெரும்பான்மையானவர்கள் உத்தமரில்லை. (மிகுதிச் சிறுபான்மையானவர்களைக் கணிக்க முடியவில்லை)

மேலே கிருபன் குறிப்பிட்ட பாலகுமாரனின் எழுத்து உண்மை.

ஆண்களை என்றுமே ஒரு எல்லைக்குமேல் அனுமதிக்கக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டிய பதிவு..! நன்றிகள் சுமோ(கி) அக்கா..

அனுபவஸ்தர் இசை சொன்னா உண்மையாகத்தான் இருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவஸ்தர் இசை சொன்னா உண்மையாகத்தான் இருக்கும். :D

நீச்சல் குளத்தில் தொபுக்கடீர் என்று குதிக்கும் ஒரு சில சந்தர்ப்பங்கள் வாய்த்தன..! :rolleyes: ஆனால் அவ்வாறு குதிக்காமல் விட்டதில் இன்று மகிழ்ச்சி..! :D

நீச்சல் குளத்தில் தொபுக்கடீர் என்று குதிக்கும் ஒரு சில சந்தர்ப்பங்கள் வாய்த்தன..! :rolleyes: ஆனால் அவ்வாறு குதிக்காமல் விட்டதில் இன்று மகிழ்ச்சி..! :D

இதெல்லாம் மாயமான்கள். பெரிய பிரச்சனையில்தான் கொண்டு விடும். இருக்கிற சந்தோசமும் பறிபோய்விடும்.

கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்ட ஒரு சோகம் :( மனதின் ஓரத்தில் படிந்திருந்தாலும் :lol: , நிம்மதியாக இருப்பது மகிழ்ச்சி.

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் வாய்ப் பேச்சில் மட்டும்தான் வல்லவர்கள் போல் இருக்கே :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நீச்சல் குளத்தில் தொபுக்கடீர் என்று குதிக்கும் ஒரு சில சந்தர்ப்பங்கள் வாய்த்தன..! :rolleyes: ஆனால் அவ்வாறு குதிக்காமல் விட்டதில் இன்று மகிழ்ச்சி..! :D

சுத்த வேஸ்ற் பார்ட்டி.. <_< நீந்தி கரையேறிட்டு பிறகு நாங்களெல்லாம் அப்பிடியில்லை சுத்தமானவர்கள் என்று கதை விட்டால்தான் உண்மையான ஆண்மகன். :lol:

நீங்கள் எல்லாம் வாய்ப் பேச்சில் மட்டும்தான் வல்லவர்கள் போல் இருக்கே :D :D :D

ஆண் இனத்திற்கே அவமானம் :o . நனென்றால் அந்த கார் ஓடிவர் மாதிரி பாட்டு போட்டு பாட்டு படியெல்லாம் மினக்கெட்டிருக்கமாட்டனாக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த வேஸ்ற் பார்ட்டி.. <_< நீந்தி கரையேறிட்டு பிறகு நாங்களெல்லாம் அப்பிடியில்லை சுத்தமானவர்கள் என்று கதை விட்டால்தான் உண்மையான ஆண்மகன். :lol:

நாங்கள் ஆச்சாரமாக வளர்ந்ததால் தைரியம் கொஞ்சம் கம்மி..! :lol:

நீங்கள் எல்லாம் வாய்ப் பேச்சில் மட்டும்தான் வல்லவர்கள் போல் இருக்கே :D :D :D

மாற்றான் தோட்டத்து மல்லிகைகளின் வாசம் நுகரப் போனவர்கள் பட்ட பாட்டைக் கண்ட படிப்பினை.

மாடியில இருந்து குதிச்செல்லாம் லோல் பட்டதாக அண்மையில் சாத்திரி கூட ஒரு கதை எழுதியிருந்தார். :D

காரில ஏத்திட்டுப் போய் ஹரிகரனின் குரலில் எல்லாம் பாட்டுப் படிப்பது தேவைதானா? :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றான் தோட்டத்து மல்லிகைகளின் வாசம் நுகரப் போனவர்கள் பட்ட பாட்டைக் கண்ட படிப்பினை.

மாடியில இருந்து குதிச்செல்லாம் லோல் பட்டதாக அண்மையில் சாத்திரி கூட ஒரு கதை எழுதியிருந்தார். :D

காரில ஏத்திட்டுப் போய் ஹரிகரனின் குரலில் எல்லாம் பாட்டுப் படிப்பது தேவைதானா? :lol:

அதானே.. நல்லா உறைக்கிற மாதிரி கேளுங்கோ.. :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமடல் face book சேவை எல்லாம் இருக்க நீங்கள் எல்லாம் ஏன் பாட்டுப் பாடப் போறியள் தம்பியவை. :D

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையான எழுத்து சுமேரியர். இலகுவாக எழுதிவிட்டீர்கள். உங்களுடைய பதிவுகள் எல்லாமே வித்தியாசமாகவே இருக்கின்றன. நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டால் போச்சு சகாரா. எப்ப சந்திக்க[/size][size=5]லாம்.[/size] :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.