Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலை குனிந்து கொள்ளுவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்தென்ன

தரணி முழுவதும் பரந்திருந்தென்ன

தனக்கென நாடு தரணியில் தமிழனுக்கு இல்லையே

பரணி பாடிப் பகை முடித்தென்ன

போர்க்களம் கண்டு பகை முடித்தென்ன

பொட்டல் வெளிகூட எமக்கென இல்லையே

அடிமை விலங்கை அறுத்திட எண்ணி

அத்தனை வீரரும் ஆகுதியாயினர்

சுற்றம் துறந்து சுகங்கள் துறந்து

சூளுரைதே சூழ்பகை வெல்ல

தேசம் காக்க தம்மை ஈந்தனர்

எத்தனை எத்தனை ஆயிரம் வேங்கைகள்

நித்தமும் தம்மை நெக்குருக்கியே

நேசத்துடன் தம் தேசம் காத்திட

நெருப்பாற்றில் நீச்சல் போட்டனர்

தற்க்கொடையாளராய் தம்மை ஈந்து

தரணியில் தமக்கெனத் தடம் பதித்திட

கடற் புலிகளாய் கரும்புலிகளாய்

காரிருளிலும் காவியம் படைத்தனர்[/size]

[size=5]எத்தனை ஆண்டுகள் ஏக்கத்துடன் காத்திருந்தோம் [/size]

[size=5]எத்தனை எத்தனை ஈகைகள் செய்திருந்தோம் [/size]

[size=6]அத்தனையும் எத்தர்களால் அநியாயமானதுவே

ஓட்டுமொத்தமாய் எம்மினம் ஒழிந்துபோனதுவே

ஏன் இப்படி ஆனது எம் தேசம் யார் தந்தது இப்படிச் சாபம்

ஒற்றுமை இல்லாத் தமிழனால் ஒன்று படாத் தமிழனால்

அத்தனையும் அழிந்ததே அத்தனையும் அழிந்ததே

தமிழன் என்று சொல்லி நாம் தலை குனிந்து கொள்ளுவோம்

தரணி எங்கும் உள்ள நாம் தலை குனிந்து கொள்ளுவோம் [/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

முதல் நான்கு பகுதிகளும் சரியாக கொண்டு போயிருக்கின்றீர்கள் . இறுதி இரண்டு பகுதிகளும் குளம்பியிருக்கின்றன . இப்படி வந்தில் நன்றாக இருக்கும் . முதல் கவிதைக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் .

எத்தனை ஆண்டுகள்

ஏக்கத்துடன் காத்திருந்தோம்

எத்தனை ஈகைகள் செய்திருந்தோம்

அத்தனையும் எத்தர்களால் அநியாயமானதுவே

ஓட்டுமொத்தமாய் எம்மினம் ஒழிந்துபோனதுவே

ஏன் இப்படி ஆனது எம் தேசம் ??

யார் தந்தது இப்படிச் சாபம்??

ஒற்றுமை இல்லாத் தமிழனால் ஒன்று படாத் தமிழனால்

அத்தனையும் அழிந்ததே

அழிந்ததே அத்தனையும்

தமிழன் என்று சொல்லி நாம்

தலை குனிந்து கொள்ளுவோம்..........

தரணி எங்கும் தலை குனிந்து கொள்ளுவோம் ........

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்.. எனக்கு இப்படியான எதிர்மறைக் கருத்துக்கள் / எண்ணங்கள் கொண்ட வரிகளை அறவே பிடிக்காது..! :rolleyes:

மன்னிக்கவும்.. எனக்கு இப்படியான எதிர்மறைக் கருத்துக்கள் / எண்ணங்கள் கொண்ட வரிகளை அறவே பிடிக்காது..! :rolleyes:

அப்பா இது ஓக்கேயா .......

தலை குனிந்து நில்லடா .......தமிழன் என்று சொல்லடா :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா இது ஓக்கேயா .......

தலை குனிந்து நில்லடா .......தமிழன் என்று சொல்லடா :D

செல்லாது.. செல்லாது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலத்தில் என்னைத் திருத்திக் கொள்கிறேன் கோமகன். எனக்கே இது சரியில்லை என்று தோன்றியதுதான்.

அவசரத்தில் போடவேண்டும் என்று வேலை இடத்தில் எழுதியது. புதிய ஆக்கம் தருபவர்களை எல்லோரும் மன்னிபீர்கள் தானே. :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க முடியா எண்டு சொன்னா நீங்க எழுதிறதா நிறுத்தவா போறிங்க? :D

கவிதைக்கு நன்றிகள்.

கண்டிப்பாக புதிய தலைமுறைகள் தோன்றும், புதிய சிந்தனைகள் உருப்பெறும், எமக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையை எதிர்கால சந்ததி திருத்தி அமைக்கும், அதனூடாக உண்மையான விடுதலை கிடைக்கும்.

எமக்குள் ஒற்றுமை இல்லை என்பதை உண்மையில் உணர்கின்றவர்கள் அதனை போக்க தம் வீடுகளிலேயே ஆரம்பிக்க முடியும். பிள்ளைகளுக்கு சாதியத்தின் தீமைகளை உணர்த்தியும், வர்க்க சிந்தனையை பழக்காதும் (காசு உள்ளவர் இல்லாதவர் போன்ற வேறுபாடுகள்), வீட்டில் ஆண் - பெண் சமத்துவத்தினை நடை முறை பழக்க வழக்கங்களில் கொண்டு வந்தும் வளர்த்தாலே ஒற்றுமைக்குரிய பண்புகளில் அநேகமானவை வந்து விடும்.

கவிதைக்கு நன்றிகள்.

கண்டிப்பாக புதிய தலைமுறைகள் தோன்றும், புதிய சிந்தனைகள் உருப்பெறும், எமக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையை எதிர்கால சந்ததி திருத்தி அமைக்கும், அதனூடாக உண்மையான விடுதலை கிடைக்கும்.

எமக்குள் ஒற்றுமை இல்லை என்பதை உண்மையில் உணர்கின்றவர்கள் அதனை போக்க தம் வீடுகளிலேயே ஆரம்பிக்க முடியும். பிள்ளைகளுக்கு சாதியத்தின் தீமைகளை உணர்த்தியும், வர்க்க சிந்தனையை பழக்காதும் (காசு உள்ளவர் இல்லாதவர் போன்ற வேறுபாடுகள்), வீட்டில் ஆண் - பெண் சமத்துவத்தினை நடை முறை பழக்க வழக்கங்களில் கொண்டு வந்தும் வளர்த்தாலே ஒற்றுமைக்குரிய பண்புகளில் அநேகமானவை வந்து விடும்.

முற்றிலும் உண்மை ..................

ஒற்றுமைக்காக உழைப்போம். முதலில் மாவீரர்களுக்கு ஓன்றுபட்டு அஞ்சலி செலுத்துவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நன்றி [/size][size=5]கோமகன் நிழலி இசை தமிழ் வந்தியத்தேவன்.[/size]

[size=5]சுண்டலின் விருப்பத்துக்கிணங்க நான் இனிமேல் கவிதை எழுதப் போவதில்லை. :D[/size]

[size=5]நிழலி நீங்கள் கூறியவை எல்லாம் எம் குடும்பத்தில் இரு தலைமுறையாக கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். :)[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

நெகரிவ் ஆக கருத்துகளை சொல்லி ஒருவரின் நம்பிக்கையை எவ்வாறு மழுங்கடிக்க கூ டாதோ அதே அளவு இல்லாத பொல்லாததுகளும் சொல்லி வீண் நம்பிக்கைகளையும் வளர்க்க கூடாது .

உங்கள் கவிதை உண்மையை சற்று உறைக்க சொல்லுகின்றது .உண்மை உறைத்தாலும் கற்பனையில் வைத்திருப்பதை விட அது மேல் .

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]---------[/size]

[size=6]அத்தனையும் எத்தர்களால் அநியாயமானதுவே

ஓட்டுமொத்தமாய் எம்மினம் ஒழிந்துபோனதுவே[/size]

[size=6]ஏன் இப்படி ஆனது எம் தேசம் யார் தந்தது இப்படிச் சாபம்

ஒற்றுமை இல்லாத் தமிழனால் ஒன்று படாத் தமிழனால்

அத்தனையும் அழிந்ததே அத்தனையும் அழிந்ததே

தமிழன் என்று சொல்லி நாம் தலை குனிந்து கொள்ளுவோம்

தரணி எங்கும் உள்ள நாம் தலை குனிந்து கொள்ளுவோம் [/size]

உண்மையான வரிகள். கவிதைக்கு, நன்றி சுமோ...

எந்தக் காலத்திலும் தமிழன் இனமாக வாழ்ந்த வரலாறு இல்லை. பெரு நில மன்னர்கள் குறுநில மன்னர்கள் பல்வேறு சமயப்பிண்னணிகளை கொண்டவர்கள் தம்மை முன்னிலைப் படுத்தி வரலாற்றில் தடம் பதித்துள்ளார்கள் தவிர தமிழன் என்ற இன அடிப்படையில் இல்லை. இனத்தை முன்னிலைப்படுத்தி ஒரு காலத்திலும் நாம் வாழ்ந்ததில்லை. சிங்களவர்களே நீங்கள் எல்லோரும் தமிழர்கள் என்று அடிபோட்டார்கள். இது தலைகுனிவும் இல்லை எதிர்மறையும் இல்லை இதுவே எமது இயல்பு. வருத்தப்பட எதுவும் இல்லை. என்றைக்கு என்னுமொருவன் சொல்லாமல் எமக்கு நாம் தமிழர் என்று உணர்வு வருகின்றதோ அன்றைக்கு விடிவுக்கான பாதை தெரியும். சாதி சமயம் வர்க்கம் பிரதேசவாதங்கள் என்றதை கடந்து இந்த உலகமயமாக்கல் என்னும் ஏழு கடல் ஏழு மலை தாண்டி அந்த உணர்வு உயிர் பிழைக்கவேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.