Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரைக்குவரும் நட்சந்திரங்கள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரை ஆவியாக்கியபடி

ஒரு காலம்

வறண்டுபோய் கிடக்கிறது..

ஊரெல்லாம்

ஒருபாட்டம் மழைவராதா என்று

மண்ணை இறுகப்பிடித்தபடி

ஈரப்பதன் தேடி

வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன

திசைகளை மூடி

வீசும் அணல்காற்றில்

தீய்ந்து தீய்ந்து

ஒவ்வொரு இலைகளாக

கருகி உதிர்கின்றன

அணலாய் கொதித்துருகும்

எல்லாக்கடல்களில் இருந்தும்

ஆவியாகின்றன

கண்ணீர்த்துளிகள்

இனி முட்டி முடியாமல்

ஒரு திசையில்

விரைவில் இருட்டும்

அப்போ பெய்யும்..

பெய்யத்தானே வேண்டும்

ஒரு பெரும் மழை

பயிர் பச்சை தழைக்க

உக்கிப்போய் கிடக்கும்

உதிரம் காய்ந்த தேசத்தின்

சருகுகளை உரசியபடி

காற்று சடசடவென்று

உறுமிக்கொண்டு வீசும்

வெட்டி மின்னல் பாயும்போது

வெறும் கோடை என்ன செய்யும்..?

ஒற்றைவானம் என்ன

ஓராயிரம் வானமும்

மொத்தமாய் பிளந்துவந்து

கடலை சொரியும்

பார்

உள்ளே ஊமையாய்

எரிந்துகொண்டிருப்பது

பெருந்தீ..

ஒரு புள்ளியில்

வெடித்துப் பிழந்து

விண்ணோக்கிப்

பாயும்போது

மின்னல் தொடங்கும்..

முக்கி முக்கி

இடிமுழக்கத்தை

ஈனாமல் போக

எம்முன்னே இருப்பது

மலட்டு வானமல்ல

கண்ணீர்களால்

கருக்கொண்ட

கருவானம்..

எனக்கு தெரியும்

ஒருகாலத்தை

கடந்துபோவது

அவ்வளவு இலகுவல்ல

நாங்கள்

ஒரு கொடிய

கோடையைக் கடக்கிறோம்

மாரி கருக்கட்டுகிறது

வா குடையைத்தேடுவோம்..

மழைவரும்போது

கல்லறைகளைத்தேடி

தரைக்குவரும் நட்சத்திரங்களை

தரிசிக்க செல்லவேண்டும்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கல்லறைகளைத்தேடி[/size]

[size=4]தரைக்குவரும் நட்சத்திரங்களை[/size]

[size=4]தரிசிக்க செல்லவேண்டும்...[/size]

தரிசிக்க வேண்டிய நேரத்தில் மலர்ந்த கவிதை அழகு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தம்பி சுபேஸ்

அவர்கள் என்றும் எம் மனதில்

அவர்கள் நினைவு சுமந்து

அவர்கள் கனவு பலித்திட

சபதமெடுப்போம்........

நீண்ட நெடிய நாட்களின் பின்பு சத்தான கனக்கும் கவிதையை தந்த சுபேசுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் .

[size=5]நாங்கள்

ஒரு கொடிய

கோடையைக் கடக்கிறோம்[/size]

[size=5]மாரி கருக்கட்டுகிறது

வா குடையைத்தேடுவோம்..

மழைவரும்போது

கல்லறைகளைத்தேடி

தரைக்குவரும் நட்சத்திரங்களை

தரிசிக்க செல்லவேண்டும்... [/size]

நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மனசு கனக்கும் வரிகள் ...

விடுதலை வீச்சை விரைவாக்கும் வரிகள் ....

கடமையினை செய்ய தவறாதே என்று உணர்த்து வரிகள் ....

நன்றி சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]முக்கி முக்கி[/size]

[size=4]இடிமுழக்கத்தை [/size]

[size=4]ஈனாமல் போக[/size]

[size=4]எம்முன்னே இருப்பது[/size]

[size=4]மலட்டு வானமல்ல[/size]

[size=4]கண்ணீர்களால்[/size]

[size=4]கருக்கொண்ட[/size]

[size=4]கருவானம்.[/size]

கண்ணீர் மட்டுமல்ல, சுபேஸ்!

காய்ந்து போன 'செந்நீர்' தான் அதில் அதிகம்!

கருக்கட்டும் மேகம், கழுவித் துடைக்கட்டும், நம் துயர வாழ்வை!

நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் கோடைகளால் நிலம் பாலையாக மாற முதல் இந்த மழை வரவேண்டும்.

[size=4]கார்த்திகை மாதத்தில் எந்த இலட்சிய வேங்கை வீரர்களுக்காக கவிதை படைக்கும் உங்களுக்கு நன்றிகள். [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து மனதில் மாவீரர்கள்மேலான அன்பை,உணர்வை பகிர்ந்துகொண்ட கலைஞன் அண்ணா;ரதி அக்கா,நந்தன் அண்ணா,யாயினி அக்கா,நிழலி அண்ணா,தமிழினி அக்கா நன்றிகள்....

தரிசிக்க வேண்டிய நேரத்தில் மலர்ந்த கவிதை அழகு

நன்றி கறுப்பி வாசித்து மனதில் மாவீரர்கள்மேலான அன்பையும்,உணர்வையும் கருத்துக்களில் பகிர்ந்துகொண்டதிற்கு...

நன்றி தம்பி சுபேஸ்

அவர்கள் என்றும் எம் மனதில்

அவர்கள் நினைவு சுமந்து

அவர்கள் கனவு பலித்திட

சபதமெடுப்போம்........

நன்றி அண்ணா வாசித்து மனதில் மாவீரர்கள்மேலான அன்பையும்,உணர்வையும் கருத்துக்களில் பகிர்ந்துகொண்டதிற்கு...இன்னும் எத்தினை ஜென்மம் கிடைத்தாலும் அத்தனை ஜென்மங்களிலும் அவர்களை நினைக்கும் வரம் கிடைக்கணும்..

நீண்ட நெடிய நாட்களின் பின்பு சத்தான கனக்கும் கவிதையை தந்த சுபேசுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் .

நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நாங்கள்

ஒரு கொடிய

கோடையைக் கடக்கிறோம்[/size]

[size=5]மாரி கருக்கட்டுகிறது

வா குடையைத்தேடுவோம்..

மழைவரும்போது

கல்லறைகளைத்தேடி

தரைக்குவரும் நட்சத்திரங்களை

தரிசிக்க செல்லவேண்டும்... [/size]

நன்றிகள்

நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும் நம்பிக்கைக்கும்..

மனசு கனக்கும் வரிகள் ...

விடுதலை வீச்சை விரைவாக்கும் வரிகள் ....

கடமையினை செய்ய தவறாதே என்று உணர்த்து வரிகள் ....

நன்றி சுபேஸ்

நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும் அசையா நம்பிக்கைக்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் மட்டுமல்ல, சுபேஸ்!

காய்ந்து போன 'செந்நீர்' தான் அதில் அதிகம்!

கருக்கட்டும் மேகம், கழுவித் துடைக்கட்டும், நம் துயர வாழ்வை!

நன்றிகள்!

ம்ம்..எத்தனை எத்தனை ஆயிரம் பேரின் செந்நீர் விட்டு வளர்த்த பயிரல்லவா...

நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும் அசையா நம்பிக்கைக்கும்..

தொடர் கோடைகளால் நிலம் பாலையாக மாற முதல் இந்த மழை வரவேண்டும்.

ம்ம்..வரும்..நம்பிக்கைதானே வாழ்க்கை அண்ணா..நம் இனம் ஈழத்தில் தற்போது எதிர்கொள்ளும் தற்காலிகப் பிரச்சினைகள் தீரும்போது கண்டிப்பாக சிங்கள் அரசின் அடக்குமுறைகளுக்கெதிராக திரும்பும்..

நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும் நம்பிக்கைக்கும்..

[size=4]கார்த்திகை மாதத்தில் எந்த இலட்சிய வேங்கை வீரர்களுக்காக கவிதை படைக்கும் உங்களுக்கு நன்றிகள். [/size]

நன்றி அண்ணா வாசித்து மனதில் மாவீரர்கள்மேலான அன்பையும்,உணர்வையும் கருத்துக்களில் பகிர்ந்துகொண்டதிற்கு..

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ப கனிந்த கவிதை.

மாவீரர்கள் என்றும் நம் மனதில்.

சுபேஸ் மாவீரர் வாரத்தில் நல்ல கவிதையை தந்துள்ளீர்கள் நன்றி பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ப கனிந்த கவிதை.

நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்...

மாவீரர்கள் என்றும் நம் மனதில்.

சுபேஸ் மாவீரர் வாரத்தில் நல்ல கவிதையை தந்துள்ளீர்கள் நன்றி பகிர்வுக்கு

நன்றி அண்ணா வாசித்து மனதில் மாவீரர்கள்மேலான அன்பையும்,உணர்வையும் கருத்துக்களில் பகிர்ந்துகொண்டதிற்கு..

  • கருத்துக்கள உறவுகள்

பார்

உள்ளே ஊமையாய்

எரிந்துகொண்டிருப்பது

பெருந்தீ..

ஒரு புள்ளியில்

வெடித்துப் பிழந்து

விண்ணோக்கிப்

பாயும்போது

மின்னல் தொடங்கும்..

முக்கி முக்கி

இடிமுழக்கத்தை

ஈனாமல் போக

எம்முன்னே இருப்பது

மலட்டு வானமல்ல

கண்ணீர்களால்

கருக்கொண்ட

கருவானம்..

எனக்கு தெரியும்

ஒருகாலத்தை

கடந்துபோவது

அவ்வளவு இலகுவல்ல

நாங்கள்

ஒரு கொடிய

கோடையைக் கடக்கிறோம்

மாரி கருக்கட்டுகிறது

வா குடையைத்தேடுவோம்..

மழைவரும்போது

கல்லறைகளைத்தேடி

தரைக்குவரும் நட்சத்திரங்களை

தரிசிக்க செல்லவேண்டும்...

நீண்ட இடைவெளிக்குப்பின் முகங்காட்டும் கவிதை ஐம்பூதங்களின் ஆசியுடன் வேயப்பட்டிருக்கிறது. பாராட்டுக்கள் சுபேசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.