Jump to content

உழுந்துமா பிடி கொழுக்கட்டை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வாங்கின உழுந்தம் மா காலாவதியாகப் போகின்றது இன்னும் இரண்டு மாதத்தில் (கவனிக்காமல் வாங்கிவிட்டேன் :D) என்னடா செய்யலாமென்ற போது கிடைத்தது இது, நாளை செய்து பார்க்கனும்.[/size]

[size=4]2kg உழுந்த மா இருக்கு வேறு என்ன செய்யலாமென்று கூறுங்கள்[/size][size=4] ??[/size]

உழுந்துமா பிடி கொழுக்கட்டை

உழுந்துமா பிடிககொழுக்கட்டை

Koukoddai+with+full+cut+fruits.JPG

கொழுக்கட்டைகள் பலவிதம். இது சிறுவர்கள் தாங்களும் கூடவே வந்து பிடித்துத் தயாரிப்பதில் பங்களித்து மகிழக் கூடியது.

இடியப்ப மற்றும் புட்டு மா மிஞ்சினால் அவற்றை வீணாக்காது கொழுக்கட்டையாகப் பிடிப்பதுண்டு.

பலரும் அரிசி மாவில் செய்வர். உள்ளே பருப்பு வைத்துச் செய்வது மற்றொரு வகை.

இது அரிசி மாவுடன் உழுந்து மா கலந்து செய்தது.

[size=4]போசணையுடையது[/size]

சிவப்பு அரிசியில் மிகுந்த (365) கலோரி, மினரல்ஸ், விற்றமின்கள், அடங்கியுள்ளன. புரோட்டின் 8.6 சதவிகிதம், நார்ப்பொருள் 3.5 சதவிகிதம், [size=3]விற்ற மின் [/size]B1, B2, B6,[size=3]அடங்கியுள்ளன.[/size]

Koukoddai+with+fruits.JPG

சத்துச் செறிவான உழுந்துமாவுடன், பாசிப்பயறும் சேர்த்து செய்து கொண்டால் புரொட்டின் அளவு மேலும் அதிகரிக்கும். ஏனெனில் பாசிப்பயறு, [size=3]உழுந்து ஆகியவற்றில் 24 சதவிகிதம் புரதம் இருக்கிறது.

உழுந்தில் [/size]Vitamin A, B1 and B3, ஆகிய விற்றமின்களும், Potassium, Phosphorus and Calcium [size=3]ஆகிய மினரல்ஸ் [/size]உண்டு. ஓரளவு Sodium இருக்கிறது. இரும்புச் சத்து சிறிதளவு மட்டுமே உண்டு. 100 gm உழுந்திலிருந்து 347 கலோரி கிடைக்கும்.

பாசிப் பயறில் அதே அளவு கலோரி (347) கிடைக்கும். கல்சியம், மக்னீசியம், பொட்டசியம், பொஸ்பரஸ் ஆகிய மினரல்ஜ் உண்டு. நார்ப் பொருள் 16.3 சதவிகிதம் கிடைக்கிறது.

[size=4]சிற்றுண்டியாக[/size]

சினக்சுக்குப் பதில் ஈவினிங் உணவாக இவற்றைத் தயாரித்து குழந்தைகளும் பெரியவர்களும் உண்ணலாம்.

சுவைக்கு தேங்காய்த் துருவல், வெல்லம், வெண்ணெய் கலந்தால் தித்திக்கும்.

நீரிழிவு நோயாளர் வெல்லம் தவிர்த்து உப்பு சேர்த்து செய்தால் இரத்த குளுக்கோஸ் கூடாது இருக்கும்.

[size=4]தேவையான பொருட்கள்[/size]

Ulutham+parupu,+Pasi+parupu.JPG

வறுத்த அரிசிமா – 1 கப்

வறுத்த உழுந்துமா – ½ கப்

வறுத்த பாசிப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்

வெல்லம் - ¼ கப்

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ¼ கப்

உப்பு சிறிதளவு

[size=4]செய்முறை[/size]

பாசிப் பருப்பை 20 நிமிடங்கள் நீரில் ஊறவிடுங்கள்.

untitled.JPG

மா வகைகளுடன், வெல்லம், தேங்காய்த் துருவல், ஊறிய பருப்பு, வெண்ணெய் கலந்து கிளறுங்கள்.

சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கையால் கிளறி, சேர்த்து பிடிக்கும் பதத்தில் மாவைத் தயார்படுத்துங்கள்.

மாவைக் கையால் அமத்தி நீள்வடிவத்தில் பிடித்து ஓரத்தில் சங்கு போல விரல்களால் அமத்தி விடுங்கள். இவ்வாறே எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கௌ்ளுங்கள்.

ஸ்டீமர் அல்லது இட்லிப் பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி வந்ததும் கொழுக்கட்டைகளை வைத்து 15-20 நிமிடங்கள் அவித்து எடுங்கள்.

வறுத்த உழுந்து மா வாசத்துடன் பருப்பு, தேங்காய்த் துருவல் வெல்லமும் சேர்ந்து மணங் கமழும்.

சத்துச் செறிவான உழுந்துமா பிடிக் கொழுக்கட்டை வயிற்றைக் கிளறும்.

கையும் நகர்ந்து எடுத்து வாயில் தள்ளும். இனிப்பில் சொக்கி அடுக்கடுக்காக வயிற்றுக்குள் தள்ளுவீர்கள்

http://sinnutasty.bl...01_archive.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தகவல்களுக்கும் ........ பகிர்விற்கும் நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் அண்ணா..ரொம்ப மிச்சம்பிடிப்பியல் போல :D ..நன்றி அண்ணா அருமையான பகிர்விற்கு..உழுத்தம் மா மிகவும் சத்தான உணவு..ஈழத்தில் பொருளாதார தடைகளின் போது உழுத்தம்மா எங்களை ஆரோக்கியாமாக வைத்திருந்த உணவுகளில் ஒன்று..

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி உடையார்.

இப்பவும் நான் இரவுச் சாப்பாடாக இடைக்கிடை கொழுக்கட்டைகளை சாப்பிடுவது வழக்கம். முன்னர் சரஸ்வதி பூசை என்றாலே கொழுக்கு மொழுக்கு என்று கொழுக்கட்டைகள் அம்மா செய்வார் என்பதற்காகவே விரதம் பிடிப்பதுண்டு. சின்ன வயதில் எனக்கும் பிள்ளையாருக்கும் இதில் போட்டியே இருந்தது.

உழுத்தம்மா புட்டும் நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

[size=4]வாங்கின உழுந்தம் மா காலாவதியாகப் போகின்றது இன்னும் இரண்டு மாதத்தில் (கவனிக்காமல் வாங்கிவிட்டேன் :D) என்னடா செய்யலாமென்ற போது கிடைத்தது இது, நாளை செய்து பார்க்கனும்.[/size]

[size=4]2kg உழுந்த மா இருக்கு வேறு என்ன செய்யலாமென்று கூறுங்கள்[/size][size=4] ??[/size]

எனக்குத் தெரிந்த வரையில் பூப்பெய்தியவர்களுக்கு உளுத்தம் மாவில் 'உளுத்தம் களி' செய்து கொடுப்பார்கள்.

இன்னும் இரண்டு மாதம் இருக்குத்தானே. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வாங்கின உழுந்தம் மா காலாவதியாகப் போகின்றது இன்னும் இரண்டு மாதத்தில் (கவனிக்காமல் வாங்கிவிட்டேன் :D) என்னடா செய்யலாமென்ற போது கிடைத்தது இது, நாளை செய்து பார்க்கனும்.[/size]

[size=4]2kg உழுந்த மா இருக்கு வேறு என்ன செய்யலாமென்று கூறுங்கள்[/size][size=4] ??[/size]

உழுந்து மாவில்...

தோசை சுடலாம்,

அரிசி மா புட்டு அவிக்கும் போது... கொஞ்ச உழுந்துமாவைக் கலந்து, புட்டவித்தால் நல்ல வாசமாயிருக்கும் உடையார். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், உடையார்!

நீங்கள் படத்தில் காட்டியிருக்கிற 'கொழுக்கட்டை' மாதிரிச் சின்னதாக, ஆலம்பழம் அளவில, வீட்டில் செய்வார்கள்!

உழுத்தம் சுவாலை, என்று இதை ஊரில் அழைப்பார்கள்! நீத்துப் பெட்டியில் அவிப்பார்கள்! மிகவும் சுவையாக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பதிவிட்ட அனைவருக்கும் இப்பதான் செய்து கொண்டிருக்கின்றேன், சுவைத்துவிட்டு பதிலிடுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவையாக வந்த து பிள்ளைகளும் விரும்பி சாப்பிட்டவர்கள். கொஞ்சம் ஏலக்காய் பவுடர் வாசத்திற்கு கலந்தனான், நன்றாக இருக்கு.

உடையார் அண்ணா..ரொம்ப மிச்சம்பிடிப்பியல் போல :D ..நன்றி அண்ணா அருமையான பகிர்விற்கு..உழுத்தம் மா மிகவும் சத்தான உணவு..ஈழத்தில் பொருளாதார தடைகளின் போது உழுத்தம்மா எங்களை ஆரோக்கியாமாக வைத்திருந்த உணவுகளில் ஒன்று..

ஆமாம் சுபேஸ் என்ன செய்ய, பிள்ளைகள் வளர வளர இனி கொஞ்சம் கவனமாகதான் செலவலிக்கனும் :D

இணைப்புக்கு நன்றி உடையார்.

இப்பவும் நான் இரவுச் சாப்பாடாக இடைக்கிடை கொழுக்கட்டைகளை சாப்பிடுவது வழக்கம். முன்னர் சரஸ்வதி பூசை என்றாலே கொழுக்கு மொழுக்கு என்று கொழுக்கட்டைகள் அம்மா செய்வார் என்பதற்காகவே விரதம் பிடிப்பதுண்டு. சின்ன வயதில் எனக்கும் பிள்ளையாருக்கும் இதில் போட்டியே இருந்தது.

உழுத்தம்மா புட்டும் நல்லா இருக்கும்.

கொழுக்கட்டைக்காகவே பிள்ளையார் கோவிலுக்கு போகின்றனாங்கள், பொன்னாலை பிள்ளையார் கோவில் ஐயர் நன்றாக செய்வார்,

எங்கள் வீட்டில் அக்கா விரதமிருக்க நாங்கள் சாப்பிடுவோம் :lol:

இதுவரை உழுத்தம் மா புட்டு சப்பிட்டதில்லை நிழலி, நன்றி, செய்து பார்க்கனும்

எனக்குத் தெரிந்த வரையில் பூப்பெய்தியவர்களுக்கு உளுத்தம் மாவில் 'உளுத்தம் களி' செய்து கொடுப்பார்கள்.

இன்னும் இரண்டு மாதம் இருக்குத்தானே. :D

இதுகள் மட்டும் நல்லா அறிந்து வைத்திருங்கள் தப்பிலி

கொழுக்கட்டை கதையை மறக்க முடியுமா? நன்றி பகிர்வுக்கு.

அப்படி அடி வாங்கினீங்களா?

உழுந்து மாவில்...

தோசை சுடலாம்,

அரிசி மா புட்டு அவிக்கும் போது... கொஞ்ச உழுந்துமாவைக் கலந்து, புட்டவித்தால் நல்ல வாசமாயிருக்கும் உடையார். :rolleyes:

நன்றி தமிழ்சிறி, செய்து பார்க்கனும்

நன்றிகள், உடையார்!

நீங்கள் படத்தில் காட்டியிருக்கிற 'கொழுக்கட்டை' மாதிரிச் சின்னதாக, ஆலம்பழம் அளவில, வீட்டில் செய்வார்கள்!

உழுத்தம் சுவாலை, என்று இதை ஊரில் அழைப்பார்கள்! நீத்துப் பெட்டியில் அவிப்பார்கள்! மிகவும் சுவையாக இருக்கும்!

நன்றி புங்கையூரன், நானும் சாப்பிட்ட ஞாபகம் இப்பதான் வருகிறது

அருமையான தகவல்களுக்கும் ........ பகிர்விற்கும் நன்றி உடையார்.

மா பழுத போகப்போகின்றது என்பதால்தான் தேடியது :lol:

Link to comment
Share on other sites

பெரிய புறஜெக்ட் மாதிரி இருக்கிது உடையார்.

உழுத்தம் மா மிஞ்சினால் உழுத்தங்கழி கிண்டலாம். பெடியழுக்கு அத கழி என்டு சொல்லப்படாது. சாப்பிட மாட்டாங்கள். "புடிங்" என்டு சொல்லுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈசன், முறுக்கு சுடலாமென்றிருக்கிறேன், பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழுத்தம் மா மிஞ்சினால் உழுத்தங்கழி கிண்டலாம். பெடியழுக்கு அத கழி என்டு சொல்லப்படாது. சாப்பிட மாட்டாங்கள். "புடிங்" என்டு சொல்லுங்கோ. :D

"புடிங்" :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உழுத்தம்மா பிடிக்காது என்பதால் இத் தலைப்பில் ஒன்றுமே எழுதவில்லை ஆனாலும் ஒரு சந்தேகம் உழுத்தம்மாவை குறித்த திகதிக்குப் பின் பாவிக்க முடியாதா?

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்குப் (வருடங்கள் என்றுதான் கூறவேண்டும்) பின்னர் எங்கள் வீட்டிலும் இதனைச் செய்திருந்தார்கள். எனக்கு உழுத்தம் மா சம்பந்தப்பட்ட உணவுகள் அவ்வளவு பிடிக்காது. அதனால் சாப்பிடவில்லை. இன்னும் பிரிஜ்ஜில் மிச்சம் இருக்கிறது.

எதுவுமே அப்படித்தான் ரதி. மாவகைகள் அதிககாலம் வைத்திருக்கலாம்தான். ஆனால், மிகவும் அதிக காலம் வைத்திருக்க முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.