Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணுக்காய் மரணித்த மாவீரரே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மண்ணுக்காய் மரணித்த மாவீரரே

மண்டியிடுகின்றோம் உங்கள் முன்

மரணத்தை மகிழ்வாய் ஏற்று

மார்பில் குண்டேந்தி மாவீரரானீர்

தேசம் என்னும் தேனடைக்காய்

தெருவெங்கும் நீர் தேரிழுத்தீர்

பால்ப் பருவம் மாறாத பதினாறு வயதிலும்

பட்டினி கிடந்து பதமாய் ஆனீர்

பகைவர் கோட்டைகள் பாங்குடன் தகர்த்து

பாரினில் எம்மக்கோர் பாதையானீர்

பள்ளிசெல்லும் பருவத்தில்

பட்டு மெத்தை சுகம் துறந்து

பெண்ணும் ஆணும் சரிநிகராய்

பெருமை கொள்ளச் செய்திட்டீர்

பெற்றவள் முகம் மறந்து

உற்றவர் தனைத் துறந்து

உம் தேசம் காப்பதற்காய்

உயிர் தந்த உத்தமரே உம்மை

நாம் எப்படி வணங்கிடுவோம்

பேதைமை கொண்டவர்கள்

பேர் வாங்கப் பணம் கொடுப்பார்

பொன் கொடுப்பார் பொருள் கொடுப்பார்

தம்முயிரை உம்மைப்போல் யார்கொடுப்பார்

தரணியில் ஒருவரை நீ கூறு

பாசறைகள் பல கடந்து

பிணம் தின்னும் பேய் கடந்து

புறங் கண்டு ஓடாது போர்புரிந்தீர்

புண்ணிய பூமிதனில் யாருளர்

உம்மையன்றி நாம் போற்றி வணங்கிட

மூவேளை உணவின்றி

முகிழ்ந்திடும் ஆசையின்றி

மூச்செல்லாம் மண்மீதாய்

முழுதும் கொடுத்தவரே

உம் மேன்மைகள் சொல்லிட

மேதினியில் மொழியில்லை

ஒன்றல்ல இரண்டல்ல மூன்றுமல்ல

ஆயிரம் ஆயிரம் நாமிழந்தோம்

அத்தனை நாடுகள் எம்மை அழிக்கையில்

எத்தனை பேர் நாம் பாத்திருந்தோம்

எள்ளி நகையாடி எட்டப்பர் சிரிக்கையில்

ஏனென்று கேட்காமல் நாமிருந்தோம்

பெண்கள் குழந்தைகள் பெரியவர் என்று

பேதமின்றி கொன்று குவிக்கையில்

பேடிகள் போல் நாம் காத்திருந்தோம்

அங்கம் இழந்தவர் அங்கு துடிக்கையில்

அந்நியராய் நாம் பார்த்திருந்தோம்

தேசம் அழிந்தது மானம் அழிந்தது

மண்டியிட நாம் காத்திருந்தோம்

மண்ணையும் பெண்ணையும்

மாற்றானிடம் கொடுத்தும்

மானம் இன்றிப் பாத்திருந்தோம்

மன்னிக்க முடியா குற்றங்கள் எமது

மாவீரரே நீர் காத்தருள்வீர்.

உம்மை அன்றி வேறொருவர்

என்றும் எம்மிடை வரமாட்டார்

மறுபிறப்பொன்றில் மண்மீட்க

மீண்டும் ஒருமுறை பிறந்து வந்து

மீட்டிடுவீர் எம் தேசமதை [/size]

[size=5]மன்னிக்க முடியா குற்றங்கள் எமது

மாவீரரே நீர் காத்தருள்வீர்.

உம்மை அன்றி வேறொருவர்

என்றும் எம்மிடை வரமாட்டார்

மறுபிறப்பொன்றில் மண்மீட்க

மீண்டும் ஒருமுறை பிறந்து வந்து

மீட்டிடுவீர் எம் தேசமதை [/size]

இது சொப்பனா என்ற கள உறவு எழுதிய கவி வரிகள் இப்பிடி ஏதாவது வித்தியாசமாய் சிந்திக்கலாமே

என்தங்கையின் என்தம்பியின்

முறுக்கேறிய கைகள் இன்று

சிங்கத்தின் கொட்டடியிலும் ,

வீதியில் இருந்தும் பிச்சை புகுதல் தகுமோ???

எனக்காக அழாதீர்கள் வியாபாரப் பொருளாக்காதீர்கள்.....

இறுக்குங்கள் உங்கள் கைகளை

என்தம்பி தங்கை நோக்கி

துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ...........

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையாய் வராவிட்டாலும்

கனம் செய்கின்றேன்

இந்த கணத்தில் இதை படைத்ததற்காய்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

நன்றி தாயே

தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஓ! மாவீரர்களே ![/size]

'சாவு

என்னை எதிர் பார்த்திருக்கிறது '

என்றான் கோழை.

'சாவை

நான் எதிர் பார்த்திருக்கின்றேன் '

என்றான் வீரன்.

ஓ! மாவீரர்களே !

நீங்கள்

இரண்டாவது வகை .

'மிதிபட்டு சாகின்றேன்'

புலம்பினான் கோழை

'போராடி சாகின்றேன்'

உறுமினான் வீரன்.

ஓ! மாவீரர்களே !

நீங்கள்

இரண்டாவது வகை .

'காலம்

தமிழீழத்தை உருவாக்கும்'

காத்திருந்தான் கோழை.

'காலத்தை

நான் உருவாக்குவேன்'

களமாடினான் வீரன்.

ஓ! மாவீரர்களே !

நீங்கள்

இரண்டாவது வகை .

'உயிர் வாழ

விரும்புகிறேன்'

முனகினான் கோழை.

'மானத்தோடு

உயிர் வாழ

விரும்புகிறேன் '

முழங்கினான் வீரன்.

ஓ! மாவீரர்களே !

நீங்கள்

இரண்டாவது வகை .

ஓ! மாவீரர்களே!

உங்கள் வீரம்

எங்கள் நிமிர்வு

ஆனது...

வழி வழி

இணையில்லா

வீரனாய்

வீரன்கனையாய்

இன்றும் தொடரும்

உங்கள் மாவீரர் வரிசை

தமிழீழம் மீட்கும்...

ஓ! மாவீரர்களே!

இதுதான் உண்மை...

உங்கள் உயிரின்

வலிமை அறிந்து

எதிரி உங்களை

அழித்தான்...

ஆனால்...

அவன் ஏமாந்து

போனான் .

ஏனென்றால்...

உங்கள் உயிரிலும்

வலிமை மிக்கது

உங்கள் சாவு.

-காசி ஆனந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஓ! மாவீரர்களே ![/size]

உங்கள் உயிரிலும்

வலிமை மிக்கது

உங்கள் சாவு.

-காசி ஆனந்தன்

நன்றி பதிவுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மன்னிக்க முடியா குற்றங்கள் எமது[/size]

[size=5]மாவீரரே நீர் காத்தருள்வீர்.[/size]

[size=5]உம்மை அன்றி வேறொருவர்[/size]

[size=5]என்றும் எம்மிடை வரமாட்டார்[/size]

[size=5]மறுபிறப்பொன்றில் மண்மீட்க [/size]

[size=5]மீண்டும் ஒருமுறை பிறந்து வந்து[/size]

[size=5]மீட்டிடுவீர் எம் தேசமதை[/size]

கவிதைக்கு நன்றிகள், சுமே!

மாவீரர்களின் பணி முடிந்து விட்டதென்றே நினைக்கின்றேன்!

ஒரு புள்ளிக்கு எம்மை அழைத்துச் சென்று விட்டு, அதற்கு மேல், அந்தச் சிலுவையைக் காவிச் செல்லவேண்டிய பொறுப்பை, புலம்பெயர் உறவுகளிடம் விட்டுச் சென்று விட்டார்கள்!

புலம் பெயர் உறவுகளுக்கு, அந்தத் 'திண்மை', ஓர்மம், வைராக்கியம் இருக்கின்றதா என்பதை, அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்!

மீண்டும் அவர்கள், பிறந்து வந்தால், அவர்கள் எங்காவது, நிம்மதியாக வாழட்டும்!

எமக்காக, மீண்டும் போராடும் படி கேட்பது, (கவிதையிலும் கூட), எமது சுயநலமே!

கவிதைய தந்த சுமேரியர் அக்காளை வாழ்த்திறேங்க .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி. என் கற்பனையில் வருவதைத் தானே நான் எழுத முடியும் கோமகன். அதுதான் உண்மையாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பால்ப் பருவம் மாறாத பதினாறு வயதிலும்

பட்டினி கிடந்து பதமாய் ஆனீர்

பகைவர் கோட்டைகள் பாங்குடன் தகர்த்து

பாரினில் எம்மக்கோர் பாதையானீர் [/size]

எல்லாம் மண்ணுக்கென்று இல்லாது போனவரின் நினைவுகளுக்கும் அவர் கதைசொல்லும் கவிதைக்கும் நன்றிகள் சுமேரியர்.

http://youtu.be/tEVKFt4n7Zk

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி

நல்ல பதிவு. நன்றி சுமேரியர் அக்கா, தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொருமுறை அவர்களையே பிறந்து வந்து மீட்கும்படி கேட்பதை ஏற்க முடியவில்லை. அயோக்கித்தனமாக இருக்கிறது. நிகழ்காலத்தின் சுயநலத்திற்காக எதிர்காலத்தின் சுமைகளையும் அவர்களின் மீதே சுமத்த முயல்வதாக கவிதையை முடித்திருக்கிறீர்கள் சுமேரியர். முடிவை மனதால் ஏற்க முடியவில்லை. :(

உங்கள் கவிதை இன்றைய ஒரு பேப்பரில் மீள்பிரசுரமாகி வந்தததைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் சுமே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த அனைவர்க்கும் நன்றி. அவர்களை நான் மீண்டும் வரும்படி அழைத்த காரணம் சுயநலம் அன்று. அப்படி எழுதினாலாவது கையாலாகாமல் இருப்போர்க்கு ஒருமுறை தன்னும் வாசிக்கும் போது உணர்வு கூசாதா என்றுதான்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.