Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெல்லச் சாகும் தமிழ் மொழி.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சி இப்பிடி சொல்லிட்ட why திஸ் கொல வெறி பட்டால தமிழ் வெள்ளை மாளிகை வரைக்கும் போய் இருக்குடா

ஒபமா பொண்ணு கூட அந்த பாட்டோட தான் கொஞ்ச நாள் இருந்தவா எண்டா யோசிச்சு பாருடா :D

  • Replies 81
  • Views 6.3k
  • Created
  • Last Reply

சுண்டல்ற கதையைப் பார்த்தா, அவர் ஒபாமாவின் பொண்ணு கூட இருந்து பாட்டுக் கேட்ட மாதிரியெல்லோ கிடக்கு. lol

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி அண்ணா இப்பிடி எல்லாம் பப்ளிக் ல சொல்லி ஆளில்லாத உளவு விமானத்த இந்த பக்கம் அனுப்பிடாதின்கப்பா :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் சுண்டல் மச்சி வாய் திஸ் கொலை வெறி அப்படியான பாடல்கள் வந்தா தமிழ் வளக்க இன்னும் கொஞ்சம் சுகமாய் இருக்கும்டா...போடா நீயும் உன்ர தமிழ் சினிமா பாட்டும் :D

maama notes eduthuko

apdiye kaila snacks eduthuko

pa pa paan pa pa paan pa pa paa pa pa paan

sariya vaasi

super maama ready

ready 1 2 3 4

whaa wat a change over maama

ok maama now tune change-u

kaila glass

only english..

hand la glass

glass la scotch

eyes-u full-aa tear-u

empty life-u

girl-u come-u

life reverse gear-u

lovvu lovvu

oh my lovvu

you showed me bouv-u

cow-u cow-u holi cow-u

i want u hear now-u

god i m dying now-u

she is happy how-u

:D

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிள்ளைகளது தமிழைப்பார்த்து நிழலி ஒரு அத்தாட்சிபத்திரம் தந்தார்.

அதுவே இங்கு இரட்டிப்பு பலன் பெறும்.

நன்றாக தமிழ் பேசுகின்றார்கள் அண்ணா.

 

 

ஆனால் இந்தப்பெருமை எனக்குச்சேராது

தாய்மொழி  காக்கும் தாய்க்கே.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லப் போனால், நிச்சயம் எமது அடுத்ததடுத்த தலைமுறை புலத்தில் தமிழைக் காக்கும் என்பதில் பெரிய நம்பிக்கை கிடையாது. உங்களின், எங்களின் குழந்தைகளுக்குத் தமிழ் தெரியும். ஆனால் அதன் தேவை பற்றி என்ன தெரியும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு ஏன் தமிழ் மொழி பேச வேண்டும் என்பதில் பெரிய தேவை ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தை தமிழைப் பேச வேண்டிய தேவையில்லை. அது தனது அடுத்த தலைமுறைக்குத் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை. மொழி என்பது வெறும் ஊடகம். ஆனால் அதை வெறியாகவோ, அடையாளமாகவோ நாங்கள் மாற்றினால் தான் அதைத் தொடர்ந்து காக்க முடியும். மற்றும்படி உங்களின் ஆசைக்காகத் தான் உங்களின் குழந்தை தமிழ் படிக்கின்றது. அவ்வளவு தான். இது உங்களுக்குக் கோபத்தைத் தரலாம். ஆனால் நீங்கள் மொழியின் தேவை பற்றிச் சொல்லி, அவர்களுக்கு அதன் மீது பற்றினை உருவாக்கும் வரைக்கும். நீங்களளே அவதானிப்பீர்கள். இரு குழந்தைகள் இருப்பின், அவர்கள் அந்தந்த நாட்டு மொழியின் தான் கதைத்துக் கொள்வார்கள். ஏன் என்றால் அப்போது அவர்களுக்குத் தமிழ் தேவையே இல்லை... இந்த நிலை தொடர்நதால் தமிழ் மெல்ல அல்ல, அடுத்தடுத்த தலைமுறையில் செத்துவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

போன சனிக்கிழமைதான் இங்குள்ள தமிழ் பாடசாலையால் விழா நடந்தது. பலர் நன்றாக செய்தார்கள், என் பிள்ளைகள் சரளமாக கதைப்பார்கள், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பேன் இறக்கும்வரை, விடமாட்டேன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முன்னூறு வருடங்கள் அன்னியர் ஆட்சியில் மொழி அழியவில்லைத்தான். ஏனெனில் ஆங்கிலத்தை கற்கும் படியோ அல்லது மற்றைய மொழிகளைக் கற்கும் படியோ எவரும் அங்கு நிர்ப்பந்திக்கவில்லை. பெரும்பான்மை இனம் தமிழில் உரையாடி தமிழில் கற்று தமிழோடு வாழ்ந்தார்கள். அனால் புலம்பெயர் நாடுகளில் அப்படியில்லை. தமிழர்கள் அந்நிய மொழிபேசி அந்நிய இனத்தவரோடு அன்னியராகவே வாழ்கின்றனர். புலம் பெயர் எம் பரம்பரையின் அடுத்த தலைமுறையினரோடு யார் எம்மொழியில் கதைப்பார். இந்தியாவைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. ஆங்கில மோகத்தில் மூழ்கிப் பொய் உள்ளது. ஈழத்தில் சிங்களவன் காலப்போக்கில் பேசவிடாது செய்துவிடுவான். ஆங்கிலேயர் காலத்தில் தமது தேவைகளுக்காக ஆங்கிலம் கற்று வாழ்ந்தவர்கள் போல் சிங்களவர்களுக்குப் பயந்தே எம்மினம் தமிழை மறக்கப் போகிறது,மறக்கடிக்கப் படப் போகிறது. யார் எங்கிருந்து என்ன செய்ய முடியும்.

என் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்... அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார் .. அதை கேட்டு நான் திகைத்து போனேன் .

 

அவர் சொன்னார் ?.. நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிரோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள். நான் அதுக்கு பதில் சொல்லவில்லை.

 

அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுரிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்லை. அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே. ஆம் நான் இந்தியன் ஆனால் என் தாய் மொழி தமிழ் என்று சொன்னேன்.


அப்ப அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே. என்று சொன்னான் , என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி. அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு. அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, LTTE,  தமிழ் டைகர், பிரபாகரன். பேசுற மொழிதானே தமிழ் .அதைதான் நீங்களும் பேசுறிங்கலா என்று கேடான் .நான் ஆச்சரியத்தோடோடு ஆம் என்றேன் .

 

 

அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி. என் குரலை பதிவு செய்தார்கள் . பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள். அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்..


நான் வெளியே வந்து யோசித்தேன் .என்னடா தமிழ்நாட்டில் ஏலு கோடி தமிழன் இருக்கிறோம். எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. இலங்கை தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு.

 

அந்தமாரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேகிறான். நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று. கேக்கிரார்கள்.
 

அப்பத்தான் எனக்கு புரிந்தது .நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன். நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிரபாகரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன் .. பிரபாகரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது உண்மை .. நன்றி .


என் நண்பன் சொன்னதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்று நினைத்தேன். எனக்கு பெருமையாக இருக்கு நானும் தமிழன் என்றுசொல்ல.நன்றி.

 

(முகநூல்

சரி பிழைகளை கடந்து, உங்கள் முயற்சி எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது
 

 

“தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”

என்ற திருவள்ளுவரின் குரலை பின்பற்றி, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை எடுத்துரைத்து, தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பதே எங்களுடைய இந்த போட்டியின் நோக்கமாகும்.
 

கற்க கசடற – ௩ ன் போட்டிகள் தென் கிழக்கு லண்டனில் நடைபெற்ற முதல் அரைசுற்றில் தொடங்கி, அதை தொடர்ந்து தென் மேற்கு , வட கிழக்கு , வட மேற்கு  ஆகிய  மூன்று இடங்களிலும் அரைச்சுற்று  இடம்பெற்று, அதிலிருந்து தெரிவான போட்டியாளர்கள் மத்தியில் இடம்பெற்ற போட்டி இறுதி சுற்றாக lewisham Sivan Koyil  மண்டபத்தில் இடம் பெற்றது.
 

இறுதி சுற்றி முடிவடைந்த நிலையில், போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, இனிதே நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் நடனம் , பாடல், பேச்சு ஆகிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

 

போட்டியாளர்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் நடுவர்கள் என அனைவரும் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை  கண்டு களித்தனர். கலைநிகழ்வுகளின் இடையிடையே  வெற்றி  பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.
 

தமிழ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற, இந்த போட்டி முயற்சியை வந்திருந்த பெற்றோர்கள், நண்பர்கள், நடுவர்கள் என எல்லோரும் பாராட்டும் விதமாக ஊக்கப்படுத்தி அவர்களது மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தனர்.
 

” இதில் இருக்கும் சரி பிழைகளை கடந்து, உங்கள் முயற்சி எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, உங்கள் முயற்சிகள் இன்னும் மேலும் வழர வேண்டும், வாழ்த்துக்கள்” என்று எமது நடுவர்களில் ஒருவரான திரு.ஆறுமுகம் அய்யா அவர்கள் தெரிவித்திருந்தார். பெற்றோர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்ததொடு, இது போன்ற நிகழ்வுகள் மேலும் வழர அறிவுரைகளையும் வழங்கி இருந்தனர்.
 

இவ்வாறாக, தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கற்க கசடற-௩ ன் போட்டிகளை தொடர்ந்து பரிசளிப்பு விழ இனிதே நடைபெற்றது.

 


TYO endeavours to preserve, promote and nurture our cultural heritage by initiating and sustaining our involvement within the Tamil community. Part of this proposal includes implementing educational programming to promote awareness and pass on our identity as Tamils onto the next generation in an appropriate manner, hence TYO’s introduction to Katka Kasadara.


Katka Kasadara-3 kick started with its first regional round in South East London on the 8th December 2012 followed by its other 3 regional round in SW London, NE and NW London on the 15th and 16th December 2012 respectively.
Winners of above mentioned regional rounds are as follows:

 

South East London
AGE GROUP 1ST Place 2nd Place 3rd place

 

13 – 15 Sureka Jeyakumar - -
10 – 12 Sangavi  Mohanarasan Biraveena Balachandran -
7 – 9 Meenatchi Thanasingham Vaishna Varathan Dhaheeran Uthayakumar
6 and Under Thansurabi Jude Jeyaraj Kabishan Ketheswaran Varniya Varathan

 

Pics: http://www.facebook.com/media/set/?set=a.521086747910747.119989.323626334323457&type=3
 

 

South West London
AGE GROUP 1ST Place 2nd Place 3rd place
10 – 12 Abiramy Sriskantharajah Mithuna Vigneswaran Lakshani Sivarajah
7 – 9 Kirushalini Sribalamurali Khurinjikan Ramesh -
6 and Under Thenila Arunasalam Kasthury Aruleesan Amirthaa Kuhendran
Pics: http://www.facebook.com/media/set/?set=a.524282240924531.120488.323626334323457&type=3

 

 

North East London
AGE GROUP 1ST Place 2nd Place 3rd place
13 – 15 Kavijan Vigneswaran - -
10 – 12 Aswiny Ananthan Gowsikan Jeyarajah Sharuja Murugananda
7 – 9 Anogini AnanthanThenuga Sivanesarajah Sapna Sanseevan Saranya Nakuleswaran
6 and Under Adavan Ananthan Bramina SooriyakumarVarunavy Thavaganesh Abiraa Ramathas
Pics: http://www.facebook.com/media/set/?set=a.525177920834963.120651.323626334323457&type=3

 

 

North West London
AGE GROUP 1ST Place 2nd Place 3rd place
10 – 12 Puvitha Srivarathan Janushan GnanapaskaranTharshi Raveendren Aruvi Jeyakanthan
7 – 9 Jeshivin JesudasKirussa Kirupananthaparathiyar Ilakiyaa SellathuraiTharun Srivarathan Karsan KirupananthaparathiyarMathuri Sanmugarajah
6 and Under Sathusi Raveendren  Bavikesh SiavakumarKavitha Sellathurai Vigaashan AsokanRehashan AsokanShaalini Sivakumar
Pics: http://www.facebook.com/media/set/?set=a.525585590794196.120743.323626334323457&type=3

 

 

Followed by the regional round was the final round between carefully elected participants. The final round was held at Lewisham Sivan Koyil on the 23rd December 2012.
 

 

The final winners are as follows:
AGE GROUP 1ST Place 2nd Place 3rd place
13 – 15 Kavijan Vigneswaran - -
10 – 12 Janusha Gnanapaskaran Tharshi Raveendren Puvitha SrivarathanAswiny Ananthan
7 – 9 will be updatae soon will be updatae soon will be updatae soon
6 and Under Abiraa Ramathas Varniya VarathanVarunavy Thavaganesh Adavan Ananthan

Following the final round of competition, was the prize giving ceremony; the ceremony was a cultural show which was a combo cultural dance, songs, speeches and poems.  All parents, relatives and friends of our competitors were present to congratulate the winners at the prize giving and to enjoy the performance of our performers.

 

The acts were enlightening and mixture of all type including the Nattuppura nadanam, Bhrathanattiyam, Kavadi nadanam, etc.  A speech titled “Thamil Engal Uyirmoochu” given by a 6 year old was the most inspirational Tamil speech that was ever given at our Katka kasadara prize giving ceremonies where she spoke about the importance of preserving our identity and language.
 

We have heard such feedback from the crowd as “you’re doing a really great job, more than the how it is organised, we appreciate the effort you have put into to organise one, Keep it up”, we were also given constructive feedbacks from the crowd which we can assure to improve on.
 

Therefore, Katka Kasadara -3 was accomplished successfully and all the hard works have paid off.

 

http://www.tyouk.org/?p=1366



IMG_1961.jpg



IMG_1775.jpg



IMG_1811.jpg

ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கிய 11வது உலக தமிழ் இணைய மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழின் பயன்பாடுகள், உலகில் தமிழும், தொழில் நுட்பமும் பல நாடுகளில் செய்துவரும் ஆராய்ச்சிகள் பயன்முறைகள் பலவற்றை உலக தமிழறிஞர்கள் கலந்தாய்வு செய்யவும், தமிழர்களிடையே பரப்பவும் 11வது உலக தமிழ் இணைய மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக குமாராஜா முத்தையா அரங்கில் நேற்று துவங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.

 

மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மொழியியல் உயராய்வு மைய புல முதல்வர் கணேசன் வரவேற்றார். உத்தமம் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் தலைமை உரையாற்றினார்.இங்கிலாந்து சிவப்பிள்ளை, சிங்கப்பூர் மணியம், மலேஷியா இளந்தமிழ், இலங்கை சிவ அனுராஜ், ஆஸ்திரேலியா முகுந்த் ராமமூர்த்தி, இந்தியா ராமமூர்த்தி வாழ்த்திப் பேசினர்.
 

உலக நாடுகளில் இருந்த 100க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் வருகை தந்துள்ளனர். கருத்தரங்கம், கண்காட்சி, மக்கள் கூடம் என மூன்று முனைகளில் மாநாடு நடக்கிறது. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.மாநாடு ஏற்பாடுகளை உத்தமம் அமைப்பின் தலைவர் மணிவண்ணன், கணித்தமிழ் சங்க தலைவர் வள்ளி ஆனந்தன் செய்துள்ளனர்.
 

தமிழறிஞர் இங்கிலாந்து சிவப்பிள்ளை பேச்சு: ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது” என இங்கிலாந்து சிவபிள்ளை பேசினார். சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் நேற்று துவங்கிய உலகத்தமிழ் இணைய மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் கருத்துரை வழங்கினர்.
 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிவப்பிள்ளை பே”கையில்,”ஐரோப்பா இருக்கும் வரை தமிழ் சாகாது. இணையதளத்தில் ஐரோப்பியா, அமெரிக்கா நாடுகளில் தமிழ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 326 மொழி பேசப்படுகிறது. அவற்றில் தமிழ்மொழியும் ஒன்று. அதே போன்று பயிற்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக உள்ளது’ என்றார்.
 

மலேசியாவைச் சேர்ந்த இளந்தமிழ் பே”கையில்,” மலேசியாவில் 523 தமிழ் பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு சார்பில் நிதி உதவி அளிக்கும் 60 தமிழ் பள்ளிகளில் 20 ஆயிரம் பேர் தமிழ் தொழில்நுட்பம் படிக்கின்றனர். மலேசியாவில் மலையா, சீனம் பேசுகிறவர்கள் யாரும் அந்த மொழி சோறு போடுமா என கேட்பது இல்லை.

 

ஆனால் அடிப்படையில் தமிழ் உணர்வு இல்லாதவர்கள், “தமிழ்’ சோறு போடுமா என கேட்கின்றனர். பேசுவதற்கும், கருத்துரை நடத்துவதற்கும் தமிழ் தொழில் நுட்பம் தேவைப்படுகிறது’ என்றார்.
 

இலங்கை சிவ அனுராஜ் பே”கையில்,”உலகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி தமிழ்நாட்டிற்கு அடுத்தது இலங்கை தான். உலகத்தமிழ் இணைய மாநாடு இன்னும் இலங்கையில் நடத்தப்படவில்லை. 2004, 2005ம் ஆண்டு உலக தமிழ் இணைய மாநாடு நடத்த முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் இறந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தமிழிலே தொழில்நுட்பம் பெற வேண்டும் என தமிழ் ஈழ மக்கள் ஆர்வமாக உள்ளனர்’ என்றார்.
 

இந்தியாவைச் சேர்ந்த ராமமூர்த்தி பே”கையில்,”பத்து நாடுகளில் உலகத்தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஏழு மாநாடு வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டில் மூன்று மாநாடுகள் அரசு உதவியுடன் நடந்துள்ளது. அரசிற்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உதவியுடன் இன்று சிதம்பரத்தில் உலகத்தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுவது பெருமையாக உள்ளது. மொழியியல் கணினி என்பது ஊடகம். அதை உள்ளடக்கமாக பார்க்கலாம். கணினி வழியாக தமிழ் தொழில்நுட்பம் உள்ளடக்கம் வளர்ந்தால் தமிழ் வளரும்’ என்றார்.
 

உலகத் தமிழ் இணைய மாநாட்டில் 142 கட்டுரைகள் சமர்ப்பிப்பு: மாநாட்டில், வெளிநாட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கணினித்தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கருத்துரை வழங்கினர்.பிற்பகல் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் 142 கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் தொழில்நுட்பம் தொடர்பாக 48 கட்டுரைகளும், கல்வி தொடர்பாக 24 கட்டுரைகளும், பொதுவான தமிழ் கணினி சார்ந்த கட்டுரைகள் 70ம் அடங்கும்.
 

இன்று நிறைவு விழா:உலகத் தமிழ் மாநாட்டின் 2ம் நாளான இன்று காலை தமிழ் ஆய்வாளர்கள் பேசுகின்றனர். பிற்பகல் நிறைவு விழா நடக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மீனாட்சிசுந்தரம் தலைமையுரையாற்றுகிறார். மொழியில் உயராய்வு மைய புல முதல்வர் கணேசன் முன்னிலை வகிக்கிறார்.
 

அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல்துறை பேராசிரியர் அரங்க.பாரி வரவேற்கிறார்.சென்னை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் சேகர், உலகத் தமிழ் சங்க தனி அலுவலர் பசும்பொன், கணித்தமிழ் சங்க தலைவர் வள்ளி ஆனந்தன், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி நடராஜ பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ நிறைவுரையாற்றுகிறார்.

 

http://www.alaikal.com/news/?p=119707

  • கருத்துக்கள உறவுகள்

சாகாது என்று எம்மை நாமே தேற்றிக் கொள்ளலாம். அவ்வளவு தான். மற்றும்படி எந்தச் செயலும் முன்மாதிரியாக இல்லை. அதன் வளர்ச்சிக்கான நடவடிக்கையாக இல்லை

'எமது தாய் மொழி சாகாது' என நாம் நம்பினால் மட்டுமே அது வாழ வழி பிறக்கும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தன் நாட்டுக்கு ஒரு பிரச்சனையும் வராது. பாதுகாப்பான நாடு தானே என்று நம்பினால் அதனால் இப்படி ஆதிக்கம் செலுத்தமுடியுமா? ஒவ்வொரு நிமிடமும் எந்தச் சவாலையும் சமாளிக்க வேண்டும் என்ற உயிர்ப்போடு இருப்பதால் மட்டுமே அதனால் வளரமுடியும். என் தமிழ் மொழிக்கு ஒன்றுமே ஆகாது என்ன கவலை என்று இருந்தால், ஒரு வளர்ச்சியையும் எதிர் பார்க்கமுடியாது. குழந்தை எங்களின் திருப்திக்காக 4 தமிழ்ச்சொல்லைச் சொல்லும். நாங்களும் ஆகா, ஓகோ என்று இருப்போம். அவ்வளவு தான் நடக்கும். எம் மொழியில் எல்லாச் சொற்களையும் தொகுத்து ஒரு அகராதி கூடக் கிடையாது.நான் உற்பட பலருக்கு தமிழ்ச் சொற்களை என்ன விதியோடு எழுத வேண்டும் என்ற அறிவும் கிடையாது. வேண்டுமென்றால் மேடை போட்டு அழியாது, அழியாது என்று மார்தட்டிக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

'எமது தாய் மொழி சாகாது' என நாம் நம்பினால் மட்டுமே அது வாழ வழி பிறக்கும்  :D

எம் விடுதலைப் போராட்டம் அழியாது... எல்லாம் தலைவர் பார்த்துக் கொள்ளுவார் என்று தலைவரின் மீது அதிக சுமையைச் சுமத்தியது போன்றா? தமிழ் அழியாது எனக்கென்ன கவலை என்று அனைவரும் எம் சொந்த வேலைகளைப் பார்த்துக் கொள்ளுவோம்... என்ன கவலை!

தமிழ் அழியும் நிலை ?

 

 

தமிழ்நிலத்தில்  தமிழ்அழியும்!  தமிழரென்போர்
  தமிழறியா  இனமாக  மாறுவார்கள்!


அமுதான  மொழிஎங்கள்  தமிழேஎன்று
  ஆர்ப்பரிப்போர்  இதுகேட்டுக்  குமுறவேண்டாம்!

 

எமைச்சாடிப்  பயனில்லை;  இதுவேஉண்மை!
  இங்குதமிழ்  உணர்வுகொண்டோர்  எவர்தானுண்டு?

 

எமதென்று  பிறமொழிச்சொல்  பலவும்சேர்த்து
  எழுதுவதில்  பேசுவதில்  குறைவேயில்லை!

 

தமிழறிந்தோர்  எவரிந்த  நாட்டிலுண்டு ?
  தமிழ்நிலமே  இதுதானுன்  தலையெழுத்தா?

 

தமிழினிலே  "ஆவின்பால்"  என்பாரில்லை;
  தமிழழித்து  "ஆவின்மில்க்"  என்றேசொல்வார்!

 

"நமதுகடை  மம்மிடடி  ஷொப்பிங்க்செண்டெர்"
   "நாம்டெய்லி  மொர்னிங்கில்  பூஜைசெய்வோம்"

 

எமதுதமிழ்  இப்படியே  உர்க்குலைந்தால்
  எப்படித்தான்  உயிர்வாழும்?  அழிவேநேரும்!

 

இந்தியினை  வரவேற்றுப்  படிப்பார்!தங்கள்
  இன்னிசையே  தெலுங்கென்று  சுவைப்பார்!நேற்று

 

வந்தமொழி  ஆங்கிலத்தைப்  பிழையேயின்றி
  வழங்கிவிட  அகராதி  புரட்டுவார்கள்!

 

சிந்தையொன்ற  வடமொழியில்  வந்திப்பார்கள்!
  சேர்ந்தமொழி   எதுவெனினும்  மகிழ்ந்தணைப்பார்

 

சொந்தமொழி  எக்கேடு  கேட்டாலென்ன?
  சூடின்றிச்  சுரணையின்றி  வாழுகின்றார்!

 

எப்படியும்  தமிழ்மொழியில்  எழுதிக்கொள்வோம்!
  எப்பிழையும்  இருந்திடலாம்!  கவலையில்லை!

 

எப்படியோ  பிழைத்திட்டால்  போதும்!பின்னர்
  ஏனிந்தத்  தமிழ்பற்று? சோறாபோடும்?

 

இப்படியோர்  உணர்வற்ற  மந்தைக்கூட்டம்
  எமதினமா?  இதுதமிழர்  சாபக்கேடா?

 

எப்படித்தான்  இந்தநிலை  மாறக்கூடும்?
  இன்தமிழே  உன்நிலையை   என்னவென்பேன்?

 

('உணர்வுக்கோலம்' நூலிலிருந்து எடுத்தது)

வெறுமனே அழியாது என்று சொல்வதலோ, பொழுது போகவில்லை என்று இந்த விவாதத்தை முன்னேடுப்பதலோ எந்தப் பயனும் தமிழுக்கு விளைந்து விடப் போவதில்லை.  தமிழை யார் வளர்க்க முடியும் ?? நீங்களும் நானும் தான் ... சரி.அதற்கு நமது பங்களிப்பு என்ன?? செயல் முயற்சி என்ன?  ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட எதாவது செய்யலாமே ??

புலம்பெயர் நாடுகளில் நாம்வசிக்கும் வீடு மட்டும்தான் நமது கட்டுப்பாட்டிலுள்ள‌
உலகம். எனவே அங்கு நாம் தமிழை முதன்மைப்படுத்தினால் ஏனையவை
சரியாகி விடும்.தாழ்வுமனப்பான்மை நீங்கிய தாய்மொழிப்பற்று நம்மவர்களிடம்
ஏற்படவேண்டும்.

நிச்சயம்  கதைக்க வேண்டும். வீட்டில்  தமிழ் கதைக்கும் அதனால்  என்ன பயன் என்பதை அனைவரும் உணர்ந்து ஏற்று ஒத்துழைக்கவேண்டும்.

பிள்ளைகளும் தம்மீது தமிழ் திணிக்கப்பட்டதாக இல்லாமல் விரும்பும்  சூழல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
நிச்சயம்  கதைக்க வேண்டும். வீட்டில்  தமிழ் கதைக்கும் அதனால்  என்ன பயன் என்பதை அனைவரும் உணர்ந்து ஏற்று ஒத்துழைக்கவேண்டும்.

பிள்ளைகளும் தம்மீது தமிழ் திணிக்கப்பட்டதாக இல்லாமல் விரும்பும்  சூழல் வேண்டும்.

 

எங்களுடைய (தமிழ்ப்) பிள்ளைகளுக்கு நாங்கள் தமிழில் உரையாட, எழுத, வாசிக்கப் பழக்கும்போது அவர்கள் (பிள்ளைகள்) அதைத் திணிப்பாக உணர்வார்கள் என நாங்கள் ஏன் எண்ணவேண்டும். பிழை எங்களுடைய சிந்தனையிலேதான் இருக்கின்றது என நினைக்கின்றேன்.

எங்களுடைய (தமிழ்ப்) பிள்ளைகளுக்கு நாங்கள் தமிழில் உரையாட, எழுத, வாசிக்கப் பழக்கும்போது அவர்கள் (பிள்ளைகள்) அதைத் திணிப்பாக உணர்வார்கள் என நாங்கள் ஏன் எண்ணவேண்டும். பிழை எங்களுடைய சிந்தனையிலேதான் இருக்கின்றது என நினைக்கின்றேன்.

 

எனக்கு தமிழ் பாடசாலை போக விருப்பம் இல்லை என கூறும் பிள்ளைகள் உள்ளனர். அதை ஏற்று, வற்புறுத்த மறுத்து, பிள்ளைகளை விடாத பெற்றோரும் உள்ளனர்.

 

 

வேற்று மொழி நாட்டில் தமிழ் கற்று என்ன பிரயோசனம் கேட்கும் பிள்ளைகளும் உள்ளார்கள் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.