Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்புகளுக்கு நன்றி நெடுக்ஸ்.. உங்களை மாதிரி இரண்டொருபேர் இருக்கிறதாலதான் அப்பாவி ஆண்குலத்தின் பாதுகாப்பு ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. :D

 

நிற்க.. காணொளிகள் எல்லாம் நீளமா இருக்கு.. :unsure: பிறகுதான் பார்க்க வேணும்.. :blink: எல்லா காணொளிகளிலும் தாய்க்குலங்கள்தான் தெரியினம்.. :o   பயமா இருக்கு..  :(  :D

 

போர்வேட் பண்ணிப் பண்ணிப் பாருங்க.. இப்படியான சோ க்கள்.. நம்ம புலம்பெயர் பெண்களை வைச்சும் எடுக்கனும்..! அப்பதான் எங்கட ஆக்களின்ர ஊத்தைகளும் வானலையில் வழிஞ்சோடும்..! வெறுமனவே ஆண்களை திட்டித் தீர்த்துக் கொண்டு திரியுறவைக்கு.. தங்கட தவறுகளையும் இனங்காட்டனும். சில ஆண்கள் தப்புச் செய்யாமல் இல்லை. ஆனால் அதன் பின்னால் உள்ள பெண்களின் பங்களிப்பை பெண்கள் உணராதவரை.. இந்தப் பிரச்சனைகள்.. தீராது..!

 

http://youtu.be/tNscUy4b2f0

 

இதைப் பார்க்க கொஞ்சம் அழுகை வந்திட்டுது.. (அந்தப் பெண்கள் சொல்லுறது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும்.. மனிதாபிமானம் அழ வைக்கிறது.) பல பெண்கள் பல்வேறு வழிகளில் தங்களையும் சமூகத்தையும் சீரழிக்கின்றார்கள். அதேவேளை... சில ஆண்களின் நடத்தைகளும் ஒட்டுமொத்த ஆண்களின் மீதான மதிப்பை சீரழிக்கிறது. அவர்களையும் இந்த இடத்தில் சரியாக வழிநடத்த வழி காட்டுதல்.. வேண்டும்..!

 

நன்றி வணக்கம்.

Edited by nedukkalapoovan

  • Replies 148
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இணைப்புகளுக்கு நன்றி நெடுக்ஸ்.. உங்களை மாதிரி இரண்டொருபேர் இருக்கிறதாலதான் அப்பாவி ஆண்குலத்தின் பாதுகாப்பு ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. :D

 

நிற்க.. காணொளிகள் எல்லாம் நீளமா இருக்கு.. :unsure: பிறகுதான் பார்க்க வேணும்.. :blink: எல்லா காணொளிகளிலும் தாய்க்குலங்கள்தான் தெரியினம்.. :o   பயமா இருக்கு..  :(  :D

 

இப்பிடிச் சிலபேருக்கு மற்றவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒழிவதே வேலையாகி விட்டது. :lol: :lol:

 

 

நெடுக்ஸ்,முதலில் நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் இது தொலைக்காட்சி நிகழ்வு. தமக்கு நிகழ்ச்சிகள் வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆட்களுக்குப் பணம் கொடுத்து அல்லது தொலைக்காட்சியில் முகம் காட்ட விரும்பும் ஏழை மக்களை அல்லது இதை ஒரு பணத்துக்கான தொழிலாகச் செய்யும் ஆட்களை வைத்து எடுக்கப் படுவது. ஒன்று இரண்டு உண்மையாக இருக்கலாம். இவை யதார்த்தத்துக்குப் புறம்பானவை.இவற்றை எல்லாம் நாம் ஆதாரங்களாக எடுக்கவே முடியாது.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த தொல்லைக்காட்சி விவாதங்கள்,விதண்டாவாதங்களை நான் கூடுதலாய் பாக்கிறேல்லை......எல்லாம் காசுக்காக ஒரு செற்றிங் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.



அதுமட்டுமில்லை சிலபேருக்கு கண்ணீரும் வருமாம்.......ஐயோ.....ஐயோ :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ்,முதலில் நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் இது தொலைக்காட்சி நிகழ்வு. தமக்கு நிகழ்ச்சிகள் வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆட்களுக்குப் பணம் கொடுத்து அல்லது தொலைக்காட்சியில் முகம் காட்ட விரும்பும் ஏழை மக்களை அல்லது இதை ஒரு பணத்துக்கான தொழிலாகச் செய்யும் ஆட்களை வைத்து எடுக்கப் படுவது. ஒன்று இரண்டு உண்மையாக இருக்கலாம். இவை யதார்த்தத்துக்குப் புறம்பானவை.இவற்றை எல்லாம் நாம் ஆதாரங்களாக எடுக்கவே முடியாது.

 

ஓரளவுக்கு ஆதாரங்களோடு வரும் இந்த நிகழ்ச்சிகளையே நம்ப முடியவில்லை என்றால் எந்த ஆதாரமும் முன்வைக்காத உங்கள் எழுத்துக்களை எப்பிடி நம்புறது. ஆனால் நிஜத்தில் பெண்களின் உலகம் நகரமாகவே மாறிட்டு வருகுது. அது அவர்களையே ஒரு நாள் அதிகளவு பாதிக்கச் செய்யும் போது நீங்களாகவே இவற்றின் கனதியை உணர்ந்து கொள்வீர்கள்..! அதற்காக ஆண்களின் மீதான உங்களின் சகட்டுமேனிக்கு அமையும் குற்றச்சாட்டுக்களை எல்லாம் அப்படியே நிஜம் என்று ஏற்று ஆண்களின் மீதான அடிப்படை மனித உரிமைகள் பெண்களால் மீறப்படுவதை அங்கீகரிக்க முடியாது. அதற்கு எதிரான கண்டனங்கள் ஆண்களின் உரிமைகளுக்காக..  எங்கென்றாலும் பதியப்பட்டே ஆகும்..! :icon_idea::)

 

 

அதுமட்டுமில்லை சிலபேருக்கு கண்ணீரும் வருமாம்.......ஐயோ.....ஐயோ :lol:  :lol:

 

எல்லா மனிதாபிமானமுள்ள மனிதனுக்கும் சக மனிதனின் (பெண்ணோ.. ஆணோ) கண்ணீரைக் கவலையைக் கண்டால்... கண்ணீர் அரும்பவே செய்யும். நிச்சயம் சிரிக்கத் தோன்றாது..! அதனை சக மனிதர்களாக..நீங்களும் உணர்ந்து கொள்ளனும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

இப்பிடிச் சிலபேருக்கு மற்றவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒழிவதே வேலையாகி விட்டது. :lol: :lol:

 

 

நெடுக்ஸ்,முதலில் நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் இது தொலைக்காட்சி நிகழ்வு. தமக்கு நிகழ்ச்சிகள் வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆட்களுக்குப் பணம் கொடுத்து அல்லது தொலைக்காட்சியில் முகம் காட்ட விரும்பும் ஏழை மக்களை அல்லது இதை ஒரு பணத்துக்கான தொழிலாகச் செய்யும் ஆட்களை வைத்து எடுக்கப் படுவது. ஒன்று இரண்டு உண்மையாக இருக்கலாம். இவை யதார்த்தத்துக்குப் புறம்பானவை.இவற்றை எல்லாம் நாம் ஆதாரங்களாக எடுக்கவே முடியாது.

 

 சகட்டுமேனிக்கு ஒரு குற்றச்சாட்டு, உங்கள் எழுத்துக்களை எப்படி நம்புவது, இது உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமா?  நாங்கள் நம்பிவிட்டு போவதற்கு? ஊரார் கதையென்றால் கற்பனை பண்ணி எதுவும் எழுதலாம், அதை இதை நாங்க நாங்க நம்பனும், அதை நம்ப வைக்க பகீரத பிரயத்தனம் :lol:.

 

 ஐயோ பெண்கள் பாவம், அவர்களுக்கென்று ஒரு தீர்வு வேணும், எத்தனைகாலம்தான் இப்படி ஏமாற்றுவீர்கள் ஆண்களை. :D

 

உலகம் மாறிவிட்டது, ஆணும் சரி பெண்ணும் சரி நினைத்த மாதிரி வாழ முடியும். இப்படியிரு என்று மற்றவனின் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. பிடிக்க வில்லையா விட்டுவிட்டு போங்கள், வாழ வழியா இல்லை இந்த பூமியில். 

 

நம் பிள்ளைகளுக்கு கூட நாம் வழிகாட்டியே ஒழிய, ஒரு அளவுக்குமேல் மூக்கை நுழைக்க முடியாது, நுழைச்சால் "STOP bossing me around?"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இன்னும் உங்களை இத்திரியில் காணவில்லை என்று நினைத்தேன் வந்தி. ஆண்களுக்கு சில யோசனைகளை கூறி குடும்பம் பிரிந்துபோகாமல் இருக்க வழி கூறினால் நீங்கள் ஆண்களைத் திருந்த விடுவதாய் இல்லை. சரி உங்களை எல்லாம் கடவுள் தான் காக்க வேண்டும். புதிதாய் ஏதாவது எழுதாது  மற்றவர்கள் கூறுவதையே எத்தனை பேர்தான் திரும்பத் திரும்பக் கூறுவீர்கள். ஆண்கள் பாவம் என்று பார்க்கிறேன்.  :D  

 ஆண்கள் பாவம் என்று பார்க்கிறேன்

 

உங்கள் திரியை பார்க்கும்வரை பெண்கள் பாவம் என்றுதான் பார்த்தேன் :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எல்லா மனிதாபிமானமுள்ள மனிதனுக்கும் சக மனிதனின் (பெண்ணோ.. ஆணோ) கண்ணீரைக் கவலையைக் கண்டால்... கண்ணீர் அரும்பவே செய்யும். நிச்சயம் சிரிக்கத் தோன்றாது..! அதனை சக மனிதர்களாக..நீங்களும் உணர்ந்து கொள்ளனும்..! :):icon_idea:

 

நான் கொஞ்சம் வித்தியாசம் ...........ஆரும் பெட்டையள்,பொண்டுகள் மான்விழி கண்ணாலை கண்ணீர் சிந்துறதை கண்டனெண்டால் விழுந்துவிழுந்து கெக்கட்டம் சிரிக்கிறனான்.ஏனெண்டால் கள்ளியள் பாருங்கோ? :D  :lol:

சுமே உங்களில் உள்ள மதிப்பு கூடுகின்றது. எந்த பெண்ணுமே பேசத் தயங்கும் திரியை திறந்து இத்தனை ஆண் ஆதிக்க வர்க்கங்களின் கருத்துகளையும் சமாளிக்கும் நீங்கள் ஒரு திறைமைசாலி. 

 

முகம் சலிக்காமல் பதிலிடுவதில் வல்லவர் நீங்கள்.

 

 தொடர்ந்து உங்கள் உள்ளத்தில் இருப்பதை எங்களுடன் பகிருங்கள். ஆனா ஓட்டுமொத்தமா எங்களை மட்டும் குறை கூற வேண்டாம், நாணயத்திற்கு இரு பக்கமிருக்கு. 

 

நல்லதை பொறுக்குவோம்

  • கருத்துக்கள உறவுகள்
சுமே உங்களில் உள்ள மதிப்பு கூடுகின்றது. எந்த பெண்ணுமே பேசத் தயங்கும் திரியை திறந்து இத்தனை ஆண் ஆதிக்க வர்க்கங்களின் கருத்துகளையும் சமாளிக்கும் நீங்கள் ஒரு திறைமைசாலி

 

முகம் சலிக்காமல் பதிலிடுவதில் வல்லவர் நீங்கள்.

 

 தொடர்ந்து உங்கள் உள்ளத்தில் இருப்பதை எங்களுடன் பகிருங்கள். ஆனா ஓட்டுமொத்தமா எங்களை மட்டும் குறை கூற வேண்டாம், நாணயத்திற்கு இரு பக்கமிருக்கு. 

 

நல்லதை பொறுக்குவோம்

 

துரோகி  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
துரோகி  :D  :D

 

இப்ப எல்லாம் பொண்ணுங்க சொல்லுறதைக் காட்டிலும்.. ஆண்கள் தங்களை தாங்களே.. ஆணாதிக்கவாதின்னு சொல்லிக்கிட முந்திக்கிறாங்க. இதெல்லாம் பெண்களை உள அளவில் திருப்திப்படுத்த அல்லது கட்டுப்படுத்த.. ஆண்களை கையாலும் புதிய வழிமுறைகள்..! இதனால எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு வராது. மாறாக.. பெண்களின் சுயாதிபத்திய வெறி கூடி.. ஆண்கள் மீதான பழியும் பழிப்பும் அளவுக்கு மிஞ்சி.. பெண்களை அது ஒட்டுமொத்த சமூகவிரோதிகள் என்ற நிலைக்கே உயர்த்தும்..! ஆண்களின் உரிமைகளும் பறிபோகும் நிலையே உருவாகும்..!  :icon_idea:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமே உங்களில் உள்ள மதிப்பு கூடுகின்றது. எந்த பெண்ணுமே பேசத் தயங்கும் திரியை திறந்து இத்தனை ஆண் ஆதிக்க வர்க்கங்களின் கருத்துகளையும் சமாளிக்கும் நீங்கள் ஒரு திறைமைசாலி. 

 

சுமே ஒரு ஆண் பெண்ணைப் புகழ்ந்தால் பின்னர் எதோ குழி பறிப்பு நடக்கப் போகிறது என்று அர்த்தம். கவனம் . :D :D

 

உண்மையான ஆதிக்கவாதி தன்னை பொதுவில் மற்றவர்முன் காட்டிக் கொள்ள மாட்டான். பூனைகள் போல் இருந்து பெண்களைத் துன்புறுத்துவர், அடக்குவர், தான் ஆண் என்பதை நீரூபிக்கப் பார்ப்பர். நெடுக்ஸ் நீங்கள் எதோ அனுபவப் பட்டவர் போல் கூறுகிறீர்கள். நான் முன்பே கூறியுள்ளேன். ஆண்  ஆணாக இருக்கும்வரை பெண்ணும் ஒழுங்காகத்தான் இருப்பாள். ஆண்களின் கையாலாகாத் தனம்தான் பெண்களை மிஞ்ச வைப்பது. கெட்டவளாக்குவது.

ஆண்கள் தம் சுயத்தை இழக்காதிருந்தால் ஏன் இந்தத் துன்பம் எல்லாம்.

ஆண்களே பெண்கள் சொல்வதற்க்கெல்லாம் தலையாட்டாதீர்கள்.

சுயமாகச் சிந்தனை செய்யுங்கள். உங்கள் மற்றைய நண்பர்கள் சொல் கேட்காதீர்கள்.

குடும்பத்தில் பிரச்சனை தோன்றினால் மனைவியிடம் துணிவாக இருத்தி வைத்துப் பேசுங்கள்.

மனைவிக்கு ஒருவிடயத்தில் சந்தேகம் ஏற்பட்டால்  அதை தெளிவாக்குங்கள் சடையாமல்.

பஞ்சிப்பட்டு நீங்கள் செய்யும் வேலையை மனைவியிடம் சுமத்தாதீர்கள்.

உங்கள் வீட்டில் நீங்களும் உங்கள் குடும்பத்தவரும் மட்டுமே இருக்கப் பாருங்கள்.

என்னதான் உற்ற நண்பன் எனினும் ஒரு எல்லைக்குமேல் வீட்டிலோ குடும்பத்துல்லோ நுழைய அனுமதிக்காதீர்

குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தாது அன்பைச் செலுத்திப் பாருங்கள் பெண்கள் உங்கள் அன்புக்கு அடிமையாகிக் கிடப்பார்கள்.

இப்பிடி இன்னும் நிறையச் சொல்லலாம் ஆண்களே உங்களுக்கு. :) :)

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி நித்தியானந்தாவின், தற்போதைய விலாசம் அவசரமாகத் தேவை! :D

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்கள் எதோ அனுபவப் பட்டவர் போல் கூறுகிறீர்கள். நான் முன்பே கூறியுள்ளேன். ஆண்  ஆணாக இருக்கும்வரை பெண்ணும் ஒழுங்காகத்தான் இருப்பாள். ஆண்களின் கையாலாகாத் தனம்தான் பெண்களை மிஞ்ச வைப்பது. கெட்டவளாக்குவது.

ஆண்கள் தம் சுயத்தை இழக்காதிருந்தால் ஏன் இந்தத் துன்பம் எல்லாம்.

ஆண்களே பெண்கள் சொல்வதற்க்கெல்லாம் தலையாட்டாதீர்கள்.

சுயமாகச் சிந்தனை செய்யுங்கள். உங்கள் மற்றைய நண்பர்கள் சொல் கேட்காதீர்கள்.

குடும்பத்தில் பிரச்சனை தோன்றினால் மனைவியிடம் துணிவாக இருத்தி வைத்துப் பேசுங்கள்.

மனைவிக்கு ஒருவிடயத்தில் சந்தேகம் ஏற்பட்டால்  அதை தெளிவாக்குங்கள் சடையாமல்.

பஞ்சிப்பட்டு நீங்கள் செய்யும் வேலையை மனைவியிடம் சுமத்தாதீர்கள்.

உங்கள் வீட்டில் நீங்களும் உங்கள் குடும்பத்தவரும் மட்டுமே இருக்கப் பாருங்கள்.

என்னதான் உற்ற நண்பன் எனினும் ஒரு எல்லைக்குமேல் வீட்டிலோ குடும்பத்துல்லோ நுழைய அனுமதிக்காதீர்

குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தாது அன்பைச் செலுத்திப் பாருங்கள் பெண்கள் உங்கள் அன்புக்கு அடிமையாகிக் கிடப்பார்கள்.

இப்பிடி இன்னும் நிறையச் சொல்லலாம் ஆண்களே உங்களுக்கு. :) :)

 

நான் தனிப்பட்ட முறையில் எந்தப் பெண்ணாலும் பாதிக்கப்படவன் அல்ல. அதற்கு இடமளிப்பவனும் அல்ல. அதேபோல் அவர்களுக்கு கேடு செய்ததும் இல்லை. செய்ய நினைப்பதும் இல்லை. என்னோடு பழகும் பெண்கள் எல்லாருமே நல்லவங்க தான். என் தெரிவு அதற்கேற்ப அமையும். அதுவேற விடயம். அதற்காக என் முன்னால நல்லவங்களா உள்ளவங்க பிறர் முன்னாடியும் அப்படின்னு நான் உத்தரவாதம் அளிக்கமாட்டேன்.  அதேபோல் தான்.. உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாரும் நல்லவங்க என்று... என்னைச் சுற்றிய வட்டத்தில் நின்று கொண்டு நான் தீர்மானிக்க முடியாது... அப்படி தீர்மானிக்கவும் மாட்டேன்.

 

உலகில் மனிதனாகப் பிறந்த பிறவிகள் எல்லாவற்றிற்கும் சுய சிந்தனை உண்டு. அது ஆண்களுக்கும் நிறையவே உண்டு.

 

ஆண்களுக்கு நண்பர்கள் என்றால் பெண்களும் நண்பிகளின் சொல்லைக் கேட்டு நடக்கினம் தானே. அதை ஆண்கள்.. நீ நண்பி சொல்லைக் கேட்கக் கூடாது என்றால்.. உடனே ஆணாதிக்கம் என்று சொல்லிடுவீர்கள். ஆனால் அதே அதிகாரத்தை ஆண் மீது திணிக்கும் போது ஏன் அதைப் பெண்ணாதிக்கம் என்று உணர்கிறீர்கள் இல்லை..!

 

மனையிடம் அல்லது காதலியிடம்.. சுமூகமாகப் பேசக் கூடிய சூழ்நிலை இருந்தால் தான் பேசுவதற்கு. இல்லாத நிலையில் உள்ள பெண்களிடம் அப்படியான விடயங்களை எப்படிப் பேசுவது..???!

 

மனிதன் ஒரு சமூக விலங்கு. வெறுமனவே.. தனிக்குடித்தனம் என்று ஆணைச் சிறை வைக்கக் கூடாது. அவனுக்கு சமூக அக்கறை அவசியம். அவன் பெற்றோரை.. உறவுகளை கவனிக்க வேண்டும். அவனுக்கு என்றொரு நட்புவட்டம் இருக்க வேண்டும். பெண்ணுக்கும் அந்த உரிமை உள்ளது. அதுதான் சமூக வாழ்வின் அடிப்படையே. அது எல்லை மீறாமல் இருப்பதை பெண்களுக்கு ஆண்களும்  ஆண்களுக்கு பெண்களும் வழிகாட்டிகளாக இருந்து உறுதிப்படுத்திக் கொள்வதே நன்று. அதைவிட்டு நண்பர்களே வேண்டாம் என்பது சுத்த பைத்தியக்காரத்தனம். அதை நிராகரிக்கும் நீங்கள்.. சமூக.. வாழ்வைப் பிரதிபலிக்கும்.. மனிதர்கள் தானா..????????!

 

பெண்களும் தான்.. பல இடங்களின் ஆண்களோடு அதிகம் நெருங்கிப் பழகுகின்றனர். அது கணவன்.. காதலன் போன்றவர்கள் அவர்கள் மீது சந்தேகம் கொள்ளச் செய்கிறது. அப்படியான நெருக்கங்களைப் பெண்கள் தவிர்த்துக் கொண்டால் ஆண்களும் அவள் ஒழுங்கா இருக்க நான் ஏன் தவறிப்போவான் என்று சிந்திக்கத் தலைப்படுவார்கள். அதைவிடுத்து அவன் செய்யுறான்.. நானும் செய்யுறன் என்று ஆளையாள் போட்டி போட்டுக்கிட்டு.. தலைகால் புரியாமல் ஆடினால் நஸ்டம் யாருக்கு..????! ஆண் - பெண் இருவருக்கும். சமூகத்திற்குமே ஆகும். :icon_idea:

 

இப்பிடி இன்னும் நிறையச் சொல்லலாம் பெண்களே உங்களுக்கு. :) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ எல்லாத்தையும் பார்க்கும் போது ஒரு உண்மை தெரியுது...ஆண்கள் முதுகெலும்பு இல்லாமல் இருப்பதால் தான் அத்தனை குடும்பத்திலும் பிரச்சனை என்று தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்
இந்த வீடியோ எல்லாத்தையும் பார்க்கும் போது ஒரு உண்மை தெரியுது...ஆண்கள் முதுகெலும்பு இல்லாமல் இருப்பதால் தான் அத்தனை குடும்பத்திலும் பிரச்சனை என்று தெரியுது

 

அப்படி சொல்லமுடியாது ரதி

 

இது போன்ற சில வீடியோக்களை உறவினர்கள் வீடுகளுக்கு போனபோது பார்க்க நேர்ந்தது.

உண்மையில் உறவுகளுடன் இருந்தே பார்க்கமுடியவில்லை.

அத்துடன் பெண்கள் மீதான அபிமானம் என்பதை  முழுவதுமாக மாற்றிவிடக்கூடியது.

ஆண்கள் தப்பு செய்வார்கள்

அப்படி இப்படியானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததால் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.

ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் பெண்களும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதை  பார்க்கும்போது அருவருப்பாக இருந்தது.

 

ஒன்று பார்த்தேன்

ஒரு குடும்பத்துக்குள் பிரச்சினை  என்னவென்று விசாரித்தால் அந்த பெண்ணின் அக்காவோடு இவளது கணவனுக்கு  தொடர்பு.

சரி

அந்த அக்கா ஏன் இவருடன் தொடர்பு வைத்திருக்கின்றார் என்று பார்த்தால் அவரது கணவருக்கு இவரது இன்னொரு அக்காவுடன்   தொடர்பு.  சீ என்று இருந்தது.  ஒரு குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

அந்த வீட்டில் 3 பெண் பிள்ளைகள்.  இதைப்பார்த்த அவர்களது கடைசி மகள் 14 வயசு.  சொல்லிச்சுது அக்காமாரை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்று.  அங்கிருந்தவர்கள் இதைக்கேட்டு சிரித்தார்கள்.

ஆனால் எனக்கு எமது எதிர்கால சந்ததி  குறித்து நெஞ்சு அடிக்கத்தொடங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் ஒரு பொம்பிளை எண்டால் காணும் அவளை ஒரு பலயீனமான பிறவியா பாக்கிறியள் ஆம்பிளையள் ???? ஒரு கிழமை ஆம்பிளையள் பொம்பிளையளின்ரை இடத்துக்கு வந்து இருங்கோ . அதுக்கு பிறகு ஆர் நல்லது கெட்டது எண்டு கதைக்கலாம் .  ஊர் உலகத்திலை நல்லதும் கெட்டதும் ரெண்டு பேரிட்டையும் கிடக்கு . சுமேரியர் அக்கா இந்த நேரத்துக்கு ஒரு கதை எழுதியிருக்கலாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நான் நண்பர்களே வேண்டாம் என்று கூறவில்லை. எதற்கும் ஒரு எல்லை உள்ளது. அதை மீறி நண்பர்களைக்கூட உள்ளே விடக் கூடாது என்று தான் கூறினேன். பெண்களைப் போல் கற்பூர புத்தி ஆண்களிடம் இல்லை என்பது தெரிந்ததுதானே. :D  :D  ஆண்களோ பெண்களோ எல்லாம் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மீறி இருபாலாரும் நெருங்கவேண்டிய தேவை இல்லை.

 நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனது குடும்பம் பல காலமாக ஐரோப்பியச் சூழலில் வசிக்கிறோம். ஆனால் நானோ கணவரோ பிள்ளைகளுக்கு முன்னால் ஒருநாள் கூட முத்தமிட்டதில்லை. நெருங்கி ஒருவரை ஒருவர் உரசியபடியோ அல்லது அணைத்தபடியோ இருந்ததில்லை. என்னைப் பட்டிக்காடு என்று நினைப்பீர்கள். அப்படி அல்ல. என்பெற்றோர் கூட அப்படித்தான். ஏன் எம் உறவினர் நண்பர்கள் வட்டம் கூட அப்படியானதுதான். நாம் யாரோடும் தொட்டுத் தொட்டுப் பேசுவதும் இல்லை.
அனால் சிலர் கண்ட உடனேயே நெருங்கி வருவதும் இயல்பாக தொடுவதுபோல்  தொடவருவதும்  எனக்கு அப்படியானவர்களைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. அத்தோடு நேரேயே கூறிவிடுவேன் தொடாமல் தள்ளி நின்று கதையுங்கள் என்று. பல சமூகவிடயங்கள் செய்வதனால் நான் பழகுவது ஆண்களுடந்தான். என்கணவர் என்மேல் சந்தேகப் படுவதில்லை ஏனெனில் நான் ஒன்றையும் அவரிடம் ஒழிப்பதில்லை. அதனால் என்வாழ்வு நன்றாகப் போகிறது. எனக்கு முழு சுதந்திரம் உண்டு.

எனக்கு புதிதாக அறிமுகமான நண்பியின் வீட்டுக்குக் குடும்பமாக ஒருமுறை சென்றிருந்தோம். கணவர் வந்து மனைவியுடன் நெருங்கி அமர்ந்து தொழில் கை போட்டுக்கொண்டு எம்முடன் பேசினார். இங்கு பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகள் அதைப் பார்த்து முகத்தைச் சுளித்தனர். பின் அவரின் 14 வயது மகள் வந்து தந்தையின் மடியில் இருந்தார். இவற்றை எல்லாம் பார்த்த எனக்கு அருவருப்பாகத்தான் இருந்தது. ஒரு வயதுக்கு மேல் பெண் என்றாலும் ஆண்  என்றாலும் பிள்ளைகள் என்றாலும் கூட ஒரு இடைவெளியை வைத்திருப்பதுதான் நல்லது. அந்த நண்பியை அடுத்த தடவை சந்தித்தபோது நான் அவரிடம் எடுத்துக் கூறினேன். எண்கள் குடும்பப் பண்பாடு இப்படி. மற்றவர்களின் முன்னால் ஏன் இப்படி நடக்கத்தான் வேண்டுமா என்று. அதன்பின் நான் சென்றபோது ஒழுங்காக இருந்து கதைத்தனர். ஆனால் இன்றுவரை என் பிள்ளைகள் அவள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டனர். இப்படி இன்னும் நிறைய எழுதலாம்.

மைத்திரேயி நீங்கள் சொன்னதுபோல் இந்த நேரத்துக்கு கதை எழுதியிருக்கலாம் தான். ஆனால் அதைவிட இப்படியான கருத்துக்கள் சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசற்படி

 

ஆணோ பெண்ணோ எல்லோரும் தவறு செய்பவர்களும் அல்ல.

எல்லோரும் ஒருவருக்கொருவர்  உண்மையாக நடந்துகொள்பவர்களும் அல்ல.

 

எனக்கென்னவோ பெண்களுடன் ஒட்டிப்பிறந்த சந்தேகம் எனும் பேய்தான்

ஆண்களை அதிகளவில் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றதோ எனத் தோன்றுகின்றது.

துரோகி  :D  :D

 

 பட்டம் கொடுப்பதிற்கு பின்நிற்கமாட்டீர்கள் போல :D

 நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனது குடும்பம் பல காலமாக ஐரோப்பியச் சூழலில் வசிக்கிறோம். ஆனால் நானோ கணவரோ பிள்ளைகளுக்கு முன்னால் ஒருநாள் கூட முத்தமிட்டதில்லை. நெருங்கி ஒருவரை ஒருவர் உரசியபடியோ அல்லது அணைத்தபடியோ இருந்ததில்லை. என்னைப் பட்டிக்காடு என்று நினைப்பீர்கள். அப்படி அல்ல. என்பெற்றோர் கூட அப்படித்தான். ஏன் எம் உறவினர் நண்பர்கள் வட்டம் கூட அப்படியானதுதான். நாம் யாரோடும் தொட்டுத் தொட்டுப் பேசுவதும் இல்லை.

அனால் சிலர் கண்ட உடனேயே நெருங்கி வருவதும் இயல்பாக தொடுவதுபோல்  தொடவருவதும்  எனக்கு அப்படியானவர்களைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. அத்தோடு நேரேயே கூறிவிடுவேன் தொடாமல் தள்ளி நின்று கதையுங்கள் என்று. பல சமூகவிடயங்கள் செய்வதனால் நான் பழகுவது ஆண்களுடந்தான். என்கணவர் என்மேல் சந்தேகப் படுவதில்லை ஏனெனில் நான் ஒன்றையும் அவரிடம் ஒழிப்பதில்லை. அதனால் என்வாழ்வு நன்றாகப் போகிறது. எனக்கு முழு சுதந்திரம் உண்டு.

எனக்கு புதிதாக அறிமுகமான நண்பியின் வீட்டுக்குக் குடும்பமாக ஒருமுறை சென்றிருந்தோம். கணவர் வந்து மனைவியுடன் நெருங்கி அமர்ந்து தொழில் கை போட்டுக்கொண்டு எம்முடன் பேசினார். இங்கு பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகள் அதைப் பார்த்து முகத்தைச் சுளித்தனர். பின் அவரின் 14 வயது மகள் வந்து தந்தையின் மடியில் இருந்தார். இவற்றை எல்லாம் பார்த்த எனக்கு அருவருப்பாகத்தான் இருந்தது. ஒரு வயதுக்கு மேல் பெண் என்றாலும் ஆண்  என்றாலும் பிள்ளைகள் என்றாலும் கூட ஒரு இடைவெளியை வைத்திருப்பதுதான் நல்லது. அந்த நண்பியை அடுத்த தடவை சந்தித்தபோது நான் அவரிடம் எடுத்துக் கூறினேன். எண்கள் குடும்பப் பண்பாடு இப்படி. மற்றவர்களின் முன்னால் ஏன் இப்படி நடக்கத்தான் வேண்டுமா என்று. அதன்பின் நான் சென்றபோது ஒழுங்காக இருந்து கதைத்தனர். ஆனால் இன்றுவரை என் பிள்ளைகள் அவள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டனர். இப்படி இன்னும் நிறைய எழுதலாம்.

மைத்திரேயி நீங்கள் சொன்னதுபோல் இந்த நேரத்துக்கு கதை எழுதியிருக்கலாம் தான். ஆனால் அதைவிட இப்படியான கருத்துக்கள் சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

 

 இப்படிப்பட்ட கதை ஏன் உங்களை எழுத தூண்டியது என இப்ப விளங்கிவிட்டது. பிரச்சனை எங்களில் அல்லது வெளியிலோ இல்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நான் நண்பர்களே வேண்டாம் என்று கூறவில்லை. எதற்கும் ஒரு எல்லை உள்ளது. அதை மீறி நண்பர்களைக்கூட உள்ளே விடக் கூடாது என்று தான் கூறினேன். பெண்களைப் போல் கற்பூர புத்தி ஆண்களிடம் இல்லை என்பது தெரிந்ததுதானே. :D  :D  ஆண்களோ பெண்களோ எல்லாம் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மீறி இருபாலாரும் நெருங்கவேண்டிய தேவை இல்லை.

 நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனது குடும்பம் பல காலமாக ஐரோப்பியச் சூழலில் வசிக்கிறோம். ஆனால் நானோ கணவரோ பிள்ளைகளுக்கு முன்னால் ஒருநாள் கூட முத்தமிட்டதில்லை. நெருங்கி ஒருவரை ஒருவர் உரசியபடியோ அல்லது அணைத்தபடியோ இருந்ததில்லை. என்னைப் பட்டிக்காடு என்று நினைப்பீர்கள். அப்படி அல்ல. என்பெற்றோர் கூட அப்படித்தான். ஏன் எம் உறவினர் நண்பர்கள் வட்டம் கூட அப்படியானதுதான். நாம் யாரோடும் தொட்டுத் தொட்டுப் பேசுவதும் இல்லை.

அனால் சிலர் கண்ட உடனேயே நெருங்கி வருவதும் இயல்பாக தொடுவதுபோல்  தொடவருவதும்  எனக்கு அப்படியானவர்களைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. அத்தோடு நேரேயே கூறிவிடுவேன் தொடாமல் தள்ளி நின்று கதையுங்கள் என்று. பல சமூகவிடயங்கள் செய்வதனால் நான் பழகுவது ஆண்களுடந்தான். என்கணவர் என்மேல் சந்தேகப் படுவதில்லை ஏனெனில் நான் ஒன்றையும் அவரிடம் ஒழிப்பதில்லை. அதனால் என்வாழ்வு நன்றாகப் போகிறது. எனக்கு முழு சுதந்திரம் உண்டு.

எனக்கு புதிதாக அறிமுகமான நண்பியின் வீட்டுக்குக் குடும்பமாக ஒருமுறை சென்றிருந்தோம். கணவர் வந்து மனைவியுடன் நெருங்கி அமர்ந்து தொழில் கை போட்டுக்கொண்டு எம்முடன் பேசினார். இங்கு பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகள் அதைப் பார்த்து முகத்தைச் சுளித்தனர். பின் அவரின் 14 வயது மகள் வந்து தந்தையின் மடியில் இருந்தார். இவற்றை எல்லாம் பார்த்த எனக்கு அருவருப்பாகத்தான் இருந்தது. ஒரு வயதுக்கு மேல் பெண் என்றாலும் ஆண்  என்றாலும் பிள்ளைகள் என்றாலும் கூட ஒரு இடைவெளியை வைத்திருப்பதுதான் நல்லது. அந்த நண்பியை அடுத்த தடவை சந்தித்தபோது நான் அவரிடம் எடுத்துக் கூறினேன். எண்கள் குடும்பப் பண்பாடு இப்படி. மற்றவர்களின் முன்னால் ஏன் இப்படி நடக்கத்தான் வேண்டுமா என்று. அதன்பின் நான் சென்றபோது ஒழுங்காக இருந்து கதைத்தனர். ஆனால் இன்றுவரை என் பிள்ளைகள் அவள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டனர். இப்படி இன்னும் நிறைய எழுதலாம்.

மைத்திரேயி நீங்கள் சொன்னதுபோல் இந்த நேரத்துக்கு கதை எழுதியிருக்கலாம் தான். ஆனால் அதைவிட இப்படியான கருத்துக்கள் சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பெண்களின் புத்தி கற்பூரமுன்னா.. பத்திக்குச்சியை தட்டி வைச்சா பத்திக்குமா..???!

 

உங்களின் கற்பூரப் புத்தி வியாக்கியாணத்திற்கு எந்த ஒரு விஞ்ஞான விளக்கமும் இல்லை சுமே அக்கா. அது தங்களின் கற்பனைக் கற்பிதம் மட்டுமே..!

 

மேலும்.. ஒரு கணவர் மனைவியை உரசுறது... தொடுறது.. இதெல்லாம்.. அவரவர் தனி மனித சுதந்திரம். மற்றவர் முன் நாகரிகமாக நடந்து கொள்வது மனித இயல்பு. அதை மீறி நடந்து கொள்பவர்களை சட்டத்தை தவிர வேறு எவரும் தண்டிக்க தட்டிக்கேட்க முடியாது.

 

பொதுவாக முந்திய தலைமுறை.. ஈழத்தமிழ் பெற்றோர் பிள்ளைகளுக்கு முன் உரசுவது... கொஞ்சுவதில்லை. ஆனால் நடைமுறைத் தலைமுறை குறிப்பாக புலம்பெயர் தலைமுறைப் பெற்றோர்.. இதற்கு எதிர்மாறு. அதற்காக அவர்கள் எல்லோரும்.. கெட்டவர்கள் என்று பொருள் கொள்ள முடியாது.அதே நேரம் கட்டுப்பெட்டியான ஆக்கள் நல்லம் என்று கூற முடியாது. கட்டுப்பெட்டிக்குள் நடக்கும் தப்புக்கள் வெளில வருவது கடினம் என்பதால்.. அங்கு என்ன நடக்குது என்றே தெரிவதில்லை. அவர்கள் தான் அதிகம் தப்புச் செய்கின்றனர்.

 

பிரச்சனை அதுவல்ல.. ஆண்கள் மீதான பெண்களின் குற்றச்சாட்டுக்கள் எப்போதும் சரியானவை என்ற நிறுவலை நீங்கள் உங்கள் குடுப்பத்தை மையமாக வைத்து நிலைநாட்ட நிற்பது தான் தவறு. இதற்கு முக்கிய ஆண்கள் மீதான பெண்களின் அடிப்படைக் கண்ணோட்டமே தவறாக இருப்பதும் உண்மையில்.. ஆண்களை விட தாங்கள் உயர்வு இல்லையோ என்ற ஒருவித தாழ்வு எண்ணமுமே காரணமாகும். :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்ன சொன்னாலும் விளங்கப் போவதில்லை என்பது புரிகிறது. நான் ஒரு உதாரணத்துக்குத்தான் என் குடும்பத்தை எழுதினேன். நாகரிகம் என்பது வேறு ஒழுக்கம் என்பது வேறு. முதலில் நாம் குடும்பத்துள் ஒழுக்கத்தைப் பேணவேண்டும்.எல்லாம் ஆரம்பிப்பது வீட்டிலிருந்துதான்.  எம்மைப் பார்த்துத் தான் பிள்ளைகள் வளருவார்கள். நீங்களே உங்கள் பழக்கங்களே மேற்கத்தேயக் கலாச்சாரத்துக்குப் பழகிவிட்டதெனில் பிறகு மற்றைய எல்லாவற்றையும் அதன்படியே பார்க்க வேண்டும். பிறகென்ன பெண்கள் அப்படி இப்படி என்று கதைப்பதற்கே ஒன்றுமில்லையே. வெள்ளைக்காரன் வந்து எத்தனையோ சலுகைகள் தந்தும்  மாறாதிருந்ததுதான் எமது பண்பாடு. புலம்பெயர்ந்து வந்துவிட்டோம் என்பதற்காக மாறவேண்டுமா என்ன????? எமது சமூகத்துக்கு எது தேவையோ அதைவிட்டு தேவையில்லாதவற்றை ஏன் எம்முடையதாக்க வேண்டும். மற்றவன் செய்கிறான் என்று நாமும் பொது இடங்களில் கட்டிப் பிடிக்கலாம், முத்தமிடலாம். டேட்டிங் போகலாம், என்னவும் செய்யலாம். பின்னர் ஏன் ஒப்பாரி வைப்பான்  பெண்கள் அப்படிச் செய்யினம் இப்படிச் செய்யினம் என்று.

இத் திரியை இத்துடன் நிறுத்துவதுதான் நல்லது. ஏனெனில் எதை எழுதினாலும் விழலுக்கிறைத்த நீர் என்பது தெரிகிறது. எது உங்களுக்கு எழுதச் சாதகமாக உள்ளதோ அதை மட்டும் எடுத்து எழுதுகிறீர்களேயன்றி பயனுள்ளவை எவையும் இல்லை.

இத்தனை நாட்கள் இத்திரியில் எழுதிய அனைத்து உறவுகளுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.


 

  • கருத்துக்கள உறவுகள்
பின் அவரின் 14 வயது மகள் வந்து தந்தையின் மடியில் இருந்தார். இவற்றை எல்லாம் பார்த்த எனக்கு அருவருப்பாகத்தான் இருந்தது. ஒரு வயதுக்கு மேல் பெண் என்றாலும் ஆண்  என்றாலும் பிள்ளைகள் என்றாலும் கூட ஒரு இடைவெளியை வைத்திருப்பதுதான் நல்லது.

 

இது சரியாகத்தெரியவில்லை சுமே.

 

எனது வீட்டில் வார இறுதி  நாட்களில் எல்லோரும் எனது கட்டிலுக்கு வந்து விடுவார்கள்.  இந்தக்கிழமை நடந்தவை  அடுத்த கிழமை நடக்கப்போபவை  பற்றி  எல்லோரும் ஒன்றாக படுத்துக்கிடந்து பேசுவோம்.  ஆளுக்காள் நுள்ளுதல் கிளுக்கு பண்ணுதல் நக்கலடித்தல் என்று எல்லாமே  இருக்கும்.

 

எனது மனைவி   உடுப்பு மாற்றும்போது அறையை  பூட்டமாட்டார்.   வளர்ந்த மகன்கள் பொறுத்த நேரத்தில் உள்ளே  வந்ததுமுண்டு.   ஆரம்பத்தில் எனக்கு அது ஒரு மாதிரித்தான் இருந்தது.

அவனது அம்மா.   இதில் நானென்ன பிரிவு பார்ப்பது என்று என் மனம் சொன்னது

அதனால் இது தான் சரி  என்று என்னை  நான் மாத்திக்கொண்டேன்.

பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குள்ளும்  இது விடயத்தில் ஒழிவுத்தன்மையற்று வெளிப்படத்தன்மை இருக்கணும் என்பது எனது கருத்து.   இதன் மூலம் இது பற்றிக்கூட எமது பிள்ளைகள் எம்முடன் பேச வழி வகுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் எம்குடும்பத்துள் செய்வது வேறு அண்ணா. மற்றவர்கள் அதுக்கும் புதிதாக ஒருவர் வீட்டுக்கு வரும் போது தந்தையின் மடியில் ஏறி இருந்துகொண்டு கழுத்தைக் கட்டிப்பிடிப்பதும் கொஞ்சுவதும் அது தந்தையே ஆனாலும் என்னைப் பொருத்தவரை தவறுதான் அண்ணா. நான் என் என் கருத்தை மற்றவர்களுக்காக மாற்ற முடியாதுதானே அண்ணா. அப்படி நான் எழுதிவிட்டேன் என்பதற்காக நீங்களும் மாற்றமுடியாது. ஆனாலும் அந்த நண்பியுடனான நட்பு இன்னும் தொடர்கிறது. ஒவ்வொருவர் வாழ்வும் ஒவ்வொரு விதம். நான் எனது நண்பிக்கு கூறாது விட்டிருந்தால் எமது நட்பு சிலவேளை தொடராது இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்ன சொன்னாலும் விளங்கப் போவதில்லை என்பது புரிகிறது. நான் ஒரு உதாரணத்துக்குத்தான் என் குடும்பத்தை எழுதினேன். நாகரிகம் என்பது வேறு ஒழுக்கம் என்பது வேறு. முதலில் நாம் குடும்பத்துள் ஒழுக்கத்தைப் பேணவேண்டும்.எல்லாம் ஆரம்பிப்பது வீட்டிலிருந்துதான்.  எம்மைப் பார்த்துத் தான் பிள்ளைகள் வளருவார்கள். நீங்களே உங்கள் பழக்கங்களே மேற்கத்தேயக் கலாச்சாரத்துக்குப் பழகிவிட்டதெனில் பிறகு மற்றைய எல்லாவற்றையும் அதன்படியே பார்க்க வேண்டும். பிறகென்ன பெண்கள் அப்படி இப்படி என்று கதைப்பதற்கே ஒன்றுமில்லையே. வெள்ளைக்காரன் வந்து எத்தனையோ சலுகைகள் தந்தும்  மாறாதிருந்ததுதான் எமது பண்பாடு. புலம்பெயர்ந்து வந்துவிட்டோம் என்பதற்காக மாறவேண்டுமா என்ன????? எமது சமூகத்துக்கு எது தேவையோ அதைவிட்டு தேவையில்லாதவற்றை ஏன் எம்முடையதாக்க வேண்டும். மற்றவன் செய்கிறான் என்று நாமும் பொது இடங்களில் கட்டிப் பிடிக்கலாம், முத்தமிடலாம். டேட்டிங் போகலாம், என்னவும் செய்யலாம். பின்னர் ஏன் ஒப்பாரி வைப்பான்  பெண்கள் அப்படிச் செய்யினம் இப்படிச் செய்யினம் என்று.

இத் திரியை இத்துடன் நிறுத்துவதுதான் நல்லது. ஏனெனில் எதை எழுதினாலும் விழலுக்கிறைத்த நீர் என்பது தெரிகிறது. எது உங்களுக்கு எழுதச் சாதகமாக உள்ளதோ அதை மட்டும் எடுத்து எழுதுகிறீர்களேயன்றி பயனுள்ளவை எவையும் இல்லை.

இத்தனை நாட்கள் இத்திரியில் எழுதிய அனைத்து உறவுகளுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.

 

 

தவறான கருத்து. நாம்.. எம்மை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு.. அதற்குள் வந்தால் தான் வாழ்ந்தால் தான்.. ஒழுக்கம்.. நாகரிம் என்று வரையறுக்கக் கூடாது. நாங்கள் எல்லா மனிதருக்கும் பொதுவான ஒரு வாழ்வியல் நடத்தை.. தனிநபர் வாழ்வியல் நடத்தை என்ற இரட்டை நிலையைக் காண்கிறோம். பொது வாழ்வியல் நடத்தையை சமூகம் சட்டம் தீர்மானிக்கலாம். அந்த வகையில் சமூகத்தின் அங்கத்தவர் என்ற வகையில் நீங்களும் கருத்துச் சொல்லலாம்.. அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்வியல் நடத்தையை அந்த மனிதனைத் தவிர மற்றவர்கள் தீர்மானிப்பதாயின் இந்தப் பூமிப்பந்தில் சுதந்திர வாழ்வு என்பது அடிப்பட்டுப் போகிறது.

 

நாம் நாமாக வாழ வேண்டுமே தவிர மற்றவைக்கு வாழக்கூடாது. ஆனால் மற்றவர்கள் முகம் சுழிக்காத வகைக்கு நாம் மற்றவர்கள் முன் நடந்து கொள்வது தனிச்சிறப்பு என்று சொல்லலாமே தவிர அதுதான் ஒழுக்கம் என்று வரையறுக்க முடியாது.

 

நான் நினைக்கிறேன்.. நாங்கள் சிந்திக்கும் பாங்கு உங்களினதை விட வேறானது என்று. அதனை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது என்று. ஆனால் எங்களால் உங்களின் நிலைப்பாடுகளை சரியாக விளங்கிக் கொள்ள முடிகிறது. அதில் தற்துணிவாக.. "நல்லது" என்ற வரைவிலக்கணம் அதிகம் திணிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறேன். :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.