Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிகளை பாதிக்கும்' : முஸ்லிம் கவுன்ஸில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிகளை பாதிக்கும்' : முஸ்லிம் கவுன்ஸில்

தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அந்தச் சந்திப்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார அம்சங்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிடுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளுமாறு கோரும் வகையில் நடத்தப்பட்ட அந்த செய்தியாளர் சந்திப்புக்கு அந்த கவுன்ஸிலின் தலைவர் என். எம். அமீன் தலைமை தாங்கினார்.

இப்படியான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதன் மூலம், முஸ்லிம்களுக்கும், ஏனைய சமூகங்களுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அமீன் எச்சரித்தார்.

குறிப்பாக, ஹலால் சான்றிதழ்கள் வழக்கும் நடைமுறைகள் குறித்து சில அமைப்புக்களால் அண்மைக்காலமாக சில தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக அங்கு அமீன் விளக்கினார்.

அந்த சந்திப்பின்போது பேசிய ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.எம். சுஹைர், அவர்கள், தலிபான்கள் மற்றும் அல்கைதாவுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் உத்தேச தடையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

இப்படியான தடைச் சட்டங்களைப் பயன்படுத்தி சிறுபான்மையினரான முஸ்லிம்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுடன், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதாகக் கூறிய சுஹைர் அவர்கள், இந்தச் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் பட்சத்தில், அது இவர்களுக்கு பாதகமாக அமையலாம் என்றும் இவை குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130203_lankamuslimcouncilpresser.shtml

தடை அல்கொய்தாவுடன் தொடர்பு வைத்துள்ள சிங்களப்  பயங்கரவாதிகளையும் பாதிக்கும்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அல்கைடா தொடர்பை தடை செய்வதையே எதிர்க்கிறாங்கப்பா.. :rolleyes: தில்லுதான்.. :D

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்.

 சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுடன், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதாகக் கூறிய சுஹைர் அவர்கள், இந்தச் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் பட்சத்தில், அது இவர்களுக்கு பாதகமாக அமையலாம் என்றும் இவை குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

 

சிங்களம் சர்வதேச சட்டங்களை துஸ்பிரயோகம்  செய்வதில்லை என இதே நாடுகள் போனவருடம் ஜெனிவாவில் கூறி இருந்தார்கள்  :o

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் சர்வதேச சட்டங்களை துஸ்பிரயோகம்  செய்வதில்லை என இதே நாடுகள் போனவருடம் ஜெனிவாவில் கூறி இருந்தார்கள்  :o

 

இத்தகைய செயல்களை விவரிக்கும் சொற்றொடர் ஒன்று உள்ளது..  :D  ஆனால் அது தடைசெய்யப்பட்ட ஒன்று.. :o:blink:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சிங்களவனை  வெருட்டி அடிவாங்காமல் இலங்கையில் வாழ்வது என்பது ஒரு கெட்டித்தனம் தான்.

இப்படி சிங்களவனை  வெருட்டி அடிவாங்காமல் இலங்கையில் வாழ்வது என்பது ஒரு கெட்டித்தனம் தான்.

 

சிங்களவன் பயப்பட மாட்டானே, புலி வேட்டை ஆடிய சிங்களவனுக்கு இதெல்லம் தூசி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பயப்பட மாட்டானே, புலி வேட்டை ஆடிய சிங்களவனுக்கு இதெல்லம் தூசி

உண்மை தான். ஆனால் முஸ்லிம்கள் இன்று வரை தப்பி வாழ்கிறார்கள் என்பதையே சொல்ல  வந்தேன்.

உண்மை தான். ஆனால் முஸ்லிம்கள் இன்று வரை தப்பி வாழ்கிறார்கள் என்பதையே சொல்ல  வந்தேன்.

 

உண்மையில் சிங்களவன் முஸ்லீம் பக்கம் கை வைக்கவில்லை, வைத்தால் எம்மைப் போல் 60 வருடம் அல்ல, வெறும் 6 நாள் கூட இவர்களால் தாங்க முடியாது, எம்மைப் போல் சிறந்த இராணுவ அரசியல் கட்டமைப்பை கொண்ட எம்மாலேயே ஈடு கொடுக்க முடியவில்லை, இவர்களிடம் ஒட்டுணியாக வாழ்வதை விட வேறு எதுவும் இல்லை.

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்.

 

தமிழனையெல்லாம் புலி என்று கூறி பயங்கரவாத தடை சட்டம் மூலம் உள்ளே போட்ட மாதிரி தம்மையும் ஒரு வழி பண்ணப் போகிரார்கள் என்பதை நினைத்து பயப்படுகிறார் போல்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்களின் ராஜதந்திரத்தை அறிய இந்த செய்தியை பாருங்கள்.

http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_5280.html

  • கருத்துக்கள உறவுகள்

தலீபான் மற்றும் அல்கொய்தா மீதான தடைகளை அகற்றி .. முஸ்லீம் நாடுகளை தங்கள் நண்பர்களாக இலங்கை வளர்த்து கொல்ல வேணும்..

இலங்கைக்கு இனி எண்ணைக்கும் தேவை இல்லை, ஐ.நா.பிரேரணைக்கும் தேவை இல்லை இவர்களை. சவுதியிலும், கட்டாரிலும் தொழில் செய்யும் 850,000 சிங்கள் முஸ்லீம் வேலைகாரர்களின் அன்னிய செலாவாணிக்காக  இலங்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதன்முதலில் அடி விழுந்தது தமிழனுக்கல்ல இஸ்லாமியருக்கே என்பதையும் அவ்வேளையில் தமிழர்களே அவர்களைக் காப்பாற்றினர் என்பதையும் பல இஸ்லாமிய தமிழர்கள் மறந்துவிட்டனர். என்றோ ஒருநாள் சிங்களவர் இதை மீளவும் ஞாபகப்படுத்துவர்.................

முஸ்லிம் மக்களின் ராஜதந்திரத்தை அறிய இந்த செய்தியை பாருங்கள்.

http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_5280.html

 

அமதுருமார் பேசின நல்ல விஷயம் தானே!

ஹலால் உணவை இனி அனைவரும் பகைக்க வேண்டும்!

அது நல்ல 80 % ஜனநாயகம் தானே! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

தலீபான் மற்றும் அல்கொய்தா மீதான தடைகளை அகற்றி .. முஸ்லீம் நாடுகளை தங்கள் நண்பர்களாக இலங்கை வளர்த்து கொல்ல வேணும்..

 

அத்தோடு கோத்தாவின் வழிகாட்டலின் கீழ்.. சிறீலங்கா இராணுவம்.. தலிபான்களுக்கும் அல்கொய்தாவிற்கும் அமெரிக்காவை வெல்வது எப்படி என்ற.. ஆயுதப் பயிற்சியும்.. ஆலோசனைகளும் வழங்க வேண்டும் என்று..  இஸ்லாமிய சகோதரகள்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்ம்ம்ம்ம்ம்ம். :)

புலிகளை தடை செய்த போது புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறினார்கள். இப்பொழுதும் புலிகள் பயங்கரவாதிகள், ஜனாதிபதியின் ஆட்சியில் தான் தாங்கள் நன்றாக இருக்கிறோம் தமிழ்தேசிய கூட்டமைப்பு பயங்கரவாதத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு இப்பொழுது தலிபான், அல்கெய்டா எல்லாம் நல்லது போலும் ஜனாதிபதி பிழை விடுவது போலும் தென்படுகிறது. :o
 

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்.

 

இந்த விடயத்தில் இது மிகவும் பொருத்தமான ஒன்று.....




இத்தகைய செயல்களை விவரிக்கும் சொற்றொடர் ஒன்று உள்ளது..  :D  ஆனால் அது தடைசெய்யப்பட்ட ஒன்று.. :o:blink:

 

நீங்கள் சொல்லாவிட்டாலும் என்ன சொல்ல வந்தீர்கள் என்று அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது. :rolleyes:

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.