Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமாக கருத முடியாது! - ஜெனிவாவில் அமெரிக்க தூதுவர் கருத்து

Featured Replies

தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உட்பட எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனஹே தெரிவித்துள்ளார்.

 

ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் பேரெழுச்சி கொண்டுள்ள நிலையில், மாணவர்களின் இந்தப் போராட்டம் குறித்து, ஜெனிவாவில் வைத்து அமெரிக்கத் தூதுவரிடம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் வினவினர்.

 

இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கம் ஒன்றில் வைத்து கருத்து வெளியிட்ட அவர், தமிழக மாணவர்களின் இந்தப் போராட்டத்தை சாதாரணமான ஒரு விடயமாக கருதி விட முடியாது என்று கூறினார்.

 

'தமிழகத்தில் கோடிக்கணக்கில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து நடத்தும் ஒரு போராட்டத்தை இலேசான விடயமாக கருதிவிட முடியாது. அது அமெரிக்கா இங்கு கொண்டுவரவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தலாமென நான் கருதுகிறேன்' - என்றும் டொனஹே அம்மையார் தெரிவித்துள்ளார்.

 

அதேவேளை, இலங்கை விடயம் குறித்தான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுமா, இல்லையா என்ற கேள்வி நிலவிவரும் இவ்வேளையில், இதுகுறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தமிழக மாணவர்களின் போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=4c86e2da-c0ba-4688-a143-f6c6daaf72ae

  • தொடங்கியவர்

அன்று ஒபாமா எகிப்தில் மாணவர் புரட்சியின் பக்கம் நின்று ஒரு புதிய வரலாற்றிற்கு துணை போனார்.

 

அதேபோல் தமிழக மாணவர் பக்கம் நின்று தமிழர்களுக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக  மாணவமணிகளே..உங்கல் குரலுக்கு ...கிடைத்த சிறு வெற்றி..

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டொரு நாட்களில் முடிந்துவிடுமென ஆருடம் கூறினார்களே.. இப்ப அமெரிக்கா கருத்து சொல்லுது.. :wub:

இருந்தாலும் துண்டிவிடும் அமெரிக்க அதிகாரியைக் கண்டிக்கிறேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவே... கருத்து சொல்லிவிட்டது. முக்கிய பங்காளியான, இந்திய மத்திய அரசு தான்.... மௌன விரதம் பிடிக்குது.
மாணவர்களின் அகிம்சைப் போராட்டத்தை தொடர விட்டால்... எந்நேரமும் இது, வன்முறைப் போராட்டமாக மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் துண்டிவிடும் அமெரிக்க அதிகாரியைக் கண்டிக்கிறேன்.. :D

அப்படி போடு அருவாளை !

(ஏதும் சூடு சொரணை இருந்தால்தானே பத்தும்)
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வருவினம்...நீண்ட கட்டுரையோடை.....மாணவர் போராட்டம் பிழை...பிக்குவிக்கு அடித்தது பிழை....ஊரிலை என்னை சுட வெளிக்கிட்டவை...இசுலாமியரையும் சேர்த்து தீர்வு வேணூம் ..அதுவரையும் அவர்கள் அரசுடன் செயல்படலாம்.....போதாக்குறைக்கு 13 + என்றும்  நியாயம் கதைப்பினம்...

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தின் பின்னால் ஜெயலலிதா இருப்பதாக சந்தேகம் கொண்டு, அவவைக் கண்காணிக்க சோனியா ஒரு விசேட புலநாய்வுத்துறை குழுவை நியமித்திருப்பதாகக் கேள்வி. தமிழகத்திலிருந்து நண்பர் ஒருவர் இதைத் தெரிவித்தார். எவ்வளவிற்கு உண்மையென்று தெரியவில்லை.ளஆனால் ஜெயாவின் மீது சோனியா கடுப்பிலிருப்பதுமட்டும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தின் பின்னால் ஜெயலலிதா இருப்பதாக சந்தேகம் கொண்டு, அவவைக் கண்காணிக்க சோனியா ஒரு விசேட புலநாய்வுத்துறை குழுவை நியமித்திருப்பதாகக் கேள்வி. தமிழகத்திலிருந்து நண்பர் ஒருவர் இதைத் தெரிவித்தார். எவ்வளவிற்கு உண்மையென்று தெரியவில்லை.ளஆனால் ஜெயாவின் மீது சோனியா கடுப்பிலிருப்பதுமட்டும் உண்மை.

 

சோனியாவின் கடுப்பு... ஜெயலலிதாவிடம் வேகாது. :D  :lol:

  • தொடங்கியவர்

மாணவர் போராட்டத்தின் பின்னால் ஜெயலலிதா இருப்பதாக சந்தேகம் கொண்டு, அவவைக் கண்காணிக்க சோனியா ஒரு விசேட புலநாய்வுத்துறை குழுவை நியமித்திருப்பதாகக் கேள்வி. தமிழகத்திலிருந்து நண்பர் ஒருவர் இதைத் தெரிவித்தார். எவ்வளவிற்கு உண்மையென்று தெரியவில்லை.ளஆனால் ஜெயாவின் மீது சோனியா கடுப்பிலிருப்பதுமட்டும் உண்மை.

 

அன்று திமுக போன்று இன்றைய ஆளும் கட்சி மாணவர் போராட்டத்தை இந்திய நடுவண் அரசின் விருப்பத்திற்கு அமைய நசுக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

 

அதேவேளை காங்கிரசால் அதிமுக ஆட்சியை கலைத்து ஆளுநர் ஆட்சியை அமைக்கவும் துணிவு இல்லை.

SUMMA IRUNTHA SANGAI OOTHIKEDUTHANAM AANDI

  • கருத்துக்கள உறவுகள்

SUMMA IRUNTHA SANGAI OOTHIKEDUTHANAM AANDI

 

 

யார் சங்கு? யார் ஆண்டி??

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்  தமிழர்களுக்காகத்தான் இந்த மாணவர்கள் இன்று போராடுகின்றனர்.

அவர்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் வகையில் 

அந்த மாணவர்கள் தங்கள் உரிமைக்காப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


இன்று மாணவர்களிடையே எழுந்துள்ள ஈழத் தமிழர்களுக்கான  உணர்வுபூர்வமான 

போராட்டம் நாளை இந்திய ஒற்றுமைக்கே ஆபத்தாக  மாறலாம்   

SUMMA IRUNTHA SANGAI OOTHIKEDUTHANAM AANDI

 

SUMMA IRUNTHTHU IRUNTHUTHAANE   SANGU SONTHUPOI PAZHUTHADAINTHIRUCHU  :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தின் பின்னால் ஜெயலலிதா இருப்பதாக சந்தேகம் கொண்டு, அவவைக் கண்காணிக்க சோனியா ஒரு விசேட புலநாய்வுத்துறை குழுவை நியமித்திருப்பதாகக் கேள்வி. தமிழகத்திலிருந்து நண்பர் ஒருவர் இதைத் தெரிவித்தார். எவ்வளவிற்கு உண்மையென்று தெரியவில்லை.ளஆனால் ஜெயாவின் மீது சோனியா கடுப்பிலிருப்பதுமட்டும் உண்மை.

 

ஜீனியர் விகடனில் முன்பக்கத்திலும் இச்செய்தி வந்திருக்கிறது.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=30693

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.