Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர் ஆகஸ்ட் முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிப்ப முடியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
citiz_CI.jpg

 

வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள்  ஆகஸ்ட் முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிப்ப முடியும்:- 

 

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 

 

இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, செயற்படுத்தப்பட வேண்டிய புதிய சட்டத்திருத்தங்களை உருவாக்கப்பட்டுள்ளன என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் வடக்கில் காணி உரிமைகளை பெற்றுக்கொள்ள வர முயற்சிக்கும் வடபகுதிகளை சேர்ந்த இலங்கையர்களும் இருப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்குலக நாடகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இரட்டை குடியுரிமையை பெறுவதற்காக காத்திருப்பதாக தெரியவருகிறது. 

 
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ஆளா

நான் தான் apply பண்ண போறன்......

தமிழர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ஆளா

நான் தான் apply பண்ண போறன்......

தமிழர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.....

சுண்டல் எப்போது கோத்தபாயவை சந்தித்தார் ...?  :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க ஒரு பக்கத்தால கப்பல ஏத்தி அனுப்ப அனுப்ப மற்ற பக்கத்தால நாங்க போய் இலங்கை குடி உரிமைய வாங்கிடனும்.....பாஸ்

அவங்க ஒரு பக்கத்தால கப்பல ஏத்தி அனுப்ப அனுப்ப மற்ற பக்கத்தால நாங்க போய் இலங்கை குடி உரிமைய வாங்கிடனும்.....பாஸ்

 

 

என்ன விலை கேட்கிறார்கள், பிரசா உரிமை பெற?

இதன் மூலம் காணி வேண்டலாமா? முதலீடு செய்யலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன விலை கேட்கிறார்கள், பிரசா உரிமை பெற?

இதன் மூலம் காணி வேண்டலாமா? முதலீடு செய்யலாமா?

இதுக்கெண்டே சீட்டு எல்லாம் போட்டு வச்சிருப்பினம்.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பின் விளைவுகளை யோசித்து விண்ணப்பிக்கவும். எனக்கு இப்போதைக்குத் தெரிந்தவை:

 

1. வருமான வரி இரண்டு நாடுகளிலும் செலுத்த வேண்டி வரலாம் (இது நாடுகளுக்கிடையிலான வரி ஒப்பந்தத்தைப் பொறுத்தது)

 

2. சிறிலங்காவில் ஒரு இரட்டைப் பிரஜையைக் கைது செய்தால் (இது தமிழர்களுக்கு நடக்கக் கூடியது!), சிறிலங்காப் பிரஜையாகவே கணிக்கப் படுவார். இதனால் உங்கள் "புகுந்த நாடு" உங்கள் நலனில் அக்கறை செலுத்த முடியாமல் போகும்.

 இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் வடக்கில் காணி உரிமைகளை பெற்றுக்கொள்ள வர முயற்சிக்கும் வடபகுதிகளை சேர்ந்த இலங்கையர்களும் இருப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 

தமிழருக்கு தரப்படாது போலுள்ளது !

யாழ்ப்பாணத்துக்கு நேரா பிளேன் விட்டால் இன்னும் நல்லா இருக்கும்.

 

இப்ப யார் எங்கட சனம் வாங்கப்போகுது பேசாமல் அங்க இருக்கிற ஆமிக்கு வித்துப்போட்டால் இரட்டை பிரசா ஒருமைக்கு குடுக்கிற இரண்டு லட்சத்தையும் சேர்த்து எடுத்திடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வருமாணத்துக்கு வழி தேடுறாங்கள் புலம் பெயர் தமிழரை நோக்கி எறியப்பட்ட தூண்டில் பெருமளவானேர் மாட்டுபடுவினம் எதிர் பார்க்கலாம்

Edited by purmaal

  • கருத்துக்கள உறவுகள்

இதன் தலைவராக கோத்தபாயாவே பொறுப்பெடுத்திருப்பது அதன் ஏதோ ஆழமான நடவடிக்கை மேற்கொள்ள முனைகின்றார்கள் என்பதைத் தெரிவிக்கின்றது. ஆனால் இரட்டைக்குடியுரிமைக்குக் மற்றய நாடு ப்றறியும் சிந்திக்க வேண்டும். கனடாவில் இரட்டைக்குடியுரிமை பெற முடியாது என நினைக்கின்றேன்....

கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாக சிங்கள அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த அனைவருக்கும் இயல்பாகவே இலங்கை குடியுரிமையை மறுக்க முடியாது.

இதற்கு விண்ணப்பங்கள் தேவைப்படாது. பணமும் கட்ட வேண்டியதில்லை. சர்வதேச நடைமுறைகளின்படி முன்பு இடம்பெயர்ந்த தமிழருக்கு  இடையில் கொண்டுவரப்பட்ட தமிழின விரோத சட்டங்கள் பொருந்தாது. அதை அமுல்படுத்த அனுமதிக்கக் கூடாது.

ஆனால் இந்த திட்மிட்ட அராஜகத்தை சட்ட ரீதியாக எதிர்க்க வேண்டிய கடமை தமிழ் மக்களின் பிரதிநிகளுக்கு உண்டு. குறிப்பாக புலம் பெயர்ந்த மக்களின் அமைப்புக்கள் சர்வதேச ரீதியில் திடமிடப்பட்ட இனஒடுக்குமுறை சட்டங்களின் உதவியுடன் சிங்கள அரச பயங்கரவாதிகளின் சதி வேலைகளை முறியடிக்க முயலவேண்டும்.

காலதாமதம் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.

ஆனால் இந்த விடயங்களில் புலம்பெயர் அமைப்புக்களும், கூட்டமைப்பும் அக்கறையில்லாதவர்கள் போல், கடைந்தெடுத்த மடையர்கள் போல் கடந்த இருவருடங்களாக இருந்து வருகின்றனர்.

உடன் செயற்பாடாவிட்டால் (எதிரான சட்ட நடவடிக்கைகளை சர்வதேச மட்டத்தில் அக்கறையுள்ள நாடுகளின் உதவியுடன் எடுக்காவிட்டால்) பெருமளவு காணிகளையும், வங்கிகளிலுள்ள பணத்தையும் புலம் பெயர் தமிழர் இழக்க வேண்டிவரும் - அவற்றை சிங்கள அரச பயங்கரவாதிகள் ஆக்கிரமிக்க முயலலாம்.



வெள்ளம் தலைக்கு மேல் போன பின்பு அங்கலாய்க்கும் பழக்க தோஷத்தை புலம் பெயர் தமிழர்களாவது முதலில் விடவேண்டும்!

இதன் தலைவராக கோத்தபாயாவே பொறுப்பெடுத்திருப்பது அதன் ஏதோ ஆழமான நடவடிக்கை மேற்கொள்ள முனைகின்றார்கள் என்பதைத் தெரிவிக்கின்றது. ஆனால் இரட்டைக்குடியுரிமைக்குக் மற்றய நாடு ப்றறியும் சிந்திக்க வேண்டும். கனடாவில் இரட்டைக்குடியுரிமை பெற முடியாது என நினைக்கின்றேன்....

 

இல்லை கனடாவில் இரட்டை குடியுரிமை வைத்திருக்க முடியும். இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் வரக்கூடிய சிக்கல்களையும் கிழே உள்ள இணைப்பில் சொல்லியுள்ளார்கள்.

 

http://www.cic.gc.ca/english/resources/publications/dual-citizenship.asp

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவிவாகர அமைச்சர் அது பற்றி சமீபத்தில் சொன்னதாகப் பார்த்த நினைவு. கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனாலும் அதில் கட்டுப்பாடு கொண்டுவருவது பற்றி அவர் சொன்னதாக நினைவு....

எனது அக்காவும் பிள்ளைகளும் இரட்டை குடியுரிமை வைத்திருக்கின்றார்கள் . பிரிட்டிஷ்,கனடா .

இலங்கையில் இருக்கும் நண்பன் பிரிட்டிஷ் ,இலங்கை குடியுரிமை வைத்திருக்கின்றான் .

யாரையாவது மிரட்டி அவர்களின் காணிகளை வாங்கி வெளியில் ஓடினவர்களின் பெயரில் பாதுகாப்பு கூட்டம் உறிதி முடிச்சு பின்னர் தன்னுடைய பேருக்கு திரும்ப விற்றுவிடுவார்கள். எப்போதாவது மிரட்டி வாங்கியதாக யாராவது வழக்குப் போட்டால் அதை செய்தது திருட்டுத்தனமாக யாரோ இரட்டை குடியுரிமைக்கு விண்ணபித்தவர்களாக வந்து முடியும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் வேலை விடயமாக ஒரு சிங்களவரைச் சந்திக்க நேர்ந்தது. இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றார்.. அப்படியானால் அங்கே திரும்பப் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு.. அங்கு அடையாள அட்டை இருக்குதானே.. அதை வைத்து இலங்கையராகவே இருக்கலாம் என்றார்..

சில வருடங்களுக்கு முன் வேலை விடயமாக ஒரு சிங்களவரைச் சந்திக்க நேர்ந்தது. இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றார்.. அப்படியானால் அங்கே திரும்பப் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு.. அங்கு அடையாள அட்டை இருக்குதானே.. அதை வைத்து இலங்கையராகவே இருக்கலாம் என்றார்..

நல்ல ஐடியா

சிங்களவனுக்கு என் காசு கொடுக்கவேணும் எல்லோரும் அடையாள அட்டை காட்டி சிறிலங்கனாகவும் கடவை சீட்டை வைத்து வெளிநாட்டு பிரஜையாகவும் இருக்கலாம் 

 

சில வருடங்களுக்கு முன் வேலை விடயமாக ஒரு சிங்களவரைச் சந்திக்க நேர்ந்தது. இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றார்.. அப்படியானால் அங்கே திரும்பப் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு.. அங்கு அடையாள அட்டை இருக்குதானே.. அதை வைத்து இலங்கையராகவே இருக்கலாம் என்றார்..

 

Singhalaya kokka makka ?  :icon_mrgreen:

 

http://www.dailynews.lk/2011/10/28/news04.asp   

சில வருடங்களுக்கு முன் வேலை விடயமாக ஒரு சிங்களவரைச் சந்திக்க நேர்ந்தது. இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றார்.. அப்படியானால் அங்கே திரும்பப் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு.. அங்கு அடையாள அட்டை இருக்குதானே.. அதை வைத்து இலங்கையராகவே இருக்கலாம் என்றார்..

 

சில மாதங்களின் முன்னர் கொழும்பில் சிங்களப் பிரதேசத்தில் உள்ள மக்கள் வங்கிக் கிளை ஒன்றில் வேலைசெய்யும் தமிழர் ஒருவரும் - இவ்வாறே ஆள் அடையாளத்துக்கு கனடிய பாஸ்போர்டை நீட்டி தனது நீண்டநாள் வைப்பை புதுப்பிக்க வந்த ஒரு சிங்களவருக்கு தான் அடையாள அட்டையை காட்டி புதுப்பிக்கும்படி ஆலோசனை வழங்கியதாக கூறினார்.

ஏன் அந்தாளை மாட்டிவிட்டுட்டு கூத்துப் பாத்திருக்கலாமே என்ற போது, அந்தாளின் சகோதரியும் அதே கிளையில் முன்னர் வேலை செய்ததால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றார். மேலும் அந்தாள் வரப்போகும் புதிய சட்டங்கள் மூலம் பணத்தை இழந்துவிடுவோம் என்ற கவலையில், ஒரு கிழமையின் பின்னர் திருப்ப வந்து முழுபணத்தையும் எடுத்து, களவாக டொலர் வாங்கி கனடா சென்றுவிட்டதாகவும் கூறினார்.

ஆனால் வெளிநாட்டு பாஸ்போர்ட் கிடைத்த குஷியில் அடையாள அட்டையை தூக்கி வீசிவிடும் நம்மவர் பாடு கஷ்டம் தான்.

ஒருசிலர் வெளிநாட்டு பாஸ்போர்டை எல்லாரிடம் காட்டி பெருமைப்பட்டு பல சிக்கல்களில் தாங்களாகவே மாட்டிய சம்பவங்களும் ஈழமண்ணில் நடந்துள்ளது.

வரப்போகும் புதிய சட்டங்களின்படி, பெற்றோர் தமது பெயரில் உள்ள காணிகளை / சொத்துக்களை வெளிநாட்டில் பிறந்து - இலங்கைக் குடியுரிமை அற்ற தமது பிள்ளைகளுக்கு கூட மாற்ற முடியாது.

இந்த மாதிரியான திட்டமிட்ட இன அழிப்பை, பிரதேச ஆக்கிரமிப்புக்களை  தடுக்க சேனல் 4 போன்ற யாரோ ஒருவர் வந்து தமக்கு உதவுவர்  என்றெண்ணி  கூட்டமைப்பும், புலம்பெயர் அமைப்புக்களும் எந்த சுய முயற்சியும் இல்லாமல் காலத்தைக் கடத்துகின்றனர்.

போரின்போது இடம்பெயர்ந்தவர்களின் சொத்துக்களை பாதுகாக்கும் சர்வதேச நடைமுறைகளை சிங்கள பயங்கரவாத அரசு மீறி செயற்படுவதை சர்வதேச சட்டங்கள் மூலம் தடுக்க முயல வேண்டும். இதை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். செய்வார்களா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.