Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் என்டால் என்ன செய்வீர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.இப்ப பாக்கும் போது பல இடத்தில இப்படி சம்பவங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நடந்திருக்கு போல :rolleyes: நான் அறிய நினைத்தது என்ன என்றால் வெறும் கவர் கொடுத்தருக்கு(அவர் தன் பெயர் எழுத மறக்க வில்லை)phone பண்ணி பணத்தை வசூலிப்பது :D நாகரீகமா என்றுஅறிவதற்கே.ஆனால் கிணறு வெட்ட பூதம் கிழம்பிய மாதிரி பல இடத்தில பல சம்பவங்கள் நடந்துருக்குது என்றி பாக்க சுவாரிசியமாக உள்ளது.மற்றும் ஒரு கொசுறு தகவல்.ஏற்கனவே விழா உரிமையாளுருக்கு கடன்(கொடுக்குமதி இல்ல) என்றால் விழாவுக்கு போகத்தேவை இல்லையாம் :lol: )இந்த லட்சனத்தில எத்தினை பேர் அந்த பிள்ளையை வாழ்த்த போகிறர்கள். :unsure:

நீங்கள் இந்த விடயத்தை முதலிலேயே எழுதியிருக்க வேண்டும் :D

அவர் தவறுதலாகவே செய்திருக்கின்றார் .

யாரும் பெயரை எழுதிவிட்டு வேண்டும் என இப்படிச்செய்திருக்க வாய்ப்பில்லை

கேட்பதும் கேட்காமல் விடுவதும் அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு

 எப்படியானது என்பதைப் பொறுத்து உள்ளது  

விருந்தினர்களிடம் அன்பளிப்பை எதிர்பார்த்து அழைப்பது தவறு. தருவதும் தராமல் விடுவது அவர்கள் தனிப்பட்ட விருப்பம். அதைவிட அவர்கள் என்ன பொருளாதார சூழ்நிலையில் உள்ளார்களோ தெரியாது.

தராததால் அழைத்துக் கேட்டு அவமானப்படுத்துவது  நாகரீகமில்லை.  

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மாதிரி இருந்து விட்டால் பிரச்சனை குறைவு இசை.

கனடாவுக்கு வந்த புதுசில் கலியாண வீடு, பிள்ளைக்கு 31 ஆம் நாள், சாமத்தியச் சடங்கு, வீடு குடி புகுதல் என்று எக்கச்சக்கமாக அழைப்புகள் வந்தன. மிகவும் நெருக்கமான உறவுகளின், நண்பர்களின் வைபவங்கள் தவிர வேறு ஒன்றுக்கும் போவதில்லை என்று உறுதியாக இருந்து போகாமல் விட்டதனால் "இவனுக்கு படிச்ச திமிர்" என்ற மாதிரி முத்திரை குத்தி இப்ப அநேகமானவற்றுக்கு கூப்பிடுவது இல்லை. அத்துடன் எந்த ஒரு சாமத்தியச் சடங்கு நிகழ்வுக்கும் போவதில்லை என்பதாலும் என்னை / என் குடும்பத்தினை கூப்பிடுவதில்லை. ஒரு வருடத்தில் ஆகக் கூடியனது 250 டொலர் தான் இவற்றுக்கு போகும் எனக்கு. Hall எடுத்து செய்யும் பிறந்த தின கொண்டாட்டங்களிலும் அநேகமாக கலந்து கொள்வதில்லை.

ஒரு இரண்டு வருசம் இதை Try பண்ணி பாருங்கள்... திமிர் ஆள் என்று கூப்பிடாமக் விட்டு விடுவினம். இவற்றுக்கு கொடுக்கும் காசுக்கு குடும்பத்துடன் பல இடங்களுக்கு சுற்றுலா போகலாம்.

ஒரு கொஞ்சத்தைக் காட்டிப்போட்டு, 'புளூ லேபல' நிறைய விளையாடிப் போட்டு வாறது! :D

 

பிழைக்கத் தெரியாத பிள்ளையாக் கிடக்கு! :lol:

:lol:

ஒரு கொஞ்சத்தைக் காட்டிப்போட்டு, 'புளூ லேபல' நிறைய விளையாடிப் போட்டு வாறது! :D

 

பிழைக்கத் தெரியாத பிள்ளையாக் கிடக்கு! :lol:

 

இப்படி ஒரு குறூப்பே இருக்கு.

எனக்குத் தெரிந்த மெல்லியதாய் 'பியர்' குடிக்கும் ஒருவர், குடுத்த காசிற்காக முக்கால்  போத்தல் 'ஷிவாஸ் ரீகல்' ஐ முழுங்கி விட்டு வாந்தியெடுத்துக் கவிண்டு கிடந்தார். அடுத்த நாள் எழும்பி குடிச்சது காணாதென்று அவரிக்கு கவலை வேற.   :lol:     

 

கவர் கொடுத்தவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் பிழையாக நினைத்திருக்க மாட்டார்.  அப்படியே இல்லாமல் இருந்திருந்தாலும் உடனடியாகப் போன் செய்து கேட்பது அல்லது சொல்வது மிகவும் தவறு.  அவரை அடுத்த முறை சந்திக்கும்போதோ அல்லது சிலகாலம் கழித்தோ அவருக்குத் தெரியப்படுத்தலாம்.  என்னைப் பொறுத்தவரை நான் பரிசுகளை எதிர்பார்ப்பதில்லை.  ஆனால், வரும் பரிசுகளை மிகவும் மதிப்பேன்.  அவற்றின் பெறுமதியைப் பற்றி சிந்திப்பதில்லை.  எமது திருப்திக்கு மட்டுமே விருந்தினர்களை அழைப்பதுண்டு. அதேபோல்,  என்னை அழைத்தால் நிச்சயம் செல்வதுண்டு. 

நான் பணம் கொடுப்பது மிகவும் குறைவு.  மிகப் பெரிய கடைத்தொகுதிகளின் பரிசுக் கார்ட்டினை வாழ்த்து அட்டைக்குள் வைத்துக் கொடுப்பேன்.  அநேகமாக அது நூறாக இருக்கும்.  பொருளாதாரச் சிக்கல் எனில் அல்லது குழந்தைகள் எனில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பரிசுப் பொருட்கள் கொடுப்பதுண்டு.  இதுவரையிலும் நான்தான் கொடுத்திருக்கிறேனே தவிர, எனக்கு இன்னும் வரவில்லை.   :)     நான் சம்பந்தப்பட்ட விழாவில் நான் பரிசுப்பொருட்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வதாக இருக்கிறேன்.  அவர்களின் வரவும் நிறைவான வாழ்த்துமே தேவை எனக் கருதுகிறேன். :)

எனது குடும்பத்தினர் காசு கொடுப்பார்கள்.  அநேகமாகமானவர்களுக்கு எமது குடும்பத்தைப் பற்றித் தெரியும் என்பதால் அவர்கள் பிழையாக நினைப்பதற்குச் சந்தர்ப்பங்கள் இல்லை.  அதேபோல், பொருளாதார ஏற்ற இறக்கங்களை வாழ்வில் பார்த்ததனால் நாமும் மற்றவர்களைக் குறையாக நினைப்பதில்லை.
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை மாதிரி இருந்து விட்டால் பிரச்சனை குறைவு இசை.

கனடாவுக்கு வந்த புதுசில் கலியாண வீடு, பிள்ளைக்கு 31 ஆம் நாள், சாமத்தியச் சடங்கு, வீடு குடி புகுதல் என்று எக்கச்சக்கமாக அழைப்புகள் வந்தன. மிகவும் நெருக்கமான உறவுகளின், நண்பர்களின் வைபவங்கள் தவிர வேறு ஒன்றுக்கும் போவதில்லை என்று உறுதியாக இருந்து போகாமல் விட்டதனால் "இவனுக்கு படிச்ச திமிர்" என்ற மாதிரி முத்திரை குத்தி இப்ப அநேகமானவற்றுக்கு கூப்பிடுவது இல்லை. அத்துடன் எந்த ஒரு சாமத்தியச் சடங்கு நிகழ்வுக்கும் போவதில்லை என்பதாலும் என்னை / என் குடும்பத்தினை கூப்பிடுவதில்லை. ஒரு வருடத்தில் ஆகக் கூடியனது 250 டொலர் தான் இவற்றுக்கு போகும் எனக்கு. Hall எடுத்து செய்யும் பிறந்த தின கொண்டாட்டங்களிலும் அநேகமாக கலந்து கொள்வதில்லை.

ஒரு இரண்டு வருசம் இதை Try பண்ணி பாருங்கள்... திமிர் ஆள் என்று கூப்பிடாமக் விட்டு விடுவினம். இவற்றுக்கு கொடுக்கும் காசுக்கு குடும்பத்துடன் பல இடங்களுக்கு சுற்றுலா போகலாம்.

 

 

ஓ!!ஓ!!...அதனால் தான் நிழலி அண்ணன், என்ர கல்யாணத்துக்கும் வரேல்லையோ:)

கவர் கொடுத்தவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் பிழையாக நினைத்திருக்க மாட்டார்.  அப்படியே இல்லாமல் இருந்திருந்தாலும் உடனடியாகப் போன் செய்து கேட்பது அல்லது சொல்வது மிகவும் தவறு.  அவரை அடுத்த முறை சந்திக்கும்போதோ அல்லது சிலகாலம் கழித்தோ அவருக்குத் தெரியப்படுத்தலாம்.  என்னைப் பொறுத்தவரை நான் பரிசுகளை எதிர்பார்ப்பதில்லை.  ஆனால், வரும் பரிசுகளை மிகவும் மதிப்பேன்.  அவற்றின் பெறுமதியைப் பற்றி சிந்திப்பதில்லை.  எமது திருப்திக்கு மட்டுமே விருந்தினர்களை அழைப்பதுண்டு. அதேபோல்,  என்னை அழைத்தால் நிச்சயம் செல்வதுண்டு. 

நான் பணம் கொடுப்பது மிகவும் குறைவு.  மிகப் பெரிய கடைத்தொகுதிகளின் பரிசுக் கார்ட்டினை வாழ்த்து அட்டைக்குள் வைத்துக் கொடுப்பேன்.  அநேகமாக அது நூறாக இருக்கும்.  பொருளாதாரச் சிக்கல் எனில் அல்லது குழந்தைகள் எனில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பரிசுப் பொருட்கள் கொடுப்பதுண்டு.  இதுவரையிலும் நான்தான் கொடுத்திருக்கிறேனே தவிர, எனக்கு இன்னும் வரவில்லை.   :)     நான் சம்பந்தப்பட்ட விழாவில் நான் பரிசுப்பொருட்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வதாக இருக்கிறேன்.  அவர்களின் வரவும் நிறைவான வாழ்த்துமே தேவை எனக் கருதுகிறேன். :)

எனது குடும்பத்தினர் காசு கொடுப்பார்கள்.  அநேகமாகமானவர்களுக்கு எமது குடும்பத்தைப் பற்றித் தெரியும் என்பதால் அவர்கள் பிழையாக நினைப்பதற்குச் சந்தர்ப்பங்கள் இல்லை.  அதேபோல், பொருளாதார ஏற்ற இறக்கங்களை வாழ்வில் பார்த்ததனால் நாமும் மற்றவர்களைக் குறையாக நினைப்பதில்லை.

 

 

 

தமிழச்சி,

நல்ல கருத்துக்களை முன் வைத்திருக்கின்றீர்கள். நான் எப்போதும் வாழ்த்து அட்டினை வாங்கி அதில் ஒரு கவிதை:: ) எழுதி உங்களை மாதிரியே பரிசு அட்டை($100.00) பெறுமதிக்கு வாங்கிக்கொடுப்பேன்.

 

ரொரண்டோ" வெறுத்துப்போனதன் காரணமே...ஒவ்வொரு வாரவிடுமுறையிலும், ஏதாவது ஒரு விழா இருக்கும். குடும்பத்தோடு நேரம் செலவிடவே முடியாது. ' ஆடம்பர விழாக்கள் எதுவுமே எனக்குப்பிடிப்பதில்லை. என் மகளின் 1ம் , 2ம் பிறந்த நாளையும் வீட்டிலேயே என் சகோதரங்களோடு அவர்களின் குழந்தைகளோடு கொண்டாடினோம். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு கொடுமையும் நடக்கதாம்.. அதாவது கிடைத்த பரிசுப்பொருட்களை அல்லது உபகார அட்டைகளை இன்னொரு விழாவில் தள்ளி விடுதல்.. :blink:

அண்மையில் கேள்விப்பட்டது.. பிறந்த பிள்ளையைப் பார்க்கச் சென்றவர்கள் வீட்டில் இருந்த இரண்டு ஹொர்லிக்ஸ் போத்தல்களில் ஒன்றைக் கொண்டுபோய் கொடுத்தவவாம் ஒரு அம்மணி.. இரண்டு போத்தல்கள் எப்படி வந்தன என்பது சிந்தனைக்குரிய கேள்வி.. :D

பிறகு இவ ஒருக்கால் சுகமில்லாமல் இருக்கும்போது அவை அதே போத்தலுடன் வந்து பார்த்தார்களாம்.. :lol: சோகம் என்னவென்றால் போத்தல் அங்கை இங்கை அலைந்ததால் முடிவுறும் திகதி நெருங்கிவிட்டதாம்.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

கவர் கொடுத்தவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் பிழையாக நினைத்திருக்க மாட்டார். அப்படியே இல்லாமல் இருந்திருந்தாலும் உடனடியாகப் போன் செய்து கேட்பது அல்லது சொல்வது மிகவும் தவறு. அவரை அடுத்த முறை சந்திக்கும்போதோ அல்லது சிலகாலம் கழித்தோ அவருக்குத் தெரியப்படுத்தலாம். என்னைப் பொறுத்தவரை நான் பரிசுகளை எதிர்பார்ப்பதில்லை. ஆனால், வரும் பரிசுகளை மிகவும் மதிப்பேன். அவற்றின் பெறுமதியைப் பற்றி சிந்திப்பதில்லை. எமது திருப்திக்கு மட்டுமே விருந்தினர்களை அழைப்பதுண்டு. அதேபோல், என்னை அழைத்தால் நிச்சயம் செல்வதுண்டு.

நான் பணம் கொடுப்பது மிகவும் குறைவு. மிகப் பெரிய கடைத்தொகுதிகளின் பரிசுக் கார்ட்டினை வாழ்த்து அட்டைக்குள் வைத்துக் கொடுப்பேன். அநேகமாக அது நூறாக இருக்கும். பொருளாதாரச் சிக்கல் எனில் அல்லது குழந்தைகள் எனில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பரிசுப் பொருட்கள் கொடுப்பதுண்டு. இதுவரையிலும் நான்தான் கொடுத்திருக்கிறேனே தவிர, எனக்கு இன்னும் வரவில்லை. :) நான் சம்பந்தப்பட்ட விழாவில் நான் பரிசுப்பொருட்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வதாக இருக்கிறேன். அவர்களின் வரவும் நிறைவான வாழ்த்துமே தேவை எனக் கருதுகிறேன். :)

எனது குடும்பத்தினர் காசு கொடுப்பார்கள். அநேகமாகமானவர்களுக்கு எமது குடும்பத்தைப் பற்றித் தெரியும் என்பதால் அவர்கள் பிழையாக நினைப்பதற்குச் சந்தர்ப்பங்கள் இல்லை. அதேபோல், பொருளாதார ஏற்ற இறக்கங்களை வாழ்வில் பார்த்ததனால் நாமும் மற்றவர்களைக் குறையாக நினைப்பதில்லை.

வெயிட் வெயிட் அவசர படக்கூடா எல்லாம் சேர்த்து வைச்சு தாரத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கினம்.....:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள்.

அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன். :)

 

நானெண்டால்......எனக்குள்ளையே ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சுப்போட்டு இருப்பன் :lol: .......எங்கடை சனத்துக்காகவது? உந்தமொய் விசயத்திலையாவது? கவனக்குறைவு வாறதாவது? யமனை பச்சடி போட்ட சனம் ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் எங்கள் வீட்டிலும் நடந்தது.

2009ம் ஆண்டு அண்ணாவின் மகனது முதலாவது பிறந்தநாளுக்கு இப்படி ஒரு கவர் வந்தது.

அண்ணா,அண்ணி,நான் மூன்று பேருமாக வந்த பரிசுகளைப் பார்த்து எழுதிக்கொண்டிருக்கும் போது என் கைக்கு பெயர் எழுதாத வெற்று உறை வந்தது உடைத்துப் பார்த்தால் எதுவுமே இல்லை. பிறகு DVD வந்ததும், வீடியோ போட்டுப் பார்த்தது யார் அந்த ஆள் என்று. நன்கு தெரிந்த ஆள் தான் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்பவும் அவர் எந்த சங்கோஜமும் இன்றி கடைக்கு வந்து சாமான் வாங்க்கிப் போவார். :o

 

  இஞ்சை பாரும் தம்பியர்! எங்கடை பொண்டுகளுக்கு உந்த வீடியோ ஒண்டும் தேவையில்லை.......ஆர்...இன்னார்...என்ன நேரம்...என்னகலர்கவர்....என்னகலர் பெட்டி....மோதிரமோ...சங்கிலியோ....காப்போ..... எண்டு எல்லாத்தையும் தங்கடை காந்தக்கண்ணாலையே ரெக்கோட் பண்ணி வைப்பினம்...உங்கை ஒருத்தரும் சுத்தேலாது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

 

இப்படி ஒரு குறூப்பே இருக்கு.

எனக்குத் தெரிந்த மெல்லியதாய் 'பியர்' குடிக்கும் ஒருவர், குடுத்த காசிற்காக முக்கால்  போத்தல் 'ஷிவாஸ் ரீகல்' ஐ முழுங்கி விட்டு வாந்தியெடுத்துக் கவிண்டு கிடந்தார். அடுத்த நாள் எழும்பி குடிச்சது காணாதென்று அவரிக்கு கவலை வேற.   :lol:     

 

 

வரேக்கை நல்ல கிளீன்சூட்டாய் குழந்தைகுட்டியோடை இந்தப்பூனையும் பால்குடிக்குமோ எண்டு கேக்கிற அளவுக்கு அமைதியாய் நல்லபிள்ளையாய்  வந்து ஒரு மூலையிலை இருப்பாங்கள்....தட்டிலை குடுக்குற பலகாரத்தையும் தேத்தண்ணியையும் அமசடக்காய் அமுக்கிப்போட்டு அமைதியாய்  இருப்பாங்கள்.....கொஞ்ச நேரம் போக ஒண்டுக்கு எழும்பிபோறமாதிரி போய்....அப்பிடியே நைசாய் மெயின் இடத்துக்கு வந்துடுவாங்கள்.....முதல்லை சின்னதாய் ஒரு பெக்.......அப்பிடியே பக்கத்திலை நிக்கிறவையோடை சின்ன குசலம் விசாரிப்புகள் எண்டு தொடங்கினால்......பிறகென்ன அங்காலை அடைமழைதான்.......
 

 

 
 
பிறகென்ன....

 

மைக்கல் ஜக்சனும் இவையள்தான்...ரஜனியும் இவையள்தான்.....அப்பப்ப நம்பியார் வேசமும் வரும் அதை கொன்றோல் பண்ண அதுக்கை ஒரு எம்ஜிஆர் கட்டாயம் இருப்பார் :D
 
வெறியிலை கண்டதுகளையும் மாறிமாறிசாப்பிட்டு....சத்தியும் எடுத்து......ரொய்லட்ரையும் நாறடிச்சு இரண்டு காலாலை நடந்துவந்த சீவன்கள் நாலுகாலாலை தவண்டுகொண்டு போகுங்கள் :lol:

எல்லாம் காணமயிலாட கண்டிருந்த வான்கோழி எண்று வெள்ளைக்காறனைப்பார்த்து தனது மொழி பாரம்பரியத்தை மறந்து காகங்களும் வாழவெளிக்கிட்டால் இப்படிதன் ஆகும் குமாரசாமியர்.

 

Edited by கதாநாயகன்

விழாக்களின் அடிப்படை என்னவென்றால் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதே. விழாக்களை பொறுத்து அவை மாறுபடும்

 

பூப்புனித விழா- எமது வீட்டில் ஓர் பெண் திருமணத்துக்கு தயாராக இருக்கின்றாள் என்பதேயாகும். இங்கு பரிசு பொருட்களை எதிர்பார்க்க தேவையில்லை ஆனால் மகிழ்ச்சியை பகிரும் பொருட்டு சிறு பரிசு பொருட்களை கொடுக்கலாம்.

 

திருமணவிழா- புதிதாக வாழ்க்கையை தொடங்குபவர்களுக்கு குடும்பம் நடத்துவதற்கு தேவையான அடிப்படை பொருட்களை பரிசாக கொடுப்பதனால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு குடும்ப வாழ்கைகையை தொடங்குவது எவ்வளவு கடினம் என்பது தெரியும் துடைப்ப கட்டையிலிருந்து பாத்திரங்கள் வரை வாங்கவேண்டும் அதை உணர்ந்து தான் எம் முன்னோர்கள் சீர் செய்யும் சடங்கை கொண்டுவந்தார்கள் ஆனால் அதுவும் இப்பொழுது வியாபாரம் ஆகிவிட்டது. கவலைக்குரியதே. கேட்டு வாங்காமல் தருவதை பெற்றுகொள்வதே சிறப்பு.

 

புதுமனை புகுவிழா- இங்கு நாம் சிறு பொருட்களை அன்பளிப்பாக கொடுப்பதனால் எமது நினைவாக அவை இருக்கும்.

 

பிறந்தநாள் விழா- இங்கு பரிசு பொருட்கள் தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம்.

 

எது எப்படியோ பரிசு கொடுப்பது கொடுக்காமல் விடுவது அவரவர் சூழ்நிலையை பொறுத்தது.

 

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க வேற நாங்கள் எங்கள‌து நண்பர் கல்யாணத்திற்கு ஒரு வெறும் பெட்டி எடுத்து அதில் சூப்பி போத்தல் மட்டும் வைத்து  அதை நல்லா கவர் பண்ணியெல்லோ கொடுத்தோம் அனால் பெயர் எழுதவில்லையக்கும் இது எப்படி அது போல தான் இதுவும் ஒரு பகிடி போல கிடக்கு :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்து கருத்து தந்த அனைவருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

விழாக்களின் அடிப்படை என்னவென்றால் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதே. விழாக்களை பொறுத்து அவை மாறுபடும்

 

பூப்புனித விழா- எமது வீட்டில் ஓர் பெண் திருமணத்துக்கு தயாராக இருக்கின்றாள் என்பதேயாகும். இங்கு பரிசு பொருட்களை எதிர்பார்க்க தேவையில்லை ஆனால் மகிழ்ச்சியை பகிரும் பொருட்டு சிறு பரிசு பொருட்களை கொடுக்கலாம்.

 

திருமணவிழா- புதிதாக வாழ்க்கையை தொடங்குபவர்களுக்கு குடும்பம் நடத்துவதற்கு தேவையான அடிப்படை பொருட்களை பரிசாக கொடுப்பதனால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு குடும்ப வாழ்கைகையை தொடங்குவது எவ்வளவு கடினம் என்பது தெரியும் துடைப்ப கட்டையிலிருந்து பாத்திரங்கள் வரை வாங்கவேண்டும் அதை உணர்ந்து தான் எம் முன்னோர்கள் சீர் செய்யும் சடங்கை கொண்டுவந்தார்கள் ஆனால் அதுவும் இப்பொழுது வியாபாரம் ஆகிவிட்டது. கவலைக்குரியதே. கேட்டு வாங்காமல் தருவதை பெற்றுகொள்வதே சிறப்பு.

 

புதுமனை புகுவிழா- இங்கு நாம் சிறு பொருட்களை அன்பளிப்பாக கொடுப்பதனால் எமது நினைவாக அவை இருக்கும்.

 

பிறந்தநாள் விழா- இங்கு பரிசு பொருட்கள் தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம்.

 

எது எப்படியோ பரிசு கொடுப்பது கொடுக்காமல் விடுவது அவரவர் சூழ்நிலையை பொறுத்தது.

 

மாம்பழம் சொன்ன கருத்துக்கள், நல்ல சிந்திக்கக் கூடிய கருத்துக்கள். :)  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.