Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த வயதில் திருமணம் செய்யலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்க கல்யாணம் முடிக்கும் வயதை கோட்கிறாங்கள் ஆனால் விவாகரத்து கேட்கும் வயதை யாரும் கேட்கிறாங்கள் இல்லையே? :huh:

 வெளிநாடு சென்று மழையிலும் வெயிலிலும் குளிரிலும்  தனது குடும்பத்திற்காக உழைத்து தந்து அக்கா ,தங்கைகளை திருமணத்தில் இணைத்து வைத்து   முப்பத்தை தாண்டியும் பலர் இருக்கின்றனர் இன்று. ஆக வயது  தீர்மானிக்கவில்லை பணம் தான் தீர்மானிக்கிறது .திருமண வயதையும் தாண்டி இன்னும் பல பெண்கள் இருக்கின்றனர் காரணம் போதிய சீதனமும்,காணி ,வீடுக்ள்  இல்லாத பெண்களும் இவர்களுக்கு என்ன சொல்வது

காசு இருந்தால் கல்யாணம் முடிக்கலாம் அது எத்தனை வயதிலும் <_< <_<
 

 

  • கருத்துக்கள உறவுகள்

யம்மாடி...!

 

அவனவன் பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ, அவர்கள் நம்மீது ஏறி விளையாட மாட்டார்களாவென தவமிருக்கிறார்கள். தங்களுக்கு தேவையற்ற வேலையா..? :lol:

 

அண்ணா! பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுவது வேறு பராமரிப்பது வேறு. புலம்பெயர் நாட்டில் பெற்றோர்களிடம் பிள்ளைகளையும் சமையல்  வேலையையும் தள்ளிவிட்டு தாம் வேலைக்குப் போகும் எத்தனையோ பிள்ளைகள் இருக்கின்றனர். நான் உந்த வேலையெல்லாம் செய்ய மாட்டேன். வயதுபோக பெற்றோரை தம்பாட்டில் விடவேண்டும். எம் சுமைகளைத் திணிக்கக் கூடாது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 20, உனக்கு 18.  இது அழகாய் இருக்கும் !  ஆனால் இப்ப பிள்ளைகள் பட்டம் பெற்று வேலைக்கான தகுதியுடன் வர 25/26 வயதாகி விடும் . இதற்குள் பெரும்பாலும் அவர்கள் நல்ல பிள்ளைகளாய் காதலித்துக் கொண்டும் இருப்பார்கள்.  அன்றி அம்மா எனக்கு அப்படி ஒரு காரியமும் இல்லை என்று அம்மா செல்லமாக இருப்பவர்களை பெற்றோர் பொறுப்புடன் 30க்குள் திருமணம் செய்து வைப்பது உத்தமம்.

 

நாம் எவ்வளவுதான் பொறுப்பாகத் திட்டங்கள் வகுத்தாலும் இடையில் புயலும், சுனாமியும் வந்து எல்லாத்தையும் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விடும்.

 

ஒரு முட்டை / ஒரு கத்தரிக் காய்  45 நாட்களில் 11/2 கிலோ இறைச்சியாகவும் / முயல் குட்டியாகவும் சந்தைக்கு வந்து விடுகின்றன.இந்த அவசர காலத்தில் நாமும் அதைத்தான் ஓடிப் போய்  வாங்கி வந்து சமைச்சு சாப்பிட்டு ஓடிக் கொண்டிருக்கின்றோம். இது நாம் விரும்பாமலே உடம்பில் ஊறும்  சுவையான விசம் .  இன்றைய தலை முறைக்கு 50/55 லேயே  டொக்கு (ஆரண்ய காண்டம் படம்) விட்டாலும் ஆச்சரியம் இல்லை.

 

எனது அனுபவம்:  16ல் வேலை , 21ல் அரசாங்க வேலை,  காதல்  ஆரம்பம்/அமரத்துவம், ஆத்திரம் அதனால் வேலையை உதறல் ம.கி.நாட்டுக்கு பயணம் , கூடவே வைராக்கியம் நாட்டுக்கே போவதில்லை.

 

32வயது . ஊரிலிருந்து கடிதம் திருமணம் செய். நான் கசக்கி கட்டிலில் போட்டுவிட்டு வெளியே போறேன். எனது நண்பர் கம் உறவினர் (இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்/ பின்னாளில் ஒரு திரைப்படமும் எடுத்திருந்தார்)

 

என்னடா சுவி டல்லா  இருக்கிறாய்.  வீட்டிலிருந்து கடிதம் .

என்னவாம்?  மச்சாளை  கட்டட்டாம்.

 

அவர் கூறியது  அப்படியே:   சுவி  கலியாணம் செய்வது /விடுவது உன் விருப்பம் . செய்வதென்றால் இப்பவே நீ லேட். பிறகு ரெம்ப வருத்தப் படுவாய். இல்லையென்றால் செய்யவே செய்யாதே. பலவிதமான சாதக/ பாதகங்களை விவரித்தார்.

எனது கோபம் ஒதுங்கி நிக்க கொஞ்சம் யோசித்தேன். இப்படியே 2 வருடம்.

 

35ல் கல்யாணம். 36ல் குழந்தை. 25ல் அவளுக்கு திருமணம். எனது 61ல்  கையில் 6 மாதமான அழகான பேரன்.

 

இந்த சந்தோசத்தை நான் உளப்பூர்வமாக அனுபவிக்கின்றேன். இதைவிட அதிகமாய் எதுவும் எனக்குத் தேவையாகவும் தோன்றவில்லை .

 

அன்று நான் அந்த முடிவை எடுக்காமலிருந்திருந்தால்  ....   சொல்லி வேல இல்லை. :rolleyes:

 

 

 

 

முடிந்தவரை இளமையை தனிமையில் அனுபவித்துவிட்டு பின்னர் கலியாணம் கட்டி செட்டில் ஆகிவிடவேண்டும் இதுதான் ஐடியல் வாழ்க்கை என்று நம்பினது ஒருகாலம் .

 

இல்லவே இல்லை முடிந்த அளவு இளமையில் கலியாணம் செய்து பிள்ளைகளை பெற்று நாப்பதுகளில் பொறுப்புகள் ஏதுமன்றி எதிர்காலத்தை பற்றிய சிந்தனையுமின்றி சுற்றியடிக்கும் வாழ்க்கை இருக்கே அதுதான் இனிமையிலும் இனிமை .

 

இரண்டு விதமானவ்ர்களையும் இப்போ நேரில் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் .40 வயதுகளில் சிறுபிள்ளைகளை கொண்டு நீச்சல் ,டியுசன் ,விளையாட்டு என்று கொண்டுவருபவர்களை பார்க்க பாவமாக இருக்கும் .இன்னமும் ஒரு பத்து பன்னிரண்டு வருடங்கள் இவர்கள் படும் பாட்டை நினைக்க .

 

மிக இளமையில் கல்யாணம் செய்த பலர்   இப்போ எதுவித பொறுப்புகளும் அற்று  உலகம் சுற்றிவருவதை பார்க்க பொறாமையாக இருக்கும் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Spoiler

suvy, on 13 May 2013 - 11:22 AM, said:
எனக்கு 20, உனக்கு 18. இது அழகாய் இருக்கும் ! ஆனால் இப்ப பிள்ளைகள் பட்டம் பெற்று வேலைக்கான தகுதியுடன் வர 25/26 வயதாகி விடும் . இதற்குள் பெரும்பாலும் அவர்கள் நல்ல பிள்ளைகளாய் காதலித்துக் கொண்டும் இருப்பார்கள். அன்றி அம்மா எனக்கு அப்படி ஒரு காரியமும் இல்லை என்று அம்மா செல்லமாக இருப்பவர்களை பெற்றோர் பொறுப்புடன் 30க்குள் திருமணம் செய்து வைப்பது உத்தமம்.

நாம் எவ்வளவுதான் பொறுப்பாகத் திட்டங்கள் வகுத்தாலும் இடையில் புயலும், சுனாமியும் வந்து எல்லாத்தையும் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விடும்.

ஒரு முட்டை / ஒரு கத்தரிக் காய் 45 நாட்களில் 11/2 கிலோ இறைச்சியாகவும் / முயல் குட்டியாகவும் சந்தைக்கு வந்து விடுகின்றன.இந்த அவசர காலத்தில் நாமும் அதைத்தான் ஓடிப் போய் வாங்கி வந்து சமைச்சு சாப்பிட்டு ஓடிக் கொண்டிருக்கின்றோம். இது நாம் விரும்பாமலே உடம்பில் ஊறும் சுவையான விசம் . இன்றைய தலை முறைக்கு 50/55 லேயே டொக்கு (ஆரண்ய காண்டம் படம்) விட்டாலும் ஆச்சரியம் இல்லை.

எனது அனுபவம்: 16ல் வேலை , 21ல் அரசாங்க வேலை, காதல் ஆரம்பம்/அமரத்துவம், ஆத்திரம் அதனால் வேலையை உதறல் ம.கி.நாட்டுக்கு பயணம் , கூடவே வைராக்கியம் நாட்டுக்கே போவதில்லை.

32வயது . ஊரிலிருந்து கடிதம் திருமணம் செய். நான் கசக்கி கட்டிலில் போட்டுவிட்டு வெளியே போறேன். எனது நண்பர் கம் உறவினர் (இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்/ பின்னாளில் ஒரு திரைப்படமும் எடுத்திருந்தார்)

என்னடா சுவி டல்லா இருக்கிறாய். வீட்டிலிருந்து கடிதம் .
என்னவாம்? மச்சாளை கட்டட்டாம்.

அவர் கூறியது அப்படியே: சுவி கலியாணம் செய்வது /விடுவது உன் விருப்பம் . செய்வதென்றால் இப்பவே நீ லேட். பிறகு ரெம்ப வருத்தப் படுவாய். இல்லையென்றால் செய்யவே செய்யாதே. பலவிதமான சாதக/ பாதகங்களை விவரித்தார்.
எனது கோபம் ஒதுங்கி நிக்க கொஞ்சம் யோசித்தேன். இப்படியே 2 வருடம்.

35ல் கல்யாணம். 36ல் குழந்தை. 25ல் அவளுக்கு திருமணம். எனது 61ல் கையில் 6 மாதமான அழகான பேரன்.

இந்த சந்தோசத்தை நான் உளப்பூர்வமாக அனுபவிக்கின்றேன். இதைவிட அதிகமாய் எதுவும் எனக்குத் தேவையாகவும் தோன்றவில்லை .

அன்று நான் அந்த முடிவை எடுக்காமலிருந்திருந்தால் .... சொல்லி வேல இல்லை.

 ஐயா! உங்களை மீண்டும் கண்டதில் சந்தோசம். :)

சொந்தக்கதையை பலருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கின்றீர்கள்..எனது கருத்தும் அஃதே

 

  • கருத்துக்கள உறவுகள்

இருவத்தி ஆறிலே கட்டினேன். ஆனால் முப்பதுக்கு பின்னர் தான் வேற விடயங்கள். இன்றுவரை ஏன்  கட்டினேன் என்று யோசித்ததில்லை. இளமையை வீணாக்கிய பின்னர் என்னத்துக்கு கலியாணம்? எனது அப்பாவும் இருவத்தி ஆறிலே தான் கட்டினார். இளமையை ஒன்றாக அனுபவித்தால் தான் முதுமையை ஒன்றாக அனுபவிக்கும் பக்குவம் வரும். ஆகவே கல்வி, பணம், வேலை இருந்தால்   25 நல்ல வயது.

 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு 16வயதும் .........

ஆண்களுக்கு 18 வயது .......... தான திருமணம் செய்ய சரியான வயது.
 
இனி பெண் உரிமை போராட்ட வீரர் வந்து ஏன் எங்களுக்கு இரண்டு வயது குறையவேணும்? என்றால். இங்கே ஒன்றை கூட்டி அங்கே ஒன்றை குறைத்து 17 வயது தரமான வயது.
 
இதற்கு பல காரணம் உண்டு.......... எழுதி கொண்டே போகலாம்.
 
பள்ளி படிப்பு குலைந்து போக பாலியல் விடயங்கள் பலருக்கு இடையூறாக இருந்திருக்கிறது.
அந்த பிரச்சனை இருக்காது. தவிர இந்த பதுன்மை வயது பால் மயக்கம் ஒரு வித பாசத்தை கொண்டு வரும் இது நாள் பட நாள் பட. அன்பு பாசம் குறைந்ததும் மூளையின் வேலை கூடியும் இருக்கும். அதவாது அதன் பிற்பாடு வரும் அன்பில் நிச்சயம் அறிவின் தாக்கம் இருக்கும்  எங்கே எப்போது  யாரிடம் என்று எல்லாம் திட்டமிட்டு சிந்தித்தே வரும்.
 
எதிர்கால துறை சார் கல்வியை இருவரும் சேர்ந்தே முடிவெடுத்து கொள்ளலாம். இருவரும் மருத்துவம் படித்தால்  வீட்டில் இருவருக்கும் இருப்பதற்கு நேரம் இருக்காது. பிள்ளை  ஆயவின் வளர்ப்பில் வளர தொடங்கிவிடும். அன்பு தட்டுபாடு அதிகமாக இருக்கும்  .
அவரோடு போதால் இவரோடு போதல் என்ற கெட்ட பழக்கங்களுக்கு வசதி இருக்காது. 
தனியாக வாழ்கையை அனுபவித்தல்.............. இப்படி பல பேர் மேலே எழுதியிருக்கிறார்கள்.
(அவர்களுக்கு வசதியாக எப்படி அனுபவிப்பது என்பதை எழுதாமல் விட்டு உள்ளார்கள். நான் அ  என்றால் அவர்கள் ஆ என்பார்கள். ஆகவே அதை அப்படியே விட்டு விடுவோம்) 
தனியாக அனுபவிப்பதிலும் விட ஒரு துணையோடு அனுபவிப்பது என்பது சால சிறந்தது.
 
 
கல்வி யை முடித்து விட்டு.............. வேலை கிடைக்கும் இடங்கள் சம்பளம் போன்றாற்றை கருத்தில் எடுத்து  ஒரு 25 26 வயதில் பிள்ளைகள் பெறுவது பற்றி ஆலோசிக்கலாம்.......... அதில் ஆலோசிக்க என்ன இருக்கு?? அலுவலை தொடங்கலாம்.
 
இவர்களுக்கு 45 வயது வரும்போது பிள்ளை கல்லூரியில் இருக்கும் திருமணம் முடிக்கும்போது  இவர்களுக்கு 50 வயது இருக்கும். மனித வாழ்வில் 50வயது என்பது  மத்திய வயதாகும் ( அதை பற்றிய கூடிய விளக்கம் நெடுக்க்ஸ் அவர்களிடம் கேட்கவும் அவர் இதை பற்றி நிறைய படித்த்ருக்கிறார்)  மிகுதி பாதி வயதையும்  வாழ்க்கையையும்  உலகில் இருக்கும் அற்ற்புதங்கள்  அறிவு தடாகங்கள் கோவில் குளங்கள் என்று சுற்றிவர தொடங்கலாம் ( வயக்ரா................ சாரி  நயாகரா போன்ற நீர்வீழ்ச்சிகளை மறக்க கூடாது) 
 
ஒரு பெண்ணின் பருவத்தில் இந்த 16 இருக்கிறதே ..........?
அதை நேரில் பார்த்த நபர்களுக்குதான் அதன் உண்மை தெரியும். அதை வீணாக்கி விட்டால் வாழ்கையே வீண் ஆக்கியதற்கு சரி. 
இயந்திர வாழ்கையில் பிட்போடபட்ட வயதின் படிதான் தற்போது திருமணம் நடக்கிறது. இயற்கையின் பிரகாரம்  இது 16-18இல் தான் இருக்கிறது.
 
முப்பத்தி ஐந்து வயதில் திருமணம் கட்டிவிட்டு பிள்ளை இல்லை என்று சேர்த்து வைத்த பணத்திற்கு  டிக்கெட் வாங்கி கொண்டு வாழைபழ சாமியாரிடம் இந்தியா போய்  வர கையும் கணக்கும் சரியாக இருக்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.