Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள‌வ‌ர்கள் கேலிசெய்யும் சென்னை விமானநிலையம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
த‌மிழ்நாடு என்ற‌தும் அத‌ன் வ‌ர‌லாறு, ப‌ழ‌மையான‌ கோயில்க‌ள், வான‌ளாவிய‌ கோபுர‌ங்க‌ள், ம‌சூதிக‌ள், தேவால‌ய‌ங்க‌ள் அர‌ண்ம‌னைக‌ள், கோட்டைக‌ள் என‌ அத‌ன் ப‌ழ‌மையும் பெருமையும் நினைவுக்கு வ‌ந்தாலும், அவ‌ற்றை எல்லாம் விட்டு,த‌மிழ்நாட்டைக் கேலி செய்ய‌ விரும்புகிற‌வ‌ர்க‌ள், அதிலும் குறிப்பாக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌ம‌து கையில் எடுக்கும் ஆயுத‌ம் இந்திய‌ நக‌ர‌ங்க‌ள் எல்லாவ‌ற்றிலும் காணப்ப‌டும் அழுக்கு, குப்பை, க‌ண்ட‌ இட‌த்திலும் காண‌ப்ப‌டும் ம‌ல‌ம், சிறுநீர் க‌ழிவுக‌ளைத் தான். 
 
 
ChennaiAirport1.jpg

தமிழ்நாட்டின் ந‌வீன‌ க‌ட்டிட‌ங்க‌ள் கூட‌ துப்புர‌வாக‌ இருப்ப‌தில்லை, க‌ட்டப்ப‌ட்டு முத‌ல் சில‌ மாத‌ங்க‌ள் துப்புர‌வாக‌ அழ‌காக‌ இருக்கும் அத‌ன் பின்னால் ப‌ழைய‌ குருடி கத‌வைத் திறவ‌டி தான். அத‌ற்கென்று துப்புர‌வுத் தொழிலாளிக‌ள் இருந்தாலும் அவ‌ர்க‌ளிட‌ம் அழ‌காக‌,துப்புர‌வாக‌ வைத்திருப்ப‌த‌ற்காக‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ள் இருப்ப‌தில்லை அல்ல‌து முறையான‌ ப‌யிற்சி அவ‌ர்களுக்குக் கிடையாது. ஒரு சிறிய‌ இட‌த்தில் இருக்கும் அழுக்கை அப்ப‌டியே,கொஞ்சம் த‌ண்ணீரைக் கொட்டி அதை எல்லா இட‌மும் ப‌ர‌ப்பிக் காய‌வைத்து விட்டுப் போகும் அழ‌கைச் சென்னை விமான‌ நிலைய‌த்தில் நான் கூட‌ பார்த்திருக்கிறேன்.
 
 
ChennaiAirport2.jpg

இந்தியாவைப் ப‌ற்றி சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கேலி செய்யும் போது என‌க்கென்ன‌ போச்சு என்றிருக்கும் ஈழ‌த்தமிழ‌ர்க‌ள்,த‌மிழ்நாட்டை அவ‌ர்க‌ள் கேலி செய்யும் போது அவ‌ர்க‌ளுக்கு விட்டுக் கொடுப்ப‌தில்லை, த‌மிழ்நாட்டுக்காக‌ அவ‌ர்க‌ளுட‌ன் வாதாடுவ‌தைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் எங்களுக்கு இயற்கையாகவே உள்ள பற்றை நாங்க‌ள் வெளியிலே காட்டிக் கொள்ளாது விட்டாலும் "தானாடாவிட்டாலும் ச‌தையாடும்" என்பார்க‌ளே அது போல் தான் இதுவும். ஆனால் சில‌ வேளைக‌ளில் த‌மிழ்நாட்டின் ந‌க‌ர‌ங்க‌ளில் நிறைந்துள்ள‌ அழுக்கும், ம‌க்க‌ளின் ஏனோ தானோ என்ற‌ சுயந‌ல‌ம் நிறைந்த‌ செய‌ல்க‌ளும், க‌ண்ட‌ப‌டி குப்பைகளை வாரி வீசும் ப‌ழ‌க்க‌மும் நியாய‌ப்ப‌டுத்த‌வே முடியாத‌ள‌வுக்கு மோச‌மாக‌ இருப்ப‌துண்டு.
 
 
ChennaiAirport8.jpg
இன்று இல‌ங்கையின் இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் ஒன்றில் த‌மிழ்நாட்டைக் கேலி செய்ய‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் எடுத்திருக்கும் விட‌ய‌ம் புதிதாகக் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ சென்னை உள்நாட்டு விமான‌ நிலைய‌ம். இல‌ங்கையில் கொழும்பு விமானநிலைய‌த்தின் அழ‌கையும்,தூய்மையையும் பார்த்த‌ எவ‌ருமே சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டைக் கேலி செய்வ‌திலுள்ள‌ நியாய‌த்தை நிச்ச‌ய‌மாக‌ உண‌ர்வ‌ர்.  நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌ கால‌த்தை விட‌க் கூடுதலான‌ கால‌த்தை க‌ட்டி முடிக்க‌ எடுத்த‌து ம‌ட்டும‌ன்றி, ஊழ‌ல், த‌ர‌ம‌ற்ற‌ வ‌கையில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து போன்ற பிர‌ச்ச‌னைக‌ளுட‌னும், முறைப்பாடுக‌ளுட‌னும் புதிதாக‌ 2,300 கோடி ரூபாய் செல‌வில் க‌ட்டி முடிக்க‌ப்பட்ட‌ சென்னை உள்நாட்டு விமான‌ நிலைய‌ம் அத‌ன் உண்மையான‌ நிலையை வெளிக்காட்டியுள்ளது. விமான‌ நிலைய‌த்தின்  40 உள்ள‌க‌ கூரைக‌ள் அப்ப‌டியே விழுந்து விட்ட‌ன‌. அதிர்ஸ்ட‌வ‌ச‌மாக‌, இந்த‌ வெட்க‌க்கேடான ச‌ம்ப‌வ‌ம் ச‌ன‌ந‌ட‌மாட்ட‌ம் குறைவான‌ அதிகாலையில் ந‌டைபெற்ற‌தால் ப‌ய‌ணிக‌ள் எவ‌ரும் காய‌த்துக்குள்ளாக‌வில்லை. மூன்று வேலையாட்க‌ள் ம‌ட்டும் சிறிய‌ காய‌ங்க‌ளுக்குள்ளானார்க‌ள்.

 
 
ChennaiAirport3.jpg
ஜன‌வ‌ரி 2011 இல் ம‌க்க‌ளின் பாவ‌னைக்குத் திற‌க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ புதிதாகக் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ சென்னை உள்நாட்டு விமான‌ நிலைய‌ம் சென்ற‌ மாத‌ம் தான் க‌ட்டி முடிக்க‌ப்ப‌ட்டுத் திற‌ந்து வைக்க‌ப்ப‌ட்ட‌து. வெளியிலிருந்து பார்ப்ப‌த‌ற்கு க‌ண்ணாடியினாலும் உருக்கினாலும் அமைக்க‌ப்ப‌ட்டு அழ‌காக‌க் காட்சிய‌ளிக்கும் க‌ட்டிட‌த்தில் மோச‌மான‌ த‌ர‌க்குறைபாடுக‌ள் இருப்ப‌தாக‌ ஊட‌க‌ங்க‌ள் ஏற்க‌ன‌வே க‌ருத்து வெளியிட்டிருந்த‌ன‌ என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.  ஜன‌வ‌ரி 2011 இல் ம‌க்க‌ளின் பாவ‌னைக்குத் திற‌க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ புதிதாகக் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ சென்னை உள்நாட்டு விமான‌ நிலைய‌ம் சென்ற‌ மாத‌ம் தான் க‌ட்டி முடிக்க‌ப்ப‌ட்டுத் திற‌ந்து வைக்க‌ப்ப‌ட்ட‌து. வெளியிலிருந்து பார்ப்ப‌த‌ற்கு க‌ண்ணாடியினாலும் உருக்கினாலும் அமைக்க‌ப்ப‌ட்டு அழ‌காக‌க் காட்சிய‌ளிக்கும் க‌ட்டிட‌த்தில் மோச‌மான‌ த‌ர‌க்குறைபாடுக‌ள் இருப்ப‌தாக‌ ஊட‌க‌ங்க‌ள் ஏற்க‌ன‌வே க‌ருத்து வெளியிட்டிருந்த‌ன‌ என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
 
 
ChennaiAirport6.jpg
 
அசாதார‌ண‌மாக‌ செங்குத்தான‌ இற‌ங்கு பாதைக‌ள், தேவைய‌ற்ற‌ நீண்ட‌ ந‌டைபாதை, கிரீச்சிடும் அடிப்ப‌டைக் க‌ட்டிட‌ங்க‌ள் போன்ற‌ தொழில்நுட்ப‌ குறைபாடுக‌ளையும் ஊட‌ங்கள் சுட்டிக் காட்டியிருந்த‌ன‌. விமான‌ நிலைய‌ம் புதிதாக‌த் திற‌க்க‌ப்ப‌ட்ட‌போது த‌ண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கும் க‌ழிப்ப‌றைக‌ள், நீர் வ‌டிந்து கொண்டிருக்கு குளிரூட்டிக‌ள், உடைந்து போன‌ த‌ள‌ங்க‌ள், ஒடுக்க‌மான‌ அறைக‌ள், தூசு ப‌டிந்த‌ க‌திரைக‌ளைப் பார்த்து ப‌ய‌ணிக‌ள் அதிர்ச்சி அடைந்த‌ன‌ர். க‌ண்க‌ளைக் கொள்ளை கொள்ளும் டெல்லி, மும்பாய் விமான‌ நிலைய‌ங்க‌ள் த‌னியார் துறையின‌ரால் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌வை ஆனால் இந்திய‌ விமான‌நிலைய‌ ஆணைய‌ம் சென்னை விமான‌நிலைய‌த்தைக் கட்டும் பொறுப்பை த‌னியார் கைக‌ளில் விடாம‌லிருக்க‌ப் போராடிய‌து. இந்திய‌ விமான‌ நிலைய‌ ஆணைய‌ம் இந்த‌ ஊட‌ங்க‌ளின் முறைப்பாடுக‌ளை ம‌றுத்த‌துட‌ன் இந்த‌ த‌வ‌றுக‌ளுக்கு தொழில்நுட்ப‌ ரீதியாக‌ விள‌க்க‌ம‌ளித்துள்ள‌து.
 
 
ChennaiAirport7.jpg
புதிய‌ ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் இனிமேல் தான் திற‌க்க‌ப்ப‌ட‌வுள்ள‌து.  மே மாத‌த்தின் ந‌டுப்ப‌குதியில் திற‌க்கப்ப‌ட‌விருந்த‌ ச‌ர்வ‌தேச‌ விமான‌நிலைய‌ம், அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் எதுவுமில்லாத‌ கார‌ண‌த்தால் குறிப்பிட்ட‌ நாளில் திற‌க்க‌ப்ப‌டாது போகும்.
 
த‌மிழ்நாட்டு மக்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ "உல‌க‌ த‌ர‌முடைய‌" விமான‌ நிலைய‌த்தின் உண்மையான‌ நிலையைப் பாருங்க‌ள். இதைப் பார்த்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் த‌மிழ்நாட்டைக் கேலி செய்கிறார்க‌ள்.

http://www.lankanewspapers.com/news/2013/5/82843_space.html

 

 
ChennaiAirport5.jpg
 

 

Thanks http://viyaasan.blogspot.co.uk/2013/05/blog-post_13.html

  • கருத்துக்கள உறவுகள்
கவலைக்குரியது. உரியவர்கள் கவனமெடுக்க வேண்டும்.ஊழலால் மக்களின் உயிர் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது.
 
என்றாலும் ஆட்களை கொல்லி அதனை ஒழிப்பதற்கு சிங்களவருக்கு நிகர் சிங்களவர் தான்.
  • கருத்துக்கள உறவுகள்

"போனவருடம் இலங்கையில இருந்து சென்னை ஊடாக கனடா போன எனது நண்பன் தான் செத்தாலும் இனி
இந்தியா போக மாட்டேன் எண்டு சொன்னான். சென்னை எயர்  போட்டில மலசல கூட வசதி கூட இல்லை எண்டும் தான் 5 மணித்தியாலங்கள் இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு இருந்தது எண்டும் சொன்னான். " ஜீவாவின் "மாமியார் வீடு" திரியில் நான் எழுதியது. சென்னை போய் வந்த எனது அம்மா அப்பா சொன்ன விடயமும் இதுதான். கட்டுநாயக்காவில் மலசல கூடங்களில் இருந்து எல்லாமே சிங்கை விமான நிலையம் போல சுத்தமாக இருந்தது.

 

இலங்கையின் புதிய விமான நிலையத்தை சிங்களவர் கட்டவில்லை. நுரைச்சோலை மின்சார நிலையம் 3 வருடங்கள் திறந்து. இன்னமும் சரியாக தொழில் பட முடியாமல் இருக்கிறது.

 

ஆனால் சுத்தம் தமிழ் நாட்டில் கவனிக்கப்பட வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுச் சொத்துக்களை காப்பதில், புழங்குவதில் அசிரத்தையான மக்கள்,அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு மட்டத்திலும் மலிந்து கிடக்கும் ஊழல்,வேலையில் சிரத்தையற்ற அரசு/தனியார் நிறுவனங்களின் அலட்சியம்..பல காரணிகள்.

 

ஆனால் மிக முக்கியமாக, எதையும் குறுக்கு வழியில் சீக்கிரம் சாதிக்க நினைக்கும் மனோபாவம் அனைவரிடத்திலும் இருக்கையில், ஒரு சாரரை மட்டும் பிழைக்கு சுட்டுவதில் நியாயம் இல்லை.

 

***

 

*** சுய தணிக்கை. ஏன் எம்மையே தாழ்த்திக்கொள்ள வேண்டும்? என்ற எண்ணமே.

 

 

 

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம் என்னவென்றால். சென்னை விமான நிலையத்தைக் கட்டியது வட இந்தியக் கம்பெனிகள்.

பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது என்றவிடயத்தில் தமிழர்கள் மிகவும் பின்தங்கி இருப்பது உண்மை. இந்த விடயத்தில் சிங்களவர்கள் எவ்வளவோ மேல் என்ற உண்மையை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். ஐரோப்பாவில் தமிழர்கள் கூடும் இடங்கள், தமிழர்களின் வியாபாரஸ்தாபனங்கள், தமிழ் கலாச்சார நிலையங்களைப் பார்பவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

BE THE CHANGE YOU WANT TO SEE IN THE WORLD. - மகாத்மா காந்தி

அதாவது நாம் இந்த உலகில் காண நினைக்கும் மாற்றங்கள் முதலில் எங்களில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்..

லண்டன் விமான நிலையத்தின் உள்ளேயுயும் நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இருக்கவிலலை.

இந்த நிலையைத் தோற்றுவிப்பவர்கள் யார்? ஏழைகள் அல்லர்.. மாறாக விமானத்தில் பயணம் செய்யக்கூடிய வசதி கொண்டவர்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.