Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

13 ஐ ஒழித்தால் பதிலடி கச்சதீவில்; இலங்கைக்கு கடிவாளம் போடுகிறது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கச்சதீவை மீளப்பெறுவதற்கு டில்லி நிர்வாகம் உத்தேசித்துள்ளது என உயர் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 

 
இந்த விவகாரம் சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் உள்ளிட்ட அரச உயர்மட்ட பிரமுகர்கள் தமது இராஜதந்திரிகளுடன் டில்லியில் ஆலோசனை நடத்திவருகின்றனர் என்றும் அவ்வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 
 
ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றாக 1987இல் இலங்கை இந்திய அரசுகளிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக இலங்கையில் என்றுமில்லாதவாறு தற்போது பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
 
குறிப்பாக, கூட்டணி அரசின் கடும்போக்குடைய பங்காளிக்கட்சிகள் 13இற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதுடன், அதை நீக்குமாறு கோரும் பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துவருகின்றன. 
 
அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரச சார்புடைய கடும்போக்குடைய சிங்கள அமைப்பினரும் "13'இற்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்
அரசில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையினக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் "13'ஐ மேலும் பலப்படுத்தவேண்டும் என அதற்கு ஆதரவு தெரிவித்தாலும், அரச கூட்டணியில் பிரதான கட்சியாகத் திகழும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இது விடயத்தில் தமது நிலைப்பாட்டை அறிவிக்காமல் தொடர்ந்தும் மௌனம் காத்துவருகின்றது. 
 
கூட்டு அரசுக்குள் கருத்து வேறுபாடென்பது அரசியல் ஜனநாயகக் கலாசாரம் எனக் கூறி இது விடயத்திலிருந்து அரசு நழுவிச்  செல்கின்றது. இதன் மூலம் "13'இல் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு பச்சைக்கொடி காட்டும் என்ற விடயம் உறுதியாகின்றது. 
 
அத்துடன், வடக்குத் தேர்தலுக்கு முன்னர் "13'இல் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிப்பதற்கு சட்டமூலமொன்றை நிறைவேற்றிக்கொள்வதற்கும் அரசு முயற்சிக்கின்றது என அறியக்கூடியதாகவுள்ளது. 
 
இவ்வாறு அரசமைப்பின் "13' விடயத்தில் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், "13' விடயம் சம்பந்தமாக இந்தியா தனது பூரண கவனத்தைச் செலுத்தியுள்ளது. 
 
இதன்படி அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசியூடாக கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவேண்டாம் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில்,  அரசமைப்பிலிருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கோ அல்லது அதை பலவீனப்படுத்துவதற்கோ இலங்கை அரசு முயலும் பட்சத்தில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கையிடமிருந்து கச்சதீவை இந்தியா மீளப்பெறும் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் டில்லி உயர்மட்டம் தீவிரமாக ஆராய்ந்துவருகிறது. 
 
1974ஆம் ஆண்டுவரை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த கச்சதீவு அதன் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்டது. சிறிமா  சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி கச்சதீவை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.
 
எனவே, இந்தியாவின் தலையீட்டின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 விடயத்தில் இலங்கை தலையிடுமானால், கச்சதீவை இந்தியா நிச்சயம் மீளப்பெறும் என்று அரசியல் ஆய்வாளர்களும் எதிர்வு கூறுகின்றனர். 
 
அதேவேளை, இலங்øக்கு கச்சதீவை வழங்குவதற்கு எதிராக இந்தியாவின் தமிழக கட்சிகள் இன்றும் குரலெழுப்பி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=474352070429475461

 

இந்த விவகாரம் சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் உள்ளிட்ட அரச உயர்மட்ட பிரமுகர்கள் தமது இராஜதந்திரிகளுடன் டில்லியில் ஆலோசனை நடத்திவருகின்றனர் என்றும் அவ்வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

 

கடிவாளம், உயர்மட்ட இராஜதந்திரம் எல்லாம் கடைசியில் எப்படி முடியும் என்பது தெரிந்ததுதானே.

ஊடக வியலார் கூறுவது போல 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதோ அல்லது கச்சதீவை திரும்ப பிடிப்பதோ,  எளிதான சமாசாரங்கள் அல்ல.  கச்சதீவை பிடிப்பது, இந்தியாவுக்கு மேலாக  ஒன்றான சர்வதேசத்தால்  சில அழுத்தங்கள் எழ இடமளிக்கும். ஆனால் அது அவ்வளவு பார தூரமானதாக இல்லாமல் இருக்கலாம். 

 

இந்தியா கச்சதீவின் விலையை விட பல மடங்கில் இலங்கையில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் போட்டு வைத்திருக்கிறது. கச்சதீவை இந்தியா பிடித்தால் அவற்றை இலங்கை அரசு தேசிய மயமாக்கும்.

 

இதுவரையில்இந்தியாவைத்தான் இலங்கை  மிரட்ட முடிந்ததே அல்லாமல் மற்றய வழி சரிவரவில்லை. இலங்கையை மிரட்டுவத்தாக நினைத்து இந்தியா, வடமானிலங்களில் சீனாவை தன்னை மிரட்டும் படி அழைக்கிறது. இந்தியா கச்சதீவை பிடித்தால் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்காக வட இந்திய எல்லைகளில் பல இடங்களை ஒரே நேரத்தில் கைப்பற்றி இந்தியாவை அதிரவைக்கும். பிழையான பழிவாங்கல் பாதுகாப்புக் கொள்கைகளில் விழுந்த இந்தியாவால் இனி இலங்கையில் புடுங்கத்தக்கது ஒன்றும் இல்லை. 

 

அது அவ்வாறு இருக்க இலங்கையில் 13ம் திருத்ததை நிறைவேற்றுவது, இந்தியா இலங்கையில் மகிந்தா அரசாங்கத்தை காப்பாற்றவே. இல்லையேல் இந்தியா என்றோ தமிழர் தரப்பை வெல்ல விட்டிருந்திருந்திருக்கும். தேர்தலில் கூட பொன்சேக்காவை ஆதரித்திருக்கலாம். ஆனால் இந்தியாவே தான் கனி இருக்க காய் கவரும் அரசியல் செய்தது. இது மகிந்தாவின் அரசை காப்பாற்றவே. இந்தியா, மகிந்தா கதிரையில் இருப்பதால் மட்டும் தான் தமிழர் பிரச்சனைக்கு ஒரு பொய்யான மூடி போட்டு மேற்கு நாடுகளை இலங்கையில் இருந்து வெளியே தள்ள முடியும் என்று நினைக்கிறது. ( JR, பிரேமதாச, ரணில் மேற்கு நாடுகளில் உதவி தேடும் இந்திய எதிரிகள். சிறிமா, சந்திரிக்கா, மகிந்தா இந்தியாவின் எதிரிகள் அல்ல. இதுதான் இந்திரா காந்தி தொடக்கம் இந்தியாவின் நிலைப்பாடு)

 

 இந்தியா இலங்கைக்கு பயந்து இலங்கையை கேட்டு நடந்தது, சீனா இலங்கையில் வந்துவிடும் என்ற பயத்தால் என்றது தமிழ் ஊடகவியலாரின் வாய்க்கு இந்தியா உளவாளிகள் போட்ட அவல் மட்டுமே. இந்தியாவின் கரிசனை இலங்கையிலிருந்து மேற்கு நாடுகளை தூர வைத்திருப்பதே. இலங்கையுடன் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைத்தது. இந்தியா. எனவே இந்தியா இலங்கையுடன் முறித்தால் மேற்கு நாடுகள் தாம் விரும்பியதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பெற்றுவிடும். இந்தியா அந்தப் பிழைவிட்டால் கடந்த 5,அல்லது 6 ஆண்டுகளாக காங்கிரஸ் இந்தியா, இலங்கையிடம் வாங்கிய உதை, மிதியல்கள் எல்லாவற்றினதும் உழைப்பை ஒரு கணத்தில் உதறுவது போலாகும். 

 

அதேநேரம், மேற்குநாடுகள் 13ம் திருத்தத்தை முன்னெடுக்காவிட்டால் அதை இந்தியாவால் இலங்கையில் நிறைவேற்ற முடியாது. மேற்கு நாடுகள் தமக்கு விருப்பமானதை இலங்கையில் செய்யுமே அல்லாது, தமது இலங்கையுடனான உறவை  முறித்து, இந்தியாவுக்கு தேவையானதை இலங்கையில் செய்து கொடுத்துவிட்டு போக மாட்டா. உதாரணத்திற்கு அமெரிக்காவுக்கு திருகோணமலை வேண்டுமாக இருந்தால், ஒன்று தமிழரை அடக்கி இலங்கையின் நண்பனாகி அங்கே கால் ஊன்றலாம். இனி அந்த உதவிகள் இலங்கைக்கு தேவை இல்லை என்பதால் அதில் அமெரிக்கா பின் தங்கி விட்டது. மாற்று வழி இலங்கையை எதிர்த்து அடக்கி திருகோணமலையில் தளம் அமைப்பது. இதுதான் அமெரிக்காவுக்கு திறந்திருக்கும் பாதை. இதுவும் இன்னுமொரு இரண்டு மூன்று வருடங்களுக்கு மட்டுமே  திறந்திருக்கும். அதை தன்னும் செய்து முடிக்க மேற்கு நாடுகளுக்கு காலாவதி காணது. எனவே அவர்கள் என்ன திட்டமிடுகிறாகள் என்று சொல்வது கஸ்டம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; அது இந்தியா இலங்கையில் விட்ட பிழைகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றி எடுத்து விடுவதற்காக மட்டும் இருக்காது.

 

இந்தியாவால் கச்ச தீவை திரும்பப் பெறமுடியாது. இந்தியாவால் 13ம் திருத்தத்தை இலங்கையில் நிறைவேற்றுவிக்க முடியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அரசியல் பலம், இராணுவ பலம் யாவரும் அறிந்ததே. கையாலாகாத நாடு. super power கனவை மக்களிடம் விதைத்து விட்டு ஊழலில் உலகின் முதலாம் இடத்தை நோக்கி மிக விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் நாடு.

 

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கிறத பேசுங்கப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, ஜயோ,

பேனையை எடுக்கிறது, எதையாவது எழுத வேண்டியது:

நாளைக்கே, பிரிட்டிஸ் காரர் வந்து இந்தியாவையும் இலங்கையையும் திருப்பி எடுக்கப் போகினமாம் எண்டு லண்டண் உயர் மட்டத்தில் கதை அடிபடுகுது எண்டு போடப்போகினம்.

இந்தியாவின் கையாலாகத் தனம் நல்லாத் தெரிந்தது தானே!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வளரும் வல்லரசான இந்தியாவின் 'கெளரவம்', கச்சை தீவு என்ற, முருகைக்கல்லில் தொங்குவதைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது!

 

அமெரிக்காவுக்குக் கச்சை தீவில், ஒரு கண் விழுந்து விட்டது என்பதையே, இந்தி அரசியல் வாதிகளின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன! :icon_idea:

 

( என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறாங்களப்பா!) :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமெரிக்கா, பிரித்தானியா அனைத்தும் எம் காலில் விழும்...நம்புங்கள், ஒருநாள் பொந்தியா வல்லர'சாகும்'! :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தெரிந்தோ / தெரியாமலொ சில செய்திகளை இந்த ஊர் புதினம் பகுதியில் இணைக்கிறார்கள் என்றால் .. அதை உரிய பகுதிக்கு யாழ்கள பொறுப்பாளர்கள்  நகர்த்த வேண்டாமா...? சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்க வேண்டியதை தவறுதலாக  இங்க இணைத்துவிட்டார்..  அதை உரிய பகுதிக்கு நகர்த்த வேண்டியது கள மட்டுக்கள் மற்று பொறுப்பாளர்கள் கடமை இல்லையா..?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.