Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்ன சின்ன ஞாபகங்கள்

Featured Replies

ம்.................. தொடருங்கள் லியோ!

  • Replies 148
  • Views 11k
  • Created
  • Last Reply

வணக்கம் லியோ
அருமையான பதிவுகள் ,தொடர்ந்து எழுதுங்கள் உங்களையும் பாதுகாத்துகொள்ளுங்கள் .நன்றிகள் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை காணேல்லை

தொடருங்கள் லியோ!


எங்கை காணேல்லை

 

 

என்னத்தை??

நீங்களும் தொடருங்கள்

வணக்கம் லியோ,
 
நானும் உங்கள் குறுங்கதைகளை தொடர்ந்து பார்வையிடுகின்றேன். இதை எழுதுவது நீங்களா அல்லது வேறு யாருமோ ( ஓவியனும் லியோவும் ஒருவரா? ) என்றும் தெரியவில்லை. நீங்கள் விஜிந்தனின் அண்ணையோ தெரியாது. விஜிந்தன் எனது வகுப்பு நண்பன். பல தடவைகள் அவனை இங்கு கருத்துக்களத்திலும் முன்பு நினைவுகூர்ந்துள்ளேன். அவனது எதிர்பாராத மறைவு இன்றும் நினைத்துப்பார்க்கும்போது ஜீரணிக்கமுடியாமல் உள்ளது. 
 
பலர் பலவாறு உங்கள் குறுங்கதைகள் பற்றி தமது எண்ணங்களைக்கூறியுள்ளார்கள். என்னைப்பொறுத்தவரை இவற்றை வாசிக்கும்போது நீங்கள் இப்படியான விடயங்களை எழுதாமல் உண்மையில் முள்ளிவாய்க்கலில் என்ன நடைபெற்றது, ஏன் மக்களிற்கு பாரிய அழிவு ஏற்பட்டது, மக்களின் அழிவுகள் தடுக்கப்படுவதற்கு ஏன் முன்கூட்டிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படவில்லை, மக்களின் அழிவு தடுக்கப்படுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, மற்றும் ஐ.நா அத்துடன் இவ்வாறான பதிவுகளில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=125246&p=913355 ) த.வி.பு மீது சுமத்தப்படும் நேரடியான குற்றச்சாட்டுக்கள் பற்றிய உங்கள் பதில் என்ன போன்றவற்றை மையப்படுத்தி தகவல்களை பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக அமையும்.
 
இந்தக்குறுங்கதைகளை எழுதுபவர் எப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தற்போது உள்ளாரோ தெரியாது. ஆனால், கால சூழ்நிலைகள் இடம்கொடுப்பின் அவர் ( ஓவியன் ) த.வி.புவின் நிர்வாக மட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், அவை கையாளப்பட்ட முறைமைகள் பற்றிய விடயங்களை பகிர்ந்துகொள்வது சில யதார்த்தங்களை அறிந்துகொள்வதற்கு உதவும்.
 
நீங்கள் விஜிந்தனின் அண்ணாவாக இருப்பின் நான் யாழ் கருத்துக்களத்தில் முன்பு எழுதிய இந்தப்பதிவு ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71259&p=583747 ) சம்மந்தமாக உங்கள் பின்னோட்டத்தை அறிய விரும்புகின்றேன். குறிப்பிட்ட போராளிபற்றிய விபரம் தெரிந்தால் அறியத்தாருங்கள்.

லியோ அண்ணை

 

விடுதலைப்போராட்ட வாழ்வின்  பல்பரிணாமப்பக்கங்கள் தங்களின் வரிகளிற்குள் அழகுற வெளிப்படுகின்றன. சமூகம், தலைவர், மக்கள் மீதான தலைவரின் கரிசனை, போராளிகளின் உணர்வுகள், உளவியல், புலிகளிற்கும் சமூகத்திற்குமான தொடர்பாடல் பிணைப்பு என விரிந்து செல்லும் உங்கள் பதிவின்  பன்முகத்தன்மை போராட்டத்தின் பல விடயங்களுக்குச் சான்றாக அமைகின்றது.

 

பகிர்வுகளிற்கு நன்றி

Edited by வாணன்

  • 2 weeks later...

போராட்டத்தின் பல விடயங்கைளை பதிந்துள்ளீர்கள்

 

பகிர்விற்கு நன்றி

இன்றுதான் இந்த அற்புதமான பதிவைப்பார்த்தேன் ............காலத்தின் தேவைக்கேற்ற முக்கியமான பதிவு .தொடர்ந்து காத்திருக்கிறேன் சகோ............

  • 2 weeks later...

வணக்கம் லியோ,

 

நானும் உங்கள் குறுங்கதைகளை தொடர்ந்து பார்வையிடுகின்றேன். இதை எழுதுவது நீங்களா அல்லது வேறு யாருமோ ( ஓவியனும் லியோவும் ஒருவரா? ) என்றும் தெரியவில்லை. நீங்கள் விஜிந்தனின் அண்ணையோ தெரியாது. விஜிந்தன் எனது வகுப்பு நண்பன். பல தடவைகள் அவனை இங்கு கருத்துக்களத்திலும் முன்பு நினைவுகூர்ந்துள்ளேன். அவனது எதிர்பாராத மறைவு இன்றும் நினைத்துப்பார்க்கும்போது ஜீரணிக்கமுடியாமல் உள்ளது. 

 

பலர் பலவாறு உங்கள் குறுங்கதைகள் பற்றி தமது எண்ணங்களைக்கூறியுள்ளார்கள். என்னைப்பொறுத்தவரை இவற்றை வாசிக்கும்போது நீங்கள் இப்படியான விடயங்களை எழுதாமல் உண்மையில் முள்ளிவாய்க்கலில் என்ன நடைபெற்றது, ஏன் மக்களிற்கு பாரிய அழிவு ஏற்பட்டது, மக்களின் அழிவுகள் தடுக்கப்படுவதற்கு ஏன் முன்கூட்டிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படவில்லை, மக்களின் அழிவு தடுக்கப்படுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, மற்றும் ஐ.நா அத்துடன் இவ்வாறான பதிவுகளில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=125246&p=913355 ) த.வி.பு மீது சுமத்தப்படும் நேரடியான குற்றச்சாட்டுக்கள் பற்றிய உங்கள் பதில் என்ன போன்றவற்றை மையப்படுத்தி தகவல்களை பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக அமையும்.

 

இந்தக்குறுங்கதைகளை எழுதுபவர் எப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தற்போது உள்ளாரோ தெரியாது. ஆனால், கால சூழ்நிலைகள் இடம்கொடுப்பின் அவர் ( ஓவியன் ) த.வி.புவின் நிர்வாக மட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், அவை கையாளப்பட்ட முறைமைகள் பற்றிய விடயங்களை பகிர்ந்துகொள்வது சில யதார்த்தங்களை அறிந்துகொள்வதற்கு உதவும்.

 

நீங்கள் விஜிந்தனின் அண்ணாவாக இருப்பின் நான் யாழ் கருத்துக்களத்தில் முன்பு எழுதிய இந்தப்பதிவு ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71259&p=583747 ) சம்மந்தமாக உங்கள் பின்னோட்டத்தை அறிய விரும்புகின்றேன். குறிப்பிட்ட போராளிபற்றிய விபரம் தெரிந்தால் அறியத்தாருங்கள்.

 

 

************

 

கரும்பு

 

கொமன்ஸ் தேவை என்றால் கொமன்ஸ்சைக் கேட்கிறதை விட்டுட்டு. ஆள்,அடையாளம், ஊர். அற்றஸ் என தேவையில்லாமல் உங்களிற்கு எழும் ஊகத்தின் அடிப்படையில் ஒருவரின் அடையாளத்தை வெளிக்கொண்டுவந்து, ஆபத்திற்குள்ளாக்கும் கைங்கரியத்தை(காட்டிக்கொடுப்பை) நிறுத்திவிட்டு. கருத்துக்களை மட்டும் பதியும் வேலையை ம்டும் செல்தால் நன்று என நினைக்கின்றேன்.

 

உங்களுங்கு அவரைத் தெரியும் இவரைத்தெரியும் என்று விலாசம் காட்ட தேவையில்லாத ஆள் அடையாளப்பதிவுக்கருத்துக்களை  பதியிறதை விட்டுட்டு சும்மா இருங்கப்பா.

 

ஒருமாதிரி  அவரை அமத்தியிட்டீங்கள் கரும்பு  வாழ்த்துக்கள்  ^_^  (தேவையில்லாமல் தன்னால யாரே ஒருவர் அநியாயமாகவும் தவறுதலாகவும் பாதிக்கப்படாது என்பதற்காகவாக்கும்)

நியானி: மேற்கோள் காட்டிய கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனது நேரமின்மை காரணமாகத்தான் நான் 
பதிவுகளை இடவில்லை.என்னை மன்னித்துவிடுங்கள்.
 
 
 
முள்ளிவாய்க்காலில்  இருந்து மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.வட்டுவாகல் பகுதியை தவிர்த்து எல்லாப்பக்கம் இருந்தும் துப்பாக்கி சன்னங்கள் கீச்சு கீச்செனெ வந்துகொண்டிருந்தது. நானும் எனது ஒரு போராளியும் மண்மூட்டை மறைப்பில் இருந்து கதைத்துக்கொண்டு இருந்தோம்.சன்னம் பட்டு சில மக்கள் கீழ் விழுவதும் உறவினர் கதறும் ஒலியும் குறைவில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது. என்னுடன் இருந்த போராளி ஒவ்வொருமுறை மக்களின் அழுகுரல் வரும்போதும் ஓடிப்போய் பார்த்து முடிந்ததை செய்துவிட்டு வருவான்,தேவையெனில் என்னையும் அழைப்பான். அருகில் இருந்த சனங்கள் படிப்படியாய் போய் எல்லாம் வெளிச்சுக்கொண்டு வந்ததுவண்டு மேலே சுற்றிக்கொண்டு இருந்தது.திடீரென கடற்படையின்  பீரங்கிப்படகில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பீரங்கிக்குண்டுகள் எமக்கு அருகில் வீழ்ந்து வெடித்தது.எமக்கு அருகில் இருந்த மண்மூட்டைகள் சிதறின.எங்களுக்கு பெரிதாய் பிரச்சனை ஒன்றும் இல்லை.எனது கண்ணுக்குள்ளும் ஒரு காதுக்குள்ளும் மண் போய் விட்டது.அதை சிறிது நேரத்தில் சரிப்பண்ணிவிட்டேன். நடந்து போய்க்கொண்டிருந்த மக்களில் மூவர் நிலத்தில் கிடந்தனர்.மற்றையவர்கள் ஒ என்று அழுதார்கள்என்னுடன் நின்ற போராளி சத்தம் போட்டு கேட்டான் யாருக்கும் காயமா?
உதவி தேவையா?காயம் இல்லை மூன்று பேர் இறந்திட்டினம் என்ற பதில் மட்டும் அங்காலப்பக்கம் இருந்து வந்தது.இது இப்ப எங்களுக்கு பழகியிருந்தது. பின் அந்த மூவரையும் விட்டு விட்டு போய் விட்டார்கள்.என்னுடன் இருந்த போராளி சொன்னான் அடிச்சவன் எப்படியும் திருப்பி அடிப்பான்.எனக்கு முகம் கழுவ தண்ணீர் தேவைப்பட்டது. தான் எடுத்துவருவதாய் சொன்னான்.வேண்டாம் நான் போகிறேன் என்று உடலங்களுக்கு அருகில் இருந்த குன்றுக்கு (கிணறு)போனேன்கிணற்றில் தண்ணீர் எடுத்து முகத்தை கழுவி விட்டு ,திரும்பி இறந்து கிடந்தவர்களை பார்த்தேன்.அதில் இருவர் வயது போனவர்கள் மற்றையது ஒரு சிறுவன் பத்து வயது வரும்.அந்த சிறுவனில் உயிர் இருப்பதிற்கான  அறிகுறி தென்பட்டது.அருகில் போய் திருப்பிப் பார்த்தேன்.அவனில் காயங்கள் இல்லை.தேவையான முதலுதவியை செய்து ,கிணற்றில் தண்ணீர் அள்ளி அவன் முகத்தில் அடித்தேன் அவன் எழுந்துவிட்டான்.எழுந்ததும் போதாதென்று அழத்தொடங்கிவிட்டான். இவனுக்கு ஒரு பிளேன்டி கொடுத்தால் நல்லா இருக்குமென்றான் என்னோடு நின்ற போராளி ,அந்த நேரத்திலும் நான் சிரித்தேன்,நாங்கள் குடிச்சாலும் நல்லாய் இருக்கும் என்றேன். அந்த சிறுவன் இறந்திருப்பவர்கள் தாத்தாவும் ஆச்சியும் என்றான்.தாய் தகப்பனை கேட்டான்.அவன் அழ அழ பாதைக்கு கூட்டிப்போனோம்.இராணுவப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த எங்களுக்கு தெரிந்த ஒருவருடன் இவனை ஒப்படைக்கும் பொறுப்பை கொடுத்து அனுப்பினோம்.  
 

ஓவியன்

 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும், அனுபவங்களுடன் உங்களைக்கண்டது மகிழ்ச்சி, லியோ!

 

உங்கள் செயல், எனக்குப் பின்வரும் படத்தை நினைவூட்டியது! இந்தப் புகைப்படம், 'புலிட்சர்' எனப்படும்,உலகின் ஊடகவியலாளர்களுக்கு, வழங்கப்படும் அதி உயர்ந்த பரிசைப்பெற்ற, ஒரு தென்னாபிரிக்க புகைப்படப் பிடிப்பாளரால் எடுக்கப்பட்டதாகும்! இந்தப் படத்தை, எடுத்த அவர் அந்தக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்காதது ஏன் என அவரிடம் கேட்கப்பட்டது! அவரால் விடை கூற  முடியவில்லை ! இந்த வினாவே, அவரது தற்கொலைக்கும் காரணமானது!

 

நிர்வாகம், அவசியமெனக் கருதினால்  இந்தப் படத்தை நீக்கிவிடலாம்!

 

blurb200-e8e064df0b947779392d46e50b6f723

 

மூலம்: http://www.npr.org/templates/story/story.php?storyId=5241442

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி.. கடைசி நிமிடங்கள் வரை நினறு ஒருவழியாக மீண்டு வந்திருக்கிறீர்கள்.. உங்களுடன் இறுதிவரை நின்ற வேறு போராளிகள் மீள முடியாமல் போன விடயங்கள் ஏதாவது இருக்கும்.. அதை வாசிக்கத் தயாரில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை..

 

இது அவர் எடுத்த ஒரு படம்.. ஆனால் இதைத் தவிர இன்னும் ஒரு பத்தாயிரம் குழந்தைகள் பசியுடனும், ஐநூறு கழுகுகள் ஏக்கத்துடனும் இருந்திருக்கும்.. :o இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு அந்தக் காட்சி தெரிந்திராது..

 

அதுபோலத்தான் பலாயிரக்கணக்கான மக்கள் மடிவதைக் கண்டவர்கள் விறைத்துப் போயிருப்பார்கள்.. வாணி அவர்களின் செவ்வியிலும் இந்த மனநிலை வெளிப்பட்டிருந்தது..

 

நீங்கள் இணைத்த அந்தக் குழந்தையின் படத்திலும் ஒரு இயற்கைச் செயற்பாடு வெளிப்பட்டிருக்கிறது.. குழந்தையின் கை கால்கள் மிகவும் சக்தியற்று, வலுவிழந்து போயுள்ளன. மூளையின் செயற்பாட்டைத் தக்கவைப்பதற்கு பிரதான அவையங்களை (இதயம், சுவாசப்பை போன்றவை) தக்கவைக்க உடல் செய்துகொள்ளும் தற்காப்பு. அதுபோல ஒரு கட்டத்துக்குமேல் எது நல்லது.. எது கெட்டது என்கிற பொதுச் சிந்தனை குறைவடையும். இது இயற்கைதானே.. ஆனாலும் கொடுமையானது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை..

 

இது அவர் எடுத்த ஒரு படம்.. ஆனால் இதைத் தவிர இன்னும் ஒரு பத்தாயிரம் குழந்தைகள் பசியுடனும், ஐநூறு கழுகுகள் ஏக்கத்துடனும் இருந்திருக்கும்.. :o இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு அந்தக் காட்சி தெரிந்திராது..

 

அதுபோலத்தான் பலாயிரக்கணக்கான மக்கள் மடிவதைக் கண்டவர்கள் விறைத்துப் போயிருப்பார்கள்.. வாணி அவர்களின் செவ்வியிலும் இந்த மனநிலை வெளிப்பட்டிருந்தது..

 

நீங்கள் இணைத்த அந்தக் குழந்தையின் படத்திலும் ஒரு இயற்கைச் செயற்பாடு வெளிப்பட்டிருக்கிறது.. குழந்தையின் கை கால்கள் மிகவும் சக்தியற்று, வலுவிழந்து போயுள்ளன. மூளையின் செயற்பாட்டைத் தக்கவைப்பதற்கு பிரதான அவையங்களை (இதயம், சுவாசப்பை போன்றவை) தக்கவைக்க உடல் செய்துகொள்ளும் தற்காப்பு. அதுபோல ஒரு கட்டத்துக்குமேல் எது நல்லது.. எது கெட்டது என்கிற பொதுச் சிந்தனை குறைவடையும். இது இயற்கைதானே.. ஆனாலும் கொடுமையானது. :unsure:

நீங்கள் சொல்வது உண்மைதான், இசை!

 

அந்த நேரத்தில், அந்தக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தனக்கு 'ஏன்' வரவில்லை என்பது தான் தனக்குப் புரியவில்லை என்று தான் அவர் முதலில் கூறியிருந்தார்! பின்னர், காலப்போக்கில், அவரால், அவரது மனச்சாட்சிக்குச் சமாதானம் சொல்ல முடியாமல் போயிருக்கலாம்!

 லியோ நீண்ட நாள்களின் பின்னர் மீண்டும் தங்களின பதிவைப்பார்த்தது சந்தோசம்

 

முள்ளிவாய்க்கால் அவலத்தின் வலிகள்  புரிகின்றது  தங்களின எழுத்துக்களில்

 

பகிர்விற்கு நன்றி

 

 

 

கரும்பு

 

கொமன்ஸ் தேவை என்றால் கொமன்ஸ்சைக் கேட்கிறதை விட்டுட்டு. ஆள்,அடையாளம், ஊர். அற்றஸ் என தேவையில்லாமல் உங்களிற்கு எழும் ஊகத்தின் அடிப்படையில் ஒருவரின் அடையாளத்தை வெளிக்கொண்டுவந்து, ஆபத்திற்குள்ளாக்கும் கைங்கரியத்தை(காட்டிக்கொடுப்பை) நிறுத்திவிட்டு. கருத்துக்களை மட்டும் பதியும் வேலையை ம்டும் செல்தால் நன்று என நினைக்கின்றேன்.

 

உங்களுங்கு அவரைத் தெரியும் இவரைத்தெரியும் என்று விலாசம் காட்ட தேவையில்லாத ஆள் அடையாளப்பதிவுக்கருத்துக்களை  பதியிறதை விட்டுட்டு சும்மா இருங்கப்பா.

 

ஒருமாதிரி  அவரை அமத்தியிட்டீங்கள் கரும்பு  வாழ்த்துக்கள்  ^_^  (தேவையில்லாமல் தன்னால யாரே ஒருவர் அநியாயமாகவும் தவறுதலாகவும் பாதிக்கப்படாது என்பதற்காகவாக்கும்)

 

 

யாழ் கருத்துக்கள விதிமுறைகளிற்கு முரணாக எனது கருத்து பதியப்பட்டு இருப்பின் நீங்கள் நிர்வாகத்திற்கு முறையிட்டு எனது கருத்தை நீக்கமுடியும். எனக்கு அவரைத்தெரியும், இவரைத்தெரியும் என்று விலாசம் காட்டவேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. எனது முன்னைய கருத்தில் ஏதும் தவறு உள்ளதாகத்தெரியவில்லை.

 

வணக்கம் லியோ,
 
 
இந்தக்குறுங்கதைகளை எழுதுபவர் எப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தற்போது உள்ளாரோ தெரியாது. ஆனால், கால சூழ்நிலைகள் இடம்கொடுப்பின் அவர் ( ஓவியன் ) த.வி.புவின் நிர்வாக மட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், அவை கையாளப்பட்ட முறைமைகள் பற்றிய விடயங்களை பகிர்ந்துகொள்வது சில யதார்த்தங்களை அறிந்துகொள்வதற்கு உதவும்.
 
நீங்கள் விஜிந்தனின் அண்ணாவாக இருப்பின் நான் யாழ் கருத்துக்களத்தில் முன்பு எழுதிய இந்தப்பதிவு ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71259&p=583747 ) சம்மந்தமாக உங்கள் பின்னோட்டத்தை அறிய விரும்புகின்றேன். குறிப்பிட்ட போராளிபற்றிய விபரம் தெரிந்தால் அறியத்தாருங்கள்.

 

கரும்பு சார்

 

இந்தக்குறுங்கதைகளை எழுதுபவர் எப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தற்போது உள்ளாரோ தெரியாது.  என்று  எழுதிப்புட்டு, அப்புறம் ஏன் சார்  அளை அடையாளப்படுத்த றை பண்ணிறீங்க . உங்க  கொமன்ஸ்சிலேயே  முரண் இருக்கு சார் . சரியா பாத்துக்கிங்க.

 

அப்புறம் பிறியா ஒரு அட்வைஸ் சார் வேணுமென்டா கேளுங்க ‘இப்பிடியாக சிக்கலான விடங்களை தனிப்பட அனுப்ப மெசேஞ்சர் என்று ஒரு வசதி யாழ் இணையத்தளத்தில இருக்கு சார் அதில போட்ட அண்ணாச்சி பாத்திட்டு சரியென்றால் றிப்பிளை பண்ணியிருக்கலாம் சார். ஏன் தேவையில்லாம தேரை  இழுத்து தெருவில விடுகிறீங்கள்.

 

நிர்வாகத்துக்கு அறிவிக்கலாம் என்ட இன்பமோசன் தந்ததுக்கு நன்றி கரும்பு சார், நான் அங்க பேசிக்கிறன்.

 

சாரி போ த டிஸ்ரேபன்ஸ்  சார்

Edited by காளமேகம்

லியோ, மீண்டும் உங்களைப் பதிவோடு கண்டது மகிழ்ச்சி, நன்றி.  நேரமுள்ள போது எழுதுங்கள். (இறுதிப் போரில் என்ன நடந்தது என்று (தலைவர் உட்பட))


ம்ம்...... நீங்கள் எல்லோரும் ஒரு மாதிரிப் பார்க்கிறது விளங்குது!

முள்ளிவாய்க்கால் அழிவின் கோரத்தை வெளிப்படுத்தும் இச்சம்பவத்தின் தாக்கம் மனதை கனக்கச் செய்கின்றது

 

பகிர்விக்கு நன்றி லியோ அண்னை

  • கருத்துக்கள உறவுகள்

லியோ Anna நீண்ட நாள்களின் பின்னர் மீண்டும் தங்களின பதிவைப்பார்த்தது சந்தோசம்

முள்ளிவாய்க்கால் அவலத்தின் வலிகள் புரிகின்றது தங்களின எழுத்துக்களில்

பகிர்விற்கு நன்றி

Edited by SUNDHAL

தொடருங்கள் லியோ .

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளி father என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட கருணாரத்தினம் அடிகளார் அவர்கள்  நகைச்சுவையுணர்வும் அன்பும் நிறைந்த அளப்பரிய சேவையாளர்.இலங்கை வங்கியில் ஒரு அதிகாரியாய் இருந்து பின் பாதிரியார் ஆனவர்.மிகுந்த தமிழ் உணர்வும்,அறிவும் உள்ளவர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பல மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்து

புது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் .அந்தக்காலப்பகுதியில்தான் அவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வன்னியில் சுமார் ஆறரை இலட்சம் மக்கள் வாழ்ந்தார்கள்.ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்கள்தான் வன்னியில்  இருந்தார்கள்.அவர்களின் உழைப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலுமடுவில் இயங்கிய

பொன்னம்பலம் மருத்துவமனையில் பற்சிகிச்சை கிளினிக் நடத்திவந்தேன்.ஒரு களைப்பான நாளில்த்தான் கிளி fatherஐ முதல் முதலாய் சந்தித்தேன்.அவர் பற்சிகிச்சை பெற வந்திருந்தார்.முதல் சந்திப்பிலேயே பல நாள் பழகியவர் போல் ஓர் ஈர்ப்பை பெற்றேன்.

 வன்னியில் மலேரியா தாண்டவம் ஆடிற்று.மலேரியாவாலும்,ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையின் இடப்பெயர்வுகளாலும்  சிறுவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.இது ஒரு மிகவும் எச்சரிக்கையான காலம்.  ஆனைவிழுந்தானில் அமைந்திருந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின்  நடுவப்பணியகத்தில் தமிழ்ச்செல்வன் தலைமையில் சிலர் அவசரமாக ஒன்று கூடினோம்.சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டம் உதயமானது.இந்தக்குழுவில் கிளி father உம் இருந்தார்.இந்த திட்டத்தை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சிறப்பாக நடைமுறைப்படுத்திற்று. வெரித்தாஸ் வானொலி நிதி கிடைக்க உதவிற்று.வன்னி முழுக்க பல சிறு இடங்கள் அமைத்து ,எல்லா சிறுவர்களுக்கும் கற்பிணித்தாய்மாருக்கும்  சமைத்த உணவு நாளுக்கு வெவ்வேறாக வழங்கப்பட்டது.வழங்கவேண்டிய உணவின் பட்டியலை Dr சதானந்தன் துல்லியமாக என்னிடம் தந்திருந்தார்.

நிலைமை ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தது. பின் கிளிநொச்சிநகர்  திட்டமிடலிலும் எங்களுக்கு ஒத்தாசையாய் இருந்தார்.அப்போது அவர் NGO consortium இன் தலைவராய் இருந்தார். கருமை நிற மோட்டார் சைக்கிளில் ஒரு விளையாட்டு வீரனைப்போல பறந்து திரிவார்.புழுதியே காற்றாகும் பாதைகளில் தோழமைகளுடன் சந்தித்துக்கொள்வோம்.

இறுதியாய் கிளிநொச்சி சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் நிகழ்வு ஒன்றில் அவரை சந்தித்தேன்.அவர் அக்கல்லூரியின் நிர்வாகசபையின் உறுப்பினராயும் இருந்தார். அக்காலப்பகுதியில் Northeast Secretariat on Human Rights (NESOHR)இன் தலைவராகவும் அயராது உழைத்திருந்தார். தமிழ்ச்செல்வனின் வீரமரணம் அவரை சரியாக பாதித்திருந்தது.அதற்குப்பின் முகத்தாடி வளர்த்திருந்தார்.தமிழ்ச்செல்வன்  நினைவாக நூலகம் ஒன்றை  அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.

சித்திரை இருபதாம் திகதி 2008ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்டார்.மீண்டும் எம் கன்னங்கள் நனைந்தன .

Edited by லியோ

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

தொடருங்கள்

எதையும் மறந்துவிட  

விட்டுவிடக்கூடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.