Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் குளிக்கும் இடம் இதுதான்

Featured Replies

அவுஸ்திரேலியாவிலுள்ள ஏரியொன்றின் நீர் கடந்த 7,500 வருடங்களாக  காலநிலை மாற்றத்தாலோ வேறு தாக்கங்களாலோ மாற்
றமடையாத நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் அண் மையில் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியிலுள்ள பளிங்கு போல் தெளிவாக உள்ளதுடன் மிகத் தூய்மையானதாகவும் உள்ளது. இந்த
ஏரியை கடவுளின் குளியல்தொட்டி என மேற்படி ஆய்வை மேற்
கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு 50 கிலோமீற்றர்
தொலைவில் இந்த ஏரி உள்ளது.இந்த ஏரியின் நீர் சுமார் 35 நாட்களுக்கு ஒரு தடவை அருகிலுள்ள பள்ளத்தாக்கிற்கு வடிந்து சென்று ஊற்
றுக்களால் மீண்டும் நிரப்பப்படுவதாகவும் இத்தகைய ஏரிகள் மிக அபூர்வமானவை எனவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடை காலத்தில் நீல நிறமாக இந்த ஏரி காட்சியளிக்கிறது. மாரி காலத்தில் சாம்பல் நிறமாகத் தென்படுகிறது. இந்த ஏரியின் நீர் மிகத் தெளிவாக உள்ளதால் 10 மீற்றர் ஆழம்வரை தெளிவாக பார்க்கக்கூடியதாக
உள்ளது என கலாநிதி கமெரோன் பர் தெரிவித்துள்ளார்.

900_line.jpg
 
 
 
 
 

 

ஏன் கடவுள் குளிக்கிற இடம் மாதிரியாகவா உங்களுக்குத் தெரிகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் குளிக்கின்றாரோ இல்லையோ ஏரியும் அதன்  சூழலும் மிக அழகாக உள்ளது

 

கடவுள் என்றால், கறுமம், காடுடைய சுடலைப் பொடி பூசிய உள்ளம் கவர் கள்வனின் ஊத்தை உருவம் தான் முன்னால் வருவதுண்டு. இது காந்தர்வ கன்னிகள் நீராடும் திரு மஞ்சன பொய்கை மாதிரி இருக்கு. சிவத்தானை குளிக்க விட்டால் ஊத்தை உருட்டி குளிச்சு பொய்கையைப் பழுதாக்க போகிறார்.

 

:lol:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கடவுள்களை, நாங்கள் எப்போது நல்ல தண்ணீரில் குளிக்க விட்டோம்?

 

பன்னீரில் அல்லவா குளிப்பாட்டினோம்? :o

 

அதன் பிரதிபலனாய், எங்களைச் செந்நீரில் மிதக்க விட்டவனல்லவா, எங்கள் கடவுள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கடவுள் குளிக்கிற இடம் மாதிரியாகவா உங்களுக்குத் தெரிகின்றது?

கடவுள் குளிக்கிற இடம் உங்களுக்குத் தெரியுமோ அலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Muruga88.jpg

 

 

அவுஸிலை இருக்கிற எங்கடை சனம் என்ன நித்திரையே கொள்ளினம்?????
சட்டுப்புட்டெண்டு ஒரு முருகன்சிலையை அங்கினேக்கை வைச்சிட்டு.......நைசாய் கோயில் கட்டுற அலுவலைப்பாக்காமல் சும்மா...........
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு அப்படியே சுயம்பு தீர்த்தக் கேணி என்று பெயரையும் வைச்சிட்டால் போச்சுது. அரோகரா..! நமக்கு தான் நாடு எதற்கு மொழி எதற்கு.. அடுத்தவன் வீடு என்றாலும்.. குந்த ஒரு திண்ணையும் கும்பிட ஒரு கோவிலும் இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து முடிச்ச சந்தோசம் எங்களுக்கு..! யாதும் ஊரே யாவரும் கேளீர் பரம்பரை அல்லவா நாங்கள். எங்களுக்கு ஏன் ஓர் ஊர்..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

Muruga88.jpg

 

 

அவுஸிலை இருக்கிற எங்கடை சனம் என்ன நித்திரையே கொள்ளினம்?????
சட்டுப்புட்டெண்டு ஒரு முருகன்சிலையை அங்கினேக்கை வைச்சிட்டு.......நைசாய் கோயில் கட்டுற அலுவலைப்பாக்காமல் சும்மா...........

 

கு.சா என்ன பகிடியோ விடுறீயள்.....அந்த காட்டுக்குள்ள கோவிலை கட்டினால் எப்படி நாங்கள் வருமானம் எடுக்கிறது.நகர்புறத்தில கட்டினால்தான் நல்ல வருமானம் கிடைக்கும்.பக்தர்கள் வந்து போககூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா என்ன பகிடியோ விடுறீயள்.....அந்த காட்டுக்குள்ள கோவிலை கட்டினால் எப்படி நாங்கள் வருமானம் எடுக்கிறது.நகர்புறத்தில கட்டினால்தான் நல்ல வருமானம் கிடைக்கும்.பக்தர்கள் வந்து போககூடியதாக இருக்கும்.

ஏன்.. ஒன்லைனில் பூசையாக்க முடியாதா ?? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏரியும் அதன் சூழலும் மிக ரம்மியமாய் இருக்கு !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Muruga88.jpg

 

 

அவுஸிலை இருக்கிற எங்கடை சனம் என்ன நித்திரையே கொள்ளினம்?????
சட்டுப்புட்டெண்டு ஒரு முருகன்சிலையை அங்கினேக்கை வைச்சிட்டு.......நைசாய் கோயில் கட்டுற அலுவலைப்பாக்காமல் சும்மா...........

 

 

நீங்கள் வாயை பார்த்துகொண்டு இருங்கோ இந்தியன் வந்து கட்டிபோடுவான். பிறகு இங்கே மொன்றியல் இல் இருக்கிற மாதிரி வல்மொறின் கோவில் மாதிரித்தான் நேத்திக்கடன் கழிக்க வருவீர்கள்.

-வல்மொறின் ஒரு நல்ல கோவில். நான் நாலைஞ்சு தரம் போயிருக்கிறேன் கிகி-

நித்தம் நித்தம் நீராடில் நிமலன் அருளைபெறலாமேல் தத்தும் தவளையும் அத்தனி பேறடைய வேண்டாவோ

 

india_hindu_festival_209340834.jpg

இதை பார்த்துதான் வெள்ளைகள் குளிக்கப் பழகினார்களாம்.

 

banner.jpg

நமக்கும் மனம் உண்டு. இடம் தான் உண்டா?

 

F9DF31461C4F141C509AA5F33B6157_h498_w598

 

நாகசுவாமிகள் கங்கையில் குளிக்க வரும் காட்சி. அகோரிகள் வந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா என்ன பகிடியோ விடுறீயள்.....அந்த காட்டுக்குள்ள கோவிலை கட்டினால் எப்படி நாங்கள் வருமானம் எடுக்கிறது.நகர்புறத்தில கட்டினால்தான் நல்ல வருமானம் கிடைக்கும்.பக்தர்கள் வந்து போககூடியதாக இருக்கும்.

 

ஓய் புத்து! இன்னும் விசயம் தெரியாமல் இருக்கிறியள்???? சிற்ரியிலை இருக்கிற பீப்பிள் எல்லாருக்கும் றிலாக்ஸ் ஆக இருக்க காடுகரும்பயளைத்தேடித்தான் போவினம்.....
 
உந்த குளத்தை வைச்சு கனவிளையாட்டு விடலாம் புத்தன்....இன்னும் பிந்தேல்லை....
 
நானெண்டால் இத்தடிக்கு  குளத்துதண்ணியை போத்தில்லை அடைச்சு முருகப்பெருமான் குளிச்ச தண்ணியெண்டு சொல்லி உலகம் முழுக்க வித்திருப்பன்.......ஏனெண்டால் வெள்ளைக்காரனே கடவுள் குளிக்கிற இடமெண்டு சொல்லீட்டான்....இதுக்குப்பிறகு என்ன வேணும்????? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.