Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர சிகிச்சைப் பிரிவில் கவிஞர் வாலி.. கவலையில் திரையுலகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் 'கண்ணதாசனுக்குப் பின் கவிஞரென்றால் அது இவர்தான்' என புகழப்படுபவர் வாலி. வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர்.

எந்த அரசியல்வாதியுடனும் இலக்கியவாதியுடனும் இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம்.

தன்னை வளர்த்து விட்டவர்கள், வாழ்க்கை தந்தவர்கள் அனைவரிடத்திலும் இன்று வரை நன்றி பாராட்டுவதில் வாலிக்கு இணையாக ஒருவரையும் சொல்ல முடியாது. இதனால் திரையுலகில் அனைவருக்கும் இனியவராக வாலி திகழ்கிறார்.

காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மூன்று தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தாலும், அவர் இன்னும் பூரண குணமடையவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

வாலி அவர்கள்  நலம் பெற  பிரார்த்தனை செய்கின்றேன்

 

எமக்காகவும்  கவிதையால்  எங்கும்  பேசும் ஒரு உறவு

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வாலி அவர்கள் நலம் பெற பிரார்த்தனை செய்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வாலி அவர்கள் நலமுடன் வீடு திரும்ப வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வாலி அவர்கள் பூரண குணம்பெற பிரார்த்திப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் நலம் பெற வேண்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

வாலி அவர்கள் நலம் பெற வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழை சோடிப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.
 
"சுகம் வளை கை வழுக்கையில் உண்டானது. மென்மேலும் கை வளை , வளை , வளை என ஏங்காதோ?"
( இது காதலர்தின படத்தில் வரும் ஒரு பாடல் வரி)
பல அர்த்தம் கொடுக்கும் ஒரு சொல்லை பயன்படுத்தி நுட்பமாக தமிழை கையாளுவதில் இவர் கேடி.
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வாலி அவர்கள், தமிழக சஞ்சிகைகளில் எழுதும் தொடர் காவியங்களில்...
ஈழ‌த்த‌மிழ‌ரின் துன்ப‌ங்க‌ளையும், அவ்வ‌ப்போது ப‌திந்து விடுப‌வ‌ர்.
இவ‌ர் த‌மிழுக்கு மேலும்... அழ‌கு சேர்க்க‌, பூர‌ண‌ சுக‌ம் பெற‌ வேண்டுமென்று இறைவ‌னை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி அவர்கள் நலம் பெற வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞர் நலம்பெற வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.