Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கும் கெழுத்தி மீனும்

Featured Replies

கொக்கும் கெழுத்திமீனும்

 

 

grey_heron-02.jpg

 

பொன்னேரிக் கிராமத்தின் வயல்களின் நடுவே அகன்று விரிந்திருந்தது அந்தப் பொன்னேரி வாவி . பொன்னேரி என்றுமே வழங்கொளிக்கும் கிராமம் . எங்கும் பச்சைப்பசேல் என அந்தக்கிராமத்தைப் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் . அந்தக் கிராமத்தின் விவாசயத்திற்கு தேவையான நீரை வழங்குவது இந்தப் பொன்னேரி வாவியே . அந்த வாவியில் தவளைகள் , மீன்கள் , ஆமைகள் என்று பல நீர்வாழ் உயினங்களுக்கும் வாழ்ந்து வந்தன . இதனால் எப்பொழுதும் அந்த வாவி கொக்குகளாலும் நாரைகளாலும் நிறைந்து காணப்படும் .

பொன்னேரிக் கிராமத்திற்கும் , வாவிக்கும் யார் கண்பட்டதோ தெரியவில்லை , கடந்த நான்கு வருடங்களாக பெய்ய வேண்டிய மழை பொய்த்துவிட்டது . படிப்படியாக பொன்னேரிக் கிராமமும் , வாவியும் வறட்சி என்னும் கோரப் பிடியில் சிக்கித் தவித்தன பொன்னேரிக் கிராமத்தின் பயிர்பச்சைகளும் வாவியும் பொய்த்த மழையினால் படிப்படியாக சோபையிழந்தன . ஆனாலும் வாவியில் தங்களுக்கு வாவியில் ஏதாவது இரை கிடைக்காதா என்ற ஆவலில் கொக்குகளும் நாரைகளும் தினமும் வந்து போய்க்கொண்டிருந்தன .

ஒருநாள் மாலைவேளை வாவியின் கரையில் கொக்குகளும் நாரைகளும் தங்களுக்கு இரை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் கவலையுடனும் உட்கார்ந்திருந்தன . இதே நேரம் வாவியின் அடியில் சேற்றில் ஒழிந்திருந்த கெ
ழுத்தி மீன் ஒன்று மெதுவாகக் காற்று வாங்கும் நோக்குடன் நீர் மட்டத்திற்குப் புறப்பட்டது . வாவியின் கரையில் கருமமே கண்ணாயிருந்த ஒரு கொக்கின் கண்ணில் அந்தக் கெ
ழுத்தி மீன் பட்டது . எல்லோரையும் முந்திக்கொண்டு அந்தக் கொக்கு வாவியில் மூழ்கி கெழுத்தி மீனுடன் வானத்தில் ஜிவ் என்று பறந்தது .

பசியுடன் இருந்த மற்றைய கொக்குகளுக்கும் ,  நாரைகளுக்கும் அந்தக் கொக்கின் செய்கை மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது . கெ
ழுத்தி மீன் பிடித்த கொக்கையும், இரையை கைப்பற்றும் நோக்கிலும் எல்லாக் கொக்குகளும் நாரைகளும் கலைத்துக் கொண்டு பறந்தன . ஏதோ ஓர் உள்உணர்வு தாக்க கொக்கு தனது தலையைத் பின் பக்கமாகத் திருப்பிப் பார்த்தது . ஓர் படையே தன்னைப் பின்தொடர்ந்து வருவதை அது கண்டது . ஆனாலும் அந்தக் கொக்கு  , எல்லாக் கொக்குகளுக்கும் , நாரைகளுக்கும் போக்குக் காட்டியவாறே மேலும் விரைவாகப் பறந்தது . ஆனாலும் கொக்கின் பின்னால் வந்த பெரும்படையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்ப அந்தக்கொக்கு மிகவும் கஸ்ரப்பட வேண்டியதாக இருந்தது .

அப்பொழுது அந்தக் கொக்கிற்கு ஓர் யோசனை தோன்றியது . " நான் இந்தக் கெ
ழுத்தி மீனை வைத்திருப்பதால் தானே இந்தக் கொக்குகளும் நாரைகளும் என்னை விட்டுக் கலைக்கின்றன இதை விட்டுவிட்டால் என்ன ??  " என எண்ணியவாறே அது தனது அலகில் இருந்த கெழுத்தி மீனின் பிடியைத் தளர்த்தியது . கெழுத்தி மீனோ கொக்கின் பிடியில் இருந்து கீழே நோக்கி விழத்தொடங்கியது . அப்பொழுது அந்தக் கொக்கைப் பின்தொடர்ந்த கொக்குகளும் நாரைகளும் , தீடீரென கீழே விழும் கெழுத்திமீனைப் பிடிக்கப் பறந்தன . ஆனால் கெழுத்திமீனைப் பிடித்த அந்தக் கொக்கோ மனநின்மதியாகவும் , சந்தோசமாகவும் பறந்து சென்றது .

கோமகன்
11/07/2013

 

*** எழுத்துப் பிழை திருத்தப்பட்டது.

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

உருவகக் கதை என்று தெரிகிறது. ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லைக் கோமகன்.

  • தொடங்கியவர்

உருவகக் கதை என்று தெரிகிறது. ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லைக் கோமகன்.

 

எனது முதன்முயற்சியாக ஓர் உருவகக்கதை எழுதினேன் . சாதாரணமாக உருவகக்கதையின் இறுதியில் அதன் செய்தியை எழுதிவிடுவார்கள் . ஆனால் இதில் உள்ள செய்தியை தேடும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுள்ளேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுமே :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தைப்பற்றியா சொல்லுறீங்கள்.....எனக்கும் புரியல்ல....... :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன்

என்ன  செய்யணும் எழுதணும் முயற்சிக்கணும் என்ற  தீர்மானத்தை வலுவாக கோ  எடுத்தபின்  இவ்வாறு எம்மை குளப்புவது குறைவடையலாம்

அதுவரை............ :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமையைப்பற்றி சொல்ல வருகிறாரா கோமகன்?confused0006.gif

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சம்பவம் ஜென் கதையில் வரும் என்று நினைக்கின்றேன் !

 

கொக்கு :  நாங்கள் .

வாயில் மீன் :   எமது ஆசைகள் (அதை நாம் தூக்கிக் கொண்டு திரியும் வரை )

திறத்தும் பறவைகள் : துன்பங்கள் எம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

ஆசையை விட்டு விட்டால் துன்பங்கள் இன்றி பரதேசியாக  பத்து வீட்டுச் சாப்பாட்டோடு  சுகதேகியாய் வாழலாம் !! :rolleyes:  :D

கதை ஓகேதான் கோ..... !

ஆனால், மற்றவர்கள் குழம்பியிருப்பதைப்போல....... கதை சொல்ல வாற விடயம் என்ன என்பதில் தெளிவில்லை என்றுதான் தோன்றுகின்றது.

நீங்கள் உருவகப்படுத்த நினைத்த விடயத்தினை முழுமையாக உருவகப்படுத்த தவறியிருக்கின்றீர்கள் என நான் நினைக்கின்றேன்!

 

தொடர்ந்து எழுதுங்கள்..... எழுத்தும் கைப்பழக்கந்தான்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.... அவைதான் உங்களை சீர்படுத்தி வளர்க்கும்! :)

 

 

  • தொடங்கியவர்

யாழ் களத்தைப்பற்றியா சொல்லுறீங்கள்.....எனக்கும் புரியல்ல....... :D

 

அடி ஆத்தி ..................... நல்லாய்த்தான் வேலி அடைக்கிறிங்கள் :o :o :lol: :lol: . நீங்கள்நினைக்கிறமாதிரி இல்லை புத்தா . வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .

Edited by கோமகன்

கொக்கின் இயல்பே மீனை இரைதேடி உண்பதுதான், இதில் விட்டுக்கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. கதையின் கருவில் குழம்பியுள்ளீர்கள்

  • தொடங்கியவர்

கொக்கின் இயல்பே மீனை இரைதேடி உண்பதுதான், இதில் விட்டுக்கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. கதையின் கருவில் குழம்பியுள்ளீர்கள்

 

நான் மிகவும் தெளிவுடனும் நிதானத்துடனுமே இந்தக் கதையை எழுதினேன் . எனவே இதில் குளப்பத்திற்கு இடம் இல்லை . நீங்கள் முதல் சொன்ன கருத்து சரிதான் . கொக்கின் இயல்பு இரைதேடுவதுதான் ,  ஆனால் இக்கட்டான வேளையில் கிடைத்த இரையை பகிர்ந்து உண்பதும் நல்லபண்புகளில் ஒன்றாகும் :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை ஏதோ உள்குத்து இருக்கு போல..

  • கருத்துக்கள உறவுகள்

"தரித்திரம் பிடித்த நாரை கெழுத்தியைப் பிடித்து விழுங்கியதாமென்று"
. சொல்வார்கள்.  கிடைத்ததை விழுங்கி சிக்கலில் மாட்டப் பார்த்த கொக்கு தப்பிக் கொண்டது.

  • தொடங்கியவர்

ஒற்றுமையைப்பற்றி சொல்ல வருகிறாரா கோமகன்?confused0006.gif

 

நீங்கள் நினைக்கிறது இல்லை குமாரசாமி அண்ணை . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

 

  • தொடங்கியவர்

இதிலை ஏதோ உள்குத்து இருக்கு போல..

 

இதிலை ஒரு   குத்தும் இல்லை :lol: :lol: . நீங்களும் புத்தனுக்கு வேலி அடைக்க உதவி செய்யிறியளோ :unsure: :unsure: ??

 

  • தொடங்கியவர்

"தரித்திரம் பிடித்த நாரை கெழுத்தியைப் பிடித்து விழுங்கியதாமென்று"

. சொல்வார்கள்.  கிடைத்ததை விழுங்கி சிக்கலில் மாட்டப் பார்த்த கொக்கு தப்பிக் கொண்டது.

 

ஓரளவு கிட்ட வந்திருக்கின்றீர்கள் கரு . உங்கள் சொலவடை பிரமாதம் , இதற்கு இன்னுமொரு கருத்தும் உண்டு . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்  :)  :)  .

 

  • கருத்துக்கள உறவுகள்

"தரித்திரம் பிடித்த நாரை கெழுத்தியைப் பிடித்து விழுங்கியதாமென்று"

. சொல்வார்கள்.  கிடைத்ததை விழுங்கி சிக்கலில் மாட்டப் பார்த்த கொக்கு தப்பிக் கொண்டது.

பொதுவாக சனியன் பிடித்த நாரை என்று சொல்வார்கள்  கறு !

அதற்கு ஒரு கதையும் உண்டு.

ஸ்ரீமன் நாராயணனை  சனைச்சரன் பிடிக்கும் ஏழரை  காலம் நெருங்கியது. இதைத்தெரிந்துகொண்ட  பரந்தாமன் ஒரு குளத்தில் நாரையாய் உருமாறி நிண்டார். அதைப் புரிந்துகொண்ட  சனியும் கெழுத்தியாய் மாறி அவர் காலடியில் ஓடித்திரிய பகவானாயினும் நாரையை இருப்பதால் அதற்குரிய குணத்துடன் மீனைக் கவ்வ அது தொண்டையில் சிக்கி அந்த நேரம் கழிந்ததும் விட்டு விட்டது !.

  • தொடங்கியவர்

பொதுவாக சனியன் பிடித்த நாரை என்று சொல்வார்கள்  கறு !

அதற்கு ஒரு கதையும் உண்டு.

ஸ்ரீமன் நாராயணனை  சனீஸ்வரன் பிடிக்கும் ஏழரை  காலம் நெருங்கியது. இதைத்தெரிந்துகொண்ட  பரந்தாமன் ஒரு குளத்தில் நாரையாய் உருமாறி நிண்டார். அதைப் புரிந்துகொண்ட  சனியும் கெழுத்தியாய் மாறி அவர் காலடியில் ஓடித்திரிய பகவானாயினும் நாரையை இருப்பதால் அதற்குரிய குணத்துடன் மீனைக் கவ்வ அது தொண்டையில் சிக்கி அந்த நேரம் கழிந்ததும் விட்டு விட்டது !.

 

அதுவேதான் சுவியர் ..........  :lol:  :lol::D  :D   நான் சொல்ல நினைத்த கருவின் சொலவடைக்கு அடுத்த கருத்து :) .

  • தொடங்கியவர்

கதை ஓகேதான் கோ..... !

ஆனால், மற்றவர்கள் குழம்பியிருப்பதைப்போல....... கதை சொல்ல வாற விடயம் என்ன என்பதில் தெளிவில்லை என்றுதான் தோன்றுகின்றது.

நீங்கள் உருவகப்படுத்த நினைத்த விடயத்தினை முழுமையாக உருவகப்படுத்த தவறியிருக்கின்றீர்கள் என நான் நினைக்கின்றேன்!

 

தொடர்ந்து எழுதுங்கள்..... எழுத்தும் கைப்பழக்கந்தான்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.... அவைதான் உங்களை சீர்படுத்தி வளர்க்கும்! :)

 

இது நான் எழுதிய முதல் உருவகக் கதையாகும் . பொதுவாக உருவகக் கதையில் சொல்லவரும் நீதியை கதையின் அடியில் போட்டு விடுவார்கள் . நான் சற்று மாறுதலுக்காக  , வாசகர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை அறிய எனது நீதியை போடாது விட்டேன்  . இந்த உருவகக் கதையை பலர் பலவித கோணங்களில் பார்த்திருக்கிறார்கள் . ஒருசிலர் குழம்பியும் உள்ளார்கள் . ஆனால் சுவி நான் நினைத்ததில் முக்காவாசியை தொட்டுள்ளார் . அவருக்கு எனது பாராட்டுக்கள் . நான் சொல்லிய நீதி என்னவென்றால்.............

 

எம்மில் ஈகோ என்ற " நான் " அந்தக் கொக்கு வைத்திருந்த கெழுத்தி மீனைப் போன்றதே . ஈகோ என்ற " நான் "  எங்களிடம்  இருக்கும்வரை அதுவே எங்களுக்கு முக்கியமானது போலத் தோன்றும் .  எங்களின் மீதான மற்றயவர்களது தாக்குதல்களும் அதை நோக்கியே இருக்கும் . ஆனால் ,  நாங்கள் இந்த ஈகோ என்ற " நான் "  ஐ விட்டுவிட்டால் , சந்தோசம்.......  நிம்மதி.....  சுதந்திரம்.....  என்று எல்லாமே எங்களுடன் கூடவே வரும் .

இதைத்தான் எங்கள் ஊர் பெரிசுகள் சொலவடையாகச் சொல்வார்கள்  ,

"தரித்திரம் பிடித்த நாரை கெழுத்தியைப் பிடித்து விழுங்கியதாமென்று" 

 

 

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதை :) :) .

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நான் நினைக்கின்றேன்

என்ன  செய்யணும் எழுதணும் முயற்சிக்கணும் என்ற  தீர்மானத்தை வலுவாக கோ  எடுத்தபின்  இவ்வாறு எம்மை குளப்புவது குறைவடையலாம்

அதுவரை............ :D

 

நான் எதுவுமே முன்பின் யோசியாமல்  எழுதுவதில்லை விசுகு ஐயா  :lol: :lol: .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து எழுதுங்கள்

உள்ளடக்கமாக உருவகக்கதைப்பகிர்விற்கு நன்றி கோமகன்

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பகிர்ந்த லியோ , வாணனுக்கு மிக்க நன்றிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.