Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழர்கள் ஆட்சி செய்தால் அரசியலில் இருந்து விலகுவேன்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1(2714).jpg
-வடிவேல்-சக்திவேல்

'கிழக்கு மாகண சபையினை தமிழர்கள் ஆட்சி செய்யமாட்டார்கள். அவ்வாறு ஆட்சி செயதால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்' என ஜனாதியின் இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளரமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நான் காணி, பொலிஸ் அதிகாரங்களை கேட்பவனல்ல. காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வேண்டும் என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புமைப்புத்தான் அதிகம் அக்கறை செலுத்தி வருகின்றது. அதில் என்ன இருக்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இதுதான் நிலைமை.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 39 வீதமும் முஸ்லிம்கள் 37 வீதமும் ஏனையவர்கள் சிங்களவர்களாகவும் உள்ளனர்.

அதிலும் தமிழர்கள் தற்போது சட்ட விரோதமாக படகுகள் மூலமும் ஏனைய வழிகளிலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும புலம்பெயர்ந்து சென்றுள்ளார்கள். இந்நிலையினைப்  பார்க்கும்போது தமிழர்கள் கிழக்கில் 32 அல்லது 33 வீதமாக குறைந்துள்ளார்கள்.

தற்போதைய நிலையில் முஸ்லிம்கள் பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள். அது அவர்களின் திறமை. ஆனால் தமிழர்களிடத்தில் முன்னேற்றம் போதாமலுள்ளது. கிழக்கு மாகாணத்தில சிறுபான்மை என்றால் அது தமிழர்களாகத்தான் உள்ளனர். 

தமிழர்களின் எதிர்காலம் கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை நினைத்து கவலையடைய வேண்டியுள்ளது. ஏனெனில் நிலமை அவ்வாறுதான் தற்போது சென்று கொண்டிருக்கின்றது.

13 வயதிற்குப் பின்னர் நான் தமிழில் பேசியதில்லை. வெளிநாடுகளில்தான்; வாழ்;ந்து வந்தேன். தறபோது எனது தாய் மண்ணுக்கு திரும்பி வந்து சரளமாக தமிழில் போசுகின்றேன் என்றால் எனக்கு தமிழ் மக்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் உள்ள பற்றுத்தான் காரணம்.   

'இந்தியாவினை நம்பி நாம் ஒன்றும் செய்ய முடியாது. நாம் சுயமாகவே செயற்பட வேண்டும்' என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய ஒரு கருத்தினை நான் முற்று முழுதாக ஆதரிக்கின்றேன். அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். 

இந்தியாவை நம்பியிராமல் நாங்கள் அனைவரும் சுயபுத்தியுடன் செயற்பட்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது இந்தியாவினை நம்பியிருந்து ஏமாறி வருகின்றது.   

நாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் அதீத அக்கறை செலத்தி வருகின்றோம். மட்டக்களப்பு மாநகரை ஒரு சூரியோதய மாநகராக மாற்றுவதற்கு நான் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். 

அது போல் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கு தற்போது சாணக்கியனாக இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இத்தொகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். கல்குடா தேர்தல் தொகுதிக்கு இன்னும் ஒரு அமைப்பாளர் நியமிக்கப்படவில்லை அதற்குரிய வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன' என்றார்.

 
 

நாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் அதீத அக்கறை செலத்தி வருகின்றோம். மட்டக்களப்பு மாநகரை ஒரு சூரியோதய மாநகராக மாற்றுவதற்கு நான் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்

அண்மையில் மட்டக்களப்பு போய் வந்த ஒரு அக்காவுடன் பேசும் போது சொன்னார்.. கிராமப்புறங்களில் வளர்ந்த பெண்பிள்ளைகள் கூட போடுவதுக்கு சரியான ஆடைகள் கிடைக்காமல் கிளிந்த உடைகளோடே வலம் வருகிறார்கள்... அவரிடம் ஒரு பாடசாலை அதிபர் சொன்னதாக சொன்னார்... பெரும்பாலான பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவது கூட இலவசமாக குடுக்கப்படும் மதிய போசனத்துக்காகவே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
'கிழக்கு மாகண சபையினை தமிழர்கள் ஆட்சி செய்யமாட்டார்கள். அவ்வாறு ஆட்சி செயதால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்' என ஜனாதியின் இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளரமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

 

இந்தமாதிரி கிறுக்கு பிடித்த தமிழர்களுடன் பிறந்ததை எண்ணி வேதனை படுகின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் அரசியல் மேடையில் பலர் புதிதாக வருகின்றார்கள்

சில காலங்களின் பின்னர் காணாமற்போய்விடுகின்றார்கள்.

கிழக்கு சகோதரர்களுக்கு அருமை இப்போதாவது புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு சகோதரர்களுக்கு அருமை இப்போதாவது புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்

 

கிழக்கின் எந்தச் சகோதரர்கள்? யாருடைய அருமை? எப்போது எதைப் புரியாமலிருந்தார்கள்? ஒன்றும் புரியவில்லை. சும்மா வாய்க்கு வந்தபடி எழுதிய மழுங்கைக் கூற்றாயிருந்தால் பதில் வேண்டியதில்லை விட்டுவிடுங்கள்.

கிழக்கின் இன்னொரு மாரித் தவக்கை கத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் இணைப்பாளர் எப்படி பேச வேண்டும் என நாம் எதிர் பார்க்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இதுவரை அரசியலிருந்து என்னத்தை... கிழிச்சிருக்கிறார்.
செம்மறியள்... தாங்களும், மனுசரெண்டு அறிக்கை விடுகுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தமிழ்ல பேசுறத எல்லாம் எதோ பெரிய சாதனையா சொல்லுறாங்கப்பா..... முடியல்ல...

ஆனாலும் அவருடைய சில கருத்துகளை கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.... முஸ்லிம்கள் மிக வேகமாக முன்னேறிக்கொண்டு வருகின்றார்கள் என்ற அவரின் ஆதங்கம் நியாமானதே....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சில தமிழர்கள் தாங்கள் வெளிநாட்டுக்கு வந்ததும் பத்தாமல் அங்கிருக்கும் ஏனைய தமிழர்களையும் வெளிநாட்டிற்கு கூப்பிட்டு தமிழர் தொகையை குறைக்க சிங்களத்திற்கு துணை போகின்றார்கள்

இன்று சில தமிழர்கள் தாங்கள் வெளிநாட்டுக்கு வந்ததும் பத்தாமல் அங்கிருக்கும் ஏனைய தமிழர்களையும் வெளிநாட்டிற்கு கூப்பிட்டு தமிழர் தொகையை குறைக்க சிங்களத்திற்கு துணை போகின்றார்கள்

 

உங்களுடைய குடும்பம் பாதுகாப்பாக இருக்கின்றதா ,நாங்கள் திரும்பி நாட்டுக்கு போய் தமிழரின் எண்ணிக்கையை கூட்டலாமே ^_^

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை போல தமிழர்களை நம்பி என்னுடைய குடும்ப விபரங்களை தர முடியாது..... காட்டி கொடுப்பதிலும் கூட்டி கொடுபதிலும் சிங்களவனை விட தமிழன் தானாம் முன்னணி....

சேர்ந்த இடம் பிழையா இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து சொகுசு வாழ்க்கை வாலமால் மக்களோடு மக்களா நின்று அரசியல் செய்யும் அருணை பாராட்டி தான் ஆகணும் ....

நாங்கள் என்ன செஞ்சா இவர் அரசிழலில் இருந்து வெளியேறுவார்?

 

உண்மை என்னவென்றால் கொழப்பம் விளைவிக்க இப்பிடியானவர்களை மகிந்த கூட்டம் பணம் கொடுத்து கூப்பிடுது. 

 

 

எனக்குத்தெரிந்த ஒருத்தர் கிட்டத்தட்ட இவரைப்போல் ஒருத்தன் எங்களின் பிரச்சனை என்னவென்றே தெரியாதவர் அதைப்பற்றி அளட்டிக்கொல்லாதவர் இப்போது திட்டிரெண்டு தன்னுடைய வேலையை விட்டுப்போடு ஊருக்குப்பியிருக்கார்.

 

அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் அந்தமாதியானது.. 

 

இவங்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து தமிழர்களை மாத்திரம் அல்ல அரசியலையே அசிங்கப்படுத்தப் போறாங்களே? 

கிழக்கு சகோதரர்களுக்கு அருமை இப்போதாவது புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்

வடக்கு சகோதரர்கள்தான் கிழக்கு தமிழர்களில் இருந்து பாடம் படிக்கவேண்டும் .நுற்றுக்கு தொண்ணுற்றொன்பது விழுக்காடு தமிழர்கள் உள்ள யாழ் மாவட்டத்தில் மகிந்தவின் கட்சி முன்றும் UNP ஒன்றும் வென்று ள்ளது .வெட்கமாக இல்லை உங்களுக்கு ,முதலிலை உங்களின் முதுகிலை உள்ள அழுக்கை அகற்றுகின்ற வழியைப் பாருங்கள் .

கிழக்கின் இன்னொரு மாரித் தவக்கை கத்துகிறது.

-னிகள்(சுயதணிக்கை ) திருந்தாதுகள் .அனுபவம் பேசுகின்றது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.