Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கானா பிரிவு ஆபத்தான முன் உதாரணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெலுகானா பிரிப்பு ஈழத்தின் கிழக்கு மாகானப் பிரிப்புக்கு நிகரானது. 

 

ஆந்திர அரசில் தெலுங்கானா சுயாட்சிப் பிரதேசமாக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். கிழக்கு ஈழத்தின் மாகாணத்துக்கும் இது பொருந்தும். மொழிவாரி மாநிலங்களைப் பிரிப்பது  மைய ஆதிக்க சக்திகளின் நெடுநாலைய விருப்பமாகும். . இந்தி பரப்புக்கு வெளியே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவது ஆபத்தான ஒரு முன்நிகழ்வு.வட தமிழகத்திலும் இத்தகைய ஒரு கோரிக்கை முக்கியமான வடதமிழக சாதி/சமூக கட்ச்சி ஒன்றால் முன்வைக்கப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது.

 

இந்திய ஜனநாயகத்துன் சிறப்பம்சம் மொழிவாரி மாநிலங்கள்தான்.1848 தேசிய இன அரசுப் புரட்சின்போதே (nation state revolution) மொழிவாரி தேசங்கள் வரலாற்று இயங்கியலின் வளற்ச்சி நிலை. என்பது உணரப்பட்டது. சோவியத் ஊனியனோ, யூக்கோசிலாவியாவோகூட இந்த இயங்கியலை மீறமுடியவில்லை. இந்தியாவுக்கும் அது சாத்தியமில்லை.இந்தியாவில் காஸ்மீர் நாகாலாந்து போன்ற பகுதிகளில் பிரிவினைக்கும் தெலுங்கானா போடோலாந்து போன்ற பகுதிகளில் மாநில பிரிவினைக்குமான மக்கள் கிளற்சிகள் நெடுநாளாக நடந்து வருகிறது. இரண்டு கிளற்சிகளுக்கும் இரண்டு தர்கங்களை முன்வைப்பது தவறானதாகும். மக்களின் கிழற்ச்சிக்கு அதிகார பரவலாக்கலா பிரிவினையா தீர்வு? 

 

ஆனாலும் இந்த கோட்பாட்டு நிலைக்கு மொழிவாரி மாநிலங்களுக்குள் அமைந்துள்ள பெரிய வேற்று மொழிவாரி பிரதேசங்கள் புறநடையாகலாம். சுயாட்ச்சி அல்லது மாநில பிரிவினை என்பவை  போடோலாந்து கூர்க்கா லாந்து துளு போன்ற மொழிவாரி மாநிலங்களுக்குள் சிறைப்பட்டுள்ள வேற்றுமொழி பிரதேசங்கள் தொடர்பாக தீர்வாகலாம். 

 

இந்தியா மாநில அரசுகள் நிர்வாக பிரிவுகள் அல்ல அது மொழிவாரித் தேசப் பிரிவுகளாகும் ஆந்திரா ரயலசீமா  தெலுங்கானா போன்ற ஒருமொழி பேசும் பகுதிகளின் உள்வாரி ஏற்றத்தாழ்வுகள் உயர்ந்த பட்ச்ச அதிகார பகிர்வுமூலமே தீர்க்கப்படல் வேண்டும். இந்தியா மொழிவாரித் தேசங்களின் ஒன்றியமாக வளர்வதன் மூலம் மட்டுமே வரலாற்று இயங்கியல் ரீதியாக ஒருமைப்பட்டை உறுதிப்படுத்தமுடியும்.. ஏனையவை எதிரான போக்குகளையே வளர்க்கும்.

 

தமிழ் நாட்டு அரசியல் சக்திகள் என்ன கோட்பாட்டு அடிப்படையில் தெலுங்கானா பிரிவினையை ஆதரிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

 

ஆந்திர மாநிலத்தின் சுயாட்ச்சிப் பிரதேசமாக தெலுங்கானா அமையவேண்டும். எல்லா மொழிவாரி மாநிலங்களுக்குள்ளும் அதிகார பரவலாக்கமும் பிரதேச வாரியான அதிகாரபகிர்வும் உடனடித் தேவையாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://m.timesofindia.com/city/chennai/Political-parties-in-Tamil-Nadu-see-beauty-in-small-states/articleshow/21508886.cms

 

Political parties in Tamil Nadu see beauty in small states

Jul 31, 2013, 06.19PM IST TNNspacer.gifKarthick S ]
 

CHENNAI: The Pattali Makkal Katchi (PMK), Kongu Nadu Munnetra Kazhagam (KNMK) and the pro-LTTE Naam Thamizhar Katchi, headed by filmmaker Seeman, welcomed the move to carve out a Telangana state from Andhra Pradesh.

Welcoming the Congress Working Committee's decision to recommend the creation of Telangana, PMK chief S Ramadoss said there were demands to create 22 more states in the country and the Centre should consider reasonable demands. "Bifurcated states like Uttarkhand, Jharkhand and Chhattisgarh have seen very good growth. I have been urging [the Centre] to create new states since small is beautiful," Ramadoss said in a statement.

Ramadoss recalled his participation in the Telangana Rashtriya Samithi's rally in 2004. "I had given our full support for the creation of Telengana in the public meeting. The demand is there for more than 57 years. We would have saved many human lives and unnecessary damages caused by Telangana agitation if the Centre had made this announcement much earlier," Ramadoss said.

KNMK general secretary E R Eswaran supported the bifurcation of big states. "When districts and taluks have been bifurcated for administrative purposes, why can't states be bifurcated for the same reason," he said in a statement. Eswaran hoped a separate state -- Kongu Nadu - would be created after bifurcating Tamil Nadu. "Coimbatore also will grow like Chennai," he added.

Naam Thamizhar Katchi leader Seeman urged that everyone in Andhra Pradesh should welcome the decision.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா  உடையணும்

சுக்கு நூறாக

ஆயிரமாக.........

அதை என்  கண்ணால்  காணணும்.....

 

தொடங்கிருக்கிறது

இன்னும் தொடரணும்

தொடரும்..............

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா  உடையணும்

சுக்கு நூறாக

ஆயிரமாக.........

அதை என்  கண்ணால்  காணணும்.....

 

தொடங்கிருக்கிறது

இன்னும் தொடரணும்

தொடரும்..............

 

புரியவில்லை விசுகர்,

 

பாகிஸ்தான் போல தெலுங்கனா தனிநாடாக இந்தியாவில் இருந்து பிரிந்திருந்தால் நீங்கள் சொல்வது புரியும்.

 

இங்கே பிரிந்தது, ஆந்திர மாநிலம். இந்தியா அல்லவே!

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை விசுகர்,

 

பாகிஸ்தான் போல தெலுங்கனா தனிநாடாக இந்தியாவில் இருந்து பிரிந்திருந்தால் நீங்கள் சொல்வது புரியும்.

 

இங்கே பிரிந்தது, ஆந்திர மாநிலம். இந்தியா அல்லவே!

 

மாநிலத்தைப்பிரித்து ஒரு பகுதியை பகைத்துள்ளனரே

அது  வளரணும்

எண்ணெய்  ஊத்தணும்....... :icon_idea:

அவர் புலி அவர் விளக்கம் அம்முட்டுத்துதான் .


புலி தமிழ் ஈழம் எடுப்பது எவ்வளவு சாத்தியமோ அந்த அளவு சாத்தியம் தான் இந்தியா உடைவதும் .

  • கருத்துக்கள உறவுகள்

அவர் புலி அவர் விளக்கம் அம்முட்டுத்துதான் .

புலி தமிழ் ஈழம் எடுப்பது எவ்வளவு சாத்தியமோ அந்த அளவு சாத்தியம் தான் இந்தியா உடைவதும் .

 

 

தமிழரின்  இவ்வளவு  அழிவுக்கும்  காரணம்

புலி  மூலம்  தமிழருக்கு எதுவும் கிடைத்துவிடக்கூடாது

என்ற இந்த  தங்களது கொள்கைதான்.............. :(  :(  :(

நாட்டுக்குள் மானிலங்கள் பிரிவது அந் நாட்டை மேலும் வலுவாக்கும். பெரிய அதிகாரமுடைய மானிலம் உடைந்து மத்திய அரசின் மீது செலுத்திய ஆதிக்கத்தை இழக்க வாய்ப்புண்டு. அவற்றின் வலு இரண்டாகப் பிளவடையும்போது அதிக இலபமடைவது மத்திய அரசாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.

சிலர் இங்கே கிழக்கு பிரிந்து போனது வடக்கின் ஆதிக்க வெறியிருந்து விடுபட்டத்தாக வருணித்தவர்கள். நடந்தது கிழக்கை பிரித்த அரசு அதை கையட்க்கிவிட்டது. குரங்கப்பம் பங்கிட அரசை துணக்கழைத்தவர்கள் அணில் ஏற்விட்ட நாய்களாக திரும்பி வந்து இப்போது தங்கள் நிபந்தனையுடன் திரும்ப இணைப்பது பற்றியும் பேசுகிறார்கள். 

 

நேற்றைய தினத்தினத்திற்கும் இன்றைய தினத்திற்கும் இடையில் முஸ்லீம்மக்களின் சிறுபான்மை உரிமையில் மற்றம் எற்படவில்லை. சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து அது இன்றும் வலிமை அற்றது. ஆனால் தலைவர்களின் ததிங்கினதொம்மில் பல நிற வேறுபாடுகள் இருக்கிறது. நேற்று, ஐ.நா.வுக்கு, அமெரிக்காவுக்கு மகிந்தருக்கக்காக பிரச்சரம் செய்யப் போனவர்கள் தமது அடிமைத்தளைகள் வலிக்கிறதையும் உணருகிறார்கள். தம் இடுப்பில் கட்டி வைத்திருக்கும் சங்கிலியை விட்டு விட்டு இழுத்து அரசு மக்கள் முன்னர் இவர்களை ஆட்டும் போது இவர்கள் மீது மக்கள் பார்க்கும் வினோதப்பார்வையால், தாங்கள் அரசியல் குரங்குகளாக ஆக்கபட்டு அரசியல் தெருக்களில் குரங்காட்டம் ஆடவைத்து அரசு தான் பிழைப்பதற்கு தம்மை பயன் படுத்துவதை உணர்கிறார்கள்.  தேர்தல் கணம் மட்டும் வெளியே நின்று தம்மை குத்து சண்டை போடும் பயில்வானகளாக நடித்துக் காட்டுவதும், அதேநேரம் திரை மறைவில் அரச குடும்ப காலை நக்குவதும் முஸ்லீம் மக்களால் புரியப்பட்ட ஒன்று.  

 

தம்புள்ளை பள்ளி வாசல் காண்டத்தை இவர்களும் அரசும் கிழக்கு மாகாண தேர்தல் நேரம் நடித்தனர். இப்போது மகியங்கனை பள்ளிவாசல் காண்டத்தை  வடக்கு தேர்தலுக்காக இருவரும் தூக்கியிருக்கிறார்கள்.  ஒவ்வொரு தேர்தலிலும் அரசு இவர்களை அடிப்பது மாதிரி நடிக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் அழுவது மாதிரியும் நடிப்பாரகள். இதனால் இந்த திருட்டுக்கூட்டம் மற்றய கட்சிகளுக்கு வர வேண்டிய முஸ்ளிம் மக்களின் வாக்குக்களை, அவர்களை மதப்பீதியில் விழுத்தி, தாங்கள் மட்டும் திருடிக்கொள்கிறார்கள். 

 

இப்போது தமது தனி அலகு திட்டத்தை யாழ்பாண முஸ்லீம்களுக்கு நினைவூட்ட வருவதுதான் கிழக்கு பிரிந்தை ஆதாரித்த பிரித்தாளும் சக்திகள்,  திரும்ப பிரிந்த கிழக்கை தனி அலகாக இணைப்பது பற்றியும் இப்போது பேசுவது.

 

சிலகருதுக்களில் கள வுறவுகள் தம்முள் ஒருவரை ஒருவர தாக்கு தாக்கென்று தாக்குவதும், சில தடவைகளில் நிர்வாகம் வந்து விலக்க்குப் பிடிக்க நேர்வதும் பலதடவை யாழ் திரிகளில் நடந்தவை. இந்த தலைப்புகள் 150,000 அப்பாவித்தமிழரை ஒரு நிலத்தில் வைத்துகொடுத்தால ஏற்படும் உணர்வு பூர்வமான வேறுபாடுகளை கொண்டுப்பதுதான் காரணம்.  ஆனால் சிலர் இந்த விவாதங்களின் முடிவுகளை தமது பிரச்சார தேவைகளுக்கு ஏற்ற்படி அனுமானித்துக்கொண்டு கருத்துக்களை திணித்து உறவுகளின் உணர்வுகளை வேண்டுமென்றே சிதைப்பதும், நையாண்டியாக நடப்பதும் வழமையாக கொண்டிருக்கிறார்கள்.

 

சிலகருத்துகள்.:

1).வடக்கு கிழக்கு இணைப்பட்டிருந்தது 13ம் திருத்ததின் படி. அது தமிழரின் பிரச்சனைக்கு எந்த வகையில் தன்னும் தீர்வா? இந்தகான பதிலை இவர்கள் தான் தோன்றித்தனமாக தமக்கு சாதகமாக அனுமானித்துகொண்டு, வடக்கும் கிழக்கும் சமசீர் இணைப்பில் இருப்பது தவறு என்ற வாதாட்டங்களை வைக்க வருவது புண்படுத முயலும் செயல்.  

 

2). இந்திய அரசியல் அமைப்பு ஈழத்தமிழருக்கு ஏற்ற சமஸ்டியா? இதில் சிலர் தங்கள் திணிப்புகளை அனுமானித்துக்கொண்டு தமிழருக்கு மறைமுகமாக அதுதான் தீர்வென்று திணித்துக்கொண்டு அதை தமிழீழத்துடன் ஒப்பிட்டு கதைப்பது  தேவை இல்லாத அரங்குகளில் போட்டியை தூண்ட முயலும் செயல்.

 

3). கிழக்கும் வடக்கும் வேறு வேறா? அவர்களுக்கிடையில் உண்மையில் துவேசமா? இதற்கான பதிலை தீபன் செல்வன் கூட யாழில் மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார். வடக்கு, கிழக்கில் உண்மையான பிரிவினை இல்லை. உண்மையான சிவில் நிர்வாகம் ஒன்றால் சமப்படுத்தப்பட முடியாத கோஸ்டி சண்டைகள் அங்கு இல்லை. அதன் பின்னர் பிரித்துவைத்து ஆளும் அரசுடன் சேர்ந்து அங்கு பிரிவினை இருப்பதாக நடித்துக்கொண்டு அந்த மக்களின் வேதனைகள் மீது குத்தி, பின்னர் அந்த வலிக்கு மருந்து போடுவது போல நடிப்பது உண்மையாக பிரிவினை தூண்ட முயலும் செயல் மட்டுமே.

....

சுதந்திரம் அடைந்த போது பிரிந்து கிடந்து 1956 ல் இணைக்கப்பட்ட மானிலங்கள் மக்களின் விருப்புக்கமைய இப்போ மீண்டும் பிரிக்கப்படுகிறது...   !

 

மொழி அடிப்படையிலை ஒண்றாக்கப்பட்ட இந்தியாவின் ஒரே மாநிலமும் இது மட்டும் தான்... 

 

நான் சொல்லும் கருத்து  என்ன எண்றால்   தமிழ் பேசும் மற்றய மாநிலமான  புதுச்சேரி  தனியாக இவ்வளவுகாலமும் இருப்பது  இங்கை இருக்கும் நிறைய பேருக்கு  ஞாபகமே இல்லை போல...  !   

 

 

Edited by தயா

பிரிவினை என்ற சொல்லு வெளிவரும் ஒவ்வொரு தடவையும் Union அரசு தன்னைத்தான் நிதானப்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர் பார்த்த பொருளாதார முன்னேற்றங்களை காணாத இடங்கள் தொழில் வாய்ப்பின்னையால் அவதிப்படும் அரசியல் நடவடிக்கைக்களை காட்டும். இதற்கு பொருளாதார முன்னேற்றத்தால் சாந்திப்படுத்தாமல் பிரித்து வைப்பது, பிரிவினையால் தீர்க்கலாம் என்ற அபிப்பிராயத்தை வளர்க்கும். ஆனால் இங்கிலாந்து 13 மூன்றாக பிரித்து வைத்திருந்த மாநிலங்கள் ஒன்றாக கூடித்தான் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்தை வெளியேற்றின. இதை தென் மாநிலங்கள் ஒருநாள் பின்பற்றலாம். அங்கு இருக்கும் பொருளாதாரப்பிரச்சனைகளை திர்த்துவைத்தால் மக்கள் மொழி, மத வேறுபாடுகளை மறப்பார்கள். இல்லையேல் Union உடைவதற்கு அவர்கள் தம்முள் இணைவார்கள்.

சுதந்திரம் அடைந்த போது பிரிந்து கிடந்து 1956 ல் இணைக்கப்பட்ட மானிலங்கள் மக்களின் விருப்புக்கமைய இப்போ மீண்டும் பிரிக்கப்படுகிறது...   !

 

மொழி அடிப்படையிலை ஒண்றாக்கப்பட்ட இந்தியாவின் ஒரே மாநிலமும் இது மட்டும் தான்... 

 

நான் சொல்லும் கருத்து  என்ன எண்றால்   தமிழ் பேசும் மற்றய மாநிலமான  புதுச்சேரி  தனியாக இவ்வளவுகாலமும் இருப்பது  இங்கை இருக்கும் நிறைய பேருக்கு  ஞாபகமே இல்லை போல...  !   

 

 

இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று சில ஆண்டுகள் வரை புதுச்சேரி (பாண்டிச்சேரி) பிரான்சின் ஆட்சியிலேயே இருந்தது. பின்னர் இந்திய ஆட்சியின் கீழ் தனி மாநிலமாகக் கொண்டு வரப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனராயினும் சட்டப்படி ஆட்சி மொழி பிரெஞ்சு மொழியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாநிலத்தைப்பிரித்து ஒரு பகுதியை பகைத்துள்ளனரே

அது  வளரணும்

எண்ணெய்  ஊத்தணும்....... :icon_idea:

 

இல்லை விசுகர்,

 

என்னுடன் ஒரு தெலுங்கர் வேலை செய்கின்றார்.

 

அவரிடம் கேட்டேன்.

 

கரையோர ஆந்திரப் பிரதேச மக்கள், பெரும் பண முதலைகளாம். இவர்களது நடவடிக்கைகளால், தெலுங்கான பிரதேச மக்கள் வளர்ச்சி தடை படுவதால், இந்த பிரிப்புக் கோரிக்கை வந்தது.

 

இதனை நம்மோர் பிரதேச வாதத்துக்கு ஒப்பிடலாம்.

 

அனைத்துக்கும் மேலே, இந்த பிரிவினைக்கு, இது வரை அமைதியாக இருந்து தேர்தல் நேரத்தில் அனுமதி வழங்கும் காங்கிரஸ் அரசு வாக்கு அறுவடை செய்ய காத்திருக்கிறது.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று சில ஆண்டுகள் வரை புதுச்சேரி (பாண்டிச்சேரி) பிரான்சின் ஆட்சியிலேயே இருந்தது. பின்னர் இந்திய ஆட்சியின் கீழ் தனி மாநிலமாகக் கொண்டு வரப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனராயினும் சட்டப்படி ஆட்சி மொழி பிரெஞ்சு மொழியாகும்.

 

இணையவன்,

 

கோவா, புதுச்சேரி, காஸ்மீர் ஆகிய மூன்றும் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இணைக்கப் பட்டது.

 

எனினும் இப்போது, போர்த்துக்கேய மொழியோ, பிரெஞ்சு மொழியோ அரச மொழியாக எங்கும் இல்லை.

 

காரணம் இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலம்.

 

இதனையே சகல அரச நீதி நிருவாக அதிகாரிகளும், உபயோகப் படுத்துகின்றனர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு  நன்றி நாதமுனி

 

இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று சில ஆண்டுகள் வரை புதுச்சேரி (பாண்டிச்சேரி) பிரான்சின் ஆட்சியிலேயே இருந்தது. பின்னர் இந்திய ஆட்சியின் கீழ் தனி மாநிலமாகக் கொண்டு வரப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனராயினும் சட்டப்படி ஆட்சி மொழி பிரெஞ்சு மொழியாகும்.

 

புதுவை சட்டசபை உட்பட்டு இயற்றப்படும் அனைத்து அர்சாணைகளும் தமிழிலேயே இயற்றவும் அறிவிக்கவும் படுகிண்றன...  !

 

பிரஞ்சு காலணியாதிக்கம் காரணமாக 1 % மான பிரஞ்சு பேசும் மக்கள் இருப்பதினாலும்  தமிழ் , மலையாளம், தெலுங்குக்கு அடுத்ததாக பிரஞ்சும்  நிர்வாக மொழிகளில் இடம் பெற்று இருக்கிறது... 

 

அதை தவிர புதுவையிலை பிறந்தவர்களுக்கு பிரஞ்சு அரசு கொடுக்கும் திறந்த நுளைவு அனுமதியை தவிர  சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை... 

மாநிலங்கள்  இடையே  பிரச்சனைகளை  உருவாக்கி  பகை  தீராமல்  பார்த்து  கொள்கிறது  மத்திய  அரசு , மாநிலங்கள்  இடையே ஒற்றுமை  ஏற்படுமானால் மத்திய  அரசுக்கு  பிரச்சனைகள்  வரும் .

 

அதனால்  பிரிட்டிஷ் ஆங்கில  அரசின்  பிரித்து  ஆளும்  கொள்கையை இப்பொழுதும் கடைபிடிகிறார்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்

காலாசார ரீதியிலும்.. மொழி ரீதியிலும் ஒன்றானவர்கள் என்றாலும்... பாரம்பரிய நில ஆட்சியுரிமை அடிப்படையில்.. ஸ்காட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகும் வாக்கெடுப்பை நடத்த உள்ளது. அங்கு வாழும் இலட்சக்கணக்கான முஸ்லீம்களுக்கு யாரும் தனி மாநிலம் கொடுக்கப் போறதில்லை..! ஆனால் சம உரிமை வழங்குவார்கள்..!

 

தமிழீழம் என்பது வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் மொழி பேசும் பாரம்பரிய தமிழர் ஆட்சியுரிமைக்குரிய பிரதேசமாகும். அதனை பிரிக்க எந்த முகாந்திரமும் சிங்களத்துக்குக் கிடையாது.  ஆனால் சிறீலங்காவில் இருந்து தமிழர்கள் மொழி மற்று நில ஆட்சியுரிமை சார்ந்து வடக்குக் கிழக்கு இணைந்த நிலையில் பிரிந்து செல்லலாம். அதனை சிலர் தெலுங்கானா பிரிப்போடு போட்டு  ஒப்பிட்டு.. தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகிறார்கள்.

 

ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகள் பழைய தமிழகத்தின் வெட்டி எடுத்த பகுதிகளால் ஆன ஒன்று கூட. தெலுங்கானா பிரிந்து தெலுங்கர்கள் மொழிவாரி மாநிலத்தையோ நாட்டையோ அங்கு அமைத்துக் கொண்டு சுயநிர்ணய உரிமையோடு.. வாழலாம். அது அவர்களின் விருப்பம்.  தமிழ் நாட்டில் இருந்து ஹிந்தியர்களால் வெட்டி ஆந்திராவோடு சேர்க்கப்பட்ட பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைத்து தமிழகம் முன்னிருந்த நிலைக்கு அகண்ட மாநிலமாக உருவாக வேண்டும்..! தமிழர்கள் சுய விருப்போடு இந்திய யூனியனை விட்டு வெளியேறி தனிநாடு அமைக்கும் உரிமை கொண்டவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பாரம்பரி ஆட்சியுரிமை நிலமாக மேற்படி நிலம் மிக நீண்ட காலம் வரலாற்றில் பதியப்பட்டிருந்தது. ஆனால் பிரித்தானிய காலணித்து காலத்திலும்.. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் தமிழ்நாடு வெட்டி எடுக்கப்பட்டு.. மற்றைய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. கச்சதீவை சிங்களத்துக்கு தாரை வார்த்த கணக்காக..!

 

Rajaraja_territories.png

 

http://www.skyscrapercity.com/showthread.php?p=93329020


2vtw70w.jpg


india1760jd0.jpg


மேலும் விபரங்கள் இந்த இணைப்பில்..

 

http://www.skyscrapercity.com/showthread.php?t=388367


britind.gif

 

British India in 1935, 12 years before independence. Note the different religions and princely states.

 

indiamap.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெலுங்கானா தான் தெலுங்கர்களுக்குரிய ஓரளவு பாரம்பரிய பிரதேசம். ஆந்திரா முழுவதும் உண்மையில் வரலாற்று ரீதியில் தெலுங்கர்களுக்குரியது அல்ல. அதன் பல பகுதிகள் தமிழர்களுக்குரியது என்பதை மேற்படி ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக புவியியல் வரைபடங்களில் இருந்து கால இடைவெளிகளோடு ஒப்பிட்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

 

இன்றைய தெலுங்கானா..

 

telangana-map-ap.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையணும் இத நடந்தால் தமிழர்களுக்கு இரண்டு நாடுகள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையணும் இத நடந்தால் தமிழர்களுக்கு இரண்டு நாடுகள் கிடைக்கும்.

 

ஆமாம்  உடையணும்

அதில் ஒன்றாவது நட்பு நாடாகணும்  எமக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது தமிழீழம்,தமிழகம் என்ற இருநாடுகளைச் சொன்னேன்.

நீண்ட கால பொருளாதார நலன்கள் இந்தியாவில் இருக்கும் யாரையும் பிரிந்து போக அனுமதிக்க மாட்டாது...   ஒருவேளை இந்தியா பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கினால் அண்றி.... !   

 

ஈழத்தமிழருக்கு ஆதரவு சக்திகள் தேவை எண்று ஆசைப்பட்டால் ஒண்று மட்டுமே செய்யப்பட வேண்டும்...    அது அபிவிருத்தி... 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது தமிழீழம்,தமிழகம் என்ற இருநாடுகளைச் சொன்னேன்.

 

 

உண்மைதான்  புத்தர்

பொருள் மயக்கமுள்ளது

இவ்வாறு  உடையும்  நாடுகளில்  நட்பு வைத்து

எமக்கென்று இரு தேசங்களை  உருவாக்கணும்  என்று தான்  நினைத்து எழுதினேன்

பொருள்  மயக்கத்துக்கு  புத்தர்  மன்னிப்பாராக :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.