Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் கவிதைகள் படிக்கும் நேரம் அமுதம் வழிந்தோடுமாம்..??! எப்படிங்க அது சாத்தியம்..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

காதல் கவிதைகள் படிக்கும் நேரம் அமுதம் வழிந்தோடுமாம்..??! எப்படிங்க அது சாத்தியம்..??! இந்தப் பாடலில் கவிஞர் வழிந்தோடும்.. அமுதமுன்னு என்னத்தைச் சொல்லுறார்..???! உலகத்தில அமுதம் என்ற ஒன்று இன்றுள்ளதா..???!

 

எதுக்கு இப்படியான போலிக் கற்பனைகளை சினிமா மூலம்.. விதைக்கனும்..??! அதன் மூலம்.. இல்லாத அமுதத்தை தேடச் செய்து வாழ்க்கையை சீரழிக்கனும்...???! :icon_idea::rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு சரியான பதிலை வழங்கக்கூடியவர் நமது கவிதை.. :unsure: எனக்கு கூச்ச சுவாபம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமுதம் (அமிர்தம்) என்பது இறப்பின்மையைத் தரவல்ல தேவரின் ஆகாரம். பாற்கடலைக் கடைந்து எடுத்த அமிர்தத்தை அரக்கர்களுக்குக் கிடைக்கவிடாமல் தடுத்ததால் அது மனிதர்களுக்கும் கிட்டாது! ஆனாலும் அதற்கு கிட்டத்தட்டதாக பசும்பாலைக் கொள்ளலாம்! எனவே காதல் கவிதைகள் படிக்கும்போது மனதைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு பால் பொங்கச் சாத்தியம் உண்டு :wub: . நெடுக்ஸிற்கு தெரிந்திருக்க நியாயமில்லைத்தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு சரியான பதிலை வழங்கக்கூடியவர் நமது கவிதை.. :unsure: எனக்கு கூச்ச சுவாபம்.. :lol:

எனக்கும் தான்!  :huh:

 

ஆனால் நெடுக்கருக்குப் படிக்கேக்க சொல்லிக் குடுத்திருப்பாங்களே !

 

அந்த நேரம் பாத்து, மனுசன் வெள்ளி பாத்திட்டுது போல! :icon_idea:

https://www.youtube.com/watch?v=-zbde_N8P_4

 

ஐயா நெடுக்ஸ்! சொல்லத்தான் நினைக்கிறேன்.. காதல் என்பது மழையானால் அவள் கண்கள்தானே கார்மேகம்?! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உந்தபாட்டை பார்த்தால் கருவாட்டுக்கும் அமிர்தம் சுரக்கும். :D

இளமை பரிமாறும் பொழுது  அமுதம் வழிந்தோடும் என்றுதான் கவிஞர் சொல்கிறார். :icon_mrgreen: இதழோரம் காதல் கவிதைகள் படிக்கிறார் :lol:

 

எனக்கும் தான்!  :huh:

 

ஆனால் நெடுக்கருக்குப் படிக்கேக்க சொல்லிக் குடுத்திருப்பாங்களே !

 

அந்த நேரம் பாத்து, மனுசன் வெள்ளி பாத்திட்டுது போல! :icon_idea:

 

தெரியாமல் கேட்கிறார் என்றா நினைக்கிறீர்கள்.? அவர் நாங்கள் கிளு கிளுப்பா எழுதட்டும் வாசிப்பம் என்று தெரியாத மாதிரி கேட்கிறார் :D

 

காதல் கவிதைகள் படிக்கும் நேரம் அமுதம் வழிந்தோடுமாம்..??! 

 

நீங்கள் பாட்டை பார்ப்பதில்லை என்று பிடிவாதமாக இருந்துவிட்டீர்கள் போலிருக்கு. பாட்டு முழுவதும், கடல் கடலாக, அலை அலையாக, மழை மழையாக அமிர்தம் பொழிகிறது. நீங்களும் அதில் இறங்கி நனைந்திருக்க வேண்டாம்?

இதுக்கு சரியான பதிலை வழங்கக்கூடியவர் நமது கவிதை.. :unsure: எனக்கு கூச்ச சுவாபம்.. :lol:

 

இசை...! இப்பிடியே கோர்த்து விட்டிட்டு வேடிக்கை பார்க்கிறதே  வேலையாப் போச்சு உங்களுக்கு..! :lol:

 

*************************************************************************************************

 

நெடுக்ஸ்....! கவிதைகளைப் பற்றி கனக்க யோசிக்கக்கூடாது. :rolleyes:

கவிதையை படிச்சமா முடிச்சமா என்று இருக்கணும்... இப்படியெல்லாம் ஆராயக்கூடாது! :D:lol:

 

காதல் கவிதைகள் படிச்சால் அமுதம் வழிஞ்சோடுமா என்று எனக்கு தெரியேல... :unsure: ஆனால் ரீனேஜ் பருவங்களில்  'கதைகள்' படிச்சு வழிஞ்ச கதைகள் நிறைய இருக்கு! ஆனா... அது அமுதமா இல்லையா என்று அது சம்மந்தப்பட்டவர்களைத்தான் கேட்க வேணும்! :wub::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்க கேள்விக்கு யாருமே பதில் சொல்லேல்ல. :(:rolleyes:

 

அமுதம் என்றால்.. என்ன.. உலகத்தில இல்லாத ஒன்றின் ரேஸ்ட் எப்படித் தெரியும்.. இல்லாத ஒன்றை.. ரேஸ்ட் அறியாத ஒன்றை வைச்சு இன்னொன்றை ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.. அதை நம்பி நாம சில செயல்களை செய்யுறது கூட எவ்வளவு பெரிய முட்டாள் தனம்... சினிமா நம்மள மிகப் பெரிய முட்டாள்கள் ஆக்கிக்கிட்டு இருக்கிறதை ஏன் நாங்க விளங்கிக் கொள்ளாமல்.. இருக்கம்.. செயற்படுறம்..???!

 

இந்த அமுதம்.. இத்தனை கேள்விகளையும் நமக்குள்ள எழுப்புதே..??! அதுக்கு விடை என்ன..???! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதழ் அமுதம் பருகியிருக்கிறன் அதன் சுவையோ சுவை. :)

 

அதன் அருமை நெடுக்ஸுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லைத் தானே? :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதழ் அமுதம் பருகியிருக்கிறன் அதன் சுவையோ சுவை. :)

 

அதன் அருமை நெடுக்ஸுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லைத் தானே? :D

 

நானும் அருந்தியுள்ளேன் ,அது இதழா அல்லது இதழ்களா :icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அருந்தியுள்ளேன் ,அது இதழா அல்லது இதழ்களா :icon_mrgreen::icon_idea:

 

மன்னிக்கவும் அவை இதழ்கள் தாம். :D

நான் இதழ் அமுதம் பருகியிருக்கிறன் அதன் சுவையோ சுவை. :)

 

அதன் அருமை நெடுக்ஸுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லைத் தானே? :D

 

முந்தி யேர்மனியில சிறுவர் அமுதம்னு ஒரு மாத இதழ் வந்தது.. சின்ன இராஜேஸ்ரன் என்பவர் மிகவும் சிறப்பாக வெளியிட்டு வந்தார். எனது நெருங்கிய நண்பரும்கூட. வாகன விபத்தில் 90களில் அகாலமரணமாகிவிட்டார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சோழியண்ணா.. உங்க தமிழமுதமும்.. அது கூட நல்லாத்தானே இருந்திச்சு..! அதை எவனும் பருகினதா பாட்டுப்பாடுறான் இல்லையே..???! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்க கேள்விக்கு யாருமே பதில் சொல்லேல்ல. :(:rolleyes:

 

அமுதம் என்றால்.. என்ன.. உலகத்தில இல்லாத ஒன்றின் ரேஸ்ட் எப்படித் தெரியும்.. இல்லாத ஒன்றை.. ரேஸ்ட் அறியாத ஒன்றை வைச்சு இன்னொன்றை ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.. அதை நம்பி நாம சில செயல்களை செய்யுறது கூட எவ்வளவு பெரிய முட்டாள் தனம்... சினிமா நம்மள மிகப் பெரிய முட்டாள்கள் ஆக்கிக்கிட்டு இருக்கிறதை ஏன் நாங்க விளங்கிக் கொள்ளாமல்.. இருக்கம்.. செயற்படுறம்..???!

 

இந்த அமுதம்.. இத்தனை கேள்விகளையும் நமக்குள்ள எழுப்புதே..??! அதுக்கு விடை என்ன..???! :icon_idea::lol:

ஒரு கவிஞன் தான் கூறவந்த விடயத்தை நாகரீகம் கருதி நேரடியாகக் கூறாமல் நுணுக்கமான குறிப்புப் பொருளாகக் கவிதையில் மறைத்து வைக்கும் முறையே இது.  இதற்கு உள்ளுறை உவமம் எனப்பெயர்

  :D

அமுதம் என ஒன்று இல்லாவிட்டாலும்  அதன் சிறப்பும் வீரியமும் என்ன என்பதை வாசகர்கள் இதிகாசங்கள் புராணக்கதைகள் மூலம்  அறிந்து வைத்திருப்பார்கள்   :D

ஏன் சோழியண்ணா.. உங்க தமிழமும்.. அது கூட நல்லாத்தானே இருந்திச்சு..! அதை எவனும் பருகினதா பாட்டுப்பாடுறான் இல்லையே..???! :lol::D

ம்.. அந்த சிறுவர் அமுதம் நினைவாகத்தான் தமிழமுதம்னு தொடங்கினேன்.. இப்போ தமிழமுதம்னு குழுமங்கள் வானொலிகள்னு நிறைய இருப்பதால பருகாமவிட்டுட்டாங்க போலிருக்கு.. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்! :D:icon_idea:

எங்க கேள்விக்கு யாருமே பதில் சொல்லேல்ல. :(:rolleyes:

 

அமுதம் என்றால்.. என்ன.. உலகத்தில இல்லாத ஒன்றின் ரேஸ்ட் எப்படித் தெரியும்.. இல்லாத ஒன்றை.. ரேஸ்ட் அறியாத ஒன்றை வைச்சு இன்னொன்றை ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.. அதை நம்பி நாம சில செயல்களை செய்யுறது கூட எவ்வளவு பெரிய முட்டாள் தனம்... சினிமா நம்மள மிகப் பெரிய முட்டாள்கள் ஆக்கிக்கிட்டு இருக்கிறதை ஏன் நாங்க விளங்கிக் கொள்ளாமல்.. இருக்கம்.. செயற்படுறம்..???!

 

இந்த அமுதம்.. இத்தனை கேள்விகளையும் நமக்குள்ள எழுப்புதே..??! அதுக்கு விடை என்ன..???! :icon_idea::lol:

நீங்கள் முதலில் அந்த பாடலில் காணப்படும் அமுத்தை பருக முன் வர வேண்டும்.  பாலைப் பருக்காமல் தொடர்ந்து நோயால் அழும் குழந்தையை பார்த்துவிட்டு தாயில் பால் இல்லை என்று முடிவுக்கு வரலாமா?

 

நம்பினவனுக்குதான் நடராஜா. நீங்கள் அமுதம் பருகி இல்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? பாடலில் இருக்கும் அமுதத்தை பருகினால் தன்னும் அமுதம் எப்படி இருக்கும் என்றாவது தெரியவரும். :D

Edited by மல்லையூரான்

http://www.youtube.com/watch?v=wD2gs-bo2yk

 

:icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்குமே அமுதத்தின் உருசி என்னென்று தெரியல்ல. ஏன்னா அப்படி ஒன்றை மனிதன் உருசித்திருப்பானோ என்பதே சந்தேகத்திற்குரியது. இதில...................??! :lol:

  அமிர்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமுதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் அமிர்தம் (சமஸ்கிருதம்:अमृत;அமிர்தா) என்பது அமரத்துவத்தை தருகின்ற உணவாகும். இதற்கு அமுதம், அமிழ்தம், தேவாமிர்தம், தேவருணவு என்றும் பெயருண்டு.

தேவ உலகத்தில் வாழுகின்ற தேவர்களும், கடவுள்களும் அமிர்தத்தினை உணவாக அருந்துவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

அமரத்துவத்தினை விரும்பிய தேவர்களும், அரக்கர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தினை பெற்றனர்.

40px-Aum_calligraphy.svg.png

இந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரி

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமுதத்தை அனுபவிக்கத்தான் முடியும் அதையெல்லாம் படம் போட்டு காண்பிக்க முடியாது. ஒருசிலருக்கு விளக்கவும் முடியாது.கூடாது.....

கடைசியில் குருடனுக்கு பால் எப்படியிருக்கும் என்பதற்கு விளக்கம் கொடுத்ததுபோல் ஆகிவிடும். :lol:  :D  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அறிவுக்கு.. உயிரியல் இரசாயன அறிவுக்கு மனிதனில் அமுதம் சுரப்பதாக அறியமுடியவில்லை. அமுதத்திற்கு.. இரசாயன வடிவம் உள்ளதாகவும் தெரியவில்லை. வெறும் உடல் சுரப்புக்களை அமுதம் என்றால் வியர்வையும் சிலருக்கு அமுதமாகவே இருக்கும்..????! கண்ணீருக்கும் சிலருக்கு அமுதமாக இருக்கும்..???! :lol::icon_idea:

ஒருத்தருக்குமே அமுதத்தின் உருசி என்னென்று தெரியல்ல. ஏன்னா அப்படி ஒன்றை மனிதன் உருசித்திருப்பானோ என்பதே சந்தேகத்திற்குரியது. இதில...................??! :lol:

 

நீங்க அந்த பாடலை சரியா கவனிக்கேல.. அவ தட்டில அமுதும் தேனும் கொண்டந்தவ.. அவன்தான் நீயிருக்கேக்கை அதுகள் எதுக்கு எண்டூட்டான்... ச்சே!!! :lol: :lol:

 

எங்கள் அறிவுக்கு.. உயிரியல் இரசாயன அறிவுக்கு மனிதனில் அமுதம் சுரப்பதாக அறியமுடியவில்லை. அமுதத்திற்கு.. இரசாயன வடிவம் உள்ளதாகவும் தெரியவில்லை. வெறும் உடல் சுரப்புக்களை அமுதம் என்றால் வியர்வையும் சிலருக்கு அமுதமாகவே இருக்கும்..????! கண்ணீருக்கும் சிலருக்கு அமுதமாக இருக்கும்..???! :lol::icon_idea:

 

வெறும் இரத்தப் பம்பியான இதயத்தை காதலுக்கு அடையாளம்னு படம்போட்டு காட்டேக்க.. நாங்க அமுதத்துக்கும் ஒரு சுரப்பியை சுட்டிக்காட்டினால் என்னவாம்?! :lol:<_<

 

  • கருத்துக்கள உறவுகள்

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்,

சிறு கை அளாவிய கூழ்!

 

அமிழ்தம் என்பது தமிழில் தேனைக் குறிக்கும் என நினைக்கிறேன்!

 

பின்வரும் இணைப்பைப் பார்க்கவும்!

http://www.eudict.com/?lang=tameng&word=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D;%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D

 

சில சமஸ்கிருதச் சொற்கள். அழகிய தமிழ் சொற்களுக்குத் தேவையில்லாத சாயங்களைப் பூசி விட்டன! அதனால் தான் 'அமிர்தம்' என்ற வார்த்தையில் குழப்பம் ஏற்படுகின்றது!

 

உதாரணமாக, 'நாற்றம்' என்பது நறுமணத்தைக் குறிக்கும் ஒரு சொல்!

 

இன்று யாராவது பெண்ணுக்கு, உனது கூந்தல் நாறுகின்றது' என்று சொல்லிப் பாருங்கள்! செருப்புப் பிய்ந்து போய் விடும்!

 

வாசம் என்ற சமஸ்கிருதச் சொல்லை, முதன்மைப்படுத்துவதற்காக 'நாற்றம்' என்ற சொல்லு சாகடிக்கப்பட்டுள்ளது!

 

இதே போலவே 'அமிழ்தம்' என்ற தேனைக் குறிக்கும் சொல்லானது, இன்று 'அமிர்தம்' என்ற சமஸ்கிருதச் சொல்லால் சாகடிக்கப்பட்டுள்ளது! :o

 

மற்றது சுரக்கிறது, அமிர்தம் அல்ல நெடுக்கர்! அமிழ்தம்!

 

இதழ்களின் சுவையை, நீங்கள் சுவைத்த பின்பு, நாங்கள் பேசுவோம்! :icon_idea:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.