Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களவாக 'கள்' குடித்து உள்ளாடையுடன் சென்ற விநோதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

43s(3).jpg

தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடித்த இருவர் உள்ளாடையுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்ற விநோதமான சம்பவமொன்று பெந்தர கங்கைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் இடம்பெற்றுள்ளது.

தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடிப்போர் தொடர்பில் வீட்டு சொந்தக்கார் அவதானமாக இருந்துவந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு இருவர் அவருடைய தோட்டத்திற்குள் நுழைந்து தங்களுடைய உடையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு தென்னை மரத்திலேறியுள்ளனர்.

இதனை அவதானித்த வீட்டுசொந்தக்காரர் கழற்றிவைக்கப்பட்ட உடைகளை வீட்டுக்கு எடுத்துசென்றுவிட்டார்.

'கள்' குடித்துவிட்டு மரத்திலிருந்து இறங்கியவர்கள் தங்களுடைய உடைகள் காணாமல் போனதையிடுட்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் வேறு வழியின்றி  உள்ளாடைகளுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். விட்டுசென்ற ஆடைகளை வந்து எடுத்துச்செல்லுமாறு வீட்டு உரிமையாளர் கூறியனுப்பியபோதிலும் இதுவரையிலும் அவர்கள் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/82755-2013-09-17-06-35-36.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நல்ல வேளை இவ் இருவரையும் நாய்கள் காணவில்லை கண்டிருந்தால் இவர்களின் நிலை .......  :rolleyes:  :D  :lol:
 

 

நல்ல வேளை இவ் இருவரையும் நாய்கள் காணவில்லை கண்டிருந்தால் இவர்களின் நிலை .......  :rolleyes:  :D  :lol:

 

 

இவர்களை விடுங்கோ  நாயின் நிலை... 

 

நாய்க்கு குலப்பன் காச்சலே வந்திருக்கும்...  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல வேளை இவ் இருவரையும் நாய்கள் காணவில்லை கண்டிருந்தால் இவர்களின் நிலை .......  :rolleyes:  :D  :lol:

 

 

ஆண்கள் அணியும் உடைகளில் உள்ளாடை என எதனையும் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடித்த இருவரும் பெண்களாக இருக்கலாம். ஆகவேதான் நாய்கள் கண்டிருந்தாலும் இவர்களின் நிலைக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டிருக்காது என நம்பலாம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் அணியும் உடைகளில் உள்ளாடை என எதனையும் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடித்த இருவரும் பெண்களாக இருக்கலாம். ஆகவேதான் நாய்கள் கண்டிருந்தாலும் இவர்களின் நிலைக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டிருக்காது என நம்பலாம். :wub:

 

பெண்கள் தென்னைமரத்தில் ஏறி அதுவும் களவாகக் கள்  குடிக்க வேண்டி இருக்காதே பஞ்சு. கள் என்றாலே கன கணவான்கள் கள்ளை முட்டியுடன் இறக்கிக் கொண்டுவந்து கொடுப்பார்களே.  

 

இவர்களை விடுங்கோ  நாயின் நிலை... 

 

நாய்க்கு குலப்பன் காச்சலே வந்திருக்கும்...  :D

முடியல வயிறு நோகுது ......... :D  :D

விட்டுசென்ற ஆடைகளை வந்து எடுத்துச்செல்லுமாறு வீட்டு உரிமையாளர் கூறியனுப்பியபோதிலும் 

 

உரிமையாளரின் நப்பசையை என்ன செய்ய. பக்கது வீட்ட்டுக்காறி தன்னும் இதுவரயில் ஒன்று இரவல் கொடுத்திருக்கமாட்டள் என்று நினக்கிறாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசரன்கள்.....எங்கை எப்ப சட்டையை களட்டோணும் எண்டு தெரியேல்லை...போயும்போயும் கள்ளமுட்டி இறக்கப்போய் மரியாதை கெட்டுப்போனாங்கள்.....சட்டை மடிப்பு குலைஞ்சு போடும் எண்டு களட்டி வைச்சியளோ??? :(

  • கருத்துக்கள உறவுகள்

விசரன்கள்.....எங்கை எப்ப சட்டையை களட்டோணும் எண்டு தெரியேல்லை...போயும்போயும் கள்ளமுட்டி இறக்கப்போய் மரியாதை கெட்டுப்போனாங்கள்.....சட்டை மடிப்பு குலைஞ்சு போடும் எண்டு களட்டி வைச்சியளோ??? :(

தளநார் போடாம ஏறியிருக்கிறானுகள்! :o

 

190px-Jaffna_vesak.jpg

பொதுவாக சிங்கள நாட்டுப் பக்கங்களில் தென்னை மரங்களில் கொஞ்சம் பெரிய கருப்பு எறும்புகள் இருக்கும். குறிப்பாக வட்டுக்குள்.
 
சட்டையோட ஏறும்போது இந்த எறும்புகள் சட்டைக்குள் புகுந்தால் பெருஞ்ச்சிக்கள். வட்டுக்குள் இருந்த படியே சட்டையைக் கழட்டி உதற வேண்டும்.
 
இதனால் தான் உள்ளாடையுடன் ஏறினார்களோ ?
  • கருத்துக்கள உறவுகள்

43s(3).jpg

'கள்' குடித்துவிட்டு மரத்திலிருந்து இறங்கியவர்கள் தங்களுடைய உடைகள் காணாமல் போனதையிடுட்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் வேறு வழியின்றி  உள்ளாடைகளுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். விட்டுசென்ற ஆடைகளை வந்து எடுத்துச்செல்லுமாறு வீட்டு உரிமையாளர் கூறியனுப்பியபோதிலும் இதுவரையிலும் அவர்கள் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

 

தென்னைமரத்து உரிமையாளர்.. களவாக கள்ளுக் குடித்தவர்களின், உடையை... எடுத்ததும் காணாதென்று...

உடையை... திரும்ப வந்து எடுக்கும் படி, ஆள் அனுப்பியும்... சொல்லியிருக்கிறார். நல்ல மனுசன் போலை கிடக்குது.... :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பொதுவாக சிங்கள நாட்டுப் பக்கங்களில் தென்னை மரங்களில் கொஞ்சம் பெரிய கருப்பு எறும்புகள் இருக்கும். குறிப்பாக வட்டுக்குள்.
 
சட்டையோட ஏறும்போது இந்த எறும்புகள் சட்டைக்குள் புகுந்தால் பெருஞ்ச்சிக்கள். வட்டுக்குள் இருந்த படியே சட்டையைக் கழட்டி உதற வேண்டும்.
 
இதனால் தான் உள்ளாடையுடன் ஏறினார்களோ ?

 

 

உள்ளாடையோடை கள்ளடிக்க ஏறின சீவன்ரை வட்டுக்கை எறும்பு உட்புகுந்தால் ????? :o

  • கருத்துக்கள உறவுகள்

43s(3).jpg

இந்நிலையில்

நேற்றிரவு இருவர்

அவருடைய தோட்டத்திற்குள் நுழைந்து

தங்களுடைய உடையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு

தென்னை மரத்திலேறியுள்ளனர்.

 

இதனைப்பார்க்கும்போது

ஏறியவர்கள்

ஒரு ஆண்

மற்றது பெண்  என்று தெரிகிறது

எனவே மேலே கள்ளெடுக்கும் வேலையை  இருவரும் சேர்ந்தே :lol: செய்துள்ளனர்.

(சாதாரணமாக இருவர் தென்னையில் ஒரே நேரத்தில்   ஏறமுடியாது)

 

அடுத்து

இறங்கிவந்தபோது

நாய்க்கும் இது வீட்டில் நடக்கும்  சாதாரண  நிகழ்வாக :lol: தென்பட்டபடியால் தான்

குலைத்து  அட்டகாசம் செய்து  காட்டிக்கொடுக்கவில்லை வழமைபோல். :D 

 

அடுத்து

உடுப்பின்றி வீட்டுக்கு சென்றபோதும்

எதுவித பிரச்சினையும் இருக்கவில்லை

பாவம்

அவர்களுக்கும்  வீட்டில் எம் நிலை  போலும்.... :lol:  :D

உள்ளாடையோடை கள்ளடிக்க ஏறின சீவன்ரை வட்டுக்கை எறும்பு உட்புகுந்தால் ????? :o

அனுபவ பட்டு சொல்லுறன் தென்னை மரமோ பனை மரமோ சட்டை இல்லாமல் ஏறுகிறது படு பயங்கரம்... ! ஏறிப்பழக்கமானவை நெஞ்சுக்கும் மரத்துக்கும் இடையிலை கையை குடுத்து ஏறி விடுவினம்... ஆனால் பழக்கம் இல்லாத களவெடுக்கிற கூட்டம் எண்டால் கையாலை தென்னையை கட்டிப்பிடிச்சு நெஞ்சை தேய்ச்சு தேச்சு ஏறி இளனீர் புடுங்கிற வரைக்கும் தெரியாது பிறகுதான் நெஞ்செல்லாம் கீறு விழுந்து சிராய் குத்தி எரிய ஆரம்பிக்கும்..

யாராவது எறும்புக்கு பயந்து சட்டையை கழட்டி போட்டு ஏறி பிறகு வாழ்க்கையிலை சட்டையை கழட்டவே முடியாமல் போயிடும் கவனம்...

எனக்கும் களவாய் உந்த கள்ளை குடிச்சு பாக்க ஆசை வாறதுதான்... ஆனால் கள்ளு இறக்கிற அண்ணை மார் வைச்சிருக்கிற பாழை கத்தியை நினைச்சால் எப்பவும் வயித்தை கலக்கிறது... அதாலை முயச்சி செய்து பாக்க இல்லை...

கொழும்பில் (83க்கு முன்) வீட்டில் தென்னை மரங்கள் 10 க்கு மேல் நின்றது. தேங்காய் பிடுங்க வருகிற ஆள் மரத்தால் இறங்கி முதுகு நெஞ்செல்லாம் தட்டு தட்டென்று தட்டுவார். (எறும்பை அகற்ற)  :D
 
ஒருமுறை வளவு எல்லையோடு இருக்கும் தென்னை மரத்தில் இந்தாள் ஏறி அதே வீச்சிலேயே "சர்.." என்று இறங்கி கலக்கத்தோடு ஓடி வந்தார். என்ன நடந்தது என்று கேட்க.. ஏற்கனவே வட்டுக்குள் ஒரு ஆள் இருப்பதாகச் சொன்னார் (கள்ளன் ஒருவன்).  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தென்னைமரத்தில் ஏறி அதுவும் களவாகக் கள்  குடிக்க வேண்டி இருக்காதே பஞ்சு. கள் என்றாலே கன கணவான்கள் கள்ளை முட்டியுடன் இறக்கிக் கொண்டுவந்து கொடுப்பார்களே.  

 

இதனைப்பார்க்கும்போது

ஏறியவர்கள்

ஒரு ஆண்

மற்றது பெண்  என்று தெரிகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.