Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமது நபியின் தாயின் பெயர் தெரியாதவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்! - நைரோபி தாக்குதல் குறித்து வெளியாகும் பரபரப்புத் தகவல்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
kenya-gunfire-23913-150.jpg

முகம்மது நபியின் தாயின் பெயர் தெரியாததால் இந்தியரை கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மாலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக சுட்டதில் 2 இந்தியர்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த கிறிஸ்தவரான ஜோஷ்வா ஹகீம் கூறுகையில்,ஒரு இந்தியரை தீவிரவாதிகள் அழைத்தனர். அவரிடம் முகம்மது நபியின் தாயாரின் பெயர் என்ன என்று கேட்டனர்.

  

அவருக்கு பதில் தெரியாததால் அவரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் ஸ்வஹீலி மொழியில் பேசினர். அவர்கள் முஸ்லிம்களை அடையாளம் கண்டு வெளியேறுமாறு கூறினர். என்னை அழைத்த போது என் ஐ.டி. கார்டில் இருந்த ஜோஷ்வா என்ற முதல் பெயரை விரலால் மறைத்துக் கொண்டு ஹகீமை மட்டும் காட்டினேன். அதனால் உயிர் பிழைத்தேன் என்றார்.ஏதோ கோழிக்கு இறைபோடுவது போன்று தீவிரவாதிகள் மக்களை நோக்கி சுட்டனர் என்று உயிர் பிழைத்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தெரிவித்தார்.

 

நைரோபியில் வாழும் மகனையும், மருமகளையும் பார்க்க சென்ற இடத்தில் ஷாப்பிங் மால் தாக்குதலில் இருந்து புனேவில் உள்ள கர்நாடக் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். புனேவில் உள்ள கர்நாடக் உயர் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை விம்லா ராமமூர்த்தி ராவ்(74). அவரது மகன் பரத் நைரோபியில் வேலை பார்க்கிறார். அவரை பார்க்க விம்லா நைரோபி சென்றார். அங்குள்ள வெஸ்ட்கேட் மாலில் வாங்கிய பொருட்களில் சிலவற்றை மாற்ற அவரும், அவரது மருமகள் ஸ்ரீநிதியும் மாலுக்கு கடந்த சனிக்கிழமை மதியம் சென்றனர். அவர்கள் மாலுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் அங்கு தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 

இந்த சம்பவம் குறித்து விம்லா கூறுகையில்,நானும், எனது மருமகள் ஸ்ரீநிதியும் மாலில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து கஸ்டமர் கேர் சென்டரில் நின்று கொண்டிருந்தோம். கடையின் வாசலுக்கு அருகே நின்று கொண்டிருந்தோம். ஸ்ரீநிதி பொருளை திருப்பிக் கொடுப்பதற்கான விண்ணப்பத்தை நிரப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீர் என்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. ஆனால் அந்த சத்தம் தீபாவளி பட்டாசு வெடித்தது போன்று இருந்தது.சென்டரில் இருந்த ஒருவர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் என்றார்.

 

ஆனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் துவங்கினார்கள். நாங்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் இடத்திற்கு ஓடினோம். அப்பொழுது நாங்கள் ஓடும் திசை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எங்களுடன் ஒரு வயதான தம்பதி, அவர்களின் 2 மகள்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளும் ஓடி வந்தனர். கடவுளே காப்பாத்து என்று அனைவரும் வேண்டிக் கொண்டோம். அப்பொழுது குண்டடிபட்டு தசை வெளியே தொங்கியபடி ஒரு ஊழியர் வந்தார். உடனே ஒரு டிராலியில் அவரை வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

வேறு ஒரு டிராலியில் சில பொருட்களை அள்ளிப்போட்டு எங்களுக்கு மறைந்து கொள்ள உதவி செய்தார் ஸ்ரீநிதி. அதற்குள் ஐ.நா மற்றும் போலீஸ் குழுவினர் அங்கு வந்துவிட்டனர். இதற்கிடையே ஸ்ரீநிதி சில பிரிட்ஜுகளை எங்கள் பக்கம் இழுத்து நாங்கள் மறைந்து கொள்ள வழி செய்தார். அனைத்து பக்கங்களில் இருந்தும் துப்பாக்கிச்சூடு சத்தம் வந்து கொண்டிருந்தது. சூப்பர் மார்க்கெட் மேனேஜர் வந்து வெளியே செல்ல ஒரு வழி இருக்கிறது என்று கூறினார். அனைவரும் அந்த வழியை நோக்கி ஓடினோம். பயத்தில் என்னால் ஓட முடியவில்லை. எப்படியோ தட்டித் தடுமாறி ஓடினேன்.

 

அந்த சமயம் ஒருவர் வந்து வெளியே செல்ல எனக்கு உதவினார்.வெளியே வந்ததும் போலீசார் எங்களை ஒரு காரில் ஏற்றி அருகில் வசிக்கும் என் மகனின் நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என் மகன் வந்து எங்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பலர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.டிவியில் இந்த செய்தியை பார்க்கையில் நாங்கள் தப்பித்து வந்துள்ளோம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93550&category=WorldNews&language=tamil

நல்ல வேளை அப்பாவின் பெயரை கேட்கலை  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை அப்பாவின் பெயரை கேட்கலை :icon_idea:

சுவிசுக்கு ஜிகாத் வரப்போகுது.. :lol:

சுவிசுக்கு ஜிகாத் வரப்போகுது.. :lol:

Happy News :D

Happy News :D

மற்றயதிரியில் புங்கையுரான் வீபூதியை பூசிக்கொண்டு படுங்கோ என்றது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்று நினைக்கிறேன்.  :D

கோதாரி... யாராவது இஸ்லாம் பற்றிய FAQ ஒன்றை பிரசுரியுங்களப்பா... வாசிச்சு பாடமாக்க

 

.. மனுசர் இனி Shopping mall இற்கு போகும் போது ஒரு சின்ன குரானையும் தூக்கிக் கொண்டு போறது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

கோதாரி... யாராவது இஸ்லாம் பற்றிய FAQ ஒன்றை பிரசுரியுங்களப்பா... வாசிச்சு பாடமாக்க

 

.. மனுசர் இனி Shopping mall இற்கு போகும் போது ஒரு சின்ன குரானையும் தூக்கிக் கொண்டு போறது நல்லது.

குரானில, முகமது நபியின் 'அம்மா' பேர் இருக்காது! :o

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான முஸ்லீம் பெண்களுக்கு... பாத்திமா என்ற பெயர் இருப்பதால்....
பாத்திமா என்று பொத்தாம்... பொதுவாய்ச் சொல்லியிருந்தால், உயிர் பிழைத்திருப்பார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான முஸ்லீம் பெண்களுக்கு... பாத்திமா என்ற பெயர் இருப்பதால்....

பாத்திமா என்று பொத்தாம்... பொதுவாய்ச் சொல்லியிருந்தால், உயிர் பிழைத்திருப்பார்கள்.

 

பாத்திமா எண்டது அவற்றை மனிசியின்ர பெயர்.

 

சொல்லியிருந்தால், ஒண்டுக்குப் பதிலா இரண்டு சூடு விழுந்திருக்கும் சாத்தியங்களே அதிகம், தமிழ் சிறி! :o

  • கருத்துக்கள உறவுகள்

முகம்மது நபிகள் பற்றிய தகவல்கள், பின்வரும் இணைப்பில் இருக்கின்றன!

 

வாசிக்க ஆர்வமுள்ளவர்கள், வாசிக்கலாம்! :icon_idea:

 

http://www.smdsafa.net/2013/01/blog-post_23.html

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை வரும்போது யாருடைய பெயரைக்கேட்டுத் துலை(ளை)க்கப்போறாங்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பாத்திமா எண்டது அவற்றை மனிசியின்ர பெயர்.

 

சொல்லியிருந்தால், ஒண்டுக்குப் பதிலா இரண்டு சூடு விழுந்திருக்கும் சாத்தியங்களே அதிகம், தமிழ் சிறி! :o

 

முகம்மது நபியின் தாயார் பெயர் ஆமினா என்பதாகும். அவரது வளர்ப்புத்தாயார் ஹல்ரத் ஹலிமா.  பாத்திமா அவரது மகளின்பெயர்.   அவரது முதல்மனைவி அவரிலும் 15 வயது கூடிய கதீஜா.  முகம்மது நபிக்கு  மனைவியர் பலர் இருந்தனர்.  கடைசி மனைவி அவரது இணைபிரியாத் தோழர் அபூபக்கரின் மகளான ஆயிஷா.  அபூபக்கர் நபிபெருமானாரிலும் 3 வயது இளையவர்.

ஆதாரம்:  www.thamilarivu.com - அருளியல் - நபிகள் நாயகம் - பக்கம் 16 இலிருந்து பார்க்கவும்.

Edited by karu

பாத்திமா எண்டது அவற்றை மனிசியின்ர பெயர்.

 

சொல்லியிருந்தால், ஒண்டுக்குப் பதிலா இரண்டு சூடு விழுந்திருக்கும் சாத்தியங்களே அதிகம், தமிழ் சிறி! :o

தப்பு புங்கை தப்பு 
 
தமிழ் சிரியரின் ஐடியா சுப்பர்.
 
தீவிரவாதியின்  அம்மாவுக்கும் பாத்திமா என்ற பெயர் இருக்க சாத்தியகூறு அதிகம் இருப்பதால் முஹம்மதுவின் அம்மாவின் பெயர் பாத்திமா என்றவுடன் தீவிரவாதி டென்சனாகி உடனே வீட்டை போய் முதல் வேலையா தனது அம்மாவை சுட்டு தள்ளிவிட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்திருப்பான்.  :D  :D  :D
 
அது சரி தமிழ் சிரியர் சிரியாவில போராளிகளோடு இணைந்து துனிஷியா ஜிகாத் பணியில் பிஸி என்று ஒரு கதை அடி படுது  உண்மையா?   :D  :D  :icon_idea:

Edited by seeman

அநேகமான முஸ்லீம் பெண்களுக்கு... பாத்திமா என்ற பெயர் இருப்பதால்....

பாத்திமா என்று பொத்தாம்... பொதுவாய்ச் சொல்லியிருந்தால், உயிர் பிழைத்திருப்பார்கள்.

 

 

அந்த தீவிரவாதியிடம்  இந்த பாட்டை போட்டு காட்டியிருந்தால் உடனே போய் தனது தலைவனை போட்டு தள்ளியிருப்பான்.  :D  :D  :D

 

http://www.youtube.com/watch?v=w74P6-H-YYw  

  • கருத்துக்கள உறவுகள்

முகம்மது நபியின் தாயார் பெயர் ஆமினா என்பதாகும். அவரது வளர்ப்புத்தாயார் ஹல்ரத் ஹலிமா.  பாத்திமா அவரது மகளின்பெயர்.   அவரது முதல்மனைவி அவரிலும் 15 வயது கூடிய கதீஜா.  முகம்மது நபிக்கு  மனைவியர் பலர் இருந்தனர்.  கடைசி மனைவி அவரது இணைபிரியாத் தோழர் அபூபக்கரின் மகளான ஆயிஷா.  அபூபக்கர் நபிபெருமானாரிலும் 3 வயது இளையவர்.

ஆதாரம்:  www.thamilarivu.com - அருளியல் - நபிகள் நாயகம் - பக்கம் 16 இலிருந்து பார்க்கவும்.

நீங்கள் சொல்வது சரிதான், கரு!

 

பாத்திமா என்ற பெயர் அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்று தெரியும்!

 

உறவுமுறை சறுக்கிப் போட்டுது! நன்றிகள்! :D

அற்புதமான இனிமையான இஸ்லாமிய பாடல்கள் 
 
கேட்டு ரசியுங்கள்....
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

தப்பு புங்கை தப்பு 
 
தமிழ் சிரியரின் ஐடியா சுப்பர்.
 
தீவிரவாதியின்  அம்மாவுக்கும் பாத்திமா என்ற பெயர் இருக்க சாத்தியகூறு அதிகம் இருப்பதால் முஹம்மதுவின் அம்மாவின் பெயர் பாத்திமா என்றவுடன் தீவிரவாதி டென்சனாகி உடனே வீட்டை போய் முதல் வேலையா தனது அம்மாவை சுட்டு தள்ளிவிட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்திருப்பான்.  :D  :D  :D
 
அது சரி தமிழ் சிரியர் சிரியாவில போராளிகளோடு இணைந்து துனிஷியா ஜிகாத் பணியில் பிஸி என்று ஒரு கதை அடி படுது  உண்மையா?   :D  :D  :icon_idea:

 

மனுசன் வஞ்சகமில்லாமக் கதைக்குமே தவிர, கொடியில காயிற பாவாடையைக் கண்டால், பாயிற டைப் இல்லையென்று தெரியும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

 

அற்புதமான இனிமையான இஸ்லாமிய பாடல்கள் 
 
கேட்டு ரசியுங்கள்....
 

 

 

Also Watch Audio clips of Islamic songs in:

http://www.thamilarivu.com

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் குமாரசாமியார் வேற திரியில சொன்ன மாதிரி, பாக்குவெட்டியை வளைச்சு சவட்டி, பிடிக்க வேண்டிய இடத்தில பிடிச்சு வையுங்கோ.

 

காட்டிப் போட்டு தப்பலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் குமாரசாமியார் வேற திரியில சொன்ன மாதிரி, பாக்குவெட்டியை வளைச்சு சவட்டி, பிடிக்க வேண்டிய இடத்தில பிடிச்சு வையுங்கோ.

 

காட்டிப் போட்டு தப்பலாம்.

 

உதைத்தான் நானும் யோசிச்சனான்.

கோதாரி... யாராவது இஸ்லாம் பற்றிய FAQ ஒன்றை பிரசுரியுங்களப்பா... வாசிச்சு பாடமாக்க

 

.. மனுசர் இனி Shopping mall இற்கு போகும் போது ஒரு சின்ன குரானையும் தூக்கிக் கொண்டு போறது நல்லது.

 

எல்லாம் சரி......எதுக்கும் ரவுசரை கழட்டும் பாப்பம் எண்டால் என்ன செய்வியள்??? :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி......எதுக்கும் ரவுசரை கழட்டும் பாப்பம் எண்டால் என்ன செய்வியள்??? :D

 

 

கனகாலமாக பாவித்தாச்சு

(காந்தியவழி  மற்றும் மத்திய கிழக்கு உட்பட :lol: 

தேய்மானம் எல்லாப்பொருளுக்கும் உண்டுதானே :D )

அதன்படி இப்ப

ஒரு அளவுக்கு நம்புகிற  மாதிரி   இருக்காதே அண்ணை...... :lol:  :D

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த கோதாரி விளுவாங்களுக்கு ஜோர்ச் புஷு தான் சரி ......  :D

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலமாக பாவித்தாச்சு

(மத்திய கிழக்கு உட்பட :lol: )

இப்ப

ஒரு அளவுக்கு நம்புகிற  மாதிரி   இருக்காதே அண்ணை...... :lol:  :D

 

அதன் பிறகு என்ன;

 

துவக்கை ஒரு பக்கமா வைச்சுப் போட்டு விக்கி, விக்கி அழுவான் அந்த நாதாரி.

  • கருத்துக்கள உறவுகள்

அதன் பிறகு என்ன;

 

துவக்கை ஒரு பக்கமா வைச்சுப் போட்டு விக்கி, விக்கி அழுவான் அந்த நாதாரி.

:D  :D  :D

ஏனண்ணை

கண்ணுக்கு தெரியல  என்றோ.........?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணை,

 

பாவிப்பு கூடுதலோ? அல்லது பாக்குவெட்டி ஆழமோ எண்டு  தெரியவில்லை எண்டு தான். :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.