Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என் உயிர் என்பார்
தடைகள் உடைத்து தலைவன் வழியில்
ஈழம் காண்போம் என்பார்

வீர வசனம் பேசித் தம்மை
விசுவாசி என்றும் கூறி 
வீணே காலத்தைக் கழிக்கின்றார்

உணவின்றி மக்கள் உழல்கையில்
உள்ளம் இரங்கார் ஒருபிடி
உணவும் கூட உண்மையில் கொடார்

கள்ளமனைத்தும் தம் உள்ளம் கொண்டு
காப்பாற்றுவார் போல் மாற்றார் முன்
கதறித் துடித்து நாடகமும் ஆடுவார்

தன்னைத்த் தானே பீற்றித்
தண்டோராப் போட்டுத் தம்பட்டம் அடித்து
தானே தன்மானத் தமிழன்
என்றுவேறு எக்காளமிடுவார்

வார்த்தைகளில் வண்ணம் வைத்து
வருவோரை மயக்கி
வக்கணையாய்ப் பேசி வலைவீசி
வார்த்தைகளைக் கடன் வாங்கிடுவார்

இத்தனை கேடு கேட்ட தமிழனை
தெரிந்தும் போற்றுவோர்
மனிதம் தெரியாத மூடர்களே
உணர்ந்தும்  உறவு கொள்வோர்
உலகறியா மூடர்கள்

உத்தமத் தமிழன் என்றும்
ஊனனாய் உளறுவதில்லை
ஊமையாய் நின்று உலகளவு
உதவிகள் ஊருக்குச் செய்வான்
குருடனாய் நின்று  குடிகளுக்கெல்லாம்
கோடி நன்மை கூடிச் செய்வான்

ஆகையால் மூடத் தமிழா - இனியாகிலும்
மௌனம் காத்து மமதை தொலைத்து
மண்ணின் விடிவுக்கு நன்மை செய்திடு
பேசாதிருப்பவன் ஊமையுமல்ல
பார்க்காதிருப்பவன் குருடனும் அல்ல
அமைதியாய் இருந்து  செய்திடுவான்

அனைத்தும் தெரிந்த அறத்த தமிழன் 

கொண்ட கொள்கையில் மாறாதவர்
தேசத்தில் உண்மை நேசம் கொண்டவர்
இன்னும் இருக்கிறார் உலகெங்கும்

ஆகவே கொள்கைகள் அற்று நீ
கொக்கரித்து போதும்
உண்மையாய் இரு உனக்கு
உண்மையாய் இரு மற்றவர்க்கு
உண்மையாயிரு உலகுக்கு
தானாய் நடக்கும் அத்தனையும்


 

சலுட் .....அருமை கவி அக்கா :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்தக்காசிலை சூனியம் வைக்கிறிங்களே சுமே அக்கா.. :(  பிழைக்கத்தெரியாமல் இருக்கிறிங்கள்.. :lol:

சரி இனி என்ன செய்ய? சனிமாற்றம் சுமோ அக்காக்கு நல்லாயிலை. :o

 

ஒரு சில வரிகளில் உடன்பாடில்லா விட்டாலும். உள்ளத்திலிருந்து எழுந்த கவி நன்று. :)

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்துப் போய்விட்ட,

மரமொன்றின் கிளைகளில்,

மரங்கொத்திக் குருவிகளின் அலகுகள்,

கூர் தீட்டப்படுகின்றன!

 

மௌனம் கலைந்த,

கானகம் முழுவதும்,

மரங்கொத்திகளின் மத்தள ஓசை,

எதிரொலிக்கின்றது!

 

வீழ்ந்து கிடந்த விதைகளில்,

நாளைய சந்ததியை சிந்தி விட்ட,

நிம்மதியோடு,

உயிரை விட்டிருந்தது மரம்!

 

பொறுக்கியெடுத்த விதைகளால்,

மரத்தின் துவாரங்கள்,

நிரப்பப் பட்ட பின்னர்,

மரம் இன்னும் அழகாக இருக்கிறது!  :o

 

கனவில் கூட விதைகள்,

கீழே விழுந்து விடக் கூடாது!,

கண் மூடாது,காவலிருக்கின்றன,

அந்த மரங்கொத்திக் குருவிகள் !

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரணித்துப் போய்விட்ட,

மரமொன்றின் கிளைகளில்,

மரங்கொத்திக் குருவிகளின் அலகுகள்,

கூர் தீட்டப்படுகின்றன!

 

மௌனம் கலைந்த,

கானகம் முழுவதும்,

மரங்கொத்திகளின் மத்தள ஓசை,

எதிரொலிக்கின்றது!

 

வீழ்ந்து கிடந்த விதைகளில்,

நாளைய சந்ததியை சிந்தி விட்ட,

நிம்மதியோடு,

உயிரை விட்டிருந்தது மரம்!

 

பொறுக்கியெடுத்த விதைகளால்,

மரத்தின் துவாரங்கள்,

நிரப்பப் பட்ட பின்னர்,

மரம் இன்னும் அழகாக இருக்கிறது!  :o

 

கனவில் கூட விதைகள்,

கீழே விழுந்து விடக் கூடாது!,

கண் மூடாது,காவலிருக்கின்றன,

அந்த மரங்கொத்திக் குருவிகள் !

 

எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை புங்கை :D

உங்களைப் போல் கவிதை எழுத எனக்கு வராது கண்டியளோ.

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் மரங்கொத்திக் கவிதையும் அருமையாகத்தான் இருக்கு. மெசோ ஆன்ரி சரியான தலைப்பைக் கவிதைக்கு ஏற்ற மாதிரி போட்டிருக்கலாம்.

மெசோ அக்கா!

கவிதை நல்லாயிருக்கு. ஆமை ஆயிரம் முட்டை போட்டிட்டு சத்தமில்லாமல் இருக்குமாம். கோழி ஒருமுட்டை போட்டிட்டு கொக்கரிச்சுக் கொண்டு திரியுமாம். அமைதியாய் தமது கடமைகளைச் செய்பவர் பற்றி அழகாகச் சொன்னீர்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ யாழ் களத்தில் கொஞ்சப் பேருக்கு வேண்டுமென்றே அடித்த மாதிரி இருக்குது :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் மரங்கொத்திக் கவிதையும் அருமையாகத்தான் இருக்கு. மெசோ ஆன்ரி சரியான தலைப்பைக் கவிதைக்கு ஏற்ற மாதிரி போட்டிருக்கலாம்.

 

போட்ட பின்னர்தான் நினைத்தேன் வேறு போட்டிருக்கலாமோ என்று. வரவுக்கு நன்றி கிருபன்.

 

வரவுக்கு நன்றி மணிவாசகன்

சுமோ யாழ் களத்தில் கொஞ்சப் பேருக்கு வேண்டுமென்றே அடித்த மாதிரி இருக்குது :lol:

 

அது .......வந்து.......இல்லவேயில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா.. நேரடியாகவே சொல்லுறதுதானே.. :D களம் சூடுபிடிக்குமல்லோ.. :icon_mrgreen:

புங்கையின் வரிகளும் அருமை..

மிக நல்ல கவிதை அக்கா. சுத்திவளைக்காமல் நேரடியாகவே சொல்லியிருக்கின்றீர்கள்.... தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளட்டும்! :)

 

 

மரணித்துப் போய்விட்ட,

மரமொன்றின் கிளைகளில்,

மரங்கொத்திக் குருவிகளின் அலகுகள்,

கூர் தீட்டப்படுகின்றன!

 

மௌனம் கலைந்த,

கானகம் முழுவதும்,

மரங்கொத்திகளின் மத்தள ஓசை,

எதிரொலிக்கின்றது!

 

வீழ்ந்து கிடந்த விதைகளில்,

நாளைய சந்ததியை சிந்தி விட்ட,

நிம்மதியோடு,

உயிரை விட்டிருந்தது மரம்!

 

பொறுக்கியெடுத்த விதைகளால்,

மரத்தின் துவாரங்கள்,

நிரப்பப் பட்ட பின்னர்,

மரம் இன்னும் அழகாக இருக்கிறது!  :o

 

கனவில் கூட விதைகள்,

கீழே விழுந்து விடக் கூடாது!,

கண் மூடாது,காவலிருக்கின்றன,

அந்த மரங்கொத்திக் குருவிகள் !

 

அருமையான கவிதையால் மனதைக் கொத்திவிட்டீர்கள் புங்கை!

என் நன்றியும் பாராட்டுக்களும்... :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா.. நேரடியாகவே சொல்லுறதுதானே.. :D களம் சூடுபிடிக்குமல்லோ.. :icon_mrgreen:

புங்கையின் வரிகளும் அருமை..

 

வரவுக்கு நன்றி இசை. நான் திட்டு வாங்குவதைப் பார்க்க அவ்வளவு ஆசையா? :D

மிக நல்ல கவிதை அக்கா. சுத்திவளைக்காமல் நேரடியாகவே சொல்லியிருக்கின்றீர்கள்.... தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளட்டும்! :)

 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கவிதை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தில் அடுத்த வீட்டு அத்தையுடன் குடும்பிச்  சண்டையென்றாலே

எல்லோருக்கும் கவிதை கொட்டுகின்றது.

சுமேரியரும் யாரோடையோ சண்டையா??? :D  :o

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவிற்கு... கவிதை எழுத,
கை... துறுதுறுத்துக் கொண்டிருந்தால்...
பாலச்சந்திரனின் பிறந்தநாளிற்கு... சிங்களவன் கவிதை எழுத வேண்டி இருக்க்கு, அதிலை... நாலுவரியை எழுதுங்களேன்.
தொப்பி, கிப்பி என்று... ஏன், சும்மா கிட‌க்கிற‌ முஸ்லீமை வ‌ம்புக்கு இழுக்கிறிய‌ள். :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130172&p=942936
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தில் அடுத்த வீட்டு அத்தையுடன் குடும்பிச்  சண்டையென்றாலே

எல்லோருக்கும் கவிதை கொட்டுகின்றது.

சுமேரியரும் யாரோடையோ சண்டையா??? :D  :o

 

எனக்கு ஆரோட என்ன சண்டை??? கடுப்பு . அதுதான் ......

இந்த கவிதை என்ன சொல்லுதென்றால்,

 

ஈழத்தின் மேல் தனக்கு பற்று இருப்பதாக கூறும் எவரும் மக்களுக்கு எதையும் செய்ததில்லை. ஆனால் சொல்லாமல் இருப்பவர்கள் மட்டும் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். :D

மொத்தத்திலை தாங்கள் சொல்லாமல் இருக்கிறம். அதாலை தாங்கள் தான் ஈழத்து விசுவாசிகள் என்று மறைமுகமாக சொல்கிறது கவிதை... :icon_idea:
 


மெசோ அக்கா!

கவிதை நல்லாயிருக்கு. ஆமை ஆயிரம் முட்டை போட்டிட்டு சத்தமில்லாமல் இருக்குமாம். கோழி ஒருமுட்டை போட்டிட்டு கொக்கரிச்சுக் கொண்டு திரியுமாம். அமைதியாய் தமது கடமைகளைச் செய்பவர் பற்றி அழகாகச் சொன்னீர்கள்.

 

கோழி ஒரு முட்டையை இட்டாலும் அது நல்ல முட்டையாக இருப்பின் யாருக்கும் பாதிப்பில்லை. :) ஆமை 1000 முட்டையிட்டாலும் அதில் 500 விஷ முட்டைகளாக இருப்பின் பாதிப்பு ஆமையால் தான்... :)

 

இந்த கவிதையும் மெசோ ஆன்டி போட்ட ஒரு விஷ முட்டை... :icon_idea:

 

(1000 நல்ல முட்டைகளை இடும் ஆமைகளை நான் குறை சொல்லவில்லை. அவர்களுக்கு என்றும் பாராட்டுகள்..  :) )

Edited by துளசி

மரணித்துப் போய்விட்ட,

மரமொன்றின் கிளைகளில்,

மரங்கொத்திக் குருவிகளின் அலகுகள்,

கூர் தீட்டப்படுகின்றன!

 

மௌனம் கலைந்த,

கானகம் முழுவதும்,

மரங்கொத்திகளின் மத்தள ஓசை,

எதிரொலிக்கின்றது!

 

வீழ்ந்து கிடந்த விதைகளில்,

நாளைய சந்ததியை சிந்தி விட்ட,

நிம்மதியோடு,

உயிரை விட்டிருந்தது மரம்!

 

பொறுக்கியெடுத்த விதைகளால்,

மரத்தின் துவாரங்கள்,

நிரப்பப் பட்ட பின்னர்,

மரம் இன்னும் அழகாக இருக்கிறது!  :o

 

கனவில் கூட விதைகள்,

கீழே விழுந்து விடக் கூடாது!,

கண் மூடாது,காவலிருக்கின்றன,

அந்த மரங்கொத்திக் குருவிகள் !

 

சிறந்த பொருள் தரும் மிக அருமையான கவிதை. :)

 

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமோவிற்கு... கவிதை எழுத,

கை... துறுதுறுத்துக் கொண்டிருந்தால்...

பாலச்சந்திரனின் பிறந்தநாளிற்கு... சிங்களவன் கவிதை எழுத வேண்டி இருக்க்கு, அதிலை... நாலுவரியை எழுதுங்களேன்.

தொப்பி, கிப்பி என்று... ஏன், சும்மா கிட‌க்கிற‌ முஸ்லீமை வ‌ம்புக்கு இழுக்கிறிய‌ள். :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130172&p=942936

 

 

விட்டா என்னைப் பற்றி  முஸ்லிம்களுக்கு போட்டுக்குடுப்பியள் போல இருக்கு :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.