Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனவில் வந்து போறவளே...!

Featured Replies

dream_girl-1280x720.jpg

ரொம்பக் குளிருதடி...

கொஞ்சம் பாரேன்டி!

தேகம் நடுங்குதடி...

பக்கம் வாயேன்டி!

வெள்ளை நிறத் தேவதையே...

வண்ண முலாம் பூசுறியே!

கிட்ட வந்து முட்டுறியே...

தட்டி விட்டுப் போகிறியே!

தொட்டுப் பார்க்க முன்னால...

கட்டிப் போடுறாய் கண்ணால!

ஓரங்கட்டுறாய் தன்னால...

ஒண்ணும் முடியல என்னால!

கண்ணைச் சிமிட்டாதே...

கடித்துக் குதறுதடி!

என்னை மிரட்டாதே...

எண்ணம் சேர்ந்து மிரளுதடி!

என்னைத் தூண்டி இழுக்கிறாய்...

எல்லை தாண்ட அழைக்கிறாய்!

இன்பத் தொல்லை தருகிறாய்...

தீண்டும் முன்பே மறைகிறாய்!

வண்ணம் தந்த வானவில்லே...

எங்கேயுன்னைக் காணவில்லை!

கனவில் வந்து போறவளே! -உன்

நினைவில் நொந்து போகிறேன்டி!

Edited by கவிதை

 

கனவில் வந்து போறவளே! -உன்

நினைவில் நொந்து போகிறேன்டி!

 

எல்லா இடமும் ஒரே மாதிரி பிரச்சனை என்றால் என்ன செய்வது.  :rolleyes:  :rolleyes:  :rolleyes:

 

 கவிதையின் கவிதைகளில் எப்போதும் ஒரு இனிமையான ஆனந்தம் ஒளித்திருக்கிறது.அது தொடர வேண்டுகிறேன். 

நன்றி பகிர்வுக்கு கவிதை.

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைப்பக்கம் வரவே  நடுங்குது....

நமக்கும் 

தொற்றிவிடுமோ இந்த நோய் என்று..... :lol:

 

கண்ணதாசனுக்கு

கவிதை வரக்காரணமே

கலவிதானே... :wub:

 

நன்றாக உள்ளது

தொடருங்கள்

 

 

வண்ணம் தந்த வானவில்லே...
எங்கேயுன்னைக் காணவில்லை!
கனவில் வந்து போறவளே! -உன்
நினைவில் நொந்து போகிறேன்டி!
////

 

வானவில்லைப் பெண்ணிற்குள் கொண்டுவரும் வித்தை உங்களுக்குதான் உண்டு  :D  :D  . தொடருங்கள்  :)  :)  .

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் தந்த வானவில்லே...
எங்கேயுன்னைக் காணவில்லை!
கனவில் வந்து போறவளே! -உன்
நினைவில் நொந்து போகிறேன்டி!
 

 

 

 

 

அதிக காலம் கனவில் வாழாது  நிஜத்துக்கு வந்து வாழுங்க  :lol: 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களில் கள்ளூறுகையில்,

பேதலிக்கிறது வண்டு ! 

 

மலர் வாவென்று அழைக்கிறதா?

 

திரும்பிப் பார்க்கையில்,

ஒருவரும் இல்லையே!

மலரை நோக்கிப் பறக்கிறது!

 

உருண்டும் பிரண்டும்,

தேன் குடித்த போதையில்,

தள்ளாடுகிறது, வண்டு!

 

அட இது என்ன?

உடம்பெல்லாம் மஞ்சள் நிறம்?

ஆச்சரியப் பட்டது வண்டு!

மகரந்தம் ஏந்திய போதையில்,

மீண்டும் பறக்கிறது!

இன்னுமொரு பூவைத் தேடி!

 

 

கவிதையே, இயற்கையை அது வானவில்லாகட்டும், பூரண சந்திரனாகட்டும், வண்ண முகில்கலாகட்டும்!

அவற்றுக்கும், காதலுக்கும் கோடு கீற உங்களால் தான் முடியும்! :D

Edited by புங்கையூரன்

தொட்டுப் பார்க்க முன்னால...
கட்டிப் போடுறாய் கண்ணால!
ஓரங்கட்டுறாய் தன்னால...
ஒண்ணும் முடியல என்னால!

 

 

ஏக்கவரிகள் போல கவிதை . :D

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு லேசா காய்ச்சல் குணம் வந்திட்டுது.உடனடியா வைத்தியரைப் பாக்கிறது நல்லது

  • தொடங்கியவர்

எல்லா இடமும் ஒரே மாதிரி பிரச்சனை என்றால் என்ன செய்வது.  :rolleyes:  :rolleyes:  :rolleyes:

 

 கவிதையின் கவிதைகளில் எப்போதும் ஒரு இனிமையான ஆனந்தம் ஒளித்திருக்கிறது.அது தொடர வேண்டுகிறேன். 

நன்றி பகிர்வுக்கு கவிதை.

 

உங்களுக்குமா..... நெற்கொழு!???? :lol:

 

அது வெறும் ஆனந்தமில்லை..... பேரானந்தம் நெற்கொழு! ஒரு பெண் 'ஏமாற்றம்' என்ற பெயரில ஒரு ஆணுக்கு நிரந்தர விடுதலை கொடுக்கிறதை "ஏமாற்றம்" என்று ஏற்ருக்கொள்ள என்னால் முடியவில்லையே!

 

ஒரு ஏமாற்றத்தின் பின்.... நிரந்தர நிம்மதியும்  ஆனந்தமும்! ..... சுதந்திரமும் கூட!

அதை எப்படிச் சொல்வது.....? புரியவில்லையே! :wub::rolleyes::lol:

 

பகிர நிறைய இருக்கு............ :lol:

ரொம்பக் குளிருதடி...

கொஞ்சம் பாரேன்டி!

தேகம் நடுங்குதடி...

பக்கம் வாயேன்டி!

 

முதல் இரண்டு அடிகள் டி.ஆர் சாயலில் இருந்துச்சுனு பார்த்த கடைசியில் நல்லாத்தான் இருக்கு. அந்தப் படம் .... அருமை!!

  • தொடங்கியவர்

கவிதைப்பக்கம் வரவே  நடுங்குது....

நமக்கும் 

தொற்றிவிடுமோ இந்த நோய் என்று..... :lol:

 

கண்ணதாசனுக்கு

கவிதை வரக்காரணமே

கலவிதானே... :wub:

 

நன்றாக உள்ளது

தொடருங்கள்

 

இதுக்கெல்லாம் பயப்பிடலாமா.... விசுகண்ணை?! :lol:

 

கலவியால கவிதை எண்ணம் வரும்... சரி! :rolleyes:  ஆனால்....கவிதையால கலவி எண்ணம் வருமா? :wub::rolleyes::lol:

 

கருத்துக்கு மிக்க நன்றி அண்ணை! :)

  • தொடங்கியவர்

வண்ணம் தந்த வானவில்லே...

எங்கேயுன்னைக் காணவில்லை!

கனவில் வந்து போறவளே! -உன்

நினைவில் நொந்து போகிறேன்டி! ////

 

வானவில்லைப் பெண்ணிற்குள் கொண்டுவரும் வித்தை உங்களுக்குதான் உண்டு  :D  :D  . தொடருங்கள்  :)  :)  .

 

பெண்ணுக்கு எதையும் உவமிப்பதுதான் மிகவும் இலகுவான விடயம் கோ! அந்தளவுக்கு பெண்மைக்குள் நிறைய விடயங்கள் இருக்கு. :wub:  அது உங்களுக்கு தெரியாததா என்ன !? :wub::lol:

 

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி கோ! :)

  • தொடங்கியவர்

வண்ணம் தந்த வானவில்லே...

எங்கேயுன்னைக் காணவில்லை!

கனவில் வந்து போறவளே! -உன்

நினைவில் நொந்து போகிறேன்டி! 

 

 

 

 

அதிக காலம் கனவில் வாழாது  நிஜத்துக்கு வந்து வாழுங்க  :lol: 

 

மிக நீண்ட நாட்களின்பின் தங்களைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி நிலா அக்கா!

எப்படி இருக்கின்றீர்கள்? :)

 

நான் நிஜத்துக்கு வந்தும்.... நீண்ட நாட்கள் ஆகிறது அக்கா! :rolleyes::)

  • தொடங்கியவர்

பூக்களில் கள்ளூறுகையில்,

பேதலிக்கிறது வண்டு ! 

 

மலர் வாவென்று அழைக்கிறதா?

 

திரும்பிப் பார்க்கையில்,

ஒருவரும் இல்லையே!

மலரை நோக்கிப் பறக்கிறது!

 

உருண்டும் பிரண்டும்,

தேன் குடித்த போதையில்,

தள்ளாடுகிறது, வண்டு!

 

அட இது என்ன?

உடம்பெல்லாம் மஞ்சள் நிறம்?

ஆச்சரியப் பட்டது வண்டு!

மகரந்தம் ஏந்திய போதையில்,

மீண்டும் பறக்கிறது!

இன்னுமொரு பூவைத் தேடி!

 

 

கவிதையே, இயற்கையை அது வானவில்லாகட்டும், பூரண சந்திரனாகட்டும், வண்ண முகில்கலாகட்டும்!

அவற்றுக்கும், காதலுக்கும் கோடு கீற உங்களால் தான் முடியும்! :D

ஒவ்வொன்றுக்கும் கவிதையாலேயே கருத்துரைக்கும் தங்களின் வார்த்தைகள் அழகு புங்கை! :)

 

சும்மா இருக்கிற நேரத்தில சும்மாசும்மா.....  கிறுக்குத்தனமா கிறுக்கிறதுதான் இவைகள். :wub:

நீங்களும் சும்மா இரசிக்கக்கூடியமாதிரி இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே! :wub::lol:

 

 

 

  • தொடங்கியவர்

தொட்டுப் பார்க்க முன்னால...

கட்டிப் போடுறாய் கண்ணால!

ஓரங்கட்டுறாய் தன்னால...

ஒண்ணும் முடியல என்னால!

 

 

ஏக்கவரிகள் போல கவிதை . :D

 

அஞ்சரன்..... ஏக்கம் இல்லாதவர் யார்? :rolleyes:  எல்லோருக்குள்ளும் ஏதோவொரு ஏக்கம் இருக்கத்தானே செய்யும்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கனவு கண்டது காணும். யாரையாவது கைப்பிடிக்கிற வழியைப் பாருங்கோ.

  • தொடங்கியவர்

கவிதைக்கு லேசா காய்ச்சல் குணம் வந்திட்டுது.உடனடியா வைத்தியரைப் பாக்கிறது நல்லது

 

பன்றிக்காய்ச்சல் பறவைக்காய்ச்சல் எல்லாம் வந்து போயிட்டுது நந்தன். :rolleyes:

அதுசரி..... எந்த வைத்தியரைப் பார்ப்பது..? ஆண் வைத்தியரையா? பெண் வைத்தியரையா? :lol:

  • தொடங்கியவர்

முதல் இரண்டு அடிகள் டி.ஆர் சாயலில் இருந்துச்சுனு பார்த்த கடைசியில் நல்லாத்தான் இருக்கு. அந்தப் படம் .... அருமை!!

 

மிக்க நன்றி ஆதித்ய இளம்பிறையன் ...!  கொஞ்சம் றைமிங்கா இருந்தா நல்லா இருக்கட்டும் என்று போட்டது டி ஆர் சாயலில வந்திட்டுதுபோல....  :lol: 

 

இக்கவிதைக்காக தேடிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்துப்போன படம் இது. பொருத்தமாகவும் இருப்பதாக ஒரு உணர்வு! :)

  • தொடங்கியவர்

கனவு கண்டது காணும். யாரையாவது கைப்பிடிக்கிற வழியைப் பாருங்கோ.

 

ஒரு மனுஷன் கொஞ்சநாள் சந்தோசமா நிம்மதியா இருந்தால்... விடமாட்டீங்களா அக்கா?! :lol: :lol:

ஏனக்கா இந்த கொலைவெறி....? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானவில்லாய் இருந்தால் வசப்படுமா? ! கனவில் வந்து போறவளுக்காக நினைவைத் தொலைத்து விடாதீர்கள்!:)

 

 

இனிமையாக இருக்கின்றன வரிகள்!.

 

கன்னி மயில் மின்னலென மறைய முன்னர்!! கட்டிப்போட்டு விடுங்கள்! அன்பால்! :)

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வானவில்லாய் இருந்தால் வசப்படுமா? ! கனவில் வந்து போறவளுக்காக நினைவைத் தொலைத்து விடாதீர்கள்! :)

 

 

இனிமையாக இருக்கின்றன வரிகள்!.

 

கன்னி மயில் மின்னலென மறைய முன்னர்!! கட்டிப்போட்டு விடுங்கள்! அன்பால்! :)

 

தலையில் இடி விழுந்தாலும் பரவாயில்லை... சட்டென தோன்றிமறையும் மின்னல் தேவதைகள் வேண்டவே வேண்டாம். :o  :lol:

அன்பால் கட்டிப்போடும் ஒரு உறவு வந்தால்... கட்டிப்போடுவதைப்பற்றி கொஞ்சம் சிந்திக்கலாம்....! :wub::lol:

மிக்க நன்றி தமிழ்தங்கை :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.