Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துக்ளக் கேள்வி பதில்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துக்ளக் கேள்வி பதில்கள்

கே : விடுதலைப் புலிகள் குறித்த உங்கள் கருத்து ஒருபுறம் இருக்கட்டும்! இலங்கையில் ராணுவத்தினரால் போர்க் குற்றம் நடந்ததா, இல்லையா - உண்மையைக் கூறுங்கள்?

ப : இலங்கையில் நடந்தது போர் அல்ல; உள்நாட்டுக் கலகங்களை ஒடுக்க அரசு முனைந்தபோது அரசின் படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதல். இதில் தீவிரவாதிகள் சிவிலியன்களைக் கேடயமாகப் பயன்படுத்தியதாலும், ஆஸ்பத்திரி போன்ற இடங்களில் புகுந்து கொண்டதாலும், பலத்த சிவிலியன் உயிரிழப்பு நேர்ந்தது. இது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் இதில் சேராமல், வேண்டுமென்றே ராணுவத்தினர் சிவிலியன்களைக் குறி வைத்துத் தாக்கியிருந்தால் - அது மனித உரிமை மீறல்; விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உரியது.

கே : இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் கூட்டமைப்பில் தோன்றியுள்ள உட்பூசல்களால், தமிழர்களின் மறுவாழ்வு கேள்விக்குறியாகி விடும் போலிருக்கிறதே?

ப : ‘இலங்கைத் தமிழர்கள்’ என்று பொதுவாகப் பேசுகிறபோது – இந்திய வம்சாவழித் தமிழர்களைப் பற்றி யாரும் நினைப்பதே இல்லை; அவர்களுக்கும் வடக்கு (யாழ்ப்பாணம்) தமிழர்களுக்கும் இடையே ஒற்றுமை நிலவுவதில்லை. அதே போல, கிழக்குப் பகுதித் தமிழர் களுக்கும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்குமிடையே ஒற்றுமை இல்லை. இந்த வித்தியாசங்கள் போதாதது போல, நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள மன வேற்றுமைகள் வேறு. இந்த மாதிரி ஒற்றுமையின்மைதான் இலங்கைத் தமிழர்களின் முதல் பிரச்னை. மற்ற பிரச்னைகள் இதற்கு அடுத்தவைதான்.

கே : ‘இலங்கைப் பிரச்னை தீர்ந்தால், சில அரசியல் கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடும்’ – என்கிறாரே ஞானதேசிகன்?

ப : இந்த உண்மையைப் பேசுவதில் அவர் காட்டியுள்ள துணிவு பாராட்டத்தக்கது. ஆனால் ஒன்று – அவர் குறிப் பிடுகிற கட்சிகள், இலங்கைத் தமிழர்களின் பிரச்னை தீர்ந்து விட்டால், மலேசியத் தமிழர்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாமே!

கே : தமிழக அரசியல் கட்சிகளில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்து, உண்மையிலேயே கவலைப்படும் கட்சி என்று எந்த கட்சியைக் கூறுவீர்கள்?

ப : அதற்கு நீங்கள்தான் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.

 


மூலம்: http://www.naamthamilar.ca/?p=23149.html

நியானி: பதிவின் மூலம் கட்டாயமாகக் குறிப்பிடப்படவேண்டும்

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தானே கேள்வியையும் கேட்டு பதிலையும் எழுதுவாரா?

கடைசி கேள்விக்கான பதில் சூப்பர்.உண்மையும் அதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

சோ: புத்திஜீவி என சக பத்திரிகைகளாலும் ,வேரு சிலராளும் புகழப் படுபவர். அரசியல் சாணக்கியன். ஆனால் என்ன காத்தடிக்கிற பக்கம் சாய்ந்து தன்னைத் தானெ முதுகு சொரிந்துகொண்டு விமர்சனம் என்டு சொல்லி விதன்டாவாதம் புரிபவர். அதற்கு நிறைய  அறிவும், விசயமும் தேவை. அது அவரிடம் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கு!!

சோ எப்போதும் ஆழும் கட்சிக்கு எதிர்கட்சியே ஒழிய ஜால்ரா ரகம் இல்லை ,கருணாநிதியை இவர் என்றும் ஆதரித்து எழுதியதில்லை .

இவரின் குத்தலான கருத்துக்கள் தான் பலரின் எதிர்ப்பை சம்பாதிக்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

cho_ramaswamy_cartoon.jpg

ஈழத்தமிழர்கள் வாழ்வது பற்றி உண்மையிலேயே தமிழகத்தில் கவலைப்படும் நபர் சோ அவர்களே.

துக்ளக் கேள்வி பதில்கள்

.......................................

........................................

கே : இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் கூட்டமைப்பில் தோன்றியுள்ள உட்பூசல்களால், தமிழர்களின் மறுவாழ்வு கேள்விக்குறியாகி விடும் போலிருக்கிறதே?

ப : ‘.......................................... இந்த மாதிரி ஒற்றுமையின்மைதான் இலங்கைத் தமிழர்களின் முதல் பிரச்னை. மற்ற பிரச்னைகள் இதற்கு அடுத்தவைதான்.

கே : தமிழக அரசியல் கட்சிகளில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்து, உண்மையிலேயே கவலைப்படும் கட்சி என்று எந்த கட்சியைக் கூறுவீர்கள்?

ப : அதற்கு நீங்கள்தான் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.

 

 

கடைசி கேள்விக்கான பதில் சூப்பர்.உண்மையும் அதுதான் .

 

சோவும் அருச்சுனும் ஒற்றுமையை பேசி ஒற்றுமைக்கு ஆப்பு வைப்பதில் ஒரே றேஞ்சு.

  • கருத்துக்கள உறவுகள்

சோ,ஒரு இந்தியதேசியவாதி அதால, அனைத்து நகர்வுகளும் இந்தியநலன் சார்ந்தே இருக்கும். இந்திரா காந்தி இயக்கங்களுக்கு உதவியபோதே எதித்தவர். இப்போது ஆளும்கட்சி ஆதரவாளர், ஜெயலலிததாவுக்கு எதிராக கருணாநிதியையும் ஆதரித்துள்ளார். கோமாளித்தனமாக கதைத்து/நடித்து காரியத்தை செய்வதில் கில்லாடி.

  • கருத்துக்கள உறவுகள்

7750.jpg 
 

சோவின் மகன் திருமணத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி.

 


7761.jpg 
 

இளைய... தளபதி ஸ்ராலின்.


7747.jpg 
 


7709.jpg 
 

சோ முதலாவது கேள்வியில் இந்திய இராணுவத்தை காப்பாற்றுமுகமாக பதிலளித்துள்ளார்.....

கடத்தல் காரர் பணயக்கைதியை தனக்கு முன்னால் பிடித்தால் முதலில் பணயக்கையை சுட்டுத் தள்ளிபோட்டு, கடத்தல் காரரை சுடு என்கிறார் சோ.  ஆனால் அங்கு கடத்தல் காரரும் இல்லை பணயக்கைதியும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சோ முதலாவது கேள்வியில் இந்திய இராணுவத்தை காப்பாற்றுமுகமாக பதிலளித்துள்ளார்.....

 

சோ.. இந்தியத்தை காப்பாற்ரா... விட்டால்,

மெரினா... பீச்சிலை, பிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.

சோ.. இந்தியத்தை காப்பாற்ரா... விட்டால்,

மெரினா... பீச்சிலை, பிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.

அண்ணா ஏன் பிச்சை என்ற வாக்கியத்தை கேவலப்படுத்துகிறீர்கள் .... :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

jayalalitha_cho_500.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்திக்கு மூலம் எங்க..??!   உவர்.. சோ.. உப்படி எழுதிறதுக்கு 1987 இலையே பயிற்சி எடுத்திட்டார். இந்தியப் படைகள் மேற்கொண்ட யாழ் போதனா வைத்தியசாலை  படுகொலையையும் உவர் இப்படித்தான் வர்ணிச்சவர். ஆக உந்த ஐயருக்கு கோவில் மூலஸ்தானம் தான் உலகம். அதைவிட்டு வெளில அவர் வரவே மாட்டார். அவர் மூலஸ்தானத்தில இருக்கிர சாமிக்கிட்ட செய்தி கேட்டிட்டுத்தான் உப்படியான " உலக அதிசயங்களை" எழுதிறவர். அதுக்கு கூட வக்காளத்துக்கு எங்க கூட சனம் இருக்கிறது தான் கொடுமை..! 1989 களில் இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும்.. துக்ளக்கை இலவசமாகக் கொடுத்தும் ஈழத்தமிழர்கள்.. மா அரிக்கக் கூட அதை வீட்ட கொண்டு போகல்ல.. குப்பைல.. தெரிவில வீசனது தான் வரலாறு. ஆனால் இப்ப எல்லாம்.. அதனை யாழிற்கு காவிவாரங்க...கருத்தும் கேட்கிறாங்க..!  :lol:  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

YES பிரதர் எனி ப்ரொப்லெம்?

நாங்க காவி வருவம் இல்லது காவடி ஆடிட்டு வருவம் எது கொண்டு வரணும் எது கொண்டு வர கூடாது எதுக்கு கருத்து கேக்கணும் எதுக்கு கேக்க கூடாதுன்னு எங்களுக்கு தெரியும் நீங்க நக்கீரன் ல ஏதாச்சும் மேட்டர் வந்திருக்கான்னு பாருங்க ல்....உருப்படியா இருந்தா கொண்டாந்து ஓட்டுங்க அத விட்டிட்டு மூலம் ரிஷபம் எண்டு கொண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.