Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள சந்திரிக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
chandrika20121014-150.jpg

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 22 ஆம் திகதி மங்கள சமரவீர வீட்டில் நடைபெற்ற இராபோசனத்தின் பின்னர் நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதும் ரணில் மற்றும் சந்திரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் தனியான அறையொன்றில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை நிறுத்தினால் வெற்றிப் பெறும் விதம் குறித்து மங்கள சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டவர்களாக ரணில் மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

  

முன்னாள் ஜனாதிபதியை பொதுவேட்பாளராக நிறுத்தினால் அரசாங்கத்தில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்களின் ஆதரவை பெற முடியும் என மங்கள இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். அப்படியான அதிருப்தியாளர்களின் பெயர் விபரங்களையும் மங்கள வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக்கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தேவை ஏற்பட்டால் ஜே.வி.பியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கும் தோல்விக்கு தனது தலையை கொடுக்கக் கூடிய ஒருவரை தேடி வந்த ரணிலுக்கு இது பெறுமதியான சந்தர்ப்பம் என்பதால் அவர் இந்த தீர்மானத்திற்கு தலை அசைத்துள்ளார்.

எனினும் மகிந்த ராஜபக்‌சவை சந்திரிக்காவினால் தோற்கடிக்க முடியும் என மங்கள சமரவீர திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100123&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா இருக்கின்ற மரியாதையும் தேர்தலில் நின்று கெடுக்கப் போகின்றார். மகிந்த பரிவாரங்கள் குடும்பத்தில் விரிசல் வந்து பிளவு வந்தால் ஏதாவது மாற்றங்கள் நிகழக்கூடும். இல்லையென்றால் அவர்கள் ஆட்சி இன்னும் பல வருடங்கள் இறுக்கமாக நிலைத்து நிற்கும்.

மஹிந்தவை எவராலும் அசைக்க முடியாது. மஹிந்தவை இரன்டு முறையும் பதவியில் அமர்த்திய தலைவர் வந்தால் தான் மஹிந்தவை அகற்ற முடியும். சந்திரிக்கா ரணிலுடன் சேர்ந்து மீண்டும் ஜனாதிபதியானால் எமக்கு பேராபத்து. போர்குற்ற விசாரணை, சர்வஜன வாக்கெடுப்பு எல்லாம் நீர்த்து போகும். தலைவரின் தீர்க்கதரிசனப்படி மஹிந்த தொடர்ந்து இருப்பதே எமக்கு நல்லது.   

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் முடிக்காமல் விட்ட மிச்ச சொச்சம் உள்ளது போல. சந்திரிக்கா எனி என்ன வேடம் போட்டாலும்.. ஒற்றைக் கண் காட்டிக் கொடுத்து விடும். தமிழினப் படுகொலையை முன்னெடுத்த சிங்களப் போர்க்குற்றவாளிகளில் சந்திரிக்காவும் ஒருவர்.  :icon_idea:

இலங்கை அரசியலமைப்பின் படி ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் நிறைவேற்று சனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா? இல்லை என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். யாராவது விளக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலமைப்பின் படி ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் நிறைவேற்று சனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா? இல்லை என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். யாராவது விளக்கவும்.

அப்படி ஒரு 'நிபந்தனை' முன்பு இருந்தது!

 

அந்தச் சரத்தை மகிந்த இப்போது மாற்றி விட்டார்! :o

இலங்கை அரசியலமைப்பின் படி ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் நிறைவேற்று சனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா? இல்லை என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். யாராவது விளக்கவும்.

ஆம் நிழலி. மகிந்த அந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் மாற்றிவிட்டார்.

அப்படி ஒரு 'நிபந்தனை' முன்பு இருந்தது!

 

அந்தச் சரத்தை மகிந்த இப்போது மாற்றி விட்டார்! :o

புங்கை சொல்வது சரியானது. மஹிந்த தனது ஆயுட்கால ஜனாதிபதி கனவுடன் 2/3 பெரும்பான்மையை வைத்து பாராளுமன்றத்தில் அந்த சட்டத்தை மாற்றி விட்டார். தற்போதைய சட்டத்தின் படி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் பதவி வகிக்கலாம்  

இலங்கை அரசியலமைப்பின் படி ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் நிறைவேற்று சனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா? இல்லை என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். யாராவது விளக்கவும்.

18ம் திருத்தப் படி அது முடியும்.

 

இதனால்தான் மேற்கு நாடுகள் 18ம் திருத்தத்தை எதிர்த்தன. நிறைவேற்று அதிகாரம் உள்ள அதிபர்; இணையான நீதிபரிபாலனம் கிடையாது; பலவீனமான பாராளுமன்றம். இதைத்தான் நவநீதம் பிள்ளை இலங்கை சர்வாதிகாரத்துக்குள் இறங்கியுள்ளதாக கூறினார். அவர்கள் பொலிஸ்த் துறையை பாதுகாப்பிலிருந்து பிரித்து நீதியின் கீழ் கொண்டுவர முயன்றார்கள். இதில் LLRC நிலைப்பாடும் உண்டு. ஆனால் எல்லோரையும் சுத்தும் கக்கீம் வெளிநாட்டவரை இதில் சுற்றியதால் மகிந்தாவே பொலிசையும் பெற்றுக்கொண்டுவிட்டார். வக்கில்லாத ரணில் 17ம் திருத்த புராணம் பாடியதுதான் மிச்சம். அந்த கமிசன் ஒன்றும் இருப்புக்குவரவில்லை. அந்த அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை மகிந்தா பெற்றுவிட்டார். நிறை வேற்று அதிகார அதிபர் தனது பதவிக்காலத்தை விரும்பியபடி நீடித்து அரசராகிவிட்டார். உண்மையின் படி மகிந்தா இனி தேர்தல் நிகழ்த்த வேண்டிய தேவை இல்லை(அவர்தான் தேர்தல் ஆணையளரை நியமிக்கிறார்). அதனால் அவர் நிலைமையை பார்த்துத்தான் தேர்தல் வைப்பார். அவர்கள் தாங்கள் தான் இன்னும் 20 வருடங்களுக்கு பதவியில் இருப்போம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இவற்றை நவநீதம் பிள்ளை ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்ட நேரம் விளக்குவார் என்று நினைக்கிறேன். சர்வதேசம் இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்று தீர்ப்பளித்தால் அவர்களுக்கு தலையிட உரிமைகள் கூடும்(சிரியா, லிபியா மாதிரி). 

Edited by மல்லையூரான்

புங்கை, நவீனன், மல்லை மற்றும் சீமான் ஆகியோரின் விளக்கங்களுக்கு நன்றி.

தேர்தலில் வாக்குகள் நிச்சயம் மாற்றப்படும்.

 

மகிந்த வீட்டுக்குப்போனால் பாதிக்கப்பட போவது கோத்தா மற்றும் ஏனைய பரிவாரங்கள்தான்.

 

இரானும்வம் போலிஸ் என்று ஒன்றரை இலட்சம் பரிவாரங்களை யுத்தம் முடிந்த பின்னரும் எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தால் விளங்கும். 

 

வெளியார் தலையீடு இன்றி இந்த ஆட்சியை மாற்றமுடியாது. 

 

மீண்டும் தேர்தலில் பங்கெடுத்து தோற்றுப்போக சந்திரிகா நிச்சயம் விரும்ப மாட்டார், இந்த செய்தி உண்மையா என்று சந்தேகமாக உள்ளது. அவ்வாறே மகிந்த சந்திரிக்கா அல்லது ஒரு பொது வேட்பாளர் ஒருத்தர் இறங்கி தோற்றுப்போனால் மகிந்தவின் தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவை எவராலும் அசைக்க முடியாது. மஹிந்தவை இரன்டு முறையும் பதவியில் அமர்த்திய தலைவர் வந்தால் தான் மஹிந்தவை அகற்ற முடியும். சந்திரிக்கா ரணிலுடன் சேர்ந்து மீண்டும் ஜனாதிபதியானால் எமக்கு பேராபத்து. போர்குற்ற விசாரணை, சர்வஜன வாக்கெடுப்பு எல்லாம் நீர்த்து போகும். தலைவரின் தீர்க்கதரிசனப்படி மஹிந்த தொடர்ந்து இருப்பதே எமக்கு நல்லது.   

நல்ல கருத்து seeman

ரணில், சந்திரிகா ஆபத்தானவர்கள்

நம்மாள் எதற்கும் துணிந்தவர், ஒற்றை போக்கானவர். இவர் தொடர்ந்து இருந்தால் , நாம் சில காரியங்களை சாதிக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.