Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்

நாளொன்றுக்கு ஒருமுறை  சந்திப்பவர்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

தடக்கிவிடுபவர்

இடையில் எடுத்துவிட்டால்

தடக்கி  விழுந்தால் சேதமாகுபவர்.... :lol:  :D

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

 

மூன்றெழுத்தில்

இவனொரு  ஓட்டி

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழ் உறவு

இடையில் எடுத்துவிட்டால்

தமிழரை  ஒன்றுபடவிடாமல் தடுப்பது.....??

 

விரதி :rolleyes:

 

Link to comment
Share on other sites

சினிமாவோ அரசியலோ இல்லாத ஒரு திரி, அதுவும் தமிழ் மொழி தொடர்பான ஒரு திரி ஆரம்பித்து 24 மணிநேரத்துக்கும் முன்னால் 100 பதிவுகளை கண்டிருக்கின்றது! ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கு.

 

நல்லதொரு திரியை ஆரம்பித்த ஆதித்ய இளம்பிறையனுக்கும் ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி!

 

உங்கள் நண்பர்களையும் இந்த திரிக்கு அழைத்து வாருங்கள மக்காள்!

Link to comment
Share on other sites

தமிழ் அகராதியில் "திரிபதாதி " என்ற சொல் இல்லை .

 

திரிபாகி   -இது சொல்லணியில் ஒன்று .மூன்றேழுத்தாய் ஒன்றின் பெயராய் ,முதலுமீறும் ஒன்றின் பெயராய் ,இடையுமீறும் ஒன்றின் பெயராவினவென்று வாசகம் செய்வது .

இப்படித்தான் இருக்கு .

காதையின்ஓ ரெழுத்து,ஒருசொல் வேறுஒவ்வொர் எழுத்தைக் 

     கண்டுசொல்லாய்ப் பொருளுறலே எழுத்துவருத் தனமாம்; 

ஓதுயிர்மெய் மொழியின்ஒற்றுப் பெயர்க்குங்கால் பொருள் வேறு 

     உடையதுஒற்றுப் பெயர்த்தல்,ஒரு கவிமூன்று கவியாய்ப் 

போதல்திரி பங்கி;மூன்று எழுத்துஒருசொல் முதல்பின் 

     புகல்இடைபின் சேர்ந்துசொற்க ளாந்திரிப தாதி; 

பாதம்உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ, விசை நூற்று 

     பத்தொன்பான் எழுத்தில்நிரோட் டகங்கரந் திசையே.  [5]

 

எழுத்து வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபங்கி, திரிபதாதி, 

நிரோட்டகம் ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : ஓரெழுத்து ஒரு மொழியாய்ப் பொருள் சுட்டி நின்று பின்னர் 

ஒரு எழுத்துச் சேர்த்தால் வேறொரு சொல்லாய்ப் பொருள் சுட்டி அமைதலே 

எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்று பெயர். சொல்லப்பட்ட 

மொழிகளில் உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் வேறு பொருள் 

தரும்படி அமைப்பது ஒற்றுப் பெயர்த்தல்.

     ஒரு பாட்டாக இருப்பதை மூன்றாகப் பிரித்து எழுத மூன்று பாட்டாக 

அமையுமானால் அது திரிபங்கி எனப்படும். மூன்று எழுத்துக்களை உடைய 

ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

அமையுமானால் திரிபதாதி எனப்படும். உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து 

உயிரெழுத்துக்களும், ப, ம, வ, நீங்கிய பதினைந்து மெய்யெழுத்துக்களால் 

உண்டான எழுபத்தைந்து உயிர்மெய் எழுத்துக்களும், (15x5) ப, ம, வ என்ற மூன்று 

மெய்யெழுத்துக்களும் இம்மூன்று மெய்யெழுத்துக்களால் உண்டான 

முப்பத்தாறு உயிர்மெய் எழுத்துக்களும் சேர்த்து மொத்தம் (5 + 75 + 3 + 36) 

119 எழுத்துக்கள் இல்லாமல் பாடுவது நிரோட்டம் என்று அழைக்கப்படும்.

     விளக்கம் : ஒற்றுப் பெயர்த்தலுக்குத் தண்டி உரை தரும் விளக்கம் 

வேறு. திரிபதாதி என்பதைத் தண்டி திரிபாகி என்று குறிப்பிட்டுள்ளது.

     நிரோட்டம் என்பது இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரதி :rolleyes:

 

இல்லை  சகோதரி..

ஆனால் ஒரு பதில் சரி.. :D

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில்

நாளொன்றுக்கு ஒருமுறை சந்திப்பவர்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

தடக்கிவிடுபவர்

இடையில் எடுத்துவிட்டால்

தடக்கி விழுந்தால் சேதமாகுபவர்.... :lol::D

இதுவும் பகல்தான்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்
நான் கேட்பது???
முதல் எழுத்தை எடுத்துவிட்டால்
இது இல்லையென்றால்  எதையும் சாதிக்கமுடியாது
இடையில் எடுத்துவிட்டால்
இவர் இல்லாத சிரிப்பு..........?????? :lol:  :lol:  :lol: 

Link to comment
Share on other sites

காதையின்ஓ ரெழுத்து,ஒருசொல் வேறுஒவ்வொர் எழுத்தைக் 

     கண்டுசொல்லாய்ப் பொருளுறலே எழுத்துவருத் தனமாம்; 

ஓதுயிர்மெய் மொழியின்ஒற்றுப் பெயர்க்குங்கால் பொருள் வேறு 

     உடையதுஒற்றுப் பெயர்த்தல்,ஒரு கவிமூன்று கவியாய்ப் 

போதல்திரி பங்கி;மூன்று எழுத்துஒருசொல் முதல்பின் 

     புகல்இடைபின் சேர்ந்துசொற்க ளாந்திரிப தாதி; 

பாதம்உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ, விசை நூற்று 

     பத்தொன்பான் எழுத்தில்நிரோட் டகங்கரந் திசையே.  [5]

 

எழுத்து வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபங்கி, திரிபதாதி, 

நிரோட்டகம் ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : ஓரெழுத்து ஒரு மொழியாய்ப் பொருள் சுட்டி நின்று பின்னர் 

ஒரு எழுத்துச் சேர்த்தால் வேறொரு சொல்லாய்ப் பொருள் சுட்டி அமைதலே 

எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்று பெயர். சொல்லப்பட்ட 

மொழிகளில் உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் வேறு பொருள் 

தரும்படி அமைப்பது ஒற்றுப் பெயர்த்தல்.

     ஒரு பாட்டாக இருப்பதை மூன்றாகப் பிரித்து எழுத மூன்று பாட்டாக 

அமையுமானால் அது திரிபங்கி எனப்படும். மூன்று எழுத்துக்களை உடைய 

ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

அமையுமானால் திரிபதாதி எனப்படும். உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து 

உயிரெழுத்துக்களும், ப, ம, வ, நீங்கிய பதினைந்து மெய்யெழுத்துக்களால் 

உண்டான எழுபத்தைந்து உயிர்மெய் எழுத்துக்களும், (15x5) ப, ம, வ என்ற மூன்று 

மெய்யெழுத்துக்களும் இம்மூன்று மெய்யெழுத்துக்களால் உண்டான 

முப்பத்தாறு உயிர்மெய் எழுத்துக்களும் சேர்த்து மொத்தம் (5 + 75 + 3 + 36) 

119 எழுத்துக்கள் இல்லாமல் பாடுவது நிரோட்டம் என்று அழைக்கப்படும்.

     விளக்கம் : ஒற்றுப் பெயர்த்தலுக்குத் தண்டி உரை தரும் விளக்கம் 

வேறு. திரிபதாதி என்பதைத் தண்டி திரிபாகி என்று குறிப்பிட்டுள்ளது.

     நிரோட்டம் என்பது இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள்.

இணைப்பிற்கும் விளக்கத்திற்கும்  நன்றி சோழியான் .

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில்

நான் கேட்பது???

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

இது இல்லையென்றால் எதையும் சாதிக்கமுடியாது

இடையில் எடுத்துவிட்டால்

இவர் இல்லாத சிரிப்பு..........?????? :lol: :lol: :lol:

பதில்.. :huh: (ஆனால் தில் என்பது தமிழ்ச்சொல் இல்லையே.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்
மனிதர்கள் வரவேற்காதது
முதல் எழுத்தை எடுத்துவிட்டால்
மீன்களின் எதிரி
இடையில் எடுத்துவிட்டால்
இவை  அறுபத்திநான்கு................... :icon_idea: 

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில்

மனிதர்கள் வரவேற்காதது

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

மீன்களின் எதிரி

இடையில் எடுத்துவிட்டால்

இவை  அறுபத்திநான்கு................... :icon_idea: 

 

கவலை

 

மூன்றெழுத்தில்

இவனொரு  ஓட்டி

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழ் உறவு

இடையில் எடுத்துவிட்டால்

தமிழரை  ஒன்றுபடவிடாமல் தடுப்பது.....??

 

சாரதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான  பதில்கள்

பச்சை  இல்லை

மன்னிக்கவும்...

Link to comment
Share on other sites

மலையுச்சி

முதல் எழுத்து போனால்: காயம் வந்தால் இது வரும்

இடை எழுத்து போனால்: ஒரு விளையாட்டில் பாதி

Link to comment
Share on other sites

மலையுச்சி

முதல் எழுத்து போனால்: காயம் வந்தால் இது வரும்

இடை எழுத்து போனால்: ஒரு விளையாட்டில் பாதி

 

குவடு!!!  :o

Link to comment
Share on other sites

பச்சை பிரச்சினை இல்லை. நன்றி.

 

Link to comment
Share on other sites

முதலை விட திறந்து பிடி!
இடை நழுவ கடையேழு வள்ளல்!!
முதலிரண்டும் தூக்கியும் நிறமும்!!

 

இணைத்துப் பாரு பாயும் நீராய்!!  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்

இவனொரு  பகைவன்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழில் எரிவது

இடையில் எடுத்துவிட்டால்

சூடாக்க

இது  நடக்கவேண்டும்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமத் தூரதுவின் இடை
நீங்கின் தொந்தர வெனினும்
தலைநீங்கத் தாரை தலைவன்தான்! :D

Link to comment
Share on other sites

 

மூன்றெழுத்தில்

இவனொரு  பகைவன்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழில் எரிவது

இடையில் எடுத்துவிட்டால்

சூடாக்க

இது  நடக்கவேண்டும்.........

 

 

எதிரி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலை விட திறந்து பிடி!

இடை நழுவ கடையேழு வள்ளல்!!

முதலிரண்டும் தூக்கியும் நிறமும்!!

 

இணைத்துப் பாரு பாயும் நீராய்!!  :icon_mrgreen:

காவிரி

Link to comment
Share on other sites

வலிகாமத் தூரதுவின் இடை

நீங்கின் தொந்தர வெனினும்

தலைநீங்கத் தாரை தலைவன்தான்! :D

 

நவாலி!!  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி!!  :icon_mrgreen:

நவாலி சரியான பதில் சார்! :D

Link to comment
Share on other sites

காவிரி

 

சரியான பதில்!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னது போனால் காற்றிலொரு வகைகாணும்

இடையது போனால் கடைசி மெத்தையாகும்

முற்றும் சேர்ந்தால் மூடுதிரை ஆகிகிவிடும்! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.