Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்கத்தின் போது "பேய்" அமுக்குகிறதா..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
999773_710789072295203_1973670776_n.jpg

 

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது.

 

பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே, என்ன செய்வது?

 

நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.

 

சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு. இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

 

இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

 

நன்றி: முகநூல். பதிவர்: அழகோவியம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் இணைப்பு நெடுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகள் மின்காந்த அலையினால் ஆனவை.. :huh: அவை சிறு வெண்மேகம் போல் உருவெடுத்து நித்திரையில் உள்ளவரின் தலையில் இறங்கினால் மூளையில் உள்ள மின் அதிர்வுகளை குழப்பிவிடும்.. :D உடனே மூளை விழித்துக்கொள்ளும். ஆனால் உடலை எழுப்பும் எண்ணம் அதற்கு இராது.. ஏனென்றால் இது வலிந்த உறக்கக் கலைப்பு.. :o

இது இவ்வாறாக இருக்க மூளை உடலை விழிப்படையச் செய்யும் சமிக்கைகளை அனுப்பிவிட்டு எழும்புடா என்று அந்தரப்படும்.. :( ஆனாலும் உடல் செயற்பாட்டுக்கு வர சில நொடிகளாவது தேவையல்லவா?? :D அதனால் பதற்றம் ஏற்படுகிறது.. இதுதான் உண்மையான விளக்கம் யுவர் ஆனர்.. (அதாவது என் சொந்த விளக்கம்.. :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகள் மின்காந்த அலையினால் ஆனவை.. :huh: அவை சிறு வெண்மேகம் போல் உருவெடுத்து நித்திரையில் உள்ளவரின் தலையில் இறங்கினால் மூளையில் உள்ள மின் அதிர்வுகளை குழப்பிவிடும்.. :D உடனே மூளை விழித்துக்கொள்ளும். ஆனால் உடலை எழுப்பும் எண்ணம் அதற்கு இராது.. ஏனென்றால் இது வலிந்த உறக்கக் கலைப்பு.. :o

இது இவ்வாறாக இருக்க மூளை உடலை விழிப்படையச் செய்யும் சமிக்கைகளை அனுப்பிவிட்டு எழும்புடா என்று அந்தரப்படும்.. :( ஆனாலும் உடல் செயற்பாட்டுக்கு வர சில நொடிகளாவது தேவையல்லவா?? :D அதனால் பதற்றம் ஏற்படுகிறது.. இதுதான் உண்மையான விளக்கம் யுவர் ஆனர்.. (அதாவது என் சொந்த விளக்கம்.. :lol: )

 

இப்பிடி எல்லாம் சொந்த விளக்கம் கொடுக்கமுடியாது டெமோ போட்டுக் காட்டவேண்டும். :lol:  :lol:

ஒருமுறை எப்போதும் படுக்கின்ற இடத்தில் இருந்து வேறோரு இடத்தில் படுத்தேன், வீட்டிலும் யாரும் இல்லை, புதிதாய் மாறிய வீடு வேறு, 3மணியளவில் தூக்கம் போய்விட்டது. ஆனால் முழிக்கவில்லை திரும்ப அப்படியே நித்திரை கொள்ளலாமே என்று. சற்று நேரத்தில் கைகளை யாரோ பிடித்தது போன்ற உணர்வு, அசைக்க முடியவில்லை, கால் கட்டிவிட்டது போல் இருந்தது. திரும்பி படுக்க முயற்சி செய்தும் ஒன்றும் பலனில்லை, இப்போது கண்களை திறக்க துளியும் விருப்பமில்லை :D மாரியாத்தா காளியாத்தா என எல்லா சாமியும் கும்பிட்டபடி பத்து நிமிடம் கழிந்தது :) பின்னர் தான் கைகள் அசைக்க முடிந்தது. கடைசிவரை கண் திறக்கலிய்ய்யே :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை எப்போதும் படுக்கின்ற இடத்தில் இருந்து வேறோரு இடத்தில் படுத்தேன், வீட்டிலும் யாரும் இல்லை, புதிதாய் மாறிய வீடு வேறு, 3மணியளவில் தூக்கம் போய்விட்டது. ஆனால் முழிக்கவில்லை திரும்ப அப்படியே நித்திரை கொள்ளலாமே என்று. சற்று நேரத்தில் கைகளை யாரோ பிடித்தது போன்ற உணர்வு, அசைக்க முடியவில்லை, கால் கட்டிவிட்டது போல் இருந்தது. திரும்பி படுக்க முயற்சி செய்தும் ஒன்றும் பலனில்லை, இப்போது கண்களை திறக்க துளியும் விருப்பமில்லை :D மாரியாத்தா காளியாத்தா என எல்லா சாமியும் கும்பிட்டபடி பத்து நிமிடம் கழிந்தது :) பின்னர் தான் கைகள் அசைக்க முடிந்தது. கடைசிவரை கண் திறக்கலிய்ய்யே :D

ஏதோ ஒரு பேய் வழக்கமாகப் போய் வரும் இடத்தில் குறுக்காக படுத்துவிட்டீர்கள் ராஜன்.. :D

இப்பிடி எல்லாம் சொந்த விளக்கம் கொடுக்கமுடியாது டெமோ போட்டுக் காட்டவேண்டும். :lol:  :lol:

உங்களுக்கே டெமோவா? :unsure: முடியல‌.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கே டெமோவா? :unsure: முடியல‌.. :D

ஏன் போட்டா பாக்க மாட்டமா....

dha7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் காலை, மாலை விளக்கு வைத்து சாமி கும்பிடுகிர வீடுகளில் , இரவில் சாமியறை வாசலில் படுத்திருந்து பாருங்கள், உறக்கம் வராது, உறங்கினாலும் இதுபோன்ற சம்பவங்களை உணரக் கூடியதாய் இருக்கும்...!

ஆவிகள் மின்காந்த அலையினால் ஆனவை.. :huh: அவை சிறு வெண்மேகம் போல் உருவெடுத்து நித்திரையில் உள்ளவரின் தலையில் இறங்கினால் மூளையில் உள்ள மின் அதிர்வுகளை குழப்பிவிடும்.. :D உடனே மூளை விழித்துக்கொள்ளும். ஆனால் உடலை எழுப்பும் எண்ணம் அதற்கு இராது.. ஏனென்றால் இது வலிந்த உறக்கக் கலைப்பு.. :o

இது இவ்வாறாக இருக்க மூளை உடலை விழிப்படையச் செய்யும் சமிக்கைகளை அனுப்பிவிட்டு எழும்புடா என்று அந்தரப்படும்.. :( ஆனாலும் உடல் செயற்பாட்டுக்கு வர சில நொடிகளாவது தேவையல்லவா?? :D அதனால் பதற்றம் ஏற்படுகிறது.. இதுதான் உண்மையான விளக்கம் யுவர் ஆனர்.. (அதாவது என் சொந்த விளக்கம்.. :lol: )

இந்த மாதிரி மின்காந்த அலைகள் மின்னூட்டம், அதிர்வலைகள், அதிர்வெண் என்று எழுதிவிட்டால் யாரும் கேள்வி கேட்கமாட்டினம் என்ற நம்பிக்கையில் தான் படித்த அரைகுறை மின்னியலையை எழுதிவிட்டார்... இசையண்ணை...! அவரை அமுக்குவான் ஆவிகள் வன்மையாக கண்டிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.... :D
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி மின்காந்த அலைகள் மின்னூட்டம், அதிர்வலைகள், அதிர்வெண் என்று எழுதிவிட்டால் யாரும் கேள்வி கேட்கமாட்டினம் என்ற நம்பிக்கையில் தான் படித்த அரைகுறை மின்னியலையை எழுதிவிட்டார்... இசையண்ணை...! அவரை அமுக்குவான் ஆவிகள் வன்மையாக கண்டிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.... :D

vadivelu6.jpg

"நானே எனக்குத் தெரிஞ்ச ஒண்ணு ரெண்டை வச்சு ஓட்டிகிட்டிருக்கேன்.. யாரப்பா அது?" :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி எல்லாம் சொந்த விளக்கம் கொடுக்கமுடியாது டெமோ போட்டுக் காட்டவேண்டும். :lol:  :lol:

டெமோவா usல்  கடந்தவார ஆவிமீடியேற்றர்களின் பார்வை பின்வரும் இனைப்பில் உள்ள வீடுதான் இதில் பெரும் பகிடி ஆவி கதைக்குதுங்கோ அதுவும் கவுண்டமனிமாதிரி "டாய்" என்டுது எனக்கு அப்படித்தான் படுது ஆனால் மீடியேற்றர் சொல்லினம் hey யாம் அனேகமா இந்த வீட்டிலை வச்சாவது பேயை பிடிச்சிடுவான்கள் ஆயிரம் கோவூர் வந்தாலும் பேயை நம்புறவனை திருத்தேலாது.

 

டெமோ வேனுமென்பவர்கள் இந்த லின்கை கிளிக் பன்னி பேய்குரலை கேட்கவும்http://www.dailymail.co.uk/news/article-2547224/EXCLUSIVE-A-portal-hell-Police-chief-priest-examined-possessed-children-haunted-Indiana-home-official-reports-saying-no-hoax.html

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாரும் அமுக்கியது கிடையாது.நான் தான் அமுக்குவேன்

vadivelu6.jpg

"நானே எனக்குத் தெரிஞ்ச ஒண்ணு ரெண்டை வச்சு ஓட்டிகிட்டிருக்கேன்.. யாரப்பா அது?" :D

உங்கள் கருத்துக்கள் எண்ணங்களால் கவரப்பட்ட உங்கள் மானசீக சீடன் விச்சுவா குருவே :D
  • கருத்துக்கள உறவுகள்

சே.... எம் தூக்கமும் போச்சுதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னேரம் 6மணிக்குப்பிறகு சாப்பிடாமல் படுங்கோ....ஒரு ஆவியும் அமுக்காது...அடிக்காது... :D  :)

  • 3 weeks later...

இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.

யாழுக்காக கதையாக எழுதுகிறேன்.

விரைவில் எதிர்பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.