Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவளும் அலரி மாளிகை விருந்தும்...!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளும் அலரி மாளிகை விருந்தும்...!
 
-எஸ்.ஹமீத்-
 
பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து
நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை

சுதந்திரப்

பசியெழுந்தது பெரிதாய்...!
 
*****
 
அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால் 
ஆயுதங்களுடன் உறவாடி-

ஆவேசத்துடன் போராடி-

இரத்தத்தில் நீராடி-

எதிரிகளைப் பந்தாடி

ஈற்றில்...

இலட்சியக் கோட்டை இடிந்துவிழ-

தோற்றுத் துவண்டு சரணடைந்து-

 இன்றோர் மொட்டைத் திரியாய்-

 பட்ட கொடியாய்

கெட்ட குடியாய்-

ஓலைக் குடிலுள் ஒடுங்கிய வாழ்வு...!
 
*****
 
சீராட்டி வளர்த்த சின்னக்கா,

சிறு வயதிருந்தே சேர்ந்து வாழ்ந்த

சினேகிதிகள்,

அப்பாவின் அண்ணன்மார் தம்பிமார்

அவர்தம் குடும்பத்து அங்கத்தவர்கள்

இன்னும்...

உற்றார் உறவினர் ஊராரென

 அத்தனை பேரும் விட்டோட-

அவளை விட்டும் வெருண்டோட-

அபலையாய்...அனாதையாய்...!

 
*****
 
 கண்காணிப்புப் போர்வை போர்த்துக் காரிருளில்

கதவு தட்டும் கருநாகங்கள்

விசாரணைப் போதுகளில் 
விஷம் பாய்ச்சி வெளியேறும்!
 
*****
 
 ஒரு பசியும் இல்லாப் போது கூட

'உண்ணுக...பருகுக'  என்றுபசரித்த கடைக்காரரெல்லாம்

உறு பசியென வந்தின்று உதவி கேட்டால்

'ஓடிப்போ' வென விரட்டுகின்றார்...!
 
*****
 
இவள் முதுகுத் துப்பாக்கி கண்டு

எச்சில் கூட்டி விழுங்கியோரெல்லாமின்று

முகத்தின் முன்னாலேயே

துப்புகின்றார் தைரியமாய்...!

 
*****
 
நடு வகிடெடுத்த இரட்டைப் பின்னலில்

நடுநடுங்கியோரெல்லாம் இன்றிவளின்

பரட்டைத் தலை பார்த்துப்

பரிகாசம் புரிகின்றார்...!

 
*****
 
முன்னொரு போதிலிவள்
சீருடை தந்த அச்சத்தில்
சிறுநீர் கழித்த

கள்ளுத் தவறணைக் கண்ணுச்சாமியின்று

கண்ணடித்து சைகை காட்டும்

கர்மமும்தான் நடக்கிறது...!

 
 *****
 
புனர் வாழ்வு தருவதாய்த்தான் சொன்னார்கள்..

சில அதிகாரிகளோவதனைப்

புணர் வாழ்வெனப் புரிந்து கொண்டு

இவளையணுகும்

புதிரும்தான் நிகழ்கிறது....!

 
 *****
 
ஒரு கவளச் சோற்றுக்காய்

ஊர் முழுதும் இவள் அலைய...

அலரி மாளிகையின் விருந்துக்காய்

அலைமோதும் நம்மவர்கள்...!

 
*****
 
அட-காதலிலும் போரினிலும் மட்டுமல்ல-

அரசியலிலும் எல்லாமே

அழகுதானோ...?   

 

Edited by எஸ். ஹமீத்

  • கருத்துக்கள உறவுகள்

கால ஓட்டத்தில் எல்லாமே மாறி விட்டது ..எதுவும் நிலையல்ல  .. இதுவும் கடந்துபோய் மறு உதயம்  பெறும் என நம்புவோம். உங்கள் பதிப்புக்கள் மேலும் வரவேண்டும். புதிய உறவுக்கு என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல் வரவு ஹமீது 
மொழியின் அடையாளத்தால் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பாத ஒரு இனத்திலிருந்து வந்தாலும் 
தமிழ் தாய் உங்களை கை விடவில்லை 
அற்புதமான மொழி நடை 
தொடருங்கள் ...

 

எங்களோடு, எங்களுக்காய் எழுதும்  சகோதரனே உங்கள் பணி தொடரட்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றி சகோதரி நிலாமதி..
சிலரது சுயநலம் பலரது வேதனையாக மாறிவிட்டிருப்பது துரதிருஷ்டமே.

 

மிக்க நன்றி அன்பர் Atonk...

 

தங்கள் ஆதங்கத்தில் உண்மை இருக்கிறது.

 

ஆங்கிலம் பேசுபவன் 'ஆங்கிலேயன்', சிங்களம் பேசுபவன் 'சிங்களவன்', அரபு பேசுபவன் 'அராபியன்' எனில் தமிழ் பேசுபவன் நிச்சயம் 'தமிழன்'தான். அந்த வகையில், 'தமிழன்' என்று என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி ஹமீத்.. சமகாலப் பார்வையைக் கொண்டுள்ள முக்கியமான ஆக்கங்கள் இவை. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஹமீத். கவிதையின் வீச்சு நல்ல காரமாய்  சுள்ளென்று உறைக்குது...! தொடருங்கள் வாழ்த்துக்கள்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

இவள் முதுகுத் துப்பாக்கி கண்டு

எச்சில் கூட்டி விழுங்கியோரெல்லாமின்று

முகத்தின் முன்னாலேயே

துப்புகின்றார் தைரியமாய்...!

 
முன்னொரு போதிலிவள்
சீருடை தந்த அச்சத்தில்
சிறுநீர் கழித்த

கள்ளுத் தவறணைக் கண்ணுச்சாமியின்று

கண்ணடித்து சைகை காட்டும்

கர்மமும்தான் நடக்கிறது...!

 

 

 

அருமையான வரிகள்..!

 

அப்படியே, தெள்ளத்தெளிவாக அந்த நேரத்து உணர்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் வரிகள்!

 

தொடர்ந்து இணைந்திருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே. சமகாலத்தைப்பிரதிபலிக்கும் கவிதைகள் பல உங்களிடம்... எங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் உங்களின் மனதையும் திறந்து உரையாடுகிறீர்கள். வரவேற்கிறோம்.

 

நீங்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயமான நண்பர் என்று நினைக்கிறேன்... ஏனெனில் உங்கள் எழுத்துக்களை நான் தரிசித்திருக்கிறேன் நீங்கள் கனடாவில்தானே இருக்கிறீர்கள். பதில் தருவதில் சங்கடம் இருந்தால் வேண்டாம் நண்பரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி இசைக்கலைஞன்,புங்கையூரன்,மற்றும் வல்வை சகாறா.

 

எனது உணர்வுகளோடு ஒன்றித்து நிற்கும் நல் உள்ளங்களுக்கு வெறும் நன்றிகள் மட்டும் போதுமென நான் நினைக்கவில்லை...  


நன்றி ammaa!

  • கருத்துக்கள உறவுகள்

 
*****
 
நடு வகிடெடுத்த இரட்டைப் பின்னலில்

நடுநடுங்கியோரெல்லாம் இன்றிவளின்

பரட்டைத் தலை பார்த்துப்

பரிகாசம் புரிகின்றார்...!

 
*****

 

முன்னைய பெண்போராளிகளின் இன்றைய அவலநிலையைச் சொல்லி நிக்கும் வெளிப்படையான வரிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

நன்றி  கவிதைக்கு

 

ஆனால் கவிதையின் சில  வரிகளில்  எனக்கு உடன்பாடில்லை

அவை

ஆயுதத்தை  வைத்திருந்த காரணத்தால்

பயத்தால்

மரியாதை கொடுக்கப்பட்டதாக அர்த்தம் தருகிறது

அது உண்மையல்ல...........

ஹமீதின் இன்னொரு அருமையான படைப்பு.

 

அட-காதலிலும் போரினிலும் மட்டுமல்ல-
அரசியலிலும் எல்லாமே
அழகுதானோ...?

 

உண்மை என்ன என்றால், இது அலரி மாளிகைகும் வெளியேயும் அரசியல் தறி கெட்டுப்போன இடங்கள் எங்கும் உண்டு.

 

ஆனால் வரும் தேர்தலில் அரசபக்கம் அழகிய நடிகைகளை, மொடல் அழகிகளை தெரிந்தமை(சிலரை வன்முறைகளால் மிரட்டி), இந்த வரிகள் நேராக தொடும் சந்தர்ப்பங்கள். இன்றைய தடுமாறிப்போன உலகத்தை பார்க்கும் போது அழகிற்கு பொருள் என்ன. அந்த அழகுணர்வை ஏன் இறைவன் மனிதனுக்கு கொடுத்தான் என்ற கேள்வி எழத்தான் செய்யும். உணர்வு இதையத்தில இருந்தால் அவன் மனிதன். அல்லாமல் உடலில் இருந்தால் அது மிருகம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//வணக்கம்

நன்றி  கவிதைக்கு

 

ஆனால் கவிதையின் சில  வரிகளில்  எனக்கு உடன்பாடில்லை

அவை

ஆயுதத்தை  வைத்திருந்த காரணத்தால்

பயத்தால்

மரியாதை கொடுக்கப்பட்டதாக அர்த்தம் தருகிறது

அது உண்மையல்ல...........//

 

 

 

அன்புக்குரிய விசுகு,

 

தங்கள் உடன்பாடின்மைக்குக் காரணம் இக் கவிதை பற்றிய தங்கள் புரிதல்.

 

அதனைக் குறை சொல்லும் அதிகாரம் எனக்குக் கிடையாது. ஒரு கவிதையில் பல புரிதல்கள் இருப்பது தவிர்க்க முடியாதது.

 

ஒரு போலீஸ்காரனைக் கண்டு பயப்படுபவன் யார்? குற்றவாளிதானே..?

 

போராளியின் ஆயுதம் கண்டு அஞ்சுபவன் ஒன்று எதிரியாக அல்லது துரோகியாகத்தானே இருப்பான்...?

 

ஒரு முன்னாள் போராளியை இப்போது இகழ்ச்சியாகப் பார்ப்பவன் முன்னர் எப்படி இருந்திருப்பான்...?

 

தற்போது புரிந்து கொண்டிருப்பீர்களென நம்புகிறேன்.

 

அன்புடன்,
 

எஸ். ஹமீத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹமீதின் இன்னொரு அருமையான படைப்பு.

 

உண்மை என்ன என்றால், இது அலரி மாளிகைகும் வெளியேயும் அரசியல் தறி கெட்டுப்போன இடங்கள் எங்கும் உண்டு.

 

ஆனால் வரும் தேர்தலில் அரசபக்கம் அழகிய நடிகைகளை, மொடல் அழகிகளை தெரிந்தமை(சிலரை வன்முறைகளால் மிரட்டி), இந்த வரிகள் நேராக தொடும் சந்தர்ப்பங்கள். இன்றைய தடுமாறிப்போன உலகத்தை பார்க்கும் போது அழகிற்கு பொருள் என்ன. அந்த அழகுணர்வை ஏன் இறைவன் மனிதனுக்கு கொடுத்தான் என்ற கேள்வி எழத்தான் செய்யும். உணர்வு இதையத்தில இருந்தால் அவன் மனிதன். அல்லாமல் உடலில் இருந்தால் அது மிருகம்.  

வணக்கம் மல்லையூரன்,

கருத்துக்கு மிக்க நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.