Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா! - தொடர்ந்து இயங்குவதாகவும் கூறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா! - தொடர்ந்து இயங்குவதாகவும் கூறுகிறது. 
[Thursday, 2014-05-01 09:12:12]
LTTE-Logo-010514-150.jpg
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
இதற்காக வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதித் திரட்டல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை இந்த வருடமும் நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சொன்னால் சரியாகத்தான் இருக்கும்..?? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு எதுக்கு வரிப் புலியை கண்டாலே பிடிக்குதில்ல.

 

அணு ஆயுதத்தை வைச்சிருந்தும்.. நம்மாள.. ஆக்களை விரும்பின மாதிரிக்கி அடிமைப்படுத்த முடியல்ல.. ஆளாளா வரிசையில வந்து வெடிக்கிறாங்களே.. புலிகள் உதை உலகத்திற்கு காட்டிக் கொடுத்திட்டாங்களே என்ற கடுப்பா. :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தற்சமய  புலிகளின் தடை நீடிப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு  மிகவும் ஆபத்தானது. இலங்கை அரசை அமைதிகொள்ளச் செய்து தனது ஒப்பந்தங்களை இலங்கையில் நீடிப்புச் செய்யும் நடவடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கே  புலிக்காய்ச்சல் தேவைப்படுகிறது....... :(  :(  :(

 

அதே நேரம்....
 
இன்னொரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் ஏற்படாமல் தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை வழங்குங்கள் என்று "வல்லரசுகள்" இலங்கையை அழுத்தம் கொடுக்கவும் பிரபாகரன் உயிரோடிருத்தல் தேவைப்படுகிறது.
 
இலங்கை அரசோ மஹிந்தவோ கொத்தபாயவோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்லவில்லை. இலங்கை இந்திய அரசுகள் தமிழ் மக்களின் பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ என்ற தகவலில் தங்கி இருக்கவில்லை. அவர்களுக்கு உண்மை தெரியும்.

 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138238

வாலுகளும் வெட்டப்படவேண்டும் என்று அமெரிக்காவிற்கு தெரியும் .

வாலுகளும் வெட்டப்படவேண்டும் என்று அமெரிக்காவிற்கு தெரியும் .

 

நாகரீக அடிமைகளை அடிக்கடி இப்போது எல்லாம் பார்க்க கிடைக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

வாலுகளும் வெட்டப்படவேண்டும் என்று அமெரிக்காவிற்கு தெரியும் .

 

 

புலிகள்  செய்தவை  எவை  எவை  உங்களுக்கு பிடிக்கவில்லை

என்பதற்காக புலிகளை  வெறுக்கின்றீர்களோ

அவற்றைவிட  பலமடங்கு செய்த அமெரிக்காவை ஆதரிக்கும் தங்கள் பணி மெய் சிலிர்க்கிறது

என்னே பக்குவம்

அடிமைத்தனம்??? :(  :(

புலிகள்  செய்தவை  எவை  எவை  உங்களுக்கு பிடிக்கவில்லை

என்பதற்காக புலிகளை  வெறுக்கின்றீர்களோ

அவற்றைவிட  பலமடங்கு செய்த அமெரிக்காவை ஆதரிக்கும் தங்கள் பணி மெய் சிலிர்க்கிறது

என்னே பக்குவம்

அடிமைத்தனம்??? :(  :(

 

மேற்கத்திய தொழில் நுட்பங்களை எல்லாம் இருகரம் நீட்டி வரவேற்கும் நீங்கள்  அவர்களின் அரசியலையும் வரவேற்க்க வேணும் அண்ணை... 

 

சீனாக்காறன் வந்து உங்கட கடலிலை மீனை பிடிச்சு உங்களுக்கே விற்கும் போதும் அதை வாங்கி சாப்பிட்டு மீன் நல்லா இருக்குது எண்டு பாராட்டுறது தான்  உலக அரசியல் தெரிஞ்சவைக்கு அடிப்படை ...  

 

இல்லை எண்டால் அரசியல் தெரியாத கூட்டம் எண்டு நாங்கள்  முத்திரை தருவம்... 

 

அமெரிக்கா காறன் வைச்சிருக்கிற தொழில் நுட்பத்தாலை கண்டு பிடிச்சு   உங்கள் நடத்தை சரியில்லை கன பொம்பிளையளோடை போனநீங்கள்  எண்டு சொன்னா உண்மையாக தானே அண்ணை இருக்கும்..??  அதை நீங்கள் நம்பவேணும்...   ஏன் எண்டால் தொழில் நுட்பத்தை கண்டு பிடிச்ச அமெரிக்கன் நடத்தையிலை சிறந்தவன்.. 

Edited by தயா

நாட்டில் தமிழர்களின் பிரச்சனைக்கு ஓர் தீர்வு வரவேண்டுமென்றால் புலிகள் அழியவேண்டும் என்று முற்றாக நம்பியவர்களில் நானும் ஒருவன் .

அதற்கு பல காரணங்கள் அதில் முக்கியமானது போராட்டம் இப்படியே தொடந்தால் நாட்டில் தமிழ் இனத்தின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.

புலம் பெயர் தேசங்களின் விடுதலை என்ற பெயரில் வியாபாரிகள் கைகளில் பொறுப்புகள் போய் ஒரு மிக பிற்போக்கான இனாமாக வாழ வழி வகுத்துவிடும் .

முதலாவது நடைபெற்று முடிய இந்த வியாபாரிகள் தொலந்துவிடுவார்கள் என்று நினைக்க வேறு திசையில் தமது இருப்பை பாதுக்காக்க அமைப்புகளை தொடங்கி வியாபாரத்தை தொடர்கின்றார்கள் .

இது இலங்கை அரசிற்கு மிக சாதகமான ஒருவிடயம் ,நாட்டில் எது வித தீர்வையும் வைக்காமல் புலி பூச்சாண்டி காட்டிக்கொண்டேஇருக்கலாம் .

எங்களை மாதிரித்தான் அமெரிக்காவும் சிந்திக்கின்றது என நினைக்கின்றேன் .

நாட்டில் தமிழர்களின் பிரச்சனைக்கு ஓர் தீர்வு வரவேண்டுமென்றால் புலிகள் அழியவேண்டும் என்று முற்றாக நம்பியவர்களில் நானும் ஒருவன் .

அதற்கு பல காரணங்கள் அதில் முக்கியமானது போராட்டம் இப்படியே தொடந்தால் நாட்டில் தமிழ் இனத்தின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.

புலம் பெயர் தேசங்களின் விடுதலை என்ற பெயரில் வியாபாரிகள் கைகளில் பொறுப்புகள் போய் ஒரு மிக பிற்போக்கான இனாமாக வாழ வழி வகுத்துவிடும் .

முதலாவது நடைபெற்று முடிய இந்த வியாபாரிகள் தொலந்துவிடுவார்கள் என்று நினைக்க வேறு திசையில் தமது இருப்பை பாதுக்காக்க அமைப்புகளை தொடங்கி வியாபாரத்தை தொடர்கின்றார்கள் .

இது இலங்கை அரசிற்கு மிக சாதகமான ஒருவிடயம் ,நாட்டில் எது வித தீர்வையும் வைக்காமல் புலி பூச்சாண்டி காட்டிக்கொண்டேஇருக்கலாம் .

எங்களை மாதிரித்தான் அமெரிக்காவும் சிந்திக்கின்றது என நினைக்கின்றேன் .

 

புலிகள்  அழிவை கண்டு ஐஞ்சு வருச்ம ஆச்சு என்னத்தை கிளிச்சியள்...?? 

 

உங்களுக்கு பிரச்சினை புலிகளின் ஆயுதங்கள் எண்டால் அவை இப்ப இல்லை...  அதே நேரம் அரசியல் எண்டா உங்களுக்கு மனநிலை பிழை... 

 

உலகிலை இருக்கும் எல்லாவித மக்களுக்கும்  எல்லாவிதமான அரசியல் நிலைப்பாடும் உண்டு...   தனி நாட்டு கோரிக்கைகளோடு இணைந்த  பிரிவினை வாதம்  வேண்டாம் எண்றால்  மற்றய சாத்திய பக்கங்கள் பலமாகாதவரைக்கும் அந்த சிந்தனை ஓட்டம்  மாறவே போவது இல்லை...   தமிழ் மக்களுக்கு வேறு தீர்வை பெற்று தர உங்களை போண்ற முதலாளிகளின்  கூலிகள் முயலாதவரை சாத்தியமே இல்லை...   

 

உலகிலை இருக்கும் எந்த மக்களாகட்டும்  விடுதலை எண்று போராட ஆரம்பித்த பிறகு எல்லா வகை வளிவகைகளையும்  தேடி ஓடிக்கொண்டு இருப்பதை நீங்கள் பயங்கரவாதம் என்கிறீர்கள் என்பது புரிகிறது... 

 

மக்களை அடிமையாக இருக்க வைப்பதுதான் இலங்கை  இந்திய  அமெரிக்க கொள்கை...   முதலாளித்துவ அடிப்படையே அப்படி தான் கட்டமைக்க பட்டு இருக்கிறது...   இந்த விடுதலை உணர்வு பெறும் மக்களை மழுங்கடிக்க   இந்த அரசுகள் நீண்டகாலமாக  தேர்ந்தெடுத்த  சொல் கோவைகளில் ஒண்று தான் பயங்கரவாதமும் அதுக்கு எதிரான போரும்... 

 

ஈராக்கில் அமெரிக்காவுக்கு எண்ணை விக்காத அரச அதிபர் கூட பயங்கரவாதியானது இந்த மேலாதிக்கம் எண்ணம் தான்... 

 

இந்த மேலாதிக்க வாதிகளின் எண்ணத்துக்கு எப்போதும் கூழை கும்பிடு போட்டு வரவேற்பது கூட உங்களை போண்ற வியாதிகள் தான்...  

 

தமிழன் சுதந்திரமாக இருக்க வேண்டும் சிந்திப்பதும் கூட இப்போது  உங்களை போண்ற எசமானின் அடிமைகளால் வெறுக்க படுவது எப்போதும் நடப்பதே... 

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில் தமிழர்களின் பிரச்சனைக்கு ஓர் தீர்வு வரவேண்டுமென்றால் புலிகள் அழியவேண்டும் என்று முற்றாக நம்பியவர்களில் நானும் ஒருவன் .

அதற்கு பல காரணங்கள் அதில் முக்கியமானது போராட்டம் இப்படியே தொடந்தால் நாட்டில் தமிழ் இனத்தின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.

புலம் பெயர் தேசங்களின் விடுதலை என்ற பெயரில் வியாபாரிகள் கைகளில் பொறுப்புகள் போய் ஒரு மிக பிற்போக்கான இனாமாக வாழ வழி வகுத்துவிடும் .

முதலாவது நடைபெற்று முடிய இந்த வியாபாரிகள் தொலந்துவிடுவார்கள் என்று நினைக்க வேறு திசையில் தமது இருப்பை பாதுக்காக்க அமைப்புகளை தொடங்கி வியாபாரத்தை தொடர்கின்றார்கள் .

இது இலங்கை அரசிற்கு மிக சாதகமான ஒருவிடயம் ,நாட்டில் எது வித தீர்வையும் வைக்காமல் புலி பூச்சாண்டி காட்டிக்கொண்டேஇருக்கலாம் .

எங்களை மாதிரித்தான் அமெரிக்காவும் சிந்திக்கின்றது என நினைக்கின்றேன் .

 

 

 

 

 

புலிகள் அழிந்சதும் ஒரு வகையில் நல்லதுதான்
 
தமிழ்ச் சனங்களுக்கு கொழும்பு விலையில் எல்லா சாமானும் வேண்டலாம்.

புலிகளில் உள்ள வெறுப்பினால் எம்மினம் எதிர்காலம் இல்லாமல் இலங்கையில் முற்றாக அழிந்தாலும் பரவாயில்லை நாங்கள் இலங்கையில் எந்த அரசாங்கம் ஆண்டாலும் அவர்களின் காலைபிடித்து நாங்களும் எங்கள் உறவினர் நண்பர்களும் சொகுசாக வாழ்ந்து எங்கள் வாழ்க்கை ஓட்டுவோம். தமிழர்கள் சிங்களவர்ருடன் சேர்ந்து தண்ணி அடிச்சு பைலா ஆடிவாழ்வதான் எங்களுக்கு விருப்பம் அதற்கு மேல் போனால் பயங்கரவாதிகள் பூச்சாண்டிகள்.. இதற்காக எங்களுக்கு ஒப்பந்தப்படி பலகோடிகாசு எங்களுக்கு செலவு செய்கிறான்.. இதனை வாங்கிகொண்டு சும்மா பிழைக்க தெரியாத ஆளாய் இருக்கிறீர்கள்..சுதந்திரமா? அது கிலோ என்ன விலை? நக்குண்டு வாழ்வாரே வாழ்வார் மிகுதி எல்லாம் சுதந்திரம் கேட்டு அழிந்து போவார். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வழிகாட்டி..

 

பிச்சைக்காரன்.. மாடி வீட்டைப் பார்த்து.. இது ஓர் நாள் பூகம்பம் வர இடிஞ்சு கொட்டினத்தானே போகுது.. என்று நினைக்கலாம்.

 

அதுபோல.. தம்மால் முடியாததை புலிகள் சாதித்து விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பல மானிடர்கள் இந்தப் பூமிப் பந்தில் உள்ளார்கள். அதில் அமெரிக்காவும் அடங்கும்.

 

அதற்காக.. நாம் பிச்சைக்காரனாகி.. பிளாட் பாரத்தில்... வாழ முடியுமா என்ன. அப்படித்தான் விடுதலையும் சுதந்திரமும். அதன் சுகத்தை அனுபவித்தவனுக்குத்தான் அதன் பெறுமதி புரியும். பிச்சைக்காரனுக்கு..???! :lol::icon_idea:


அதற்காக பிச்சைக்காரனைத் திட்டி என்ன பயன். அவனுக்கு அவனின் இயலாமையை மறைத்து வாழ ஆசை.. ஆனால்.. அது வெளிப்படையானது. அப்படித்தான் சிலர் இங்கும். :icon_idea:

அமெரிக்காவிற்கு இலங்கையின் பூச்சாண்டி நல்லா எடுபடுகிறது..தமிழ்மக்களுக்கு நடக்கும் அ நீதிகள் அதற்குரிய உடன் நடவடிக்கைகள் மட்டும் ஒன்றும் புரிவதில்லை.. தமிழர்களின் விடிவிற்கு சம்பந்தமில்லாத சம்பந்தரும் பின்வாசல் சுமந்திரனும் வெளி உலகிற்கு சிங்களவனின் தலையாட்டிகளாக இருக்குமட்டும் தமிழர்களுக்கு விடிவில்லை. இவர்கள் சொல்வதைதான் உலகம் நம்பும். ஜெனிவா இலங்கை தூதரகத்தில் சுமந்திரனுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி அறிந்திருபீர்கள்.. உங்கள் ம மண்டைக்கு பலவிடையங்கள் புரியவில்லை..காலத்தின் கோலம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆதங்கப்படலாமே தவிர.. செயல் என்ன செய்ய முடியும்..???! இங்கு அதை இட்டுத்தான் சிந்திக்கனும்.

 

எமக்கு எதிரிகள் உள்ளும் வெளியிலும்.. இந்த நிலையில்......... செயல் ஒன்றை வகுப்பதே பெரிய விடயமாக உள்ளது. இதைத் தாண்டனும்.. அதுதான் தேவை. :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில் தமிழர்களின் பிரச்சனைக்கு ஓர் தீர்வு வரவேண்டுமென்றால் புலிகள் அழியவேண்டும் என்று முற்றாக நம்பியவர்களில் நானும் ஒருவன் .

அதற்கு பல காரணங்கள் அதில் முக்கியமானது போராட்டம் இப்படியே தொடந்தால் நாட்டில் தமிழ் இனத்தின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.

புலம் பெயர் தேசங்களின் விடுதலை என்ற பெயரில் வியாபாரிகள் கைகளில் பொறுப்புகள் போய் ஒரு மிக பிற்போக்கான இனாமாக வாழ வழி வகுத்துவிடும் .

முதலாவது நடைபெற்று முடிய இந்த வியாபாரிகள் தொலந்துவிடுவார்கள் என்று நினைக்க வேறு திசையில் தமது இருப்பை பாதுக்காக்க அமைப்புகளை தொடங்கி வியாபாரத்தை தொடர்கின்றார்கள் .

இது இலங்கை அரசிற்கு மிக சாதகமான ஒருவிடயம் ,நாட்டில் எது வித தீர்வையும் வைக்காமல் புலி பூச்சாண்டி காட்டிக்கொண்டேஇருக்கலாம் .

எங்களை மாதிரித்தான் அமெரிக்காவும் சிந்திக்கின்றது என நினைக்கின்றேன் .

 

இதைவிட அமெரிக்காவை ஆராலும் அவமதிக்க முடியாது :o:lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட அமெரிக்காவை ஆராலும் அவமதிக்க முடியாது :o:lol:

 

 

அப்பயென்றால் அமெரிக்கா  அவமானத்தால் செத்து 40  வருடங்களாகியிருக்கணும்.... :)

ஒரே வழி புலம் பெயர் நாடுகளில் தமிழ்மக்கள் நன்றாக அரசியலில் ஊடுறுவி ஈடுபடவேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் தமிழ்மக்கள் செல்வாக்குடன் தான் ஆட்சிஅமைக்கலாம் என்று பிரதான கட்சிகள் நினைக்கவேண்டும். உதாரணம் கனடா. அதே நேரம் ஆழ ஊடுறுவிகள் நுழையாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாடும் எம்மக்கள் செல்வாக்குடன் இருக்கவேண்டும். நாளடைவில் இலங்கையை உலகமுழுவதும் தடைசெய்யப்பண்ணலாம். முடியாது ஒன்றுமில்லை உதாரணம் இஸ்ரேல்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் செயற்பாட்டாளார்கள் அந்த மாதிரி செயற்படுகினம் என கொஞ்சப் பேர் சொல்லிச்சினம்.புலி இருந்தால் தானே தடை செய்யலாம்!.அவர்கள் தான் இல்லையே என்று அமெரிக்கனை பார்த்து கேள்வி எழுப்பலாமே :lol:வாயை மூடிக் கொண்டு இருக்கினம்

புலம் பெயர் செயற்பாட்டாளார்கள் அந்த மாதிரி செயற்படுகினம் என கொஞ்சப் பேர் சொல்லிச்சினம்.புலி இருந்தால் தானே தடை செய்யலாம்!.அவர்கள் தான் இல்லையே என்று அமெரிக்கனை பார்த்து கேள்வி எழுப்பலாமே :lol:வாயை மூடிக் கொண்டு இருக்கினம்

 

அமெரிக்காவில் தானே நா.க.அ தலைவர் உள்ளார்..அவர் ஒரு வக்கீல் கூட எதாவது செய்வார்.....

 

உலகம் முழுவதையும் பேக்காட்ட கூடிய சிங்களவன்.... ஆனால் அந்த சிங்களவனை விட நாங்கள் கெட்டிக்காரர்... :)

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் செயற்பாட்டாளார்கள் அந்த மாதிரி செயற்படுகினம் என கொஞ்சப் பேர் சொல்லிச்சினம்.புலி இருந்தால் தானே தடை செய்யலாம்!.அவர்கள் தான் இல்லையே என்று அமெரிக்கனை பார்த்து கேள்வி எழுப்பலாமே :lol:வாயை மூடிக் கொண்டு இருக்கினம்

 

 

உண்மைதான்

ஆனால் புலி  இல்லாத புலம்பெயர் செயற்பாட்டாளர் ஒருவர் கூட இல்லை

இது தான் நிஐம்.............

அமெரிக்காவுக்கும் தெரியுது

தமிழ் மக்கள் தான் புலிகள்

புலிகள் தான் தமிழர்கள் என

ஆனால் நாம் ஒத்துக்கொள்ளமாட்டம்

காரணம்

ஏதாவது   செய்ய  சொல்வார்களல்லே.... :(

அலுவல் எல்லாம் அந்த மாதிரி முடிந்துவிட்டது இனி ஏன் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் .அவர்கள் இப்ப தங்கட தலை தப்பும் வேலையில் அல்லோ ஓடித்திரியினம்.

நாட்டில இருக்கும் அரசியல்வாதிகள் இனி தமது அரசியலை பார்த்துக்கொள்ளுவார்கள் அவர்களுக்கு நாங்கள் ஒத்தாசை புரிந்தால் சரி .


இங்கு ஒரு ஆள் "மொழி " படத்தில் எம் எஸ் பாஸ்கர் கணக்கு இப்பவும் "காந்தி செத்திட்டாரா" என்றுகொண்டு திரிகின்றார்  .

ஊரிலை இருக்கிற அரசியல்வாதிகளே  புலம்பெயந்தவையின் புண்ணியத்திலைதான் ஐநாவுக்கே வந்து போனவை...   அதை தவிர அவை எதையும் இவ்வளவு காலமாக செய்யவும் இல்லை...    இதுக்கை அவர்களின் தயவில்லை  பிரச்சினை தீருமாம்... 

 

இப்பிடி இருக்கு எங்கட ஆக்களின் உலக அறிவு... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.