Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் சொல்லமாட்டார்களா....

Featured Replies

லண்டனுக்குள் என் வீடு...

என் வீட்டுக்கு முன்பாக...ஒரு

பேரூந்து தரிப்பிடம்..

நான் வேலைக்கு

செல்லும் நேரங்களில்..

அந்த சோதரி..

அங்கே.. பேரூந்துக்காக

காத்திருப்பாள்..

ஒழுக்கமான.. உடை..

நீறிட்ட நெற்றி..

மண்வாசனையோடிருப்பாள்...

ஒரு காத்திருப்பின் போது

சில காலிப்பையன்கள்..

சுற்றிக் கலாட்டா..

கலங்கிக்கொண்டிருந்தாள்..

நானும்..என்

நண்பனும்..அவர்களை...

விரட்டியதும்..

நன்றி அண்ணாவென்றாள்..

தினசரி சிரிப்பாள்..

வணக்கம் சொல்லுவாள்...

காலம் போய்க்கொண்டிருந்தது..

ஆடை மாறிக்கொண்டிருந்தது..

அலங்காரம் கூடிக்கொண்டிருந்தது...

நவநாகரீக நங்கையானாள்..

ஒருபோது..வைபத்தில்..

மது அருந்திக்கொண்டிருந்தாள்....

அருவருப்பையும்...

முகம் சுளிப்பையும்..

சில பெண்கள் பெருஞ்சிரமத்துடன்...

விழுங்கிக்கொண்டிருந்தார்கள

  • Replies 125
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி அந்தபெண் அப்படி என்ன செய்hவிட்டாள் இப்ப வெள்ளைகாரனோடு சுத்தி தண்ணியடிச்சா இது பெரிய குற்றமா?? ஏன் இங்கு தமிழன்கள் யாரும் வெள்ளை காரிகளோடு சுத்தி தண்ணியடித்ததே இல்லையா?? அதை தமிழிச்சி செய்தால் மட்டும் உடைனே குத்துதா?

  • தொடங்கியவர்

மன்னிக்கனும் சாத்திரி...

உங்களை மாதிரி

மனபக்குவம்..

எனக்கு வராதென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி அந்தபெண் அப்படி என்ன செய்hவிட்டாள் இப்ப வெள்ளைகாரனோடு சுத்தி தண்ணியடிச்சா இது பெரிய குற்றமா?? ஏன் இங்கு தமிழன்கள் யாரும் வெள்ளை காரிகளோடு சுத்தி தண்ணியடித்ததே இல்லையா?? அதை தமிழிச்சி செய்தால் மட்டும் உடைனே குத்துதா?

யதார்த்தமாக எமது வாழ்வியல் முறையோடு தங்கள் கருத்தை இணைத்துப்பார்த்தால் தங்களுடைய கருத்து ஏற்கக்கூடியது அல்ல. அது உங்களுக்கும் தெரியும்.. சும்மா விதண்டாவதம்போல் தான் தென்படுகிறது.

இதில் யார் அவ்வாறு செய்தாலும் பிழைதானே தவிர பெண் ஆண் என்றது அல்ல பிரச்சனை..

தங்களுடைய கருத்து இருபாலாரையும் ஊக்குவிப்பதுபோல் உள்ளது..

கொஞ்சக் காலமா யாழ்க்களம் அமைதியான நீரோடையா இருந்தது. இப்ப எந்தப் பக்கம் போனாலும் சூறாவளியாக்கிடக்கு

:):):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சக் காலமா யாழ்க்களம் அமைதியான நீரோடையா இருந்தது. இப்ப எந்தப் பக்கம் போனாலும் சூறாவளியாக்கிடக்கு

:):):lol:

வாழ்க்கையொன்றும் பூந்தோட்டம் அல்ல.. அது ஒரு போராட்டம்.

:)

  • தொடங்கியவர்

வாதாட்டங்கள் இல்லாமல்

நியாயமில்லை..

போரயட்டங்கள் இல்லாமல்

வெற்றியில்லை...

கண்ணில் விழுந்த சம்பவத்தை..

மனதில் தோன்றிய வேதனையை எழுதிவிட்டேன்..

அது சாத்திரியை எவ்வித்தில் கோபமுற வைத்ததென தெரியவில்லை..

நான் பெண்ணைத் தாக்கியோ..

ஆணை ஆதரித்தோ பேசவில்லை..

தவறு..

யார் இழைத்தாலும் தவறுதான்..

தவறை கண்டுகொள்வதும்..

வந்து சொல்வதும் தவறென்றால்..அது

சரியல்லவே...

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை நாங்கள் கட்டாய்படுத்தி அடக்கி வைத்திருக்கிறோம் போல கிடக்கிறது அது தான் வெளிநாடுகளில் நம்மவர்கள் வந்தவுடன் இப்படியான செயல்களும் நடைபெறுகின்றன விவாகாரத்து வீதங்களும் இங்கு தான் அதிகம் இதில நாங்கள் குறை சொல்ல முடியாது அப்படி வாழ நினைப்பவர்கள் வாழலாம் ஒழுங்காக வாழ நினைப்பவர்களும் வாழலாம்.தனி மனித சுகந்திரம்.இதை நாம் நாட்டின் குறை என்று கூறமுடியாது ஒவ்வொரு தனிபட்டவரின் புத்தி..

ஆமாம் விரக்தியின் எல்லை வரை ?

  • தொடங்கியவர்

ஆமாம்..

இந்த நாட்டின் சுதந்திரம்தான்..

12 வயது பள்ளி மாணவி குழந்தை பெறும் நிலைக்கு

கொண்டு சென்றுவிட்டிருக்கிறது. monday(yesterday) 10pm..channel 4இல்

programme(about bad behaving of 11 -15yrs children )

அதிலே.. கல்லூரி அதிபர் முதல்..ஆசிரியர்..பெற்றோர் அனைவருமே.... வருத்தம் நிறைந்த பேட்டிகள்..

சுதந்திரம் தந்த பரிசு

பிறகென்ன இவற்றையும் கூட சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே..

தாய்...தந்தை..ஆசான்.. புத்தியால்தான்...

சுயபுத்தி வரும்..

இல்லையேல் முதல்கோணல் முற்றுங்கோணல்தான்...

சுதந்திரம் என்ற பெயரில் சூதும் தந்திரமும் தான் இங்கு நடந்துகொண்டிருக்கின்றன. உங்கள் வரிகள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. உண்மையாக நடந்திருக்கின்றது என்னும் போது மனம் கொஞ்சம் கலங்கத்தான் செய்கின்றது.

சாத்திரியின் கருத்திலிருந்து நான் வேறுபடுகின்றேன். விகடகவி தான் பார்த்த ஒரு சம்பவத்தை எழுதியிருக்கின்றார். தமிழ்க் கலாச்சாரத்தின் சீரழிவுக்கு பெண்கள்தான் காரணம் என்ற ஒரு கட்டுரை எழுதவில்லை. எனவே அவரைக்குற்றம் சொல்வது முறையில்லை.

ம்...காலம் கலிகாலம் .... கவிதை தங்கள் மனதை நெருடிய ஒரு காட்சி.... எனது மனதையும் நெருடியது.... நன்று இணைந்திருங்கள்.... :D

கொஞ்சக் காலமா யாழ்க்களம் அமைதியான நீரோடையா இருந்தது. இப்ப எந்தப் பக்கம் போனாலும் சூறாவளியாக்கிடக்கு

:D:lol::lol:

ஹாய் ஆதி

எல்லாம் உங்கள் வால் பண்ணிய வேலை...

ஆதியைப்பார்த்து எல்லோரும் வால் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்... :D

ஒரு சோகமான உணர்வை உங்கள் கவிவரிகளால் நம்முடன் பகிர்ந்து இருக்கின்றீர்கள். ஒரு பெண்ணின் வாழ்வு உங்கள் கண்ணுக்கு முன் அழிந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றீர்கள். மிகவும் வருத்தமான விடயம் தான். ஆனாலும் அந்த பெண்ணுக்குள்ளும் என்ன பிரச்சனையோ?

  • தொடங்கியவர்

சிலருடைய.. வாழ்வியல்

இசைவாக்கம்.. மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது....

இன்னும் நம்மில் பலரும் நம் கலாச்சாரம்.. பண்பாட்டில் நம்பிக்கை

வைத்திருப்பதையிட்டு....நாங்கள

  • கருத்துக்கள உறவுகள்

அறுபது வயது கிழவிகூட ஆறுமுழ சேலையை விட ஜீன்ஸ் தான் வச்தி யாக இருக்குது என்று சொல்லுதுகள்........இந்த இலட்ச்சனத்தில கலாச்சாரம் பண்பாடு??????????

விகடகவி உங்கள் மனதை பாதித்த விடயத்தை கவிதையா எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இந்த விடயத்தை ஒரு கதையாக எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறன்.

மற்றது கலாச்சாரம் பண்பாடு என்றுறது அவையவைண்ட மனசில இருக்கணும். நான் காலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறன் எண்டதுக்காக இந்த குளிருக்கு ஏற்ற உடுப்பு போடாமல் சாறியைக் கட்டிக் கொண்டு போக ஏலுமோ?? அந்த அந்த நாட்டுச்சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறத்தான் வேணும். அதுக்கா அந்த பெண் செய்தது போல் இல்லை.

அறுபது வயது கிழவிகூட ஆறுமுழ சேலையை விட ஜீன்ஸ் தான் வச்தி யாக இருக்குது என்று சொல்லுதுகள்........இந்த இலட்ச்சனத்தில கலாச்சாரம் பண்பாடு??????????

இப்ப என்ன சொல்ல வாறியள் புத்தன். அப்ப புத்தன் நீர் சிட்னில கலாச்சாரத்தை காப்பாற்றுரன் எண்டு வேட்டியோடையோ திரியுறீர்???

:evil: :evil: :evil: :evil: அந்தப் பெண் சொன்னதில் என்ன தப்பு. நானும் சொல்லுறன் நான் இருக்கிற நாட்டுக்கு சாறியை விட பான்ட்ஸ் தான் வசதியாக இருக்கு. இதையே ஊருல இருக்கிற ஒரு பெண்ணிடம் கேட்டீர்கள் என்றால் சாறி தான் வசதி ஏண்டு சொல்லுவா ஏன் என்றால் அங்கத்தை சூழல் அப்படி? எங்க இருந்தால் என்ன அந்த சூழலோடை தானே ஒன்றி வாழ முடியும்.

  • தொடங்கியவர்

நன்றி உங்கள் கருத்துகளுக்கு

நல்ல கவிதை.

நாம் வாழும் நாடுகளின் நடை உடை பாவனை சட்ட திட்டங்களுக்கேற்ப எங்கள் வாழ்க்கை முறையை அமைத்துகொள்வது அந்தந்த நாட்டு மக்களுடன் ஒத்து வாழ்வதற்குரியது.

கலாசாரம் பண்பாடு என்பது பழக்கவழக்கம் ஒழுக்கம் போன்ற பலவிடயங்கள் சம்மந்தபட்டது.

இரண்டையும் போட்டு குழப்புவதாலேயே இந்த சீர்கேடுகள்.

நல்லவேளை.... நான் விகடகவி மாதிரி யோசிக்க தேவை இல்லை...! எனக்குத்தான் கல்யாணம் ஆகீட்டுதே..!

  • தொடங்கியவர்

நல்லவேளை.... நான் விகடகவி மாதிரி யோசிக்க தேவை இல்லை...! எனக்குத்தான் கல்யாணம் ஆகீட்டுதே..!

ஓ... தலயா....

என்ன தல

இப்பிடி மாட்டிவிட்டுட்டீங்க.....

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறியள் புத்தன். அப்ப புத்தன் நீர் சிட்னில கலாச்சாரத்தை காப்பாற்றுரன் எண்டு வேட்டியோடையோ திரியுறீர்???

:evil: :evil: :evil: :evil: அந்தப் பெண் சொன்னதில் என்ன தப்பு. நானும் சொல்லுறன் நான் இருக்கிற நாட்டுக்கு சாறியை விட பான்ட்ஸ் தான் வசதியாக இருக்கு. இதையே ஊருல இருக்கிற ஒரு பெண்ணிடம் கேட்டீர்கள் என்றால் சாறி தான் வசதி ஏண்டு சொல்லுவா ஏன் என்றால் அங்கத்தை சூழல் அப்படி? எங்க இருந்தால் என்ன அந்த சூழலோடை தானே ஒன்றி வாழ முடியும்.[/

அதை தான் நானும் சொல்லுகிறேன் வசதி சூழ்நிலைகேற்ப கலாச்சாரம் பண்பாடு எல்லாம் மாறிவிடும் இங்கே ஜீன்ஸ் போட்டது இலங்கைக்கு போய் அரைகாற்சட்டையோடு நிற்கிறது இதுக்கு என்ன சொல்லுகிறீர்

:?: :?:

அது சரி நான் 60 வயது கிழவியை பற்றி தான் சொன்னனான் நீங்க ஏன் கோவிக்கீறிங்க

:):(:(

:(:(:(:(:(

விகடகவி நன்றாக சொன்னீர்கள் உங்கள் மனவுணர்வு புரிகின்றது. தொடர்ந்து இணைந்து இருங்கள். வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

நன்றி இலக்கியா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.