Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்காணல்: நான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் - தமிழ்க்கவி

Featured Replies

சனல் 4 குறித்தும் இதே நிலைதான். தமிழர்களின் அழிவுகளுக்கான அத்தனை வசதிகளையும் நேற்று செய்தவர்கள். 

சனல் 4 என்ன செய்து கொடுத்தது .

பிரிட்டிஷ் சாம்பிராயத்தில் இருந்து தொடங்குகின்றீர்களா ? எனக்கு உண்மையில் விளங்கவில்லை .

பிள்ளை படிக்கின்றான் இல்லை என்று சொன்னால் இவன் கொள்ளு தாத்தாவும் அப்படித்தான் என்பது போலிருக்கு உங்கள் கருத்து.

இதில் கம்ப சூத்திரம் எதுவுமில்லை இலங்கை அரசும் புலிகளும் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்கள் பற்றி மட்டுமே பேசும் பொருள் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேறு இயக்கத்தில் இருந்த படியால் புலிகளையும் மகிந்த அரசையும் ஒரே தராசில் போடுகிறீர்கள். ஆனால் இவ் உலகமும் தம்ழ் மக்களும் அப்படி நினைக்கவில்லை. அதற்காக புலிகள் குற்றம் செய்யவில்லை என்பதல்ல. ஒப்பீட்டளவில் குறைவு என்பதே. அத்தோடு புலிகள் பலர் இறந்தும் சரணடைந்து இறந்தும் காணாமல் போயும் உள்ளார்கள். ஆனால் மகிந்த அரசு பல ஆயிரம் தமிழ் மக்களையும் சரணடைந்த போராளிகளையும் கொன்று விட்டு இல்லை என்று மார்பு தட்டுகிறார்கள். எப்படி ஒப்பீடு செய்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது??

சனல் 4 குறித்தும் இதே நிலைதான். தமிழர்களின் அழிவுகளுக்கான அத்தனை வசதிகளையும் நேற்று செய்தவர்கள். 

சனல் 4 என்ன செய்து கொடுத்தது .

பிரிட்டிஷ் சாம்பிராயத்தில் இருந்து தொடங்குகின்றீர்களா ? எனக்கு உண்மையில் விளங்கவில்லை .

பிள்ளை படிக்கின்றான் இல்லை என்று சொன்னால் இவன் கொள்ளு தாத்தாவும் அப்படித்தான் என்பது போலிருக்கு உங்கள் கருத்து.

இதில் கம்ப சூத்திரம் எதுவுமில்லை இலங்கை அரசும் புலிகளும் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்கள் பற்றி மட்டுமே பேசும் பொருள் .

 

அரசும் புலிகளும் தமிழ்மக்களுக்குச் செய்த அநியாயங்களை நான் எங்கும் மறுக்கவும் இல்லை நியாயப்படுத்தவும் இல்லை. அவ்வநியாயங்களை யார் கேட்கின்றார் ஏன் கேட்கின்றார் யார் சொல்கின்றார் ஏன் சொல்கின்றார் என்ற சிந்தனையும் உண்டு என்பதே எனது கருத்து.

 

புலிகள் மட்டுமா தமிழ்மக்களுக்கு அநியாங்கள் செய்தரர்கள் ? ஏன் புலம்பெயர்ந்தவன் செய்யவில்லையா நான் செய்யவில்லையா இல்லை நீங்கள் செய்யவில்லையா இல்லை சோபாசக்தி செய்யவில்லையா சாதியம் செய்யவில்லையா மதம் செய்யவில்லையா வர்க்கம் செய்யவில்லையா பிரதேசவாதம் செய்யவில்லையா வேறு இயக்கங்கள் செய்யவில்லையா? புலிகள் ஊடாக இவை எல்லாம் தான் அநியாயங்கள் செய்தது. புலி வெறும் கருவியே ! அதே போர் சிங்களப்பேரினவாதத்தின் கருவிகளே மகிந்தனும் கோத்தாவும். இந்திய மைய அதிகாரத்தின் ஆட்டுவிப்புகள் போட்டி நாடுகளின் ஆட்டுவிப்புகள் என பரந்து விரிந்த ஆளையாள் கொன்று தின்னும் அநியாயங்களை சிங்களவரில் இரண்டுபேர் தலையிலும் புலியின் தலையிலும் கட்டிவிட்டு நான் யோக்கியமாகவேண்டிய எந்த அவசியமும் இல்லையே. அதனால் எவருக்கு என்ன லாபம்?

 

புலி அநியாயம் செய்துவிட்டது என்று ஒருவரும் இல்லை என்று என்னுமொருவரும் சொறிந்துகொள்ளும் நிலைகளுக்குள் நான் இல்லை. அதற்கான அவசியமும் யோக்கியமும் எனக்கு இல்லை. விரும்பியவர்கள் அதை செய்யட்டும்.

 

நாம் காலகாலமாக எமக்குள் இரைதேடப்பழக்கப்பட்டவர்கள். இது ஒரு சைக்கோ நோய். இந்த நோய்க்குள் தொடர்ந்து இருக்க முதுகுசொறிய போன்ற நோக்கில் யார் செய்த தவறுகளையும் அணுக முடியாது. மகிந்தன் செய்த போரக்குற்றங்களை சிங்களப் பேரினவாதம் கட்டியமைக்கப்பட்ட காலம் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டது எப்படி விஸ்தரிக்கப்பட்டது இறுதியில் அது எவ்வாறு முள்ளவாய்க்கலில் தாண்டவமாடியது என்றுதான் சிந்திக்க முடியும். அதுபோல்தான் புலியாயினும் சரி வேறு இயக்கமாயினும் சரி போட்டுத்தள்ளுதல் ஆயினும் சரி எங்கிருந்து அந்த மனநிலை வருகின்றது சாதியம் பிரதேசவாதம் கட்டியமைத்த உளவியல் என்ன எமக்குள் என்ன விதமான ஜனநாயகப்பண்பு சமூக உறவு இருப்பில் இருந்தது என்ற பல சிந்தனைகளோடுதான் அணுகமுடியும்.

 

நான் என்னை ஒரு மோசமான சமூகத்தில் ஒருவனாகவே உணர்கின்றேன். எனது சமூகத்தின் ஏற்றதாள்வுகளும் முரண்பாடுகளும் மனிதகுல விரோத சாதீயப் பகுபாடுகளும் அடிமைக்குணத்தையும் மன மற்றும் அறிவுச் சிதைவையும் பாரம்பரியமாக ஏற்படுத்தி விட்டதாகவே உணர்கின்றேன். அதனால் நேரடியாக ஒருவனை குறைகூறும் அடிப்படை யோக்கியதை எனக்கில்லை. இன்ன இன்னாருக்கு அந்த யோக்கியதை இருக்கென்று நீங்கள் கருதினால் அவர்களை பின்தொடருங்கள். அதையும் கவனித்து உள்வாங்கிக்கொண்டிருப்போம். புலிகளும் அரசும் தமிழ்மக்களுக்குச் செய்த கொடமைகளை மட்டும் பேசுப் பொருளாகக் கொண்டு பேசப்போகின்றீர்களா அதையும் உள்வாங்கிக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவி அம்மா தனது புதிய நாவலை ஊழிக்காலத்தை வெளியிட்ட பதிப்பகத்திற்குக் கொடுத்திருக்கிறார். அந்தப் பதிப்பகம் அந்த நாவலை வெளியிட மறுத்துள்ளது. தடுப்பில் இருந்தபோது இராணுவம் பாலும் தேனும் கொடுத்தது என்ற ரேஞ்சில் அந்த நாவல் எழுத்தப்பட்டிருந்ததாம். அந்த நாவலை வெளியட்டு இராணுவத்தால் இறுதியுத்த களத்தில் துப்பாக்கிகளால் பிடரிகளில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளுக்கு நான் துரோகம் இழைக்கவில்லை என்று அந்த பதிப்பாளர் நாவலை வெளியிட மறுத்திருக்கிறார். தடுப்புமுகாம் பற்றிய அம்மாவின் வெளிவராத அந்த நாவல் குறித்து அறிந்தபோது பம்பைமடுவிலிருந்து வெளியில் வந்த போராளிகள் தமிழ்க்கவி அம்மா பற்றி சொல்லியது நினைவுக்கு வந்தது. 

ஊழிக்காலத்தை வெளியிடுவதாக சொல்லி வாங்கிய இன்னொரு பதிப்பகம் வெளியிட மறுத்தபோது எனது நாவலை மகிந்த ராஜபக்ச வெளியிடுவார் என்று தமிழ்க்கவி அம்மா சொன்னராம் என்பதை நான் அப்போது நம்பவில்லை. ஆனந்தவிகடன் பேட்டி வந்த அன்று இரவு அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு பொறுப்பதாக இருந்த இராணுவ அதிகாரியே இந்த நாவலை இஞ்ச வெளியிடுவம் என்று கேட்டவர் என்று சொன்னார். பிரச்சினை வராதா என்று நான் கேட்டபோது இராணுவத்திற்கு சொன்ன கதையைத்தான் நாவலாக எழுதியதாகவும் சொன்னார். 

முதன் முதலில் தமிழகத்திற்கு வந்தபோது ஆனந்தவிடகனுக்கு கொடுத்த பேட்டியும் (எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=14894) ஊழிக்காலம் நாவலுக்குப் பிறகு இந்த வருடம் ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியும் (“இப்படித்தானே வாழமுடியும்?” http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=91472) தமிழ்க்கவி அம்மாவின் மாற்றத்தை தெளிவாக காட்டுகிறது.

தமிழ்க்கவி அம்மாவின் இந்தச் சடுதி மாற்றங்களும் தக்கெணப் பிழைத்தல்களும் எதற்கானவை? அன்றைக்குப் பேசியவை உண்மையா? இன்றைக்குப் பேசுபவை உண்மையா? இந்த புனைவுகளின் நோக்கம் என்ன? தமிழ்க்கவி அம்மா அனுபவித்தவை, எதிர்கொண்டவை, இழந்தவை கொஞ்சமல்ல. பெரும்பாலான ஈழச்சனங்களும் அதை சந்திருக்கின்றன. அவர் இந்த நேர்காணலில் ஷோபாசக்தியின் அரசியலுக்கு பலியாக்கப்பட்டிருப்பதும் சாதாரணமான விடயமல்ல. அதைப்போல புலிகள் இல்லை. உதவிகள் இல்லை. வருவாய் இல்லை. பணம் இல்லை என்பதற்காக மாற்றிப் பேசுவர்களும் மிக மிக ஆபத்தானவர்கள். அவர்களின் நிலைப்பாடுகள் அதிகாரத்துடனும் லாபங்களுடனும் சம்பந்தப்பட்டது. 

"தலையையும் வாலையும் காட்டிக் கொண்டுதான் வழலாம் - இப்பிடித்தானே வாழ முடியும்" என்று நீங்கள் சொன்னது நீங்கள் வாழும் நிலையைத்தான் சொல்லியிருக்கிறியள் என்று அப்போது தமிழ்க்கவி அம்மாவுக்குச் சொன்னேன். வேற என்ன தம்பி செய்யிறது? என்றார். ஷோபாசக்தி உரையாடலில் எந்தளவுக்கு தலையையும் வாலையையும் காட்டியிருக்கிறார் என்பது தமிழ்க்கவி அம்மாவுக்குத்தான் தெரியும். 

தீபச்செல்வன்

தீ கோழிகள் யார் என்பதை அவளவு எளிதாக முடிவெடுத்து விடாதீர்கள்.

தங்களின் உயிர் உடல் என்று எல்லாவற்றையும் தன இனத்திற்காக உரித்து கொடுத்த கோழிகளை.

எவன் சீண்டினாலும் அவனை நான் மிருகமாகவே பார்ப்பதில்லை.

மிருங்கங்கள் பசியால் மற்றையதை பிடித்து தின்பவை.

 

இதுகள் விளம்பர ருசி கண்ட மிருகங்களுக்கும் அப்பால் பட்டவர்கள்.

ஆமாம் மருதங்கேணி கொஞ்ச காலத்திற்கு முன்பு நெடுக்கரோடு சேர்ந்து நீங்களும் தீபச்செல்வனை துதோகி என்று சொன்னதாக ஞாபகம்[ஞாபகம் பிழை என்டால் மன்னிக்கவும்].இப்போது அவரை புரிந்து கொண்டீர்களா? ....அல்லது எங்களுக்கு ஆதரவாக எழுதினால் அதில் என்ன எழுதியிருக்கு எனப் பார்க்காமல் ஏற்பது.எதிராக எழுதினால் வாசித்துப் பார்க்காமல் தூரோகிப் பட்டம் குடுப்பது உங்கள் வழக்கமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவியன்ரியின் மகன் ஒப்பிலான் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார்கள். அவரது பெயரில் இக்கருத்து சோபாசக்தியின் இணையத்தில் இக்கருத்து வந்துள்ளது.

 

ஒப்பிலன்

வணக்கம்,

தமிழ்க்கவி அவர்கள் எனது அம்மா என்றாலும் கூட அவர் தாயகத்தில் வாழவேண்டும் என்பதற்காக இவ்வாறான மிகைப்படுத்தப்பட்ட புரளிகளை அவர் எழுதுவதை தவிர்க்க முடியாது, ஏப்ரல் மாதம் அம்பலவன் பொற்கணைப் பகுதியில் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இருந்த குடிசையில் அம்மா குடும்பத்தாரோடு இருந்தபோதும் போராட்டம் வெல்லும் எங்கள் தலைவர் வெல்லுவார்.. இன்றும் சில மாதங்கள் அவருக்கு காலம் கூடாது என்று சொன்னதை இப்போதும் நினைத்துப்பார்கிறேன். என்னை மேலதிக கல்விக்காக அனுப்பியதும் அம்மா குறிப்பிடும் அதே அமைப்புத்தான். ஒரு விடயம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இன்னமும் நிறைய பணம் வழங்கினால் இன்னமும் அவரிடமிருந்து அருமந்தன்ன அற்புதமான பழமொழிகளையும் கதைகளையும் வகை தொகையாக பெற முடியும்.

நன்றி

இப்படிக்கு
ஒப்பிலான்
(சட்டத்துறை)

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதியவர் அன்ரியின் மகன் ஒப்பிலான் இல்லையென அன்ரியே மறுத்துள்ள கருத்து இது :-

 

தமிழ்க்கவி

ஒப்பிலன் என்ற பெயரில் தன் பதிவை போட்டிருப்பது ஒப்பிலன் அல்ல . நேருக்குநேர் நின்று பேச துணிவில்லாத ஒரு நுளம்பு. ஒப்பிலனை படிக்க அனுப்பியது பற்றியும் பணத்துக்காக நான் எழுதினேன் எழுதுவேன் என்றும் குழறியிருக்கிறது.பாவம்.

 

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1157#comments

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவியன்ரியின் மகன் ஒப்பிலான் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார்கள். அவரது பெயரில் இக்கருத்து சோபாசக்தியின் இணையத்தில் இக்கருத்து வந்துள்ளது.

 

ஒப்பிலன்

வணக்கம்,

தமிழ்க்கவி அவர்கள் எனது அம்மா என்றாலும் கூட அவர் தாயகத்தில் வாழவேண்டும் என்பதற்காக இவ்வாறான மிகைப்படுத்தப்பட்ட புரளிகளை அவர் எழுதுவதை தவிர்க்க முடியாது, ஏப்ரல் மாதம் அம்பலவன் பொற்கணைப் பகுதியில் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இருந்த குடிசையில் அம்மா குடும்பத்தாரோடு இருந்தபோதும் போராட்டம் வெல்லும் எங்கள் தலைவர் வெல்லுவார்.. இன்றும் சில மாதங்கள் அவருக்கு காலம் கூடாது என்று சொன்னதை இப்போதும் நினைத்துப்பார்கிறேன். என்னை மேலதிக கல்விக்காக அனுப்பியதும் அம்மா குறிப்பிடும் அதே அமைப்புத்தான். ஒரு விடயம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இன்னமும் நிறைய பணம் வழங்கினால் இன்னமும் அவரிடமிருந்து அருமந்தன்ன அற்புதமான பழமொழிகளையும் கதைகளையும் வகை தொகையாக பெற முடியும்.

நன்றி

இப்படிக்கு

ஒப்பிலான்

(சட்டத்துறை)

 

ஒரு மகனாக  அவரது கருத்தே

ஒரு மகன் போன்ற  எனது கருத்தும் நிலையும்.

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் மருதங்கேணி கொஞ்ச காலத்திற்கு முன்பு நெடுக்கரோடு சேர்ந்து நீங்களும் தீபச்செல்வனை துதோகி என்று சொன்னதாக ஞாபகம்[ஞாபகம் பிழை என்டால் மன்னிக்கவும்].இப்போது அவரை புரிந்து கொண்டீர்களா? ....அல்லது எங்களுக்கு ஆதரவாக எழுதினால் அதில் என்ன எழுதியிருக்கு எனப் பார்க்காமல் ஏற்பது.எதிராக எழுதினால் வாசித்துப் பார்க்காமல் தூரோகிப் பட்டம் குடுப்பது உங்கள் வழக்கமா?

 
சுய விளம்பர தாரிகளின் எதிரி நான்.
 
அதை விடுத்து இந்த உலகில் மனிதன் வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒருவன் மரம் வைத்தால் கூட எனக்கு அவன் மேல் ஒரு மரியாதை எப்போதும் உண்டு.
விண்வெளி வீர்கள் மேல் எனக்கு அதி உயர் மரியாதையை உண்டு. எனது அறையின் சுவர்களில் அவர்களது படம்தான் இருக்கிறது.
 
எதையாவது செய்ய நினைப்பவனுக்கே செய்பவனுக்கே அதன் கஷ்டம் புரியும்.
சும்மா படுத்து கிடப்பவன் இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என்று பிதற்றி கொண்டே இருப்பான்.
 
இந்த உலகில் இருக்கும் அனைத்தும் பிழைகளில் இருந்து திருத்தபட்டவைதான்.
நாட்டில் இருக்கும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு அரசு எங்கும் இல்லாதபோது ............ புலிகள் என்ன கடவுள்களா ? எல்லோருக்கும் பிடித்தமாதிரி அரசமைக்க ...
 
ஒரு நாட்டில் மக்கள் என்ற போர்வைக்குள் ...
கல்வி கற்றவன் இருக்கிறான் ..........
காதல் இல்லாவிட்டால் சாவதே மேல் என்று செத்தவன் இருக்கிறான் 
பெண் பித்து பிடித்து அதற்காக நாட்டை காட்டி கொடுத்தவன் இருக்கிறான்.
மூளை வளர்ச்சி குன்றி விசர் பிடித்தவன் இருக்கிறான்.
சுத்த சுயநல வாதி இருக்கிறான்.
இவர்களையெல்லாம் ஒரு பட்டியில் கட்டி மேய்ப்பவன் ............. முழு பட்டியையும் மேய்ப்பது பற்றியே சிந்திக்க முடியும்.
 
ஒட்டுமொத்த தமிழரும் புலிகள் தலையில் போராட்டத்தை கட்டிவிட்டுவிட்டு .
எங்கள் வாழ்வை பார்த்துகொண்டோம். இனியாவது நாங்கள் நாட்டுக்கும் எமது இனத்திற்கும் செய்த துரோகத்தை  பற்றி பேசுவோமா ? அதற்கு யாரும் தயார் இல்லை.
 
இறுதி நேரத்தில் இருந்த ஒரே தெரிவு கட்டாய ஆட்செர்புத்தான். அது எல்லா நாடிலும் இருகிறது.
அதுதான் சரியானதும் நீதியானதும். நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் நாளை கனடா எம்மீது போர்தொடுத்தால். இவளவு நாளும் இங்கிருந்து காலாட்டி கொண்டு அனைத்து சுகத்தையும் அனுபவித்த எல்லோரது கடமையும்  இந்த நாட்டை காப்பதுதான்.
அமெரிக்கா பிடிக்கா விட்டால் இப்போதே போய் கனடாவில் குடியேறலாம்  அல்லது கசகாசிஸ்தானில் போய்  குடியேறலாம். இறுதிவரை இங்கிருந்து நக்க வேண்டும் ............. நக்கி பிழைப்பிற்கு இங்கு தட்டுபாடு வரும்போது..... அமெரிக்கா செய்தது எல்லாம் பிழை. இவர்கள் நீதி தேவைதைகள் ............. நீதி சொல்கிறார்களாம்.
 
கட்டாய ஆட்சேர்ப்பு தொடங்க முன்பு இவர்கள் இரண்டு மூன்று தடவை கருபுலியாய் போய் வெடித்து இப்போ  மறுபிறப்பு எடுத்து வந்திருக்கிறார்களா ?
 
விடுதலை போரை தமது உயிர்களை அர்பணித்து நடத்திய தன்னலம் அற்ற போராளிகள் மேல் யார் கை நீட்டினாலும்  அவன் துரோகிதான். (அல்லது மண்டை பிழையானவர்கள் இங்க யாழ்களத்தில் இருக்கும் சிலரைப்போல) தீபச்செல்வன் இல்லை அவரது அம்மம்மா எழுதினாலும் அதைப்போல ஒரு துரோகம் இருக்க முடியாது.
 
தவறுகள் சம்பவங்கள் எல்லா இடமும் இருப்பதுதான். என்னையே புலிகள் இரண்டு தடவைகள் கைது செய்து வைத்து இருந்தார்கள். (இரு முறையும் என் மேல் எந்த தவறும் இல்லை) அது என்னுடைய தனிபட்ட வாழ்வோடு சம்மந்த பட்டது. காங்கேசன்துறையில் என்னை கொண்டு சென்று  பங்கர் வெட்ட விட்டார்கள் 1990 தீபாளி அன்று பலாலியில் இருந்து இராணுவம் முன்னேறி  கட்டுவன் வரைக்கும் வந்த பின்பு என்னை விட்டார்கள். நான் மல்லாகம் போய்கொண்டிருக்கும் போது ஒரு எல்ப் வந்து என்னருகே நிற்கிறது உள்ளே எனது நண்பர் ஒருவர் காயபட்ட போராளிகளை ஏற்ற போய்  கொண்டு  இருக்கிறார். அதே எல்பில் ஏறி நானும் போய் காயபட்டவர்களை ஏற்றி  கொண்டு சென்று மானிப்பாய்  மருத்துவ மனையில் சேர்த்தோம். அது எனது நாட்டோடு சமந்தபட்டது. (நாம் அங்கு சென்று சேர்ந்த போது ஒரு பாரிய சோகம் நடந்திருந்தது. அம்பாறை மாவட்ட தளபதி அண்டனி வீரமரனமாகி இருந்தார். எல்லோராலும் ஈடு கொடுக்க முடியாத இழப்பு  எல்லோரும்  பேய் அறைந்தமாதிரி இருந்தார்கள். காயபட்ட போராளிகள் சிலர் எம்மோடு வர மறுத்து திரும்பவும்  சண்டைக்கு போக வாதம் செய்து கொண்டு நின்றார்கள். பின்பு மாதகல் ராஜன் அவர்கள் வந்து எல்லோரையும் ஏறி போகும்படி  சொல்லிவிட்டார் )
சராசரி ஆறு ஆறிவும் செயற்பாட்டில் இருக்கும் ஒரு மனிதனுக்கு இரண்டிற்கும் இடையே ஆனா இடைவெளி புரியும். 
 
என்னுடைய மருமகள் ஒருவரும் கட்டாய ஆட்சேர்ப்பில் சென்று வீரமரணம் ஆகிவிட்டார். அவர்கள்  வீட்டில் சொல்லமுடியாத  கஸ்ரம் காசு அனுப்பினேன் நான் இப்போதும் புலிகளுக்கு ஆதரவம் என்று காசை வாங்கவில்லை. சுற்றி இருக்கும் எல்லா வீட்டிலும் இப்படி எதோ ஒரு கதை இருக்கிறது.
நாங்கள் எமது கடமையை செய்திருந்தால் .............
கட்டாயமாக ஆள் சேர்க்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருந்திராது அல்லவா? 
 
இன்று தங்களை சபையில் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் பிணங்களை அடுக்கி வைத்து சுய விளம்பரங்களுக்காக மேலே ஏறி நின்றுகொண்டு. விட்ட பிழைகளை திருத்து கிறார்களாம்.
திருத்திபோட்டு .....?
முப்படை நடத்த போகிறார்கள்.
நாங்கள் அப்படியே அவலாக நினைத்து இந்த அருவருடி தனங்களை மெல்ல வேண்டும்.
 
எனக்கு பிறந்த வீடும் அப்படி ....
புகுந்த வீடும் அப்படி ......
நாடு என்றால் எழுந்து நின்றுதான் பழக்கம்.
 
இந்த நாய்களின் குரைச்சல் களுக்கு காது கொடுக்க வேண்டிய அளவிற்கு எனக்கு மூளை வியாதி இல்லை. 
"ஒட்டுமொத்த தமிழரும் புலிகள் தலையில் போராட்டத்தை கட்டிவிட்டுவிட்டு .
எங்கள் வாழ்வை பார்த்துகொண்டோம். இனியாவது நாங்கள் நாட்டுக்கும் எமது இனத்திற்கும் செய்த துரோகத்தை  பற்றி பேசுவோமா ? அதற்கு யாரும் தயார் இல்லை."
 
இப்படி ஒரு முழு பொய்யை எழுதுவரிடம் நாம் நேரத்தை விரயம் செய்வது வேஸ்ட் 
  • கருத்துக்கள உறவுகள்
ரொம்ப ரொம்ப வேஸ்ட் ....
பொத்தி வைத்திருந்தால் கண்டவைகளை உள்ளனுப்பி பின்பு ஒரு குளையாலக  வெளியில் எடுத்துவிட நேரம் தேவைப்படும்.
  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி கொஞ்ச காலத்திற்கு முன்பு தீபச்செல்வனும் சோ.சக்திக்கு பேட்டி கொடுத்திருந்தார்.அந்தப் பேட்டியை வாசித்து விட்டு தான் தீ.செல்வனை நீங்கள் திட்டி தீர்த்ததாக ஞாபகம்.இப்ப தீ.செல்வன் தமிழ்கவியை கேள்வி கேட்கிறார்.அவரோடு சேர்ந்து நீங்களும் தமிழ்கவியைக் கேள்வி கேட்கிறீர்கள்...நாளைக்கு இன்னொருவர் சோ.சக்திக்கு பேட்டி கொடுத்தால் இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த புதியவரை கேள்வி கேட்பார்கள்.

அடுத்தது நீங்கள் மேலே எழுதிய கருத்தின் படி பார்த்தால் புலிகளை கேள்வி கேட்கும் எந்த அருகதையும் உங்களுக்கும்,எனக்கும் இல்லை சரியா? பிறகு எப்படி தமிழ்கவியை நீங்கள் விமர்சிப்பீங்கள்

புலிகளது தோல்விக்கு புலம் பெயர் தமிழராகிய நாமும் முக்கிய காரணம் என்று நான் எப்பவோ எழுதி விட்டேன்

Edited by ரதி

புலிகளது தோல்விக்கு புலம் பெயர் தமிழராகிய நாமும் முக்கிய காரணம் என்று நான் எப்பவோ எழுதி விட்டேன்

 

ஒரு சிறு திருத்தம்...எல்லா புலம் பெயர் தமிழரும் இல்லை...சாதரணமானவர்கள் எல்லாம் தங்கள் அலுவலை பார்க்க...படம் காட்டவும் கலெக்சனுக்கு வெளிகிட்டவர்கலாலுமே வந்த வினை....தலைவரும் எல்லா தங்களுக்கு கீழே என்ற எண்ணத்தில் போய் ஆப்பில் ஏறி இருந்ததே இவ்வளவுக்கும் காரணம்...கருணா பிரிந்த போதே எல்லாத்தையும் சுய பரிசோதனை செய்திருக்க வேண்டும்...

 

இலங்கை இராணுவம் சரணடைந்தவர்களை சுட்டார்கள் என்று கூக்குரல் இடுகிறோம்....தமிழ்கவி தனது மகனை கொண்டுபோய் தானே கையளித்திருகிறார்.....அதற்காக எவரவாது வாய் திறந்தார்களா?

 

(இனி வருவார்கள்...அது பொம்பர் தாக்குதலில் தான் செத்தது என்று)......

 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி கொஞ்ச காலத்திற்கு முன்பு தீபச்செல்வனும் சோ.சக்திக்கு பேட்டி கொடுத்திருந்தார்.அந்தப் பேட்டியை வாசித்து விட்டு தான் தீ.செல்வனை நீங்கள் திட்டி தீர்த்ததாக ஞாபகம்.இப்ப தீ.செல்வன் தமிழ்கவியை கேள்வி கேட்கிறார்.அவரோடு சேர்ந்து நீங்களும் தமிழ்கவியைக் கேள்வி கேட்கிறீர்கள்...நாளைக்கு இன்னொருவர் சோ.சக்திக்கு பேட்டி கொடுத்தால் இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த புதியவரை கேள்வி கேட்பார்கள்.

அடுத்தது நீங்கள் மேலே எழுதிய கருத்தின் படி பார்த்தால் புலிகளை கேள்வி கேட்கும் எந்த அருகதையும் உங்களுக்கும்,எனக்கும் இல்லை சரியா? பிறகு எப்படி தமிழ்கவியை நீங்கள் விமர்சிப்பீங்கள்

புலிகளது தோல்விக்கு புலம் பெயர் தமிழராகிய நாமும் முக்கிய காரணம் என்று நான் எப்பவோ எழுதி விட்டேன்

 

விமர்சிப்பதா ?
 
தமது மத்தத்தை பற்றி ஏதும் தெரியாது தெரிந்து கொள்ளவும் எந்த முயற்சியும் எடுபதில்லை. சும்மா றோட்டால் 
போறவன் வாரவனின் கதைகளை எல்லாம் மதம் என்று ஆக்கி இன்று ஒரு சாக்கடையாக ஓடுகிறது இந்து மதம். எமது முன்னையவர்கள் தமது கடின உழைப்பலும்  அர்பனிப்பாலும் எவளவு அருமைகளை சேர்த்து வைத்தார்கள். இன்று எல்லாம் சாக்கடையில் கலந்து கழிவு நீராக ஓடி கொண்டிருக்கிறது.
யோகாசனம் பற்றிய அறிவு  எத்தனை தமிழர்களுக்கு இருக்கிறது ??
ஆயுள்வேதம் பற்றி எத்தனை தமிழர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் ?
நஷ்டத்திரங்கள்  பற்றிய அறிவு எத்தனை தமிழர்களுக்கு உண்டு ?
 
நானும் நீங்களும் வசிக்கும் வீடில் இருந்து நடக்க  தொடங்கினால்  ஒரு மைல் தூரத்திற்குள் ஒரு வெள்ளை காரன் கற்றுகொடுக்கும் யோகா பள்ளியை கண்டுகொள்ளலாம்.
ஆனால்............. டென்மார்க்கில் ஊரை ஏய்க்கும் ஒரு --------------- சாமி என்று சொல்லி வேடம் ஆடுகிறா-- தெரியாத தமிழர்களே இல்லை. 
 
அதே போல்தான் இதுவும்  விமர்சனம் என்பதன் பொருளே தெரியாது. வாந்திகளுக்கு விமர்சனம் என்று பெயர் சூட்டிகொண்டிருக்கிரார்கள். விமர்சனம் என்பது ஒன்றை பற்றி விமர்சிப்பது .... விமர்சிப்பதற்கு அங்கு ஒரு ஆக்கம் இருக்க வேண்டும். ஏதும் இல்லாது சொந்த இனத்தை சுய விளம்பரம் தேட விற்கும் இதுகளை எல்லாம்  விமர்சிக்க என்ன இருக்கிறது ??
சமூகத்திற்கு ஒவ்வாதவைகளை சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும். அதைதான் நான் செய்கிறேன்.
ஆனால் இது ஒட்டு உண்ணி தெள்ளு போன்றவை நக்குவதற்கு ஒரு துளி நீர் இருந்தாலும் அங்கே இருந்து  பிழைப்பை பார்த்து கொள்ளும். எளிதாக விரட்ட முடியாதது.
 
சோபா "சத்தி" ஆங்கிலத்தில் அமேத்த்கர்  அருந்தததி ராய் போன்றவர்கள் எழுதியவற்றை படித்து விட்டு  தான் புதிதாக கண்டு பிடித்ததாக   தமிழில் எழுதும் ஒருவர். மூலத்தை படிக்க வசதி கிடைக்காதவர்களுக்கு   அது அவலாக இருந்திருக்கலாம். இப்போ மூல தனங்களுக்கு தட்டுபாடு வந்தவுடன். இந்த நாதாரி வேலைக்கு  வெளிக்கிட்டு  இருக்கிறார். தமிழ் கவி எதோ எழுத்தாளராமே ? தன்ர வண்டவாளங்களை  அவ தானாக எழுதி   விடலாமே ?  அவாவிட்கும் விளம்பரம் தேவை. இப்போ இதுதான் ற்றெண்ட்.
 
இனி தமிழ் கவி வந்து ஏதாவதொரு வெளிநாட்டில் தமிழ் இலக்கிய திருவிழா செய்வார் .... இந்த கும்பல் போய்  பால் ஊற்றும். தங்களை புத்தகம் வாசிப்பவர்களாக விளம்பரம் செய்துவரும் பெட்டிக்கடை காரர்கள் அங்கு போய்  அந்த குப்பைகளை அள்ளி கொண்டு வருவார்கள். தமிழ் இலக்கியத்திற்கு இப்படியொரு அவமானத்தை  தமிழின் எதிரிகாளாலேயே செய்ய முடியாது என்பதுதான் உண்மை. 

Edited by நிழலி
அநாகரீக / ஒருமை சொற்கள் நீக்கப்பட்டன. நாகரீகமாக உரையாடவும்

மருதங்கேணி...சரியாக சொன்னீர்கள்...யாரோ கலவாணிப்பயல்கள் இந்துமதத்தை காட்டி தில்லு முள்ளு செய்வதால் நீங்கள் இந்து மதத்தை எப்படி கீழ்த்தனமாக விமர்சிக்கிறீர்களோ...அதே போல் தான் இப்போது புலிகளுக்கும் நடக்கிறது... :)

 

ஆகவே உங்களுக்கு வந்தா ரத்தம் ..மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்னி இல்லை.....

 

இப்போது புரிகிறதா...சூரியனை பார்த்து நாய் குலைத்தால் ..சூரியனுக்கு பிரச்சனை இல்லை.. (நான் புலிகளை சொன்னேன்.. அவர்கள் சூரியன் மாத்ரி)

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சிப்பதா ?

 

தமது மத்தத்தை பற்றி ஏதும் தெரியாது தெரிந்து கொள்ளவும் எந்த முயற்சியும் எடுபதில்லை. சும்மா றோட்டால் 

போறவன் வாரவனின் கதைகளை எல்லாம் மதம் என்று ஆக்கி இன்று ஒரு சாக்கடையாக ஓடுகிறது இந்து மதம். எமது முன்னையவர்கள் தமது கடின உழைப்பலும்  அர்பனிப்பாலும் எவளவு அருமைகளை சேர்த்து வைத்தார்கள். இன்று எல்லாம் சாக்கடையில் கலந்து கழிவு நீராக ஓடி கொண்டிருக்கிறது.

யோகாசனம் பற்றிய அறிவு  எத்தனை தமிழர்களுக்கு இருக்கிறது ??

ஆயுள்வேதம் பற்றி எத்தனை தமிழர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் ?

நஷ்டத்திரங்கள்  பற்றிய அறிவு எத்தனை தமிழர்களுக்கு உண்டு ?

 

நானும் நீங்களும் வசிக்கும் வீடில் இருந்து நடக்க  தொடங்கினால்  ஒரு மைல் தூரத்திற்குள் ஒரு வெள்ளை காரன் கற்றுகொடுக்கும் யோகா பள்ளியை கண்டுகொள்ளலாம்.

ஆனால்............. டென்மார்க்கில் ஊரை ஏய்க்கும் ஒரு --------------- சாமி என்று சொல்லி வேடம் ஆடுகிறா-- தெரியாத தமிழர்களே இல்லை. 

 

அதே போல்தான் இதுவும்  விமர்சனம் என்பதன் பொருளே தெரியாது. வாந்திகளுக்கு விமர்சனம் என்று பெயர் சூட்டிகொண்டிருக்கிரார்கள். விமர்சனம் என்பது ஒன்றை பற்றி விமர்சிப்பது .... விமர்சிப்பதற்கு அங்கு ஒரு ஆக்கம் இருக்க வேண்டும். ஏதும் இல்லாது சொந்த இனத்தை சுய விளம்பரம் தேட விற்கும் இதுகளை எல்லாம்  விமர்சிக்க என்ன இருக்கிறது ??

சமூகத்திற்கு ஒவ்வாதவைகளை சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும். அதைதான் நான் செய்கிறேன்.

ஆனால் இது ஒட்டு உண்ணி தெள்ளு போன்றவை நக்குவதற்கு ஒரு துளி நீர் இருந்தாலும் அங்கே இருந்து  பிழைப்பை பார்த்து கொள்ளும். எளிதாக விரட்ட முடியாதது.

 

சோபா "சத்தி" ஆங்கிலத்தில் அமேத்த்கர்  அருந்தததி ராய் போன்றவர்கள் எழுதியவற்றை படித்து விட்டு  தான் புதிதாக கண்டு பிடித்ததாக   தமிழில் எழுதும் ஒருவர். மூலத்தை படிக்க வசதி கிடைக்காதவர்களுக்கு   அது அவலாக இருந்திருக்கலாம். இப்போ மூல தனங்களுக்கு தட்டுபாடு வந்தவுடன். இந்த நாதாரி வேலைக்கு  வெளிக்கிட்டு  இருக்கிறார். தமிழ் கவி எதோ எழுத்தாளராமே ? தன்ர வண்டவாளங்களை  அவ தானாக எழுதி   விடலாமே ?  அவாவிட்கும் விளம்பரம் தேவை. இப்போ இதுதான் ற்றெண்ட்.

 

இனி தமிழ் கவி வந்து ஏதாவதொரு வெளிநாட்டில் தமிழ் இலக்கிய திருவிழா செய்வார் .... இந்த கும்பல் போய்  பால் ஊற்றும். தங்களை புத்தகம் வாசிப்பவர்களாக விளம்பரம் செய்துவரும் பெட்டிக்கடை காரர்கள் அங்கு போய்  அந்த குப்பைகளை அள்ளி கொண்டு வருவார்கள். தமிழ் இலக்கியத்திற்கு இப்படியொரு அவமானத்தை  தமிழின் எதிரிகாளாலேயே செய்ய முடியாது என்பதுதான் உண்மை. 

ஓ நீங்களும்,உங்கட ஆட்கள் மட்டும் தான் ஆக்க பூர்வமான விமர்சனங்களை வைப்பவர்களா?????? ஆக்க பூர்வமான விமர்சனங்களை முதலே வைத்திருந்தால் மு.வாய்க்காலில் இவ்வளவு அழிவு வந்திருக்குமா?...குறைந்த பட்சம் கருணாவின் பிரிவுக்கு பின்னராவது ஆக்க பூர்வமாக யோசித்திருக்கலாம்...என்னத்திற்கு அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று ஆராயமல் போட்டுத் தள்ள வெளிக்கிட்டதின் விளைவைத் தான் இப்ப அனுபவிக்கிறோம்.இதில முக்கியமாக கருணா செய்தது சரியா/பிழையா என்பதை விட எதற்காக செய்தார்?,அதன் சாதக,பாதகங்களை கவனிக்க தவறியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சோபா "சத்தி" ஆங்கிலத்தில் அமேத்த்கர்  அருந்தததி ராய் போன்றவர்கள் எழுதியவற்றை படித்து விட்டு

 

இதைக்கேட்டு நிச்சயமாக சோபா சக்தி, ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைக்கேட்டு நிச்சயமாக சோபா சக்தி, ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்......

மருது தான் கேள்விப்பட்ட ஆங்கிலப் புத்தகங்களின் எழுத்தாளர்களை சோபா சக்தி கொப்பியடித்திருக்கலாம் என்று நினைக்கின்றார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அவர் சோபா சக்தியின் எழுத்துக்களையும் படிக்கவில்லை அருந்ததிராயின் எழுத்துக்களையும் படிக்கவில்லை. ஒரு கேள்வி ஞானத்திலும் கூகிள் ஆண்டவரின் துணையுடனும் தத்துவ முத்துக்களை உதிர்ப்பது ஒன்றும் புதிதில்லையே :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ் கவி எதோ எழுத்தாளராமே ?

 

சுத்தம் !

மருது தான் கேள்விப்பட்ட ஆங்கிலப் புத்தகங்களின் எழுத்தாளர்களை சோபா சக்தி கொப்பியடித்திருக்கலாம் என்று நினைக்கின்றார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அவர் சோபா சக்தியின் எழுத்துக்களையும் படிக்கவில்லை அருந்ததிராயின் எழுத்துக்களையும் படிக்கவில்லை. ஒரு கேள்வி ஞானத்திலும் கூகிள் ஆண்டவரின் துணையுடனும் தத்துவ முத்துக்களை உதிர்ப்பது ஒன்றும் புதிதில்லையே :icon_mrgreen:

சோபா சக்தி ஆங்கிலத்தில் சுத்தம் என்றும் அண்ணைக்கு தெரியாது போலகிடக்கு . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதனைத்தான் - அவர் பார்த்தால் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார் என்றிருந்தேன். :)
சரிவிடுங்கள், இந்த லட்சணத்தில் - மேட்டுக்குடி - ஏழை வர்க்கமென்று கேள்விப்பட்ட கதைகளைக் கொண்டு வார்த்தையாட்டம் வேறு. இன்றைக்கு வன்னியில் அகப்பட்டுச் செத்ததெல்லாமே - ஏழை வர்க்கமே - என்றதையும் அது ஏன் என்பதையும் ஆராய்ந்தாலாவது உண்மைகள் வெளிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.