Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் எலிகளாக இருந்தவர்களை புலிகளாக்கினோம் என்கிறார் பிரதியமைச்சர் முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் எலிகளாக பொந்துகளுக்குள் இருந்தவர்களை புலிகளாக்கியவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகளாம் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முதலைக்குடாவில் பொது விளையாட்டு மைதான புனரமைப்பு வேலைகள்  ஆரம்பமாகியது. இதன்போது உரையாற்றுகையிலேயே முரளிதரன் கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
 
கிழக்கு மாகாணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. ஆனால்,  வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக நாங்கள் அங்கு சென்று போராடினோம்.
 
இந்த அநாவசியப் போராட்டத்தால் கிழக்கு மாகாணத்திலிருந்த தமது உறவுகளான 9,000 போராளிகளை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
ஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் மேற்பட்ட கிழக்கு மாகாணப் போராளிகள் பலியாகினர். இழந்த உறவுகள் விலை மதிப்பிடமுடியாத சொத்துக்கள்.
 
வடபகுதி அரசியல் தலைவர்கள் இங்கு வந்து எதனையும் கூறத் தேவையில்லை. அவர்களின் பின்னால் நீங்கள் செல்லவேண்டிய அவசியமும் இல்லை.
 
இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்ததன் காரணமாகவே இன்று உங்கள் பிள்ளைகள் எதுவித அச்சமுமின்றி எங்கும் சென்றுவர முடிகின்றது.
 
நாங்கள் எதுவித அச்சமும் அற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். இந்த யுத்தம் தொடர்ந்து நடைபெற்றிருந்தால், இந்த மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாக இருந்திருக்கும்.
 
நானும் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டு போராட்டத்துக்கு சென்றவன். ஆயுதப் போராட்டம் முதல் இராஜதந்திர போராட்டம்வரை பங்குகொண்டவன். நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்யும்போதே எமது பலம் பெருகுமென அன்று தெரிவித்தபோது என்னை துரோகியாக்கினர்.
 
நாங்கள் இன்னும் பத்திரிகை அறிக்கைகளுக்கும் பொய்யான வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னால் செல்வோமானால் எமது இனத்தின் தலைவிதியை யாராலும் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும்.
 
நாங்கள் அனைத்து வழிகளிலும் பின்தங்கி உள்ளோம். நாங்கள் அரசியலில் பலமான சக்தியாக உள்ளபோதே எமது சமூகம் வளர்ச்சியடையும். அப்போதே எமது உரிமையை காப்பாற்றமுடியும். எமது இனத்தையும் காப்பாற்றமுடியும். எதிர்ப்பு அரசியலினால் எமது சமூகத்தை மீண்டும் படுகுழியினுள் தள்ளவேண்டாம்.
 
நான் உங்களிடம் இனி வாக்குக் கேட்டு வரமாட்டேன். ஆனால், நீங்கள் உங்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒருவரை தெரிவு செய்து அவரை ஆளும் தரப்பில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் பிரதியமைச்சர் முரளிதரன்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=103803420011563452#sthash.0DngCUBg.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

//நாங்கள் எதுவித அச்சமும் அற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். //

 

அப்படியானால் ஏன் லண்டனுக்கு ஓடினீர்கள்? :o 

  • கருத்துக்கள உறவுகள்

//நாங்கள் எதுவித அச்சமும் அற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். //

 

அப்படியானால் ஏன் லண்டனுக்கு ஓடினீர்கள்? :o 

 

இப்படிக்கேட்டா அழுதிடுவன்

எப்படி இருந்தவர்

இப்படி ஆகிட்டாரே என்று... :(

கிழக்கில  பிரச்சினையே  இல்லையாம்

 

போராட்டம் ஆரம்பிக்க முன்பே

எத்தனை எத்தனை அழிவுகளைச்சந்தித்த மண் அது..

 

புலியில் இருந்ததை அடிக்கடி நினைவு படுத்துகின்றார்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கு மாகாணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. 

 

 

நேரத்துக்கு ஏற்றாற் போல பேச ஹெகலியவுடன் கற்றுக்கொண்டிருப்பார் போல. 

கிழக்கு மாகான போராளிகளின் வீரம் ஒப்பில்லாது...!!   போராட்டத்துக்கு வருவான ஒரு தளத்தை அமைக்க பல போராளிகள் வடக்கு நோக்கி வந்து போராடினார்கள்...   அதை கொச்சைப்படுத்த எவருக்கும்  அருகதை கிடையாது...!!  

 

எங்கட தலைவர் செய்த பெரிய தவறே இந்த முதுகெலும்பு இல்லாதவனை தளபதியாக்கி பின்னாலை  பாணு அண்ணையையும் அனுப்பி வைத்ததே...!!! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இப்ப சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்ப்பாகப் பேசுகிறார். ஒரு காலத்தில்.. தேவநாயகம் போன்றவர்களும் இப்படித்தான் பேசி கிழக்கினை இன்று முஸ்லீம்களிடம் சிங்களவர்களிடமும் தாரைவார்த்திருக்கிறார்கள்..!!!! இவர் மட்டும்.. என்ன வெட்டியா விழுத்தப் போறார். :icon_idea::lol:

அம்மான் அம்மான்த்தான் .......

 

போட்டு கொடுங்கோ போட்டு கொடுங்கோ ..

ஓவர் ஓவர்  :D  :D

தமிழ் இன வரலாற்றில் இவனைப்போல ஒரு துரோகி இனி தோன்ற முடியாது. எட்டப்பன், காக்கை வன்னியன் எல்லாம் பக்கத்தில கூட நிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் எலிகளாக இருந்தவர்களை புலிகளாக்கினோம் என்கிறார் பிரதியமைச்சர் முரளிதரன்

 

 

இப்போ

நீங்கள் நரியாகி 

அவர்களை  மீண்டும் எலியாக்கமுயல்வது தடைப்படுகிறதோ...

 

தமிழ் இன வரலாற்றில் இவனைப்போல ஒரு துரோகி இனி தோன்ற முடியாது. எட்டப்பன், காக்கை வன்னியன் எல்லாம் பக்கத்தில கூட நிக்க முடியாது.

 

இவருடன் சில பயணங்களை  ஒன்றாக செய்திருக்கின்றேன்

ஒரே மேவையில் சாப்பிட்டிருக்கின்றேன் :(

அப்ப தெரியாமல் போச்சு.... :(

அதற்காக வருத்தப்படாத நாளே  இல்லை :( 

  • கருத்துக்கள உறவுகள்

# இனி நான் உங்களிடம் வாக்கு கேட்டு வரமாட்டேன்#

அவரும் எவ்வளவு காலம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வந்த கருத்துக்களில்......
ஒரு கருத்தை தவிர  மற்றைய கருத்துக்களில் ஒற்றுமை தெரிகின்றது.... :wub:
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை ... நாள் தான்,
முரளிதரனுக்கும், பிள்ளையானுக்கும்,  தேவானந்தாவுக்கும், சங்கரிக்கும்.......
இன்னும் பல இழி பிறப்புகளுக்கும்..... எலும்பை தூக்கிப் போட சிங்களவன் முட்டாளா?

 

இதுகளும்.... கூவ வேண்டும்,
சிங்களவனிடம், திண்ட சோத்துக்கு.... வஞ்சகம் வைக்காமல், கூவுதுகள்.... விளக்குமாறுகள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.