Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் வாங்க பேசலாம் - 6 -மகிந்தவா மைத்திரியா..??

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிங்களவன் எவன் ஆட்சிக்கு வந்தாலும்... ஈழத்தமிழர்களுக்கு எழுதப்படாத விதி ஒன்றேதான். அதை யாராலும் மாற்றமுடியாது. இது 50/60 வருட கால அரசியலில் தெரிவிக்கப்பட்டு விட்டது.
 
தற்போதைக்கு எம்மை நாமே கட்டிப்பாதுகாக்க வேண்டும். சகல பேதங்களையும் மறந்து எம்மவரை நாமே பாதுகாக்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி, இங்கே எந்தப் பேரினவாதி இலங்கைக்குத் தலைவராக வருகிறார் என்பது எமக்கு முக்கியமல்ல. இந்தச் சிறிய தீவில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மேற்குலகு தீர்மானிக்கும்.  யார் வந்தாலும் அடி வாங்குவது தமிழர்கள்தான். எந்த ஒரு பிரயோசனம் இல்லாவிட்டாலும் தமிழர்களின் நிலைப்பாட்டை உலகுக்குக் காட்டவாவது இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாம். இதுவும் ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாதது என்று நீங்கள் நினைப்பது விளங்குது.  :)

 

எனது, மனதை ...அறிந்த இணையவனுக்கு நன்றி. :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவராலேயே மகிந்தவின் வெற்றியை தடுக்க முடியாது என சிங்களவர்களே கூறுகிறார்கள்? .  புளோரிடாவில் புஸ்ஸுக்கு நடந்தது ஞாபகத்தில் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்களவன் எவன் ஆட்சிக்கு வந்தாலும்... ஈழத்தமிழர்களுக்கு எழுதப்படாத விதி ஒன்றேதான். அதை யாராலும் மாற்றமுடியாது. இது 50/60 வருட கால அரசியலில் தெரிவிக்கப்பட்டு விட்டது.
 
தற்போதைக்கு எம்மை நாமே கட்டிப்பாதுகாக்க வேண்டும். சகல பேதங்களையும் மறந்து எம்மவரை நாமே பாதுகாக்க வேண்டும்.

 

 

நல்ல கருத்து ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.மகிந்தவுக்கு தெரியாமல் மகிந்தவின் கட்சியில் இருந்தவர்களை எதிரணிக்கு இழுத்ததில் மட்டுமல்லாது அங்கிருந்து வந்தவரையே பொதுவேட்பாளர் ஆக்கியதில் (பொது வேட்பாளர் சந்திரிகாவா,ரணிலா என்று போக்குகாட்டிக்கொண்டே) பெருமளவு பணம் கைமாற்றப்பட்டது மாத்திரமல்ல இதில் வெளிச்சக்திகளின் (அமெரிக்கா)பங்கும் இருக்கிறது.அவர்களுக்கு சீனாவின் நண்பனும் ,தங்கள் தாளத்துக்கு ஆடாமல் தங்கள்எதிரிகளின் நண்பன்(சீனா,ரஷ்யா,மற்றும் முஸ்லிம் நாடுகள்)ஆன மகிந்தவை வெளியேற்றி வேறு ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதே முக்கிய நோக்கம்.ஆட்சி மாறிவிட்டால் சர்வதேச போர்க்குற்ற விசாரணை விடயத்தில் அக்கறை காட்ட மாட்டார்கள்.புதிய ஆட்சியாளர்கள் உள்நாட்டில் விசாரணைக்காக என்ற பெயரில் மகிந்தவின் மேல வழக்குப்பட பதிவு செய்து உள்ளே தள்ளி அவரது அரசியலை முடக்குவார்கள்.மாறாக மகிந்த வென்றால் மகிந்தவுக்கு மேலும் நெருக்கடி கொடுப்பார்கள்.மேலும் சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் கூட அதைத் தடுத்து நிறுத்துவதற்காக தமிழர்சார்பான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான அவசியம் ஏற்படும்.(சிறிலங்காவின் தெற்கும் போனாலும் வடக்காகவது தமக்குச்சார்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்) ஆகவே இந்தத் தேர்தலை தமிழர்கள் தங்கள் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பாக மாற்றி ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும்.யாருக்கும் சார்பு நிலை எடுப்பதோ ,மக்களை சுயமாக வாக்களிக்கும்படி கோருவதோ ,தேர்தலைப்புறக்கணிப்பதோ விவேகமானது அல்ல.கூட்டமைப்பு இந்த விடயத்துக்கு கருத்திற்கு எடுக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த திட்டமிட்டே மைத்திரியின் மூலம் எதிரணிக்குள் ஊடுருவி விட்டார்.

மைத்திரி வந்தால் மகிந்த தான் பிரதமர்.
மகிந்த வந்தால் மைத்திரி பிரதமர்.

போன தேர்தலுக்கும் இந்த வித்துவான்கள் மஹிந்தவை தெரிவுசெய்தது தலைவரின் தொலை நோக்கு, நேரிய சிந்தனை.. கூரிய சிந்தனை என்றெல்லாம் சொன்னார்கள். மஹிந்த இரண்டாம் முறையும் தெரிவானால் போர்க்குற்ற விசாரணை வரும் அது..இது.. என்றெல்லாம் சொன்னார்கள். மஹிந்தவும் வந்தார். போர்குற்ற விசாரணையோ அல்லது அப்படி ஒன்றோ கண்ணுக்கும் தெரியேல்ல.

இந்த முறையும் வித்துவான்கள் அதே பல்லவியப் பாடுகிறார்கள்.

ஏதோ.. இந்தியாவின் புண்ணியத்தில் வடமாகாண சபை ஒன்று வந்திச்சு.

தலைவரின் சிந்தனை தமிழரின் நீதியான போராட்டத்தை வல்லரசுகளுக்கு இடையேயான பிணக்கினுள் தள்ளிவிட்டுள்ளது.

வல்லரசுகளின் பிணக்கு தீர முடியாத பிணக்கு.

A

வல்லரசுகளின் பிணக்குகளில் இருந்து எம்முடைய பிரச்சனை விலக வேண்டும். அல்லது வல்லரசுகளின் பிணக்கு எம்முடைய பிரச்சனைய விட்டு விலக வேண்டும்.

மஹிந்த தோற்க வேண்டும் என்று நினைப்பது மேற் சொன்னதில் இரண்டாவது நோக்கத்திற்குத் தான்.

மஹிந்த இரண்டு பிரச்சனைகளையும் இணைத்து வைச்சிருப்பார். ஏனென்றால் தமிழருக்கு ஒன்றும் குடுக்கத்தேவையில்லை. வல்லரசுகளின் பிணக்குகளை தந்திரமாகக் கையாண்டு காலத்தை ஓட்டுவார். இது தான் இதுவரை நடந்தது. மஹிந்த வென்றால் நடக்கப் போவதும் இது தான்.

தலைவரின் சிந்தனை தமிழரை மீள முடியாத படுகுழியில் தள்ளியுள்ளது. ஈழப்போராட்டம் ஒன்று ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் கூட தமிழரின் நிலமை இவ்வளவு மோசமாக போயிருக்காது.

.

நியானி: ஒருமையில் விளித்து எழுதியவை திருத்தப்பட்டுள்ளன

Edited by நியானி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து  வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்

 

ஒரு பொதுக்காரியம் சம்பந்தமாக ஓடித்திரிவதால்......

தொடர்ந்து எழுத நேரம் கிடைக்குதில்லை...

 

இதைத்தொடங்கும் போது

நகைச்சுவைப்பகுதியில் தான் தொடங்கினேன்.

எனது முடிவை  சொல்லணும் என்று வந்தபோது

அதை மாற்றவேண்டி வந்துவிட்டது.

 

இங்கு பெரும்பான்மையானோர்

மகிந்த வரணும் என்ற எனதுநிலையில் இருப்பது  தெரிகிறது

அது தாயக மக்களின் துன்பங்களிலிருந்து  விடுதலையடைதலையே முதன்மையாகக்கொண்டது என்பதும் தெரிகிறது

பார்க்கலாம்..

 

மஹிந்தவுக்கு தான் எனது ஆதரவு: மைத்திரிக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் எமது முயற்சிகள் யாவும் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும்.அவர்கள் மனிதப்படுகொலை அல்லது இனப்படுகொலைக்கு சம்பந்தப்பட்டாதவர்களாக நடந்து கொள்வார்கள்.எல்லா குற்றசாட்டும் மஹிந்த அரசின் மீது சுமத்திவிட்டு இதைத்தீர்க்க மிகவும் ஆமை வேகத்தில் முயற்சிகள் மேற்கொள்ளுவார்கள்.உண்மையாகவும் போற்குற்றமோ இனப்படுகொலையோ யுத்த வெற்றியோ மஹிந்தருக்குத்தான்.காரணம் முப்படைகளின் பாதுகாப்பு அமைச்சு இவரின் கீழ்த்தானே.அப்போ கோத்தா மீதும் குற்றச்சாட்டு விழச் சந்தர்ப்பம் குறைவு.மஹிந்தர் தான் அனுமதி வழங்க வேண்டும் இதுதான் யதார்த்தம்.இப்படியான மஹிந்தர் ஆட்சியிலிருந்தால் தான் ஐ நா மற்றும் வெளி நாடுகளின் இறுக்கிப்பிடிப்பு தொடரும். நாம் இழந்தது பெரிய இழப்பு.என் போன்ற பலர் வெளி நாடுகளில் இருக்கின்றனர்.னாம் இன சனத்தை மட்டுமல்ல எமது பொருளாதாரத்தையும் இழந்து நிற்கின்றோம். நாங்கள் எவ்வளவோ கஸ்டப்பட்டு தேடிய எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றோம்.எல்லாவற்றையும் இங்கு தரவுகளாக தரமுடியவில்லை.ஆகவே மஹிந்தாவை வைத்து சாதிக்கமுடியுமே தவிர மைத்திரியை வைத்து எதுவுமே முடியாது.
மஹிந்தா:- இறந்தவர்களைத் தவிர எதுவானாலும் என்னால் தரமுடியும், தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வைக்கூடத்தடுத்த பிக்குகள் கூட்டம் இப்போ மைத்திரியுடன் அதே ஒப்பந்தத்தை செய்துள்ளார்கள் 
மைத்திரி:- நானும் ஒரு பேரினவாதி என்னால் தமிழர்களுக்கு ஒரு படி கூட மேல் செல்ல முடியாது,தமிழர்களுக்கு எதுவுமே வழங்க மாட்டேன் என பிக்குகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.