Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக் கணிப்பு: இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

Featured Replies

எதிர்வரும் 08 சனவரி 2015 அன்று நடைபெறவுள்ள இலங்கை சனாதிபதித் தேர்தலில் தற்போதைய சனாதிபதி மகிந்த ராகபச்ஸவும், மைத்திரிபால சிறிசேனவும் முன்னணி வேட்பாளர்களாக உள்ளனர். இக் கருத்துக் கணிப்பு மிகமுக்கியமான இந்த சனாதிபதித் தேர்தல் பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அறிய உருவாக்கப்பட்டுள்ளது.

இக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்து தெரிவுக்கான காரணத்தை இத்திரியில் பதிந்து கருத்தாடலில் ஈடுபட அனைவரையும் அழைக்கின்றோம்.

06-01-2015 வெள்ளி வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com

வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் இங்கு காணலாம்.
http://www.yarl.com/content/இலங்கையில்-நடைபெறவுள்ள-சனாதிபதித்-தேர்தல்-பற்றிய-உங்கள்-நிலைப்பாடு-என்ன

ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளை இந்த இணைப்பில் பார்வையிடலாம்.
http://www.yarl.com/poll

பி.கு. யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதோரும் இக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றலாம்.

 

 

நியானி: 06-01-2015 வரை கருத்துக் கணிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • தொடங்கியவர்

தற்போதைய வாக்களிப்பு விபரம் (16/12/2014):
 

  • ஆட்சி மாற்றத்தினால் தமிழர்களுக்கு நன்மை கிட்டக்கூடும் என்பதால் மைத்திரிபால சிறிசேனவைத் தேர்வு செய்யவேண்டும். 37% (279 votes)
  • மேற்குறித்தவற்றில் எனது தெரிவு அடக்கப்படவில்லை. 19% (149 votes)
  • தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தைக் காட்டுவதற்காக செல்லாத வாக்குச் சீட்டுக்களைச் செலுத்தவேண்டும். 18% (141 votes)
  • சிங்கள மக்களே தமது சனாதிபதியைத் தெரிவு செய்யவேண்டும் என்பதால் தமிழர்கள் இத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும். 12% (96 votes)
  • நீண்ட கால நோக்கில் தமிழர்களுக்கு நன்மை கிட்டக்கூடும் என்பதால் மகிந்த ராஜபக்ஸவை தேர்வு செய்யவேண்டும். 12% (97 votes)

செலுத்தப்பட்ட வாக்குகள்: 753

 

02-01-2015 வெள்ளி வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற தேர்தலில், நிலைமை மைத்திரிக்கு சாதகமாக அமையலாம்.
ஆனால்... நான், //நீண்ட கால நோக்கில் தமிழர்களுக்கு நன்மை கிட்டக்கூடும் என்பதால் மகிந்த ராஜபக்ஸவை தேர்வு செய்யவேண்டும். // என்பதற்கு வாக்களித்துள்ளேன்.
 

அதற்குரிய காரணத்தை, வேறொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
அதனை.. மீள, இணைக்கின்றேன்.

 

என்னைப் பொறுத்த, வரையில்....
மகிந்த மீண்டும்,  அதி உத்தம ஸ்ரீலங்கா ஜனாதிபதியாய் வருவதே நல்லது,

காரணம்:
1) அவர் போரில், புலிகளை அழித்து விட்டார். என்று சந்தோசப்  படுகின்றார்.

2)  அந்த சந்தோசத்தை, நிலை நாட்ட எத்தனையோ.... அழிவுகளையும், இந்தியாவிடுடன்  சேர்ந்து நடத்தி விட்டார்.

3)  மைத்திரி, தமிழனிடம் சமரசம் இல்லை... என்றே கூறி விட்டார்.

4) அஜித் பிரேமதாச...  எஞ்சியுள்ள புலிகளையும் அழிப்பேன். என்று சொல்லிவிட்டார்.

மகிந்தவும், இந்தியாவும்...... அழிக்காத புலிகள்,  இப்போது ஈழத்தில் வாழ்கிறார்கள் என்றால்....
முழுத் தமிழ் இனத்தையும், கூண்டொடு கைலாசம் அனுப்ப... மற்றொரு சிங்கள மைத்திரியின் கட்சி வருகின்றது.

இது, நல்லதுக்கல்ல.
மகிந்த, அரசாட்சியில், இருப்பதுவே... மேல்.

 

mahinda_rajapaksa.jpg

 

வாழ்த்துக்கள், தலைவா...
மகிந்த ராஜபக்ச, ஜெய வேவா....
மகிந்த ராசா பட்சே.... ஜிந்தாபாத்.

 

  • தொடங்கியவர்

தற்போதைய வாக்களிப்பு விபரம் (23/12/2014):

  • ஆட்சி மாற்றத்தினால் தமிழர்களுக்கு நன்மை கிட்டக்கூடும் என்பதால் மைத்திரிபால சிறிசேனவைத் தேர்வு செய்யவேண்டும்.  42% (617 votes)
  • மேற்குறித்தவற்றில் எனது தெரிவு அடக்கப்படவில்லை.  17% (250 votes)
  • தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தைக் காட்டுவதற்காக செல்லாத வாக்குச் சீட்டுக்களைச் செலுத்தவேண்டும்.  16% (244 votes)
  • நீண்ட கால நோக்கில் தமிழர்களுக்கு நன்மை கிட்டக்கூடும் என்பதால் மகிந்த ராஜபக்ஸவை தேர்வு செய்யவேண்டும்.  12% (182 votes)
  • சிங்கள மக்களே தமது சனாதிபதியைத் தெரிவு செய்யவேண்டும் என்பதால் தமிழர்கள் இத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்.   10% (157 votes)
செலுத்தப்பட்ட வாக்குகள்: 1441

 

02-01-2015 வெள்ளி வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com

  • கருத்துக்கள உறவுகள்

"மேற்குறித்தவற்றில் எனது தெரிவு அடக்கப்படவில்லை"

 

என்றே வாக்களித்துள்ளேன். :(

 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குறித்தவற்றில் எனது தெரிவு அடக்கப்படவில்லை

 

வெல்லும் நிலையில் இல்லாத மூன்றாவது ஒரு வேட்பாளருக்குத்  தமிழர்கள் வாக்களித்துத் தங்கள் எதிர்ப்பைக்காட்டலாம்

  • கருத்துக்கள உறவுகள்

"மேற்குறித்தவற்றில் எனது தெரிவு அடக்கப்படவில்லை"

 

என்றே வாக்களித்துள்ளேன். :(

 

வன்னியன் சார், உங்களது தெரிவு வாக்குச் சீட்டில்... இல்லை, என்றால்....

உங்களது அபிப்பிராயம் என்ன என்றாவது, எமக்கு அறியத் தந்தால்... பலருக்கும், பிரயோசனப் படும் என கருதுகின்றேன். :)

  • தொடங்கியவர்

கருத்துக் கணிப்பு 06-01-2015 செவ்வாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

தற்போதைய வாக்களிப்பு விபரம் (30/12/2014):

  • ஆட்சி மாற்றத்தினால் தமிழர்களுக்கு நன்மை கிட்டக்கூடும் என்பதால் மைத்திரிபால சிறிசேனவைத் தேர்வு செய்யவேண்டும்.  46% (970 votes)
  • தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தைக் காட்டுவதற்காக செல்லாத வாக்குச் சீட்டுக்களைச் செலுத்தவேண்டும்.  15% (331 votes)
  • மேற்குறித்தவற்றில் எனது தெரிவு அடக்கப்படவில்லை.  15% (326 votes)
  • நீண்ட கால நோக்கில் தமிழர்களுக்கு நன்மை கிட்டக்கூடும் என்பதால் மகிந்த ராஜபக்ஸவை தேர்வு செய்யவேண்டும்.  11% (245 votes)
  • சிங்கள மக்களே தமது சனாதிபதியைத் தெரிவு செய்யவேண்டும் என்பதால் தமிழர்கள் இத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்.  9% (206 votes)
செலுத்தப்பட்ட வாக்குகள்: 2069

 

06-01-2015 செவ்வாய் வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com

  • 2 weeks later...

நேற்று முடிந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள்.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 2733

செல்லா வாக்குகள் என்று கருதப்பட்ட வாக்குகள் நீங்கலாக மொத்த வாக்குகள் 2313

 

ஆட்சி மாற்றத்தினால் தமிழர்களுக்கு நன்மை கிட்டக்கூடும் என்பதால் மைத்திரிபால சிறிசேனவைத் தேர்வு செய்யவேண்டும்.  48,7% (1125 votes)
தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தைக் காட்டுவதற்காக செல்லாத வாக்குச் சீட்டுக்களைச் செலுத்தவேண்டும்.  15.2% (352 votes)
மேற்குறித்தவற்றில் எனது தெரிவு அடக்கப்படவில்லை.  15% (348 votes)
நீண்ட கால நோக்கில் தமிழர்களுக்கு நன்மை கிட்டக்கூடும் என்பதால் மகிந்த ராஜபக்ஸவை தேர்வு செய்யவேண்டும்.  11.3% (261 votes)
சிங்கள மக்களே தமது சனாதிபதியைத் தெரிவு செய்யவேண்டும் என்பதால் தமிழர்கள் இத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்.  9.8% (227 votes)
 

  • கருத்துக்கள உறவுகள்

பல பேர் கள்ளவோட் போட்டிருக்கினம்

பல பேர் கள்ளவோட் போட்டிருக்கினம்

 

இவ் முடிவு கூடியவரைக்கும் அனைத்து கள்ள வாக்குகளையும் கழித்து வந்த முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

இவ் முடிவு கூடியவரைக்கும் அனைத்து கள்ள வாக்குகளையும் கழித்து வந்த முடிவு.

அதைத் தானய்யா நானும் சொன்னேன்(செல்லா வாக்குகள் என்று இணையவன் குறிப்பிட்டதை),இப்ப எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் கள்ள வோட்டு போட்டது யாரு தேர்தல் ஆணையாளர் (யாழ்) என்ற முறையில் நியாணி இதை பகிரங்கப்படுத்தவேணும்.
  • தொடங்கியவர்

யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். ஐ.பி. முகவரிகளைக் கொண்டே செல்லாத வாக்குகள் அண்ணளவாகக் கணக்கிடப்பட்டன.

ஐபி முகவரியை கணக்கெடுப்பதில் சில தவறுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனது வீட்டில் நான் மனைவி இருவரும் கள அங்கத்தவர்கள். இருவருமே ஒரே மடிக்கணணியை பாவிக்கிறோம். ஆக ஒரு வோட்டை கழிச்சிடுவீங்களா  :(  :(

 

சரி சரி இதை விட களத்தை பொறுத்த வரையில் வேறு வழி இல்லை என்பதால் நாங்கள் ஒரு வாக்கை தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். :icon_idea:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.