Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இருதரப்பில் இருந்தும் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கிறதாம்! – முஸ்லிம் காங்கிரஸ் கூறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Rauff-%20Hakeem-press-200-news.jpg

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரது தரப்புகளிலிருந்தும் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.காவுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரச தரப்பில் பின்னடைவு காணப்படுமானால், எதிரணி வேட்பாளரை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று முகாவின் தலைவர் ஹக்கீம் கூறியுள்ளார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

   

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளை அரசு தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என நம்பிக்கை தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமது கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரச தரப்பில் பின்னடைவு காணப்படுமானால், எதிரணி வேட்பாளரை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். நேற்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரான பைசல் காசிம், எம்.எஸ்.தெளபீக், முத்தலிப் பாவா பாரூக் ஆகியோருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ இன்னொரு கட்டப் பேச்சில் ஈடுபட்டார்.

அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் அழைப்பின்பேரில் அவரைச் சந்திப்பதற்கு முன்னர் பிரஸ்தாப நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், கட்சியின் பெறுமானம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் இக்கட்டத்தில் சமூகத்துக்கான அவசியத் தேவைகளைச் சாதித்துக் கொள்வதற்கான சாணக்கியம் இருப்பதாகவும் கூறியுள்ளார். கரையோர மாவட்டம் தொடர்பில் தயாரிக்கப்பட்டு பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவைப் பத்திரத்தை நியாயப்படுத்தும் வகையில் மஹிந்த சிந்தனை - 1இல் இடம்பெற்றிருந்த ஓர் அம்சத்தையும் அதில் உள்வாங்கிக் கொள்வது பயனுற்றதாக அமையும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார். மன்னார், சிலாபத்துறையில் தனியாருக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமை அகற்றிக்கொள்வது பற்றியும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் அதுபற்றி தாம் கதைப்பதாகவும், அவருடன் முஸ்லிம் காங்கிரஸ் குழுவினரின் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சமூகம் சார்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. தேர்தல் சம்பந்தமாக மிகவும் நிதானமாகவும், சாதுரியமாகவும் நடந்து கொள்ளவேண்டுமென தமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் போன்று அவசரப்பட்டு அள்ளுண்டு போகவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட இன்னும் அவசரப்பட்டு தனது முடிவை அறிவிக்காத சூழ்நிலையில், நாம் ஏன் அதற்காக அவசரப்படவேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தமது நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மத்தியில் தெரிவித்தார் - என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=123327&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது  உண்மையிலே  தமிழ்பேசும் முஸ்லிம்கள் சாணக்கியரே!

பங்கு சந்தையில் பங்குகள் வாங்கும் போது  அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் பாரியளவில் இலாமடையலாம் அல்லது நட்டமடையலாம். ரிஸ்க் எடுக்க தயாராக இல்லாதவர்களுக்கு சிறியளவிலான இலாபமே கிடைக்கும் அதேவேளை முதலுக்கு அதிக உத்தவாதமும் உண்டு. ஹக்கீம் இரண்டாவது வகை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை இனமானதமிழினம் கிழக்கில் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்றநோக்கிலேயே கக்கீமுக்கு அன்று மக்கள் வாக்களித்திருந்தனர். அதனை நிறைவேற்றும் வண்ணமே அவருடைய பரப்புரையும் அமைந்திருந்தது ஆனால் அவர் மகிந்தவிற்கு ஆதரவாகச் செயற்பட்டமையை அவருக்கு வாக்களித்த மக்களில் அனேகர் விரும்பவில்லை. இந்நிலையில் கக்கீமின் இன்றைய தீர்மானங்களுக்கு, ஆலோசனைகளுக்கு மக்கள் பூரண ஆதரவு தந்து வாக்களிப்பார்கள் என்பது கேள்விக்குறியே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சொல்லப்போனால் தமிழர்கள் தரப்பைவிட முஸ்லிம்கள் சரியாக ஆளும்தரப்பை பயன்படுத்தி வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சொல்லப்போனால் தமிழர்கள் தரப்பைவிட முஸ்லிம்கள் சரியாக ஆளும்தரப்பை பயன்படுத்தி வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். 

 

 

இதையே கூட்டமைப்பு செய்தால் விடுவமோ......??

:(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் கிழக்குமாகாணசபைத்தேர்தலிலும் ஆளும் கட்சியை விமர்சித்து வாக்iகுகளைப்பெற்று விட்டு கடைசிவரை இழுத்தடித்து கூட்டமைப்பைக் காட்டி பேரம் பேசி இறுதியில் ஆளும்தரப்போடு சேர்ந்து ஆட்சியைப் பிடித்தார்கள். அமைச்சர் பதவியையும் தக்க வைத்துக் கொண்டார். .இந்த முறை சார்பு நிலை எடுக்காமல் மக்களைச் சுயமாக வாக்களிக்கச் சொல்லி விட்டு பாராளுமன்றம் கலையும்வரை அமைச்சராக இருப்பார் என்பதே என் கணிப்பு.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சொல்லப்போனால் தமிழர்கள் தரப்பைவிட முஸ்லிம்கள் சரியாக ஆளும்தரப்பை பயன்படுத்தி வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். 

 

சிங்களவன் அடிச்சா தமிழனட்ட ஓடி வரவும்..

 

இந்தியன் அடிச்சா.. பாகிஸ்தானிட்ட ஓடவும்...

 

பாகிஸ்தான் அடிச்சா.. சவுதி காலில் போய் விழவும்.. அவங்களுக்கு ஆக்கள் இருக்கு உலகம் பூரா.

 

நமக்கு யார் அடிச்சாலும் கேட்க நாதியில்லை. அப்படியான நிலையில்.. நாங்கள்.. சோரம் போதல் அரசியலை தெரிவு செய்தால்.. நிலைமை.. 1948 இல் 50:50 கேட்டதில் இருந்து.. இப்ப ஆளுரை மாத்துப்பா என்று கெஞ்சும் நிலை தான் வரும்.

 

முஸ்லீம்களை பொறுத்தவரை கோவிலோ.. தேவாலயமோ.. பன்சலையோ.. வியாபாரம் நடந்தால் சரி. அவர்களின் குறிக்கோள்.. மார்க்கம்.. மதம்.. அல்கா... சொந்த வாழ்க்கை. இதைவிட்டு..???????????! :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு யார் அடிச்சாலும் கேட்க நாதியில்லை. அப்படியான நிலையில்.. நாங்கள்.. சோரம் போதல் அரசியலை தெரிவு செய்தால்.. நிலைமை.. 1948 இல் 50:50 கேட்டதில் இருந்து.. இப்ப ஆளுரை மாத்துப்பா என்று கெஞ்சும் நிலை தான் வரும்.

பக்கத்தில் தமிழகத்தில் வாழ்பவர்கள் எல்லோரும் ******* ********** ***** *******.
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் தமிழகத்தில் வாழ்பவர்கள் எல்லோரும் ******* ********** ***** *******.

 

பக்கத்தில உள்ள 6..7 கோடி தமிழன் என்ன செய்தான் என்று கேள்வி கேட்க.. கூட இருந்திட்டு தென்னிலங்கைக்கும்.. வெளிநாடுகளுக்கும் ஓடிய 10 இலட்சத்துக்கும் மேலான தமிழர்களுக்கு உரிமை இருக்கும்..???! :lol::icon_idea:

ஓடி வந்தவன் தானே இப்ப அந்த மாதிரி அரசியல் செய்கின்றான்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாதிரி என்னா.. என்ன மாதிரி... 2000 வாக்கில கவுன்சிலர்.. 20,000 வாக்கில எம் பி என்று.. வெள்ளைக்கு வெள்ளை அடிக்கிறது.. அதுவா..??! இதெல்லாம் அரசியல்..???! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா சொல்வது (புலத்துக்கு) ஓடிவந்த ஆக்கள் தான் (இப்ப தாயகத்தில) அந்த மாதிரி அரசியல் செய்த நினைக்கினம் என்பதை. :D

Edited by வாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.