Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம்! புதிய ஆட்சியில் ஜனநாயகம் நிலை நாட்டப்படுமென நம்புகிறேன்: - விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Wigneswaran-150-seithy.jpg

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன் என வடமாகாண மு தலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்திருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டின் தலைவரே கௌரவ மைத்திரிபால சிறிசேன. அவரின் கீழ் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். அதுமட்டுமல்ல. அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாதிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்கான அத்திவாரம் நாட்டப்படும் என்றும் நம்புகின்றேன்.

அவருக்கு இது சார்பாக எங்கள் மக்களின் சகல ஒத்துழைப்புக்களும் உதவிகளும் அளிக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்.

ஒரு மண்ணின் மைந்தனான அவர் சிறுபான்மையினரின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணிக்கமாட்டார் என்று நாம் நம்பலாம். பல கடினமான கடப்பாடுகள் அவரைச் சார்ந்துள்ளன.

அண்மைய காலங்களில் இயற்கை அனர்த்தங்களினால் இன்னல்கள் பலவற்றிற்கு ஆளாகியிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாண, மலையக மக்களின் வாழ்க்கையை சீரமைக்க வேண்டிய கடப்பாடு, பெரும்பான்மை மதவெறியின் தாக்கத்தால் மருண்டு போயிருந்த முஸ்லிம் மக்களை அணைத்தெடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு,

போர் முடிந்தும் அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னத்தினாலும் அவர்களின் உள்ளீடல்களாலும் அல்லலுறும் எமது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்க்கை நிலைகளையும் சீரமைத்து மாற்றியமைக்க வேண்டிய கடப்பாடு என்று பல கடமைகள் அவரைச் சார்ந்து நிற்கின்றன.

அவர் அவை சம்பந்தமாகப் போதிய கவனம் செலுத்துவார் என்பதில் என் மனதில் சந்தேகம் இல்லை. ஜனநாயகத்தை நிலைக்கச் செய்வதானால் பொறுமை, நம்பிக்கை, காருண்ய மனோநிலை யாவும் அவசியம். அவற்றை நாம் கடைப்பிடித்தே ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு வித்திட்டுள்ளோம். வருங்காலம் புதியதொரு சகாப்தத்தை உண்டுபண்ணட்டும்!

எமது தேவைகளை அறிந்து எமது மனோநிலைகளைப் புரிந்து நாட்டை ஆள்வோர் செயற்படட்டும்! நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம்.

பலவித அச்சுறுத்தல்கள், அல்லல்கள், அவலங்கள் மத்தியிலும் நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம். புதிய தலைமைத்துவம் எம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=124322&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

Wigneswaran-150-seithy.jpg

 ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன்

   

 

 தீர்வை எட்டுவதற்கான அத்திவாரம் நாட்டப்படும் என்றும் நம்புகின்றேன்.

 

சிறுபான்மையினரின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணிக்கமாட்டார் என்று நாம் நம்பலாம்.

 

எமது தேவைகளை அறிந்து எமது மனோநிலைகளைப் புரிந்து நாட்டை ஆள்வோர் செயற்படட்டும்! நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம்.

பலவித அச்சுறுத்தல்கள், அல்லல்கள், அவலங்கள் மத்தியிலும் நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம். புதிய தலைமைத்துவம் எம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=124322&category=TamilNews&language=tamil

 

 

நம்பிக்கையே வாழ்க்கை

மகிந்த இருந்த போதிருந்த கேடுபிடிகளாவது கொஞ்சம் குறையும் என எதிர்பார்க்கலாம்.

 

மைத்திரியிடம் அதிகம் எதிர் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“...அவருக்கு இது சார்பாக எங்கள் மக்களின் சகல ஒத்துழைப்புக்களும் உதவிகளும் அளிக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்...” என்கிறார் முதல்வர் விக்கினேஸ்வரன். இவர்தான் இங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். இதுதான் ரியாலிட்டி. நாம் வோட் போட மாட்டோம் என்று 12 மணிவரை யாழ்.கொம்மில் சொன்னார்கள். அதன்பின் ஏன் வோட் போட்டோம் என்று லண்டனில் இருந்து பொழிப்புரை சொல்கிறார்கள். அவர்களுக்கும் பொழுது போக வேண்டாமோ... சொல்லிவிட்டு போகட்டும். நம்ம பாட்டை பார்ப்போம். வெளியேயுள்ள ஒரு சிலருக்காவது இந்த தேர்தல் இங்குள்ள மக்களின் மனநிலையை புரிய வைத்திருக்கலாம். வைத்திருந்தால், சந்தோஷம்.

Edited by sabesan36

சீனாவை வைத்து மிரட்டியபடி தமிழருக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளைச் செய்தவரையும் சீனாவையும் அகற்றியிருக்கிறார்கள் தாயக மக்கள்.
 
இனி.. மேற்கும் இந்தியாவும் தமிழர் சார்பாக இலங்கையில் செயற்படக் கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. கெரியும் மோடியும் மைத்திரிக்கான வாழ்த்துச் செய்தியில் சொல்லியிருப்பது அது தான்.
 
மைத்திரியை விட ரணிலும் சந்திரிக்காவுமே முக்கியமானவர்கள். அனுபவம் உள்ளவர்கள். இனப்பிரச்சனை தீர்க்கபட வேண்டியதன் முக்கியத்துவம் அறிந்தவர்கள். 
 
தமிழர்கள் அமைச்சர்களாக அரசாங்கத்தில் பங்கெடுப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பங்கெடுக்கவில்லையென்றால் இனத்துரோகிகளான டக்ளஸ், கருனா போன்றவர்களுக்கு நாமாகவே கொடுக்கும் சந்தர்ப்பமாகப் போய்விடும். 
 
போர்க்குற்ற விசாரணை பெரும்பாலும் எடுபடாது. அது புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் காட்டும் ஆர்வத்தைப் பொறுத்தது.
 
தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டும் வரை இலங்கைக்கு முன்னேற்றமில்லை. 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு அத்திவாரம் இடப்படும் : விக்கினேஸ்வரன்

 
நல்லதொரு முடிவை என் இனிய தமிழ்ப் பேசும் சகோதர, சகோதரிகள் தேர்தலில் எடுத்துள்ளார்கள். இன்று நாங்கள் மனமுவந்து வாக்களித்து ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பெரும்பான்மையினரும் சிறுபான்மை யினரும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டின் தலைவரே மைத்திரிபால சிறிசேன ஆவார்.

Lanka_1610364f_17.jpg

அவரின் கீழ் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாதிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சுமுகமான தீர்வை எட்டுவதற்கான அத்திவாரம் நாட்டப்படும் என்றும் நம்புகின்றேன். அவருக்கு இது சார்பாக எங்கள் மக்களின் சகல ஒத்துழைப்புக்களும் உதவிகளும் அளிக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது;

ஒரு மண்ணின் மைந்தனான அவர் சிறுபான்மையினரின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணிக்கமாட்டார் என்று நாம் நம்பலாம். பல கடினமான கடப்பாடுகள் அவரைச் சார்ந்துள்ளன. அண்மைய காலங்களில் இயற்கை அனர்த்தங்களினால் இன்னல்கள் பலவற்றிற்கு ஆளாகியிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாண, மலையக மக்களின் வாழ்க்கையை சீரமைக்க வேண்டிய கடப்பாடு, பெரும்பான்மை மதவெறியின் தாக்கத்தால் மருண்டு போயிருந்த முஸ்லிம் மக்களை அணைத்தெடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு, போர்முடிந்தும் அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னத்தினாலும் அவர்களின் உள்ளீடல்களாலும் அல்லலுறும் எமது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்க்கை நிலைகளையும் சீரமைத்து மாற்றியமைக்க வேண்டிய கடப்பாடு என்று பல கடமைகள் அவரைச் சார்ந்து நிற்கின்றன. அவர் அவை சம்பந்தமாகப் போதிய கவனம் செலுத்துவார் என்பதில் என் மனதில் சந்தேகம் இல்லை.

ஜனநாயகத்தை நிலைக்கச் செய்வதானால் பொறுமை, நம்பிக்கை, காருண்யமனோநிலை யாவும் அவசியம். அவற்றை நாம் கடைப்பிடித்தே ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு வித்திட்டுள்ளோம். வருங்காலம் புதியதொரு சகாப்தத்தை உண்டுபண்ணட்டும்! எமது தேவைகளை அறிந்து எமது மனோநிலைகளைப் புரிந்து நாட்டை ஆள்வோர் செயற்படட்டும்!

நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம். பலவித அச்சுறுத்தல்கள், அல்லல்கள், அவலங்கள் மத்தியிலும் நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம். புதிய தலைமைத்துவம் எம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நாம் எல்லோரும் மகிழ்வுடனும் சுதந்திரத்துடனும் போதிய உரிமைகளுடனும் தனித்துவத்துடனும் ஐக்கிய இலங்கையினுள் வாழ இறைவன் அருள் புரிவானாக.

http://www.virakesari.lk/articles/2015/01/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

 

நினைவில்  வைக்க வேண்டிய ஒருவர்:

2015 ஜனாதிபதி  தேர்தலில் ஆட்சியில் உள்ள ஜனாதிபதியை எதிர்த்து  வாக்களிக்குமாறு கேட்ட ஒரேஒரு முதலமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டின் தலைவரே கௌரவ மைத்திரிபால சிறிசேன. அவரின் கீழ் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். அதுமட்டுமல்ல. அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாதிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்கான அத்திவாரம் நாட்டப்படும் என்றும் நம்புகின்றேன்.

அவருக்கு இது சார்பாக எங்கள் மக்களின் சகல ஒத்துழைப்புக்களும் உதவிகளும் அளிக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்.

ஒரு மண்ணின் மைந்தனான அவர் சிறுபான்மையினரின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணிக்கமாட்டார் என்று நாம் நம்பலாம். பல கடினமான கடப்பாடுகள் அவரைச் சார்ந்துள்ளன.

அண்மைய காலங்களில் இயற்கை அனர்த்தங்களினால் இன்னல்கள் பலவற்றிற்கு ஆளாகியிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாண, மலையக மக்களின் வாழ்க்கையை சீரமைக்க வேண்டிய கடப்பாடு, பெரும்பான்மை மதவெறியின் தாக்கத்தால் மருண்டு போயிருந்த முஸ்லிம் மக்களை அணைத்தெடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு,

போர் முடிந்தும் அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னத்தினாலும் அவர்களின் உள்ளீடல்களாலும் அல்லலுறும் எமது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்க்கை நிலைகளையும் சீரமைத்து மாற்றியமைக்க வேண்டிய கடப்பாடு என்று பல கடமைகள் அவரைச் சார்ந்து நிற்கின்றன.

அவர் அவை சம்பந்தமாகப் போதிய கவனம் செலுத்துவார் என்பதில் என் மனதில் சந்தேகம் இல்லை. ஜனநாயகத்தை நிலைக்கச் செய்வதானால் பொறுமை, நம்பிக்கை, காருண்ய மனோநிலை யாவும் அவசியம். அவற்றை நாம் கடைப்பிடித்தே ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு வித்திட்டுள்ளோம். வருங்காலம் புதியதொரு சகாப்தத்தை உண்டுபண்ணட்டும்!

எமது தேவைகளை அறிந்து எமது மனோநிலைகளைப் புரிந்து நாட்டை ஆள்வோர் செயற்படட்டும்! நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம்.

பலவித அச்சுறுத்தல்கள், அல்லல்கள், அவலங்கள் மத்தியிலும் நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம். புதிய தலைமைத்துவம் எம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு 

 

 

ஒரு அடிமையின் ஆகக்குறைந்த கோரிக்கை...

நன்றி ஐயா

யதார்த்தமான கருத்துகள்
நன்றி விசுகு
  • கருத்துக்கள உறவுகள்

 

சீனாவை வைத்து மிரட்டியபடி தமிழருக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளைச் செய்தவரையும் சீனாவையும் அகற்றியிருக்கிறார்கள் தாயக மக்கள்.
 
இனி.. மேற்கும் இந்தியாவும் தமிழர் சார்பாக இலங்கையில் செயற்படக் கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. கெரியும் மோடியும் மைத்திரிக்கான வாழ்த்துச் செய்தியில் சொல்லியிருப்பது அது தான்.
 
மைத்திரியை விட ரணிலும் சந்திரிக்காவுமே முக்கியமானவர்கள். அனுபவம் உள்ளவர்கள். இனப்பிரச்சனை தீர்க்கபட வேண்டியதன் முக்கியத்துவம் அறிந்தவர்கள்
 
தமிழர்கள் அமைச்சர்களாக அரசாங்கத்தில் பங்கெடுப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பங்கெடுக்கவில்லையென்றால் இனத்துரோகிகளான டக்ளஸ், கருனா போன்றவர்களுக்கு நாமாகவே கொடுக்கும் சந்தர்ப்பமாகப் போய்விடும். 
 
போர்க்குற்ற விசாரணை பெரும்பாலும் எடுபடாது. அது புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் காட்டும் ஆர்வத்தைப் பொறுத்தது.
 
தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டும் வரை இலங்கைக்கு முன்னேற்றமில்லை. 

 

தமிழர்கள் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ராக்கெட் விட இது நல்ல தருணம் என்று நான் நினைக்கிறன்.
சீனாவை அகற்றிய கோபத்தில் சீனா ராக்கெட் விட அதிக வாய்ப்பு இருக்கிறது.
தமிழர்கள் முந்திக்கொள்ள வேண்டும்.
மேற்கு இந்தியா விடம் இருந்து ராக்கெட்டுக்கு பெட்ரோல் வாங்கலாம். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சீனாவை வைத்து மிரட்டியபடி தமிழருக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளைச் செய்தவரையும் சீனாவையும் அகற்றியிருக்கிறார்கள் தாயக மக்கள்.
 
இனி.. மேற்கும் இந்தியாவும் தமிழர் சார்பாக இலங்கையில் செயற்படக் கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. கெரியும் மோடியும் மைத்திரிக்கான வாழ்த்துச் செய்தியில் சொல்லியிருப்பது அது தான்.
 
மைத்திரியை விட ரணிலும் சந்திரிக்காவுமே முக்கியமானவர்கள். அனுபவம் உள்ளவர்கள். இனப்பிரச்சனை தீர்க்கபட வேண்டியதன் முக்கியத்துவம் அறிந்தவர்கள். 
 
தமிழர்கள் அமைச்சர்களாக அரசாங்கத்தில் பங்கெடுப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பங்கெடுக்கவில்லையென்றால் இனத்துரோகிகளான டக்ளஸ், கருனா போன்றவர்களுக்கு நாமாகவே கொடுக்கும் சந்தர்ப்பமாகப் போய்விடும். 
 
போர்க்குற்ற விசாரணை பெரும்பாலும் எடுபடாது. அது புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் காட்டும் ஆர்வத்தைப் பொறுத்தது.
 
தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டும் வரை இலங்கைக்கு முன்னேற்றமில்லை. 

 

 

 

ஒரு தடவையாவது தான் ஜனாதிபதியாய் வந்துவிடவேண்டும் என்கின்ற ரணிலின் நீண்டகால நிறைவேறாத ஆசையும், தனது பண்டாரநாயக்கா குடும்ப அரசியலை எதிர்காலத்தில் நிலைநிறுத்தவேண்டும் என்கின்ற சந்திரிக்காவின் ஆசையும் இதற்கு எல்லாம் இடம் கொடுக்குமா? 

Edited by கிழவி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவையாவது தான் ஜனாதிபதியாய் வந்துவிடவேண்டும் என்கின்ற ரணிலின் நீண்டகால நிறைவேறாத ஆசையும், தனது பண்டாரநாயக்கா குடும்ப அரசியலை எதிர்காலத்தில் நிலைநிறுத்தவேண்டும் என்கின்ற சந்திரிக்காவின் ஆசையும் இதற்கு எல்லாம் இடம் கொடுக்குமா? 

 

மைத்திரிதான் இந்த நாட்டின் கடைசி ஜனாதிபதியாக இருந்தால்.......ரணிலின் ஆசை நிறைவேறாது...சந்திரிக்காவின் வாரிசுகள் பிரதமராக வரலாம் ,சந்திரிக்காவும் பிரதமராகி அதிகாரம் செலுத்தலாம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் காணாமல் போகும் டக்ளஸ் கட்அவுட்கள்!

 

dag%20cut.jpg

 

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதை தொடர்ந்து வடக்கு கிழக்கில் அரசுடன் ஒட்டியிருந்த தமிழ்க்கட்சிகள் பலவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஈ.பி.டி.பி, பிள்ளையான், கருணா,உதயராசா போன்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயாரானெ நேற்று டக்ளஸ் தேவானந்தா சூசகமாக தூதுவிட்ட நிலையில், நேற்று யாழ்ப்பாணத்திலிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் பெரும் கட்அவுட்கள் எல்லாம் காணாமல் போக தொடங்கியுள்ளன. நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த 20 அடி கட்அவுட், மற்றும் சிறிதர் தியேட்டரின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த கட்அவுட் என்பன நேற்று விடிகாலையிலேயே அகற்றப்பட்டு விட்டன.

அதுதவிர யாழ்நகரத்திலிருந்து சிறிதர் தியேட்டரும் நேற்று முழுநாளும் இழுத்து மூடப்பட்டிருந்தது. 

http://www.deepamnews.com/details.php?nid=1&catid=22787

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.