Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷிராணி பண்டாரநாயக்க நீதிமன்ற வளாகத்திற்கு வருகை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1057724151shira.jpg

 

முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தற்போது வருகை தந்துள்ளார். 

தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக வேண்டுமென நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள், சிவில் அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=65737

 

  • கருத்துக்கள உறவுகள்

சிரானி பண்டாரநாயக்கவே நாட்டின் சட்ட ரீதியான பிரதம நீதியரசர்

 

சிரானி பண்டாரநயாக்கவே நாட்டின் சட்ட ரீதியான பிரதம நீதியரசர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சட்ட ரீதியான பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவே என ஜனாதிபதி மைத்திரிபால தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

சிரானி பண்டாரநாயக்கவை மீளவும் பிரதம நீதியரசராக நியமிப்பதாக ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரக் காலத்தில் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரானி பண்டாரநாயக்கவே பிரதம நீதியரசர் என இன்றைய தினம் காலை, ஜனாதிபதியும் அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116029/language/ta-IN/article.aspx

Edited by பிழம்பு

ஒரு நாள் மட்டும் பிரதம நீதியரசராக இருப்பார் சிராணி பண்டாரநாயக்க

 

shirani.jpg

 

சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சிராணி பண்டாரநாயக்க நாளை தனது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் ஒப்படைப்பார் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தினால் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தவறானது என்றும், சட்டரீதியான பிரதம நீதுியரசராக  அவரே நீடிப்பதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரி மைத்திரிபால சிறிசேன நேற்று சிராணி பண்டாரநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அத்துடன், சட்டமுறையற்ற வகையில், சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து  நீக்கப்பட்டதால், அவரே சட்டரீதியான பிரதம நீதியரசர் என்றும், எனவே மொகான் பீரிசை இலங்கையின் பிரதம நீதியரசராகத் தொடர்ந்தும் அங்கீகரிக்க முடியாது என்றும் 44வது பிரதம நீதியரசர் மொகான் பீரிசுக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.

இதனடிப்படையில், சிராணி பண்டாரநாயக்க இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கு வந்து, பிரதம நீதியரசராகப் பொறுப்பேற்றார்.

எனினும், சிராணி பண்டாரநாயக்க நாளை தனது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார் என்றும், இதையடுத்து புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2015/01/28/news/3233

 

அப்போ அந்த ஒரு நாளின் பின் இவரோ பிரதம நீதியரசர்? இல்லையில்லை மாண்புமிகு  கே. ஸ்ரீபவன்??

Edited by BLUE BIRD

Sir-300x130.jpg

 

மாண்புமிகு  கே. ஸ்ரீபவன்

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

shirani%20s_zpsbcym3txg.jpg

 

இவர் ஆர் ஆளப்பா???

shirani%20s_zpsbcym3txg.jpg

 

இவர் ஆர் ஆளப்பா???

அப்புக்காத்து சுமந்திரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தியிலை  அப்புக்காத்து சுமந்திரன்  பெயர்  வராதையிட்டு  காரசாரமாய்  கண்டிக்கிறன்.. :lol:

இன்று பி பி சீ யில் இதே பிரச்சனை பற்றி மிக விளக்கமான சுமந்திரனின் பேட்டி போனது .எமது அரசியலுக்கு இவர் வந்தது எமக்கு கிடைத்த வரம் .

  • கருத்துக்கள உறவுகள்

shirani%20s_zpsbcym3txg.jpg

 

இவர் ஆர் ஆளப்பா???

 

 

ஷிராணி பண்டாரநாயக்கவுடன்  

அருகில் முதல் ஆளாக வருகிறார்

செல்வாக்குண்டு

தமிழருக்கு பயன்படட்டும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பி பி சீ யில் இதே பிரச்சனை பற்றி மிக விளக்கமான சுமந்திரனின் பேட்டி போனது .எமது அரசியலுக்கு இவர் வந்தது எமக்கு கிடைத்த வரம் .

 

சேர்.பொன் இராமநாதன் காலம் தொடக்கம் வரம்...பொக்கிஷம்...உதயசூரியனின் பார்வையிலே....விடிவெள்ளி...வெற்றித்திலகம்......இரத்ததிலகம் எண்டு போற்றிப்பாடி களைச்சுத்தான் ஆயுதபோராட்டம் தொடங்கினது.
சரி ஆயுதம் வேண்டாம் மௌனித்து விட்டோம் என்றவனை செத்தபாம்பை அடித்தது போல் அடித்து விட்டு.....வீராவேசங்கள் சொல்லி வேலையில்லை.
இதை தெரிந்தவர்களே உணரவில்லை.
 
"வாலறுந்த நரி" என பாரளுமன்றத்தில் தமிழனைப்பார்த்து தமிழன் திட்டிய வரலாறு உலகில் எந்தப்பாராளுமன்றத்திலும் இதுவரையில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பெரிய அரச பதவிகளுக்கும் தமிழர்களுடைய பெயரே அடிபடுகின்றது.
இதுவும் ஒருவகையில் சிங்களவர்களின் இனவெறியைத் தூண்டும் செயலாகவே தெரிகின்றது.
இனப்பிரச்சனைக்கான தீர்வு அரச பதவிகளினால் தீர்க்கப்பட முடியாது

எல்லாப் பெரிய அரச பதவிகளுக்கும் தமிழர்களுடைய பெயரே அடிபடுகின்றது.

இதுவும் ஒருவகையில் சிங்களவர்களின் இனவெறியைத் தூண்டும் செயலாகவே தெரிகின்றது.

இனப்பிரச்சனைக்கான தீர்வு அரச பதவிகளினால் தீர்க்கப்பட முடியாது

 

உண்மை. ஆனால் 70களில் பெரும்பாலான அரசநிறுவனங்களின் உயர் பதவிகளில் தமிழ் பேசும் அதிகாரிகளே இன விகிதாசாரத்திற்கும் அதிகமாக இருந்தார்கள். இலங்கையின் பல்கலைக்கழகங்களும் 40 -45 வீதமானவர்கள் தமிழ் பேசும் மாணவர்கள்தான். விளைவு தரப்படுத்தல் ஓரங்கட்டுப்படுதல். இதுதான் தமிழரின் தலையாய பிரச்சனை என்று யோசித்திருப்பார்கள் போல. சரி இதையாவது செய்யட்டும் விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

சேர்.பொன் இராமநாதன் காலம் தொடக்கம் வரம்...பொக்கிஷம்...உதயசூரியனின் பார்வையிலே....விடிவெள்ளி...வெற்றித்திலகம்......இரத்ததிலகம் எண்டு போற்றிப்பாடி களைச்சுத்தான் ஆயுதபோராட்டம் தொடங்கினது.
சரி ஆயுதம் வேண்டாம் மௌனித்து விட்டோம் என்றவனை செத்தபாம்பை அடித்தது போல் அடித்து விட்டு.....வீராவேசங்கள் சொல்லி வேலையில்லை.
இதை தெரிந்தவர்களே உணரவில்லை.
 
"வாலறுந்த நரி" என பாரளுமன்றத்தில் தமிழனைப்பார்த்து தமிழன் திட்டிய வரலாறு உலகில் எந்தப்பாராளுமன்றத்திலும் இதுவரையில்லை.

 

யோசிக்கத்தைங்கோ ..!!
முதல்ல இருந்து திரும்பி சத்தியா கிரகத்தில் இருந்து தொடங்க  எல்லாம் சரியாயிடும். 
  • கருத்துக்கள உறவுகள்

செல்வாக்கற்ற இரண்டு சிங்களபெளத்த பிக்குகள் களத்தில் "அப்பேரஜ அப்பேரட்ட"என்ற கோசத்துடன் அரசியலில் இறங்கினால் ,செல்வாக்கு பெற்ற தமிழ் அப்புக்காத்துமார் குடும்பத்துடன் புலம்பெயரத்தான் வேண்டும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் ஆணிவேர் எப்பிடியிருக்குமெண்டதை நல்லவடிவாய் விளங்கி வைச்சிருக்கிறார்.  :)

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.