Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

19 நிமிடங்கள் மஹிந்த என்னை துர் வார்த்தைகளினால் திட்டினார் – சந்திரிக்கா:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தாம், அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்தாகவும் அதன் போது கடுமையான துர்வார்த்தைகளினால் 19 நிமிடங்கள் தம்மை திட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே சில ஊடங்களில் தகவல் வெளியிட்ட போதிலும் அவை வெளிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை தொடர்ச்சியாக திட்டிக் கொண்டே சென்றதாகவும் இறுதியில் தமக்கு தெரிந்த இரகசியம் ஒன்று பற்றி கூறிய போது அப்படியே தொலைபேசி அழைப்பினை துண்டித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக மஹிந்த தம்மை பழிவாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக வழங்கப்பட வேண்டிய வீட்டை வழங்க விடாது தடுக்க முயற்சித்தார் எனவும், பாதுகாப்பை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துண்டிக்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தாம் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பில் நான்கில் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியல் சாசனத்தின் காரணமாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் தமக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நிறைவேற்ற தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஸ சூழ்ச்சித் திட்டம் தீட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

முதலில் 23 பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி வருவதாகத் தெரிவித்த மஹிந்த இறுதியில் ஆறு பேரை மட்டுமே அழைத்து வந்ததாகவும், அதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் 75 வீதத்தை தாமே முடித்ததாகவும், இரண்டு அதிவேகப்பாதைகள் மற்றும் தாமரைத் தடாகம் ஆகியனவற்றை தாமே உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116257/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உடனே போனை கட் பண்ணாமல் 19 நிமிசம் மனிசன் திட்டுவதை கேட்டுக் கொண்டு இருந்தவர்:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உடனே போனை கட் பண்ணாமல் 19 நிமிசம் மனிசன் திட்டுவதை கேட்டுக் கொண்டு இருந்தவர்:lol:

ஒராள் கதைக்கக்குள்ளை கட் பண்ணுவது நாகரிகமில்லையாம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒராள் கதைக்கக்குள்ளை கட் பண்ணுவது நாகரிகமில்லையாம்.. :lol:

 

அன்று

அவர் கதைக்கக்கூடிய நிலையிலும்

இவர் கேட்கவேண்டிய நிலையிலும் இருந்தார்கள்

இன்று நிலமை மாறி

சந்திரிக்கா பேசுகின்றார்

மகிந்த கேட்டுக்கொண்டு இருக்கிறார்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தருக்கும் ஒரு ஆசை.

இந்தம்மா வேற விதவை. அந்தாள் தண்ணியப் போட்டால் சங்கீதக் கச்சேரி தான்.

19 நிமிசமா கனிரச காதல் மழை போலக்கிடக்குது. நல்லாக் காது குளிர கேட்டுப் போட்டு இப்ப வேற மாதிரி கதை....

பழி வாங்குவதில் இவவும் சும்மா ஆள் இல்லை.

தாய்க்கு செய்த ( suspending civil rights for 7 years ) அநியாயம் காரணமாக, JR க்கு, state funeral நடத்த அனுமதிக்காமல், அந்தாள் சாதரணமாகத் தான் போனது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தருக்கும் ஒரு ஆசை.

இந்தம்மா வேற விதவை. அந்தாள் தண்ணியப் போட்டால் சங்கீதக் கச்சேரி தான்.

19 நிமிசமா கனிரச காதல் மழை போலக்கிடக்குது. நல்லாக் காது குளிர கேட்டுப் போட்டு இப்ப வேற மாதிரி கதை....

பழி வாங்குவதில் இவவும் சும்மா ஆள் இல்லை.

தாய்க்கு செய்த ( suspending civil rights for 7 years ) அநியாயம் காரணமாக, JR க்கு, state funeral நடத்த அனுமதிக்காமல், அந்தாள் சாதரணமாகத் தான் போனது.

 

என்ன  இப்படியொரு பாசம் உங்களுக்கு   J.R..இல்.....?? :lol:  :D

ஏன் உடனே போனை கட் பண்ணாமல் 19 நிமிசம் மனிசன் திட்டுவதை கேட்டுக் கொண்டு இருந்தவர் :lol:

 

 

ஐஞ்சு கெட்ட வார்த்தைக்கு ஒரு வார்த்தை ஸெக்ஸியான வார்த்தையாக இருந்த படியால் ஃபோனை கட் பண்ண முடியாமல் போய்விட்டதாம்.   

 

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யுத்தத்தின் 75 வீதத்தை தாமே முடித்ததாகவும், இரண்டு அதிவேகப்பாதைகள் மற்றும் தாமரைத் தடாகம் ஆகியனவற்றை தாமே உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இது...இது தான் இப்ப சிங்களவனுக்கை பிரச்சனை!!!!!!
 
யுத்தம்???   யாருடன்?   இந்தியாவுடன்? பாகிஸ்தானுடன்?  சீனாவுடன்????
 
இருக்கிறதை நியாயமாய் கேட்க வெளிக்கிட்டால் இனக்கலவரம்.....அதையே தட்டிக்கேட்டால்  இன அழிப்பு...
  • கருத்துக்கள உறவுகள்

இது...இது தான் இப்ப சிங்களவனுக்கை பிரச்சனை!!!!!!
 
யுத்தம்???   யாருடன்?   இந்தியாவுடன்? பாகிஸ்தானுடன்?  சீனாவுடன்????
 
இருக்கிறதை நியாயமாய் கேட்க வெளிக்கிட்டால் இனக்கலவரம்.....அதையே தட்டிக்கேட்டால்  இன அழிப்பு...

 

பாதுகாப்பு துண்டிக்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தாம் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பில் நான்கில் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இனம் உரிமை(பாதுகாப்பு) கேட்டால் உள்நாட்டு பிரச்சனை எனதட்டி கழிக்கும் உலக நாடுகள் சந்திரிக்காவுக்கு பாதுகாப்பு இல்லையென்றவுடன் தலையிட்டு பாதுகாப்பு வழங்கியிருக்கினம்.....

19 நிமிடங்கள் எப்படியெல்லாம் திட்டினார் என்னென்ன வார்த்தைகளைப. பாவித்ததார் என்பது குறித்து விரிவான விசாரணை செய்து யாழ் களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்சிறீ தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அவர் தனது விரிவான அறிக்கையை இங்கு சமர்ப்பிப்பார். அதுவரை அனைவரும் பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

19 நிமிடங்கள் எப்படியெல்லாம் திட்டினார் என்னென்ன வார்த்தைகளைப. பாவித்ததார் என்பது குறித்து விரிவான விசாரணை செய்து யாழ் களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்சிறீ தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அவர் தனது விரிவான அறிக்கையை இங்கு சமர்ப்பிப்பார். அதுவரை அனைவரும் பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

 

கிழிஞ்சுது போ........இண்டைக்கு வேறை வெள்ளிக்கிழமை... :o

வாங்கிறதோடை இரண்டு பியர் ரின் கூட வாங்கவேணும்.yahoo_zps06cdbf68.gif

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.:///

திட்டினதொட விட்டாரே என்று சந்தோஷப்படுறத விட்டிட்டு சும்மா புலம்பிக்கிட்டு......

கிழிஞ்சுது போ........இண்டைக்கு வேறை வெள்ளிக்கிழமை... :o

வாங்கிறதோடை இரண்டு பியர் ரின் கூட வாங்கவேணும்.yahoo_zps06cdbf68.gif

அதிக வேலைப்பளுவால் விசாரணையை துரிதமாக மேற்கொள்ள தமிழ்சிறீ கஷ்ரப்படுவதால் விசாரணைக்குழுவின் உதவித் தலைவராக குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

yahoo_zps06cdbf68.gif

அதிக வேலைப்பளுவால் விசாரணையை துரிதமாக மேற்கொள்ள தமிழ்சிறீ கஷ்ரப்படுவதால் விசாரணைக்குழுவின் உதவித் தலைவராக குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கிழிஞ்சுது போ........இண்டைக்கு வேறை வெள்ளிக்கிழமை...   :o

வாங்கிறதோடை நாலு பியர் ரின் கூட வாங்கவேணும்.yahoo_zps06cdbf68.gif

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.