Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 கூட்டமைப்புக்குள் விரிசல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

article_1423203047-TNATeam.jpg

நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்ற 67ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக்கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றதையடுத்து கூட்டமைப்புக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்கையின் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தையும் குற்றத்தையும் புரிந்த சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உரியதால் இதனை உடனடியாக கூட்டவேண்டும் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம். சுமந்திரன் ஆகிய இருவரும்  இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளதாவது,

 

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவாகும்.

 

அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் அவரிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

 

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஆனால், இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது என அவர் கூறுகிறார்.

 

அவர்களின் பங்கேற்புக்கும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிறார். சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் கருத்தும் ஏற்புடையது அல்ல.

 

தமிழ்த்தேசியக்கூட்டைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதி ராஜா தலைமையிலான தமிழரசுக்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளோட், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான ந்;டலோ ஆகிய கட்சிகளே அங்கம் வகிக்கின்றன.

 

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

 

அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது இரா. சம்பந்தனும் முக்கிய புள்ளியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

 

 

http://www.tamilmirror.lk/139249

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி அல்ல.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி அல்ல.... :(  :(  :(

 

சிங்களத்துக்கு நல்ல செய்தி.. :o

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் பிரித்தாளும் தந்திரத்திற்குள் விழுந்த கூட்ட(த்த)மைப்பும் அதற்காக உதவிய சுதந்திரன், சம்பந்தரும்

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் பிரித்தாளும் தந்திரத்திற்குள் விழுந்த கூட்ட(த்த)மைப்பும் அதற்காக உதவிய சுதந்திரன், சம்பந்தரும்

 

 

தமிழ்  மக்களின் தியாக வேள்வியுடன் எவராவது விளையாடுவார்களாக இருந்தால்...

சில செக்கன்களில் தூக்கி  எறியப்பட்டு

பூச்சியம் ஆக்கப்படுவார்கள்

வரலாறு பதில் சொல்லும்...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு குலைஞ்சுபோனால் சிங்களம் ஆரோடை பேச்சுவார்தை நடத்தும்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்குள் எப்போதும் ஒற்றுமை இருந்திருக்காது இருந்திருந்தால் தமிழ் கூட்டமைப்பாக இருக்கமுடியாது தமிழனுக்கு வரைவிலக்கணமே ஒற்றுமை இன்மைதானே  :icon_mrgreen:   :(


கூட்டமைப்பு குலைஞ்சுபோனால் சிங்களம் ஆரோடை பேச்சுவார்தை நடத்தும்? 

பேசுவதற்கு ஒரு கெட்ட அமைப்பு இல்லாமலா போகும் சிங்களத்துக்கு :unsure:   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கூட்டமைப்புக்குள் விரிசல்

 

ஐயோ..  விரிசலா.. நாம் என்ன செய்வோம்? இவ்வளவு நாளாக ஒற்றுமைக்கே இலக்கணமாக இருந்தார்களே... சிங்களவன் சூழ்ச்சி இது!

  • கருத்துக்கள உறவுகள்

 கூட்டமைப்புக்குள் விரிசல்

 

ஐயோ..  விரிசலா.. நாம் என்ன செய்வோம்? இவ்வளவு நாளாக ஒற்றுமைக்கே இலக்கணமாக இருந்தார்களே... சிங்களவன் சூழ்ச்சி இது!

 

 

 

இருந்தார்கள்

சிறுவர்களிலிருந்து பழகிவிட்டது.

தடி வைத்திருந்தால்

வேலை செய்யும்....

மற்றும்படி ஒவ்வொருவனும் ஒவ்வொரு வழி.... :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி அல்ல.... :(  :(  :(

 

இந்தியா, ஸ்ரீலங்காவின்... நீண்ட காலத் திட்டமே, கூட்டமைப்பை இல்லாது ஒழிப்பது தான்.

அதற்கு தகுந்த ஆள், சம்பந்தன் தான்.... என்பதை அறிந்து, அவரின் மூலம் அதை கச்சிதமாக நிறைவேற்றி விட்டார்கள்.

 

இதனால்... சம்பந்தன், இந்தியாவிடம் ஏமாந்தார் என்று நாம் நினைத்தால், அது தவறு.

சம்பந்தனின்... விருப்பமும், அது தான். அதனால்.... தான் தான் தோன்றித்தனமாக சில வருடங்களாக, தமிழ் மக்கள் விரும்பாத செயல்களை செய்து, தனக்கு தோதாக சுந்திரனையும் சேர்த்து.... நாத்தல் வேலை பாத்துப் போட்டு, நிக்கிறார் சம்பந்தன்.

 

தமிழ் மக்களுக்கு.... இதுகளால், மேலும் பிரச்சினை தான் ஒழிய, விடிவில்லை.

இப்ப திருப்தியா.... சம்பந்தன். :huh:  :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, ஸ்ரீலங்காவின்... நீண்ட காலத் திட்டமே, கூட்டமைப்பை இல்லாது ஒழிப்பது தான்.

அதற்கு தகுந்த ஆள், சம்பந்தன் தான்.... என்பதை அறிந்து, அவரின் மூலம் அதை கச்சிதமாக நிறைவேற்றி விட்டார்கள்.

 

இதனால்... சம்பந்தன், இந்தியாவிடம் ஏமாந்தார் என்று நாம் நினைத்தால், அது தவறு.

சம்பந்தனின்... விருப்பமும், அது தான். அதனால்.... தான் தான் தோன்றித்தனமாக சில வருடங்களாக, தமிழ் மக்கள் விரும்பாத செயல்களை செய்து, தனக்கு தோதாக சுந்திரனையும் சேர்த்து.... நாத்தல் வேலை பாத்துப் போட்டு, நிக்கிறார் சம்பந்தன்.

 

தமிழ் மக்களுக்கு.... இதுகளால், மேலும் பிரச்சினை தான் ஒழிய, விடிவில்லை.

இப்ப திருப்தியா.... சம்பந்தன். :huh:  :(

 

 

பலகாலமாக எழுதிவருகின்றேன்

 

முகங்கள் தெரியும் காலமிது

தலைவர்கள்

தம்மை நிரூபிக்கும் காலமிது..

தொடர்ந்து ஏமாற்றமே..

வானத்தை பார்த்தபடி தமிழர் இன்றும்... :(  :(  :(

கூட்டமைப்பு குலைஞ்சுபோனால் சிங்களம் ஆரோடை பேச்சுவார்தை நடத்தும்? 

 

 

புலம்பெயர் தேசிய வீரர்களின் நீண்டநாள் ஆசை கூட்டமைப்பு இல்லாமல் போவது.

 

கருணா, பிள்ளையான், டக்கிளஸ், ஆனந்தசங்கரி போன்றோர் இன்னொரு கூட்டமைப்பை உருவாக்கினால் சிங்கள அரசாங்கம் மகிழ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தும். கேபியும் இவர்களுடன் இணைந்து கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசிய வீரர்களின் நீண்டநாள் ஆசை கூட்டமைப்பு இல்லாமல் போவது.

கருணா, பிள்ளையான், டக்கிளஸ், ஆனந்தசங்கரி போன்றோர் இன்னொரு கூட்டமைப்பை உருவாக்கினால் சிங்கள அரசாங்கம் மகிழ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தும். கேபியும் இவர்களுடன் இணைந்து கொள்ளலாம்.

மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா?

மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா?

 

மக்களின் வாக்களிப்பி இன்றியே இவர்கள் அமைச்சர்களாக பதவிகளில் இருந்துள்ளனர். அரசாங்கமே இவர்கள் எல்லோரையும் ஒன்றுசேர்த்தால் மக்கள் வேண்டாமென்றா சொல்வார்கள் ? இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது.

புலம்பெயர் தேசிய வீரர்களின் நீண்டநாள் ஆசை கூட்டமைப்பு இல்லாமல் போவது.

 

கருணா, பிள்ளையான், டக்கிளஸ், ஆனந்தசங்கரி போன்றோர் இன்னொரு கூட்டமைப்பை உருவாக்கினால் சிங்கள அரசாங்கம் மகிழ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தும். கேபியும் இவர்களுடன் இணைந்து கொள்ளலாம். 

 

இணையவன் எமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதால் தானே சம்பந்தர் சுதந்திரதின விழாவிற்கு போனவர். இனி ஏன் பேச்சுவார்த்தை.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் வாக்களிப்பி இன்றியே இவர்கள் அமைச்சர்களாக பதவிகளில் இருந்துள்ளனர். அரசாங்கமே இவர்கள் எல்லோரையும் ஒன்றுசேர்த்தால் மக்கள் வேண்டாமென்றா சொல்வார்கள் ? இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது.

அவ்வாறு செய்ய முடியுமானால் மகி செய்திருப்பார்

இணையவன் எமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதால் தானே சம்பந்தர் சுதந்திரதின விழாவிற்கு போனவர். இனி ஏன் பேச்சுவார்த்தை.

 

நான் சொல்ல வருவது இலங்கையின் அரசியல் சாசனத்தை எதிர்த்துக் கொண்டு இலங்கையில் எதுவும் செய்ய முடியாது என்பதே. அரசியல் சாசனத்ததை ஏற்றுக் கொண்டாலே தேர்தலில் வாக்குக் கேட்கவும் பதவிகளில் இருக்கவும் முடியும். இல்லையேல் சம்பந்தர் சட்டப்படி ஒரு குற்றவாளியாவார். இதையெல்லாம் மீறி இலங்கையில் அரசியல் செய்பவர்கள் மீது சந்தேகம்தான் ஏற்படுகிறது. 

அவ்வாறு செய்ய முடியுமானால் மகி செய்திருப்பார்

 

மகிந்தா ஒருபோதும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை செய்ய முயன்றதில்லை. அதற்கு அவசியமும் இருந்ததில்லை. 

நான் சொல்ல வருவது இலங்கையின் அரசியல் சாசனத்தை எதிர்த்துக் கொண்டு இலங்கையில் எதுவும் செய்ய முடியாது என்பதே. அரசியல் சாசனத்ததை ஏற்றுக் கொண்டாலே தேர்தலில் வாக்குக் கேட்கவும் பதவிகளில் இருக்கவும் முடியும். இல்லையேல் சம்பந்தர் சட்டப்படி ஒரு குற்றவாளியாவார். இதையெல்லாம் மீறி இலங்கையில் அரசியல் செய்பவர்கள் மீது சந்தேகம்தான்.

இலங்கை அரசியல் சாதனத்தை எதிர்த்துகொண்டு அரசியல் இப்போது மட்டுமல்ல எந்த காலத்திலும் செய்திருக்க முடியாது. துரையப்பா,அருளம்பலம் , தேவநாயகம் ஆகியோர் கூட இதைத்தானே முன்பு கூறினர். அதை ஏற்று கொள்ளாமல் தானே தமிழரசுக்கட்சி சட்டமறுப்பு, சத்தியாகிரகங்களை மேற்கொண்டது. அந்த காலங்களில் இலங்கை அரசியல் சாதனத்தை ஏற்றுக்கொள்ளாது அரசியல் செய்வது ஏற்று கொள்ளப்பட்டிருந்ததா?

இலங்கை அரசியல் சாதனத்தை எதிர்த்துகொண்டு அரசியல் இப்போது மட்டுமல்ல எந்த காலத்திலும் செய்திருக்க முடியாது. துரையப்பா,அருளம்பலம் , தேவநாயகம் ஆகியோர் கூட இதைத்தானே முன்பு கூறினர். அதை ஏற்று கொள்ளாமல் தானே தமிழரசுக்கட்சி சட்டமறுப்பு, சத்தியாகிரகங்களை மேற்கொண்டது. அந்த காலங்களில் இலங்கை அரசியல் சாதனத்தை ஏற்றுக்கொள்ளாது அரசியல் செய்வது ஏற்று கொள்ளப்பட்டிருந்ததா?

 

நீங்கள் குறிப்பிட்டவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. அரசியல் சாசனத்தை எதிர்க்க வேண்டிய்ரிந்ததால் அது இலங்கையைப் பொறுத்தவரை சட்டவிரோதமான ஆயுதப் போராட்டமாகவே விரிவடைத்தது.  அந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

சிங்கள அரவணைப்பில் இருந்து கொண்டு ஊளயிடுவதைவிட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உலகம் முழுவதும் அகதிகளாகப் பரந்து கல்வி அறிவிலும் பொருளாதாரத்திலும் ஆளுமையிலும்  முன்னேறியுள்ள தமிழர்கள் உறுதியான தீர்மானத்துடன் செயற்பட்டிருக்க வேண்டும். இலங்கைத் தீவில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொள்ளக் கூடிய நாம் துரோகிப் பட்டம் கொடுக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் விரிசல் வருவது தமிழர் தரப்புக்கு நல்லதல்ல..ரெண்டு தலையாட்டி பொம்மைகளையும் கொஞ்சம் தட்டிவைக்கவேணும்

நான் சொல்ல வருவது இலங்கையின் அரசியல் சாசனத்தை எதிர்த்துக் கொண்டு இலங்கையில் எதுவும் செய்ய முடியாது என்பதே. அரசியல் சாசனத்ததை ஏற்றுக் கொண்டாலே தேர்தலில் வாக்குக் கேட்கவும் பதவிகளில் இருக்கவும் முடியும். இல்லையேல் சம்பந்தர் சட்டப்படி ஒரு குற்றவாளியாவார். இதையெல்லாம் மீறி இலங்கையில் அரசியல் செய்பவர்கள் மீது சந்தேகம்தான் ஏற்படுகிறது. 

 

 

இலங்கையில் தமிழர்களின் அரசியல் கட்சி விடுதலைப்புலிகள் அமோகமாக போராடிக்கொண்டிருந்த காலத்திலேயே இருந்தது .அப்போதும் அவர்கள் அந்த இரும்ம்புச்சுவருக்குள் இருந்து அரசியல் செய்தவர்கள் [தமிழ்தேசிய கூட்டமைப்பு ] வரலாற்றை நேரில் பார்த்தோம் ] அன்று அந்த இக்கடான நிலையில் எம் உரிமைக்காக குரல் கொடுத்தவர்க்லான எம் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் இன்று உலகமே எம் உரிமையை உணர்ந்து எமக்கு எதோ செய்ய வேண்டும் என்ற பார்வையில் இருக்கும்போது அவர்கள் தடம் புரள்வது ஏன் என்பதே ஒவ்வொரு தமிழ் மகனினதும் கேள்விக்குறி .அது புலம்பெயர் வாழ் தமிழ்  மக்களாய் [வீரராய்] இருந்தாலும் தாயக தமிழ் மக்களாய் இருந்தாலும் .அனைவரும் இந்த கேள்வியில் ஒரே புள்ளியில் தான் நிற்கிறார்கள் என்பதே யதார்த்தம் .

Edited by தமிழ்சூரியன்

விடுதலைப் புலிகள் காலத்திலும் கூட்டமைப்பினர் புலிகளின் கொள்கையுடன் அரசியல் நடத்தவில்லை. இருதலைக் கொள்ளியாகவே இருந்தனர். இப்போது முற்றாக ஒருபுறம் சாயவேண்டிய அவசியம் உள்ளது. 

 

கூட்டமைப்பினர் ஏன் தடம் புரள வேண்டும். அவர்களை உருவாக்கிய மக்களின் அபிலாசைகள் அல்லவா கூட்டமைப்பினரை வழிநடத்த வேண்டும் ? தடம்புரளும் அரசியல் தலைவர்களை மக்கள் அல்லவா கண்டிக்க வேண்டும். புலம்பெயர்ந்த தேசிய வாதிககளுக்குத் தலையாட்டும் ஒருசில அரசியல் வாதிகளைத் தவிர மக்கள் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையே ?

 

இதனை எப்படிச் சரி செய்வது ?

உங்களுக்கு புலம்பெயர் தேசியவாதிகள் என்ற குறுகிய சிந்தனைக்கு அப்பால் புலம்பெயர்வாழ் மக்களும் தமிழ் மக்கள் என்பதை சிந்திக்க முடியாமல் அல்லது சிந்திக்க தெரியாமைக்கு வருந்துகிறேன் மிஸ்டர் இணையவன்........உங்க விருப்பு வெறுப்புக்கு அப்பாலும் பெருந்தன்மையோடு சிந்திப்பதற்கு  பல விடயங்கள் உள்ளது [- விருப்பு குறி போட்ட மிஸ்டர் வாலிக்கும் ] :lol:

உங்களுக்கு புலம்பெயர் தேசியவாதிகள் என்ற குறுகிய சிந்தனைக்கு அப்பால் புலம்பெயர்வாழ் மக்களும் தமிழ் மக்கள் என்பதை சிந்திக்க முடியாமல் அல்லது சிந்திக்க தெரியாமைக்கு வருந்துகிறேன் மிஸ்டர் இணையவன்........உங்க விருப்பு வெறுப்புக்கு அப்பாலும் பெருந்தன்மையோடு சிந்திப்பதற்கு  பல விடயங்கள் உள்ளது [- விருப்பு குறி போட்ட மிஸ்டர் வாலிக்கும் ] :lol:

 

 

மதிப்புக்குரிய தமிழ்சூரியன்  :) ,

புலம்பெயர்ந்தவர்கள் மீதான குறுகிய சிந்தனை இல்லை, அவர்கள் தமது பாரிய பலத்தினைக் குறுகிய சிந்தனையோடு செயற்படுகிறார்கள். புலம்பெயர் தமிழர் பாற்றி இதே தலைப்பில் நான் எழுதியதைக் கருத்து இலக்கம் 18 இல் கவனியுங்கள். 

 

தவிர, உங்களை நேரில் சந்த்தித்து உரையாடியிருக்கிறேன் என்ற வகையில் என்னை நீங்களும் உங்களை நானும் அறிவோம். விவாதங்கள் எம்மிடையே புதிய பரந்த  சிந்தனைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதாலும் எனது கருத்திற்கு வைக்கப்படும் பதில்கள் எனது அறிவை வளர்க்கலாம் என்பதாலுமே கருத்துக் களத்தில் எழுத முயற்சிக்கிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அன்பான இணையவன்  இதை உங்களுக்கு எழுதவில்லை. :) .......[silarathu பதிவுகளை தொடர்ந்து வாசித்ததில் கொண்ட தாக்கம் ]   புலம்பெயர் தேசியவாதிகள் என்று புசத்திக்கொண்டு மூக்கு முட்ட திண்டுவிட்டு புசத்தும் புலம்பெயர் உறவுகளுக்கு எழுதிக்கொள்வது ..........ஊரைவிட்டு உறவை விட்டு அங்கே வாழ முடியாது என்ற ஏக்கத்தில் புலம்பெயர்ந்தவர்களே நாங்கள் .........இந்த வெளிவேச வாழ்வை விரும்பியோ விரும்பாமல் எம்மால் ஏற்கவேண்டிய சூழல் உருவாக்கப்பட்டவர்களே நாங்கள் ,எங்களுக்கென்று ஓர் உண்மையான வேண்டுகோள் உள்ளது ,எம் தாயகத்தில் நாம் நிம்மதியாக ,சுதந்திரமாக வாழவேண்டும் ........அதற்காகவே இந்தப்புலம்பெயர்வாழ் போராட்டம் .........இந்த உணர்வுள்ளவன் ,அதை உணர்ந்து செயல்படுபவன் அனைவரும் புலம்பெயர்வாழ் தேசியவாதியே ....................இந்த யதார்த்தம் புரியாமல் புலம்பெயர்ந்தும் தீனி மட்டுமே வாழ்க்கை என்று புசத்துவோர்களே ,எங்காவது போய் முட்டி மோதுங்க . எங்களை எங்கள் தாயகத்தில் வாழ்வதற்கு அதற்கான சூழலை உருவாக்குவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளை உங்கள் தீனி என்னும் விடயத்தில் சிந்திக்காமல் இருக்காமல் இருக்க கடவீர்களாக ஆமென் . :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.