Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்புக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்றார் ஹாபீஸ் நசீர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
hafiz-nazeer-350-news.jpg

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அஹமட், இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் வைபவம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

   

 

nazir-take-outh-060215-seithy.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=126064&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமாக இருந்த ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் இடம்பெற்றது.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் குறித்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

http://www.tamilmirror.lk/139282

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது ...........அந்த குணம் என்று மைதிரிக்கும் வால்காட்டி....மகிந்தவுக்கும் தலைகாட்டி.....கடைசியில் அப்பம் பிரித்த குரங்கு போல ....இப்ப சம்பந்துவும் சுமந்துவும் சுதந்திர தினத்தில் அடித்த தண்ணிக்கு .....நித்திரை கொள்ளுகினம் போல.....

  • கருத்துக்கள உறவுகள்

அணிலின் பிரித்தாளும் தந்திரம் வேளை செய்யத்தொடங்கிவிட்டது...ஙனந்தியில் தொடங்கி.....சம்பந்தர் ..சுமந்திரன் வரை விளையாடி...இப்ப முசுலிம்களை வைத்து விளையாடிவிட்டார்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் உள்வீட்டு பிரச்சனை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதுரியமாக காய்களை நகர்த்தி இருக்கின்றார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

90976.gifஇன்று, கரி நாள்.
கிழக்கு மாகணத்தில், தமிழ் கூட்டமைப்பு... ஆட்சியமைக்கக் கூடிய பலம் இருந்தும்...

அதனை நிறைவேற்ற முடியாமல், முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்த சம்பந்தனுக்காக,

திண்ணையில்.... கறுப்புக் கொடி பறக்க விட்டு துக்கம் அனுஷ்டிக்கப் படுகின்றது. :(

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

90976.gifஇன்று, கரி நாள்.

கிழக்கு மாகணத்தில், தமிழ் கூட்டமைப்பு... ஆட்சியமைக்கக் கூடிய பலம் இருந்தும்...

அதனை நிறைவேற்ற முடியாமல், முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்த சம்பந்தனுக்காக,

திண்ணையில்.... கறுப்புக் கொடி பறக்க விட்டு துக்கம் அனுஷ்டிக்கப் படுகின்றது. :(

பலகாலமாக எழுதிவருகின்றேன்

 

முகங்கள் தெரியும் காலமிது

தலைவர்கள்

தம்மை நிரூபிக்கும் காலமிது..

தொடர்ந்து ஏமாற்றமே..

வானத்தை பார்த்தபடி தமிழர் இன்றும்... :(  :(  :(

 

 

வழிநடாத்தும் தலைவர்கள்

துணிச்சல் அற்றவர்களாக

விவேகமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக

தீர்க்க தரிசனத்துடன் செயற்படுபவர்களாக

குறிக்கோளில் குறியாக...........

இல்லாமை கண்டு 

இன்று தமிழினம் தலை குனிந்து நிற்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது, சிலரது கவலைகள், புரியவில்லை.

கூட்டமைப்பு அதிக ஆசனங்கள் கொண்டிருந்தாலும், பெரும்பான்மை பலம் இல்லாத படியால் ஆட்சி அமைக்க வேறு கட்சி ஆதரவு தேவை.

மு.கா, மகிந்தா அரசில் சேர்ந்து, பதிலுக்கு அவரது கட்சியுடன் கிழக்குக்கான ஒப்பந்தம் செய்து கொண்டது.

நம்மூரில் யாருமே அரசியலுக்கு வருவது பையை நிறப்பத்தான்.

ஒன்றுமே இல்லா கூட்டமைப்புக்கு ஆதரவு தருவதிலும் பார்க்க, சுவிட்சை கையில் வைத்திருந்த மகிந்தருடன் சேர்ந்து பையை நிறப்பியது அவர்களது விவேகமான முடிவு. இதில் பிழை பிடிக்க முடியாதே.

மகிந்தர் போனாலும், அந்த சட்ட ரீதியான ஒப்பந்தம் கட்சியுடன் என்பதால் அதை மீறி வந்து கூட்டமைப்புக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்க முடியுமா, என்ன?

அப்படி தர அவர்களுக்கு தேவை ஒனறு இருப்பதாக தெரியவில்லையே.

ஐதேக வின் ஆதரவு கிடைத்து, பலத்தினை நிரூபித்திருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்.

ஆனால் அவர்கள், தேசிய அரசில் மு.காவுடன் பங்காளிகள். எனவே அவர்களும் முக்கியமான மத்திய அரசுக்கான ஆதரவை பணயம் வைத்து, இந்த சில்லறை மாகாண விடயத்தை கண்டு கொள்ள மாட்டார்கள், கொள்ளவும் இல்லை.

இந்த யதார்த நிவையில் கூட்டமைப்பு எப்படி ஆட்சியை பிடித்திருக்க முடியும் என தயவுடன் விளக்குவீர்களா?

உண்மையிலேயே புரியாமல் தான் கேட்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது, சிலரது கவலைகள், புரியவில்லை.

கூட்டமைப்பு அதிக ஆசனங்கள் கொண்டிருந்தாலும், பெரும்பான்மை பலம் இல்லாத படியால் ஆட்சி அமைக்க வேறு கட்சி ஆதரவு தேவை.

மு.கா, மகிந்தா அரசில் சேர்ந்து, பதிலுக்கு அவரது கட்சியுடன் கிழக்குக்கான ஒப்பந்தம் செய்து கொண்டது.

மகிந்தர் போனாலும், அந்த சட்ட ரீதியான ஒப்பந்தம் கட்சியுடன் என்பதால் அதை மீறி வந்து கூட்டமைப்புக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்க முடியுமா, என்ன?

அப்படி தர அவர்களுக்கு தேவை ஒனறு இருப்பதாக தெரியவில்லையே.

ஐதேக வின் ஆதரவு கிடைத்து, பலத்தினை நிரூபித்திருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்.

ஆனால் அவர்கள், தேசிய அரசில் மு.காவுடன் பங்காளிகள். எனவே அவர்களும் முக்கியமான மத்திய அரசுக்கான ஆதரவை பணயம் வைத்து, இந்த சில்லறை மாகாண விடயத்தை கண்டு கொள்ள மாட்டார்கள், கொள்ளவும் இல்லை.

இந்த யதார்த நிவையில் கூட்டமைப்பு எப்படி ஆட்சியை பிடித்திருக்க முடியும் என தயவுடன் விளக்குவீர்களா?

உண்மையிலேயே புரியாமல் தான் கேட்கிறேன்.

 

என்ன, நாதமுனி....

சின்னப் பிள்ளைத்தனமா கேள்வி கேட்கிறீர்கள்.

சிறிமாவோ -  சாத்திரி ஒப்பந்தம்.

டட்லி - செல்வா ஒப்பந்தம்.

பண்டார நாயக்கா -  நேரு ஒப்பந்தம்.

ஜெயவர்த்தனா -  நரசிம்ம ராவ் ஒப்பந்தம்.

ராஜீவ் காந்தி - பிரேம தாச ஒப்பந்தங்களை விட.....

இது... பெரிய ஒப்பந்தமா ஐயா?

நாட்டு நடப்பு, விளங்கி சமயோசிதமாய் இருக்கிறவனே.... நல்ல அரசியல் வாதி.

 

அதற்கு... சம்பந்தன் , மனோ கணேசனிடம் பிச்சை எடுத்தாலும் காரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசனிடம் பிச்சை ??

மன்னிக்க வேண்டும் சிறியர்,

தர்க்கரீதியாக, யதார்தமான பதில் தாருங்கள் ஜயா.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 14

முஸ்லீம் காங்கிரஸ் 7

தமிழ் தேசிய கூட்டமைப்பு 11

ஐக்கிய தேசிய கட்சி 4

தேசிய சுதந்திர முண்ணணி 1

இதில கூட்டமைப்பு ?

இதைத்தான் சொல்வது ...........அந்த குணம் என்று மைதிரிக்கும் வால்காட்டி....மகிந்தவுக்கும் தலைகாட்டி.....கடைசியில் அப்பம் பிரித்த குரங்கு போல ....இப்ப சம்பந்துவும் சுமந்துவும் சுதந்திர தினத்தில் அடித்த தண்ணிக்கு .....நித்திரை கொள்ளுகினம் போல.....

 

பொதுமக்களே அரசியல் கட்சியையோ தலைமையையோ கட்டுப்படுத்தும் சக்தியாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழர் தலைமைக்கும் புலம்பெயர்ந்த தமிழருக்கும் இடையிலான விரிசலும் இலங்கைத் தமிழரின் அரசியல் பலவீனத்துக்கும் கிடைத்த பின்னடைவாகவே இதனைக் கருத வேண்டும். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திப்பதை விடுத்து, சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூட்டமைப்பைத் தூற்றுவதில் என்ன பயன் ?

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிற்கும் முக விற்கும் இடையே கிழக்கு மாகாண சபை தொடர்பில் ஒரு ஒப்பந்தம் உள்ள போது எப்படி முக அதை முறித்து ததேகூ உடன் சேரும் என்று சம்பந்தன் எதிர்பார்த்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் கைக்கு போகக் கூடாது என்பதில் சிங்களம் உறுதியாகவே உள்ளது. சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் தான் இந்த அரசியல் இன்னும் புரியல்ல. :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிற்கும் முக விற்கும் இடையே கிழக்கு மாகாண சபை தொடர்பில் ஒரு ஒப்பந்தம் உள்ள போது எப்படி முக அதை முறித்து ததேகூ உடன் சேரும் என்று சம்பந்தன் எதிர்பார்த்தார்?

எல்லாரும் கதைக்கினம். ஆனா ஒருவருமே எப்படி ஆட்சிய பிடித்திருக்க முடியும் எண்டு சொல்லுகினம் இல்லையே. :D

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியுடன் தொடர்பிலிருக்கம் சபேசன்### மற்றும் கோஷான், அர்ஜுன், தெனாலி, ஹரி எல்லோரும் சொன்னார்கள் சுமந்திரனும், சம்பந்தரும் தமிழரை தமது ராஜதந்திரத்தால் நல்ல நிலைக்குக்கு கொண்டுவருவார்கள் என்றும், மைத்திரியின் ஆட்சியில் தமிழரின் அபிலாஷைகளை வென்றெடுக்கமுடியும் என்றும். அதுமட்டுமல்லாமல், அகற்கும் எதிராக கருத்திட்டவர்களுக்கு நக்கல் வேறு. ஒரு நல்ல கருத்தாளன், தான் பிழையென்றால் அதை உணர்ந்து accept பன்ணவேண்டும்.

மக்கள் செய்யவேண்டியது இது போன்றதுதான்.

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/153392-அம்பாறை-சாய்ந்தமருது-ரவூப்-ஹக்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுமக்களே அரசியல் கட்சியையோ தலைமையையோ கட்டுப்படுத்தும் சக்தியாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழர் தலைமைக்கும் புலம்பெயர்ந்த தமிழருக்கும் இடையிலான விரிசலும் இலங்கைத் தமிழரின் அரசியல் பலவீனத்துக்கும் கிடைத்த பின்னடைவாகவே இதனைக் கருத வேண்டும். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திப்பதை விடுத்து, சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூட்டமைப்பைத் தூற்றுவதில் என்ன பயன் ?

 

இதே நிலமை சிங்கள வடிவில் யாழ்மாவட்டத்திற்கும் வரும். வந்து கொண்டிருக்கின்றது. அப்போதும் இதையே சொல்வீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் supporters ஐ காணவில்லை...இன்னமும் நித்திரை போல (அல்லது நித்திரை மாதிரி நடிப்போ)

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் supporters ஐ காணவில்லை...இன்னமும் நித்திரை போல (அல்லது நித்திரை மாதிரி நடிப்போ)

 

அவர்கள் அப்படித்தான்....

 

போராட்ட காலத்திலும் அவ்வாறே..

வெளியில் நின்று வேடிக்கையும் பேனையும் வாயும் தான்...

 

பத்து தரம் எச்சரிக்கை செய்யும் போது வரமாட்டார்கள்

தீர்வு சொல்லமாட்டார்கள்

இறுதியாக  வெடி விழுந்ததும்

உலகம் பூரா கொண்டு திரிவார்கள்...... :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் கதைக்கினம். ஆனா ஒருவருமே எப்படி ஆட்சிய பிடித்திருக்க முடியும் எண்டு சொல்லுகினம் இல்லையே. :D

நாதமுனி,

 

சொல்ல முடியாது. ஏனென்றால் ஆட்சியை பிடிக்க முடியாது. 

 

1) கூட்டமைப்புக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை. முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை. இருவரிடமும் அதற்கு தேவையான தனி மெஜாரிட்டி கிடையாது.

2) சிங்கள கட்சியுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியை பிடிக்கலாம்.

3) கூட்டமைப்பு சிங்கள கட்சியுடன் கூட்டணி வைத்தால், அடித்தே கொன்றுவிடுவோம்.

4) முஸ்லீம் காங்கிரஸூக்கு அந்த சிக்கல் இல்லை. கூட்டணி வைத்தார்கள் ஆட்சியை பிடித்தார்கள்.

 

இதில் மு.கா. கட்சியும், கூட்டமைப்பும் ஏன் கூட்டணி வைக்கக்கூடாது?

 

காரணம் உண்டு. இலங்கை அரசுக்கு எதிராக அரசியல் செய்யும் கூட்டமைப்புடன் கூட்டணி வைத்து மாகாணத்துக்கு எதுவுமே கிடைக்காமல் போவதைவிட, சிங்களக் கட்சியுடன் கூட்டணி வைத்து தம் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்பது முஸ்லீம் காங்கிரஸின் தேர்வு.

 

அதைத்தான் செய்திருக்கிறார்கள்.

எமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டபிறகு கூத்தமைப்பு என்ற கட்சி எதுக்கு. அது ஆட்சி அமைத்தால் என்ன அமைக்காமல் விட்டால் என்ன யாருக்கு என்ன கவலை. ஐக்கிய தேசிய கட்சி யாழ்பாணத்தில் ஆட்சி அமைத்தாலும் நல்லது தானே. அதுவும் எமது நாட்டு கட்சி தானே. இனி என்ன வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,

சொல்ல முடியாது. ஏனென்றால் ஆட்சியை பிடிக்க முடியாது.

1) கூட்டமைப்புக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை. முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை. இருவரிடமும் அதற்கு தேவையான தனி மெஜாரிட்டி கிடையாது.

2) சிங்கள கட்சியுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியை பிடிக்கலாம்.

3) கூட்டமைப்பு சிங்கள கட்சியுடன் கூட்டணி வைத்தால், அடித்தே கொன்றுவிடுவோம்.

4) முஸ்லீம் காங்கிரஸூக்கு அந்த சிக்கல் இல்லை. கூட்டணி வைத்தார்கள் ஆட்சியை பிடித்தார்கள்.

இதில் மு.கா. கட்சியும், கூட்டமைப்பும் ஏன் கூட்டணி வைக்கக்கூடாது?

காரணம் உண்டு. இலங்கை அரசுக்கு எதிராக அரசியல் செய்யும் கூட்டமைப்புடன் கூட்டணி வைத்து மாகாணத்துக்கு எதுவுமே கிடைக்காமல் போவதைவிட, சிங்களக் கட்சியுடன் கூட்டணி வைத்து தம் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்பது முஸ்லீம் காங்கிரஸின் தேர்வு.

அதைத்தான் செய்திருக்கிறார்கள்.

தெளிவான பதில் நன்றி.

1972 முதல் முரண்படும் அரசியல் செய்து கிடைத்தது அழிவு மட்டுமே.

இப்போது அமெரிக்க, இந்திய திட்டப் படி, வடக்கு கிழக்குக்கு என்று தனியாக கொடுக்கப் போய் சிங்கள எதிர்ப்பினை சந்தியாமல், வடக்கு, கிழக்குக்கு கொடுக்கும் அதே விடயங்கள், தெற்கு, மேற்கு என கொடுத்து விட்டால் எதிர்ப்பு வரப்போவதில்லை.

அநேகமாக நாடு 3 மாநிலங்களாகலாம். எமது தனிநாட்டுக் கனவு, புலிகளுடன் அல்ல, மகிந்தரின் தோல்வியுடன் தான் முடிகிறது என்பது எனது கணிப்பு.

இலங்கை அரசியலை புரிந்து சர்வதேசம் எடுக்கும் இந்த நடவடிக்கைகள் வெற்றியளிக்க வேண்டும் என பிராத்திப்பதை விட்டு, உப்புக்கு பிரயோசம் இல்லா மாகாண சபை முதல்வர் கதிரை பற்றி கவலைப்படுவதில் அர்த்த மில்லை.

விகிதாசார தேர்தல் முறை தந்த ஒரு குழந்தை தான், மு.கா.

அது பழைய நிலைக்கு மாறும் போது கிழக்கில் ஒரு MP தவிர வேறு எங்குமே பிரதான கட்சிகள் தயவு இன்றி மு.கா அரசியல் செய்ய முடியாது.

எனவே யதார்த்தத்தை புரிந்து கொள்ளுவோம்.

Edited by Nathamuni

தெளிவான பதில் நன்றி.

1972 முதல் முரண்படும் அரசியல் செய்து கிடைத்தது அழிவு மட்டுமே.

இப்போது அமெரிக்க, இந்திய திட்டப் படி, வடக்கு கிழக்குக்கு என்று தனியாக கொடுக்கப் போய் சிங்கள எதிர்ப்பினை சந்தியாமல், வடக்கு, கிழக்குக்கு கொடுக்கும் அதே விடயங்கள், தெற்கு, மேற்கு என கொடுத்து விட்டால் எதிர்ப்பு வரப்போவதில்லை.

இலங்கை அரசியலை புரிந்து சர்வதேசம் எடுக்கும் இந்த நடவடிக்கைகள் வெற்றியளிக்க வேண்டும் என பிராத்திப்பதை விட்டு, உப்புக்கு பிரயோசம் இல்லா மாகாண சபை முதல்வர் கதிரை பற்றி கவலைப்படுவதில் அர்த்த மில்லை.

விகிதாசார தேர்தல் முறை தந்த ஒரு குழந்தை தான், மு.கா.

அது பழைய நிலைக்கு மாறும் போது கிழக்கில் ஒரு MP தவிர வேறு எங்குமே பிரதான கட்சிகள் தயவு இன்றி மு.கா அரசியல் செய்ய முடியாது.

எனவே யதார்த்தத்தை புரிந்து கொள்ளுவோம்.

 

ஒகே சார் புரந்து கொள்வோம். எதிர்ப்பு அரசியலை தொடங்கியதே சம்பந்தர் போன்றோர் தமது பதவி கதிரைக்காக தான் என்பதையும் புரிந்து கொள்வோம். இன்று அவருக்கு கதிரை எடுக்கு அந்த அரசியல் தேவையில்லை என்பதையும் புரிந்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒகே சார் புரந்து கொள்வோம். எதிர்ப்பு அரசியலை தொடங்கியதே சம்பந்தர் போன்றோர் தமது பதவி கதிரைக்காக தான் என்பதையும் புரிந்து கொள்வோம். இன்று அவருக்கு கதிரை எடுக்கு அந்த அரசியல் தேவையில்லை என்பதையும் புரிந்து கொள்வோம்.

அவர்களுக்கு வக்காளத்து வாங்குவது எனது நோக்கம் இல்லை. சில யதார்தங்களை புரிந்து கொள்வது... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.