Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அதிசயம்!! தாயின் பூதவுடலை சுமந்து, சுடலை சென்ற பெண் பிள்ளைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் அதிசயம்!! தாயின் பூதவுடலை சுமந்து, சுடலை சென்ற பெண் பிள்ளைகள்!

 

February 09, 2015, 8:51 pm

யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும் ஆழ்த்தியது.திருநெல்வேலி சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி.

 

இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இந்த நிலையில் நான்கு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இவருக்கு உள்ளனர்.

 

இவரது மூத்த பெண் பிள்ளை தனது தாயார் நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த சில வருடங்களாக பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் தாயாரின் தொண்டைக் குழாய் சுருங்கிக் காணப்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களாகப் பாலை மட்டுமே பருகி உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தாயார் திடீரென இறந்துள்ளார்.

பெற்று வளர்த்தாளாக்கிய தாய் தகப்பனை அநாதையில்லத்தில் தவிக்க விட்டு விட்டு அவர்களது இறுதிச்சடங்கு நிகழ்விற்குக் கூட எட்டிப் பார்க்க மறுக்கும் கலிகாலத்தில் தாயின் மரணச் செய்தி அறிந்ததும் துடி துடித்துப் போய் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த அவரது மூன்று பெண்பிள்ளைகளும் தமது தாய் மீது வைத்த அதீத பாசத்தால் இங்கிருந்த இரு சகோதரர்களோடும் சேர்ந்து தமது தாயாரின் மரணச் சடங்கை முன்னின்று நடாத்தினர்.

 

உச்சக்கட்டமாகத் தமது தாயாரின் பூதவுடல் தாங்கிய பேழையைத் தம் தோள்களில் கண்கள் கண்ணீர்க் குளமாக உருவாகச் சுமந்து சென்று தமது எல்லையில்லாத பாசவுணர்வை வெளிப்படுத்தினர்.

அத்துடன் சுடலைக்கும் சென்று தாயாருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை நிறைவேற்றினர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

 

எங்களை எங்கள் அண்ணாவுடன் சேர்த்து ஐந்து ஆம்பிளைப் பிள்ளைகள் என்று கூறித் தான் வளர்த்தவா. அம்மா எங்கள மிகவும் கஷ்ரத்தின் மத்தியில் வளர்த்து ஆளாக்கினவா.

 

அம்மான்ர இறுதிக் காலத்தில நாம் அம்மாவ உயிருடன் நேரில காணச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் இரு சகோதரங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கு. அம்மா எங்கள அன்புடன் வளர்த்தாளாக்கியதற்கு நாங்க எப்பவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். அந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தவே எங்கட அம்மாவை நாங்கள் நான்கு பேரும் தோள்களில் சுமந்தோம் என்றனர்.

 

யாழ்.மாவட்டத்திலே.... ஏன் இலங்கையிலேயே இவ்வாறு பெண் பிள்ளைகள் தாமாகவே முன்வந்து அன்னையின் பூதவுடல் தாங்கிய பேழையைச் சுமந்து சென்றமை இது தான் முதல் தடவையாகவும் இருக்கலாம்.

 

பெண்கள் சுடலைக்கு போகக் கூடாது என்ற எங்கள் சமுதாயத்தின் பார்வையும் அவ்வாறு தான் இன்றளவுமிருக்கிறது.

 

இருந்த போதும் பெண்கள் தற்காலத்தில் ஆணுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்வதுடன் எல்லாத் துறைகளிலும் ஒளிவீசிப் பிரகாசிக்கும் போது இதனையும் மாற்றத்திற்கான ஆரம்பமாகப் பார்ப்போமே.

 

-ஊரில் இருந்து..... நம்பிக்கையான ஒருவரிடம் இருந்து, மின்னஞ்சலில் வந்த செய்தி.-

Edited by தமிழ் சிறி

யாழின் அதிசயமா..?? தாயின் பூதவுடலை சுமந்து சுடலை சென்ற பெண் பிள்ளைகள்!
 

 

யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும் ஆழ்த்தியது.

திருநெல்வேலி சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி.

இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இந்த நிலையில் நான்கு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இவருக்கு உள்ளனர்.

இவரது மூத்த பெண் பிள்ளை தனது தாயார் நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த சில வருடங்களாக பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் தாயாரின் தொண்டைக் குழாய் சுருங்கிக் காணப்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களாகப் பாலை மட்டுமே பருகி உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தாயார் திடீரென இறந்துள்ளார்.

 

 

பெற்று வளர்த்தாளாக்கிய தாய் தகப்பனை அநாதையில்லத்தில் தவிக்க விட்டு விட்டு அவர்களது இறுதிச்சடங்கு நிகழ்விற்குக் கூட எட்டிப் பார்க்க மறுக்கும் கலிகாலத்தில் தாயின் மரணச் செய்தி அறிந்ததும் துடி துடித்துப் போய் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த அவரது மூன்று பெண்பிள்ளைகளும் தமது தாய் மீது வைத்த அதீத பாசத்தால் இங்கிருந்த இரு சகோதரர்களோடும் சேர்ந்து தமது தாயாரின் மரணச் சடங்கை முன்னின்று நடாத்தினர்.

உச்சக்கட்டமாகத் தமது தாயாரின் பூதவுடல் தாங்கிய பேழையைத் தம் தோள்களில் கண்கள் கண்ணீர்க் குளமாக உருவாகச் சுமந்து சென்று தமது எல்லையில்லாத பாசவுணர்வை வெளிப்படுத்தினர்.

அத்துடன் சுடலைக்கும் சென்று தாயாருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை நிறைவேற்றினர்.

 

2iqdf7r.jpg

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

எங்களை எங்கள் அண்ணாவுடன் சேர்த்து ஐந்து ஆம்பிளைப் பிள்ளைகள் என்று கூறித் தான் வளர்த்தவா. அம்மா எங்கள மிகவும் கஷ்ரத்தின் மத்தியில் வளர்த்து ஆளாக்கினவா.

அம்மான்ர இறுதிக் காலத்தில நாம் அம்மாவ உயிருடன் நேரில காணச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் இரு சகோதரங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கு. அம்மா எங்கள அன்புடன் வளர்த்தாளாக்கியதற்கு நாங்க எப்பவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். அந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தவே எங்கட அம்மாவை நாங்கள் நான்கு பேரும் தோள்களில் சுமந்தோம் என்றனர்.

 

 

யாழ்.மாவட்டத்திலே ஏன் இலங்கையிலேயே இவ்வாறு பெண் பிள்ளைகள் தாமாகவே முன்வந்து அன்னையின் பூதவுடல் தாங்கிய பேழையைச் சுமந்து சென்றமை இது தான் முதல் தடவையாகவும் இருக்கலாம்.

பெண்கள் சுடலைக்கு போகக் கூடாது என்ற எங்கள் சமுதாயத்தின் பார்வையும் அவ்வாறு தான் இன்றளவுமிருக்கிறது.

இருந்த போதும் பெண்கள் தற்காலத்தில் ஆணுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்வதுடன் எல்லாத் துறைகளிலும் ஒளிவீசிப் பிரகாசிக்கும் போது இதனையும் மாற்றத்திற்கான ஆரம்பமாகப் பார்ப்போமே.

 

http://www.jvpnews.com/srilanka/96900.html

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வேலையல்ல..

சம்பிரதாய பழக்கமாகும்..

சரி பிழை தெரியவில்லை

ஆனால் ஏன் செய்யக்கூடாது என்ற கேள்வி எனது மனதிலும் பலகாலமாக உள்ளது...

யாராவது விளக்கம் தந்தால் நல்லது

நல்ல விடயம். கடமையுணர்விலும் பாசத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல பெண் பிள்ளைகள்.

 

என் அக்காவும் என் அப்பாவின் இறுதிக் கிரியையில் பங்கு கொண்டு சுடலை வரைக்கும் வந்தார். என் நண்பர்களின் பலரது இரத்த உறவுகளின் இறுதிக் கிரியைகளின் போது பங்கு கொண்டு சுடலை/மயானம் வரைக்கும் வந்ததை கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அண்மைய இறுதிச் சடங்குகள் பலவற்றில், ஆண்மக்கள் இல்லாவிடில் பெண்மக்கள் காரியங்கள் செய்வது நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழில்கூட சிலர் புலம்பெயர்ந்தவர்களைப் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் என்று சாடுவதைக் கண்டிருக்கிறேன். அந்தப் புண்ணாக்குகளும்தான் ஆணுக்குப் பெண் அடிமை என்று தமிழர்களைப் பலகாலமாக ஏமாற்றிவந்த ஆரிய மரபை உடைக்கக் காரணமாகியுள்ளனர். இந்தப் புரட்சி மேலும் வளர்ந்து தமிழர்கள் தமிழர்களாக வெளிவரவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழில்கூட சிலர் புலம்பெயர்ந்தவர்களைப் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் என்று சாடுவதைக் கண்டிருக்கிறேன். அந்தப் புண்ணாக்குகளும்தான் ஆணுக்குப் பெண் அடிமை என்று தமிழர்களைப் பலகாலமாக ஏமாற்றிவந்த ஆரிய மரபை உடைக்கக் காரணமாகியுள்ளனர். இந்தப் புரட்சி மேலும் வளர்ந்து தமிழர்கள் தமிழர்களாக வெளிவரவேண்டும்.

புலம் பெயராப் புண்ணாக்குகள் தான் , புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் என்று சொல்லியிருப்பினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு வேலையல்ல..

சம்பிரதாய பழக்கமாகும்..

சரி பிழை தெரியவில்லை

ஆனால் ஏன் செய்யக்கூடாது என்ற கேள்வி எனது மனதிலும் பலகாலமாக உள்ளது...

யாராவது விளக்கம் தந்தால் நல்லது

 

 

மூடப் பழக்கங்களை ஊக்குவிக்ககூடாது. என்றாலும், பெண்கள் ஏன் சுடலைக்கு செல்லக்கூடாது, கொள்ளி வைக்கக்கூடாது என்பதற்கு பொது அறிவின் பிரகாரம் கீழ்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.

 

பெண்கள் வழமையாக புடவை அணிவார்கள். தீ புடவையில் இலகுவில் பற்றக்கூடிய ஆபத்து உள்ளது.

பெண்களிற்கு நீண்ட தலைமுடி உள்ளது. தீ ஆபத்து தவிர, சுகாதாரக்கேடும் ஏற்படலாம்.

 

பெண்கள் சிசுவை கருவில் சுமந்து, குழந்தையை பெற்று சந்ததியை வளர்ப்பவர்கள். இழப்புக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி சுடலைவரை செல்லும்போது அதிர்ச்சி Trauma பாரதூரமாய் பெண்களை பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. 

 

ஆனால், ஆண்களிற்கு இவ்வாறான பாதிப்புக்கள் இல்லை அல்லது ஒப்பீட்டளவில் குறைவு. 

 

இந்துக்கள் உடலை எரிப்பதால் வந்த நடைமுறை உடலை தகனம் செய்யாமல் புதைக்கும் கலாச்சாரங்களில் காணாமல் போயிருக்கலாம்.

 

இது எனது ஊகிப்பு ஒழிய தவறான சம்பிரதாயத்தை நியாயப்படுத்தும் வியாக்கியானம் அல்ல என்பதை தெரிவிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மூடப் பழக்கங்களை ஊக்குவிக்ககூடாது. என்றாலும், பெண்கள் ஏன் சுடலைக்கு செல்லக்கூடாது, கொள்ளி வைக்கக்கூடாது என்பதற்கு பொது அறிவின் பிரகாரம் கீழ்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.

 

பெண்கள் வழமையாக புடவை அணிவார்கள். தீ புடவையில் இலகுவில் பற்றக்கூடிய ஆபத்து உள்ளது.

பெண்களிற்கு நீண்ட தலைமுடி உள்ளது. தீ ஆபத்து தவிர, சுகாதாரக்கேடும் ஏற்படலாம்.

 

பெண்கள் சிசுவை கருவில் சுமந்து, குழந்தையை பெற்று சந்ததியை வளர்ப்பவர்கள். இழப்புக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி சுடலைவரை செல்லும்போது அதிர்ச்சி Trauma பாரதூரமாய் பெண்களை பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது

 

ஆனால், ஆண்களிற்கு இவ்வாறான பாதிப்புக்கள் இல்லை அல்லது ஒப்பீட்டளவில் குறைவு. 

 

இந்துக்கள் உடலை எரிப்பதால் வந்த நடைமுறை உடலை தகனம் செய்யாமல் புதைக்கும் கலாச்சாரங்களில் காணாமல் போயிருக்கலாம்.

 

இது எனது ஊகிப்பு ஒழிய தவறான சம்பிரதாயத்தை நியாயப்படுத்தும் வியாக்கியானம் அல்ல என்பதை தெரிவிக்கின்றேன்.

 

 

நன்றி  விளக்கத்துக்கு..

அத்துடன் ஆண்களைவிட பெண்கள் இலகுவில் உணர்ச்சி  வசப்படுவார்கள்

அல்லது  திடீர் முடிவுகளை எடுப்பார்கள்

மற்றது இறந்தவரில் தங்கி  வாழ்தல் அதிகமாக இருக்கும் போது

தற்கொலைக்கு முயலுதல் நடக்கலாம் என நான் நினைத்தவை... 

(ஆண்களே சில இடங்களில் பாயமுயன்றதை கண்டிருக்கின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்

மூடப் பழக்கங்களை ஊக்குவிக்ககூடாது. என்றாலும், பெண்கள் ஏன் சுடலைக்கு செல்லக்கூடாது, கொள்ளி வைக்கக்கூடாது என்பதற்கு பொது அறிவின் பிரகாரம் கீழ்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.

பெண்கள் வழமையாக புடவை அணிவார்கள். தீ புடவையில் இலகுவில் பற்றக்கூடிய ஆபத்து உள்ளது.

பெண்களிற்கு நீண்ட தலைமுடி உள்ளது. தீ ஆபத்து தவிர, சுகாதாரக்கேடும் ஏற்படலாம்.

பெண்கள் சிசுவை கருவில் சுமந்து, குழந்தையை பெற்று சந்ததியை வளர்ப்பவர்கள். இழப்புக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி சுடலைவரை செல்லும்போது அதிர்ச்சி Trauma பாரதூரமாய் பெண்களை பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆனால், ஆண்களிற்கு இவ்வாறான பாதிப்புக்கள் இல்லை அல்லது ஒப்பீட்டளவில் குறைவு.

இந்துக்கள் உடலை எரிப்பதால் வந்த நடைமுறை உடலை தகனம் செய்யாமல் புதைக்கும் கலாச்சாரங்களில் காணாமல் போயிருக்கலாம்.

இது எனது ஊகிப்பு ஒழிய தவறான சம்பிரதாயத்தை நியாயப்படுத்தும் வியாக்கியானம் அல்ல என்பதை தெரிவிக்கின்றேன்.

அது காரணம் இல்லை என்று நினைக்கிறேன்.

பெண் ஆணில் முழுவதுமாக தங்கியிருந்த அந்தப் பழைய காலங்களில், விதவைகளை உறவினர் பாரம் எடுக்காது, அல்லது பாரமாக இருக்க விரும்பது, உடன்கட்டை ஏறும், ஏற்றிவிடும் கலாச்சாரம் இருந்தது.

இதை பிரித்தானியர்கள் சட்டம் போட்டு தடுத்தார்கள். தடை கண்டு கொள்ளாத ஒரு கட்டத்தில் பெண்கள் காடு சென்றால், உடன்கட்டை ஏறினால் அவர்களது தேட்டம், சொத்துக்கள், (அவர்களிடம் சொத்து இல்லாவிடில் அழைத்துச் சென்ற உறவினர் சொத்து ) அரசை சேரும் என அறிவிக்க, பெண்கள் காடு செல்வது அருகி நின்று போனது.

Edited by Nathamuni

தொன்றுதொட்டு சம்பிரதாயம் என்று ஒன்று இருக்கிறது.

'வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை பிள்ளை' என்று சம்பிரதாயத்தை வழிமொழிந்தான் கவிஞன்.

 

எனது ஊரில் சைவக் குருக்கள்மார்தான் ஈமக் கிரியைகளுக்கு வருவார்கள்.

 

ஆனால்.. வெளிநாடுகளில் அந்தணர்கள் நடாத்துவது சர்வ சாதாரணம்.

 

ஆக, நாம் மற்றவரை நம்பி இல்லை எனும்போது... எதையும் செய்யலாம்! அதுதான் நிகழ்கிறது!!!

 

20 வருடங்களுக்கு முன்னர்.. எனது பெரியம்மா ஒருவர் சேந்தாங்குளத்தில்... பிள்ளைகள் இல்லை.. கணவரின் உறவினருடன் ஒற்றுமை இல்லை... வீட்டின் முற்பகுதியில் சில்லறைக்கடை வைத்திருந்தார்கள்... கணவருக்கு தானே உறவினரின் எதிர்ப்பையும் மீறி கொள்ளி வைத்தார். அந்த நேரத்தில் இதை ஏளனமாகக் கதைத்தார்கள்.. இப்போது விசேட செய்தியாகப் பேசுகிறார்கள்!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் அடுப்பு ஊதிய காலமெல்லாம் போய்விட்டது.

 

தேசிய தலைவர் நிறையவே மாற்றங்களைச் செய்துவிட்டார்.

நல்ல விஷயமுங்க, அவங்க வெளி நாட்டில் இருந்து போகேக்கையே மச்சிங் சாறி கொண்டு போய் இருக்கிறாங்க போலை , எல்லாம் ஒரு வித நாடகம் தானுங்க


தாய் இறந்த கவலையா இதுங்க

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன புதுமை இருக்குது..?! பெற்ற தாயை நேரில போய் கவனிக்க முடியாதவை.. செத்த பின்னர் அந்த உடலத்தை தூக்கி ஊருக்கு விடுப்புக் காட்டினது புதுமையா..?! :rolleyes::(

 

எங்கள் பெண் போராளிகள் இப்படி எத்தனையோ தடைகளை வெகு இலகுவாக தாண்டினவை தானே...! இப்ப என்ன புதிசா...?! ஓ.. இது மைத்திரி அரசியல் சிங்கள அரசின் படைகளின் கட்டுப்பாட்டில் நடக்கும் புதுமையோ..?! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இனிமேல் ஆராவது பெண்ணடிமை பெண்டிர் உரிமை எண்டு கத்திக்கொண்டு வாங்கோ......அப்ப இருக்கு விளையாட்டு... :lol:
 
பொம்புளையளே கொள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தை கடவுள் உருவாக்கிக்கொண்டு வருகின்றான். :icon_idea:
 
பெண்ணினமே கலங்காதே.......
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விஷயமுங்க, அவங்க வெளி நாட்டில் இருந்து போகேக்கையே மச்சிங் சாறி கொண்டு போய் இருக்கிறாங்க போலை , எல்லாம் ஒரு வித நாடகம் தானுங்க

தாய் இறந்த கவலையா இதுங்க

 

 

ஏன் கோப்பாயில் புடவை கடை இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.