Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் பட்டாம் பூச்சி செத்துவிட்டது

Featured Replies

எனக்குள் ஒரு பட்டாம் பூச்சி

இருந்தது

 

குளக்கரைகளில் மிதக்கும்

தாழம் பூவிலும்

குதித்து விளையாடும்

குளப்படி

வாண்டுகளிலும்

லயித்து மகிழும்

பட்டாம் பூச்சி

அது

 

 

கடந்து போகும் ஒரு

துளி இசையை நூல் பிடிச்சு

அதில் தொங்கி

கூத்தாடும்

பின்

தூரத்தே கேட்கும் பறையொலியிலும்

தன் சிறகுகளை

விரித்து நடனமாடும்

 

செங்கறுப்பு பெண்களின்

கருத்த முலைக் காம்புகளின்

மீது

தீராக் காதல் கொண்டு

கவி பாடும்

சிலவேளைகளில்

சரசமாடும்

 

பெரும் வனம் புகும்

இருள் விரும்பும்

சிறுகாடு ஒன்றில் தனித்து இருக்கும்

மழை நாளில்

மழை நீரில்

தன்  குஞ்சுகளுடன்

நடனமாடும்

 

இலக்கியம் அருந்தும்

மதுக் கோப்பைகளின்

மிதக்கும் நுரையில்

தாளம் போடும்

யாருமற்ற கடற்கரை ஒன்றில்

துணைவியுடன் குளிர் காற்றினூடெ

கலவி கொள்ளும்

பின்

கர்வம் கொள்ளும்

 

அது எல்லாமுமாக இருந்தது

ஒரு மேகமாக

என்னை வைத்து

மோகித்தது

 

இன்று

என் பட்டாம் பூச்சி

செத்து விட்டது

 

நெருக்கும் பின்

பரிகசிக்கும்

கேட்காவிடின்

கழுத்தை நெரிக்கும்

காலங்கள் அதைக் கொன்றதாகச்

சொல்கின்றனர்

 

கால நீட்சியினுடன்

போராட தோற்று

இவன் பட்டாம் பூச்சியை

கொன்று விட்டான் என்று

சொல்கின்றனர்

 

இவன் தீராக் காமமே

பட்டாம் பூச்சியை

வல்லுறவு கொண்டதாக

ஊரின் இருட்டு தெருக்களில்

இருக்கும் கிழவர்கள்

பேசிக் கொண்டனர்

 

பட்டாம் பூச்சிகள்

ஒரு முறை இறப்பின்

மீள திரும்புவதில்லை

என்றும்

சொல்லிக் கொள்கின்றனர்

 

----------------------------------------------------------

 

March 19, 2015 by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம் பூச்சிகள்

ஒரு முறை இறப்பின்

மீள திரும்புவதில்லை

என்றும்

சொல்லிக் கொள்கின்றனர்

 

 

விறகினில் நின்டெரியும் தீயானது

 

சாம்பலில் தங்குவதில்லை...!!

 

  • கருத்துக்கள உறவுகள்

செங்கறுப்பு பெண்களின்

கருத்த முலைக் காம்புகளின்

மீது

தீராக் காதல் கொண்டு

கவி பாடும்

சிலவேளைகளில்

சரசமாடும்

 

 

உங்கட பட்டாம்பூச்சி சரியான குறும்புக்கார பட்டாம்பூச்சியா இருந்திருக்குது.  :lol:  :icon_idea:

 

அதுசரி.. வேலைக் களைப்பாலா.. குடும்பப் பாரம் சுமக்கேலாமலா.. பட்டாம்பூச்சியை கொன்றீர்கள்..?! :)

 

என்னுடைய பட்டாம் பூச்சியின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலியை அண்மையில் தான் கொண்டாடினேன்.
 
சிறகடிக்கும் பட்டாம் பூச்சியின் நினைவுகளுடனேயே என்றும்.
 
 
காயமே..
பொய்யடா
அது....
காத்துப் போன 
ரயறடா.. 
  • கருத்துக்கள உறவுகள்

என்னுள்ளும் ஒரு பட்டாம்பூச்சி இருக்கின்றது!

 

அது உயிருடன் தான் இருக்கின்றதா அல்லது செத்துப்போய் விட்டதா என்று இன்னும் கணிப்பிட முடியவில்லை!

 

அதன் 'தாகம்' இன்னும் வற்றிப் போய் விடவில்லை!

 

ஆயினும் அது தன்னை இப்போதெல்லாம் 'அடிக்கடி' இனங்காட்டிக் கொள்வதில்லை!

 

 

 

அது,,,,,,,!

 

தூக்கம் வராத இரவுகளில்,

 

தென்னோலைளின் இடைவெளிகளின் ஊடே,

 

துருவ நட்சத்திரத்தைத் தேடுகின்றது!

 

தொலை தூரப் பயணமோ..,

 

இராக் காலத்துக் கடலின் இரவோ,

 

இல்லாவிடினும்...,

 

ஏன் தான் 'துருவ நட்சத்திரத்தை,

 

அது தேடுகின்றதோ? 

 

 

அந்தத் தேடலின் போது,

 

எனக்குத் துருவ நட்சத்திரம் காட்டிய,

 

அப்பாவின் நினைவும் வந்து போகின்றது!

 

 

அந்தப் பட்டாம்பூச்சி செத்துப் போகையில்,

 

எனது தேடலும் செத்துப் போகும்!

 

 

இன்னுமொரு காலத்தின் பிறப்பில்,

 

அந்த பட்டாம்பூச்சி உயிர்த்தெழும் !

 

 

 

நிழலி.... நெற்கொழுதாசனின் அண்மைய 'தனிமை' பற்றிய கவிதையும், உங்கள் கவிதையும்... எனது மனதை மிகவும் பாதித்துள்ளன!

 

ஒரு வேளை... கழுத்தில் சங்கிலி போட்ட மாடுகள்.. சாதாரண மாடுகளின் வாழ்க்கைக்காக ஏங்குவது போல, ஒரு 'ஏக்கம்' எமது வாழ்வில் நிரந்தரமாகக் குடி கொண்டுவிட்டது போல உள்ளது!

 

ஒரு போர்க்காலத் தலைமுறையின் மீதான 'தாக்கம்' இதுவோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது!

 

அல்லது நான் உங்கள் கவிதையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்றும் தெரியாது!

 

என்னவோ 'இழப்பு' மட்டுமே பூதாகரமாகிச் செல்வது போல ஒரு 'பிரமை"!

 

கவிதையோட்டம் வழமை போல அழகு! 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

-----

கால நீட்சியினுடன்

போராட தோற்று

இவன் பட்டாம் பூச்சியை

கொன்று விட்டான் என்று

சொல்கின்றனர்

----

 

இவன் தான்.... "கால நீட்சியுடன் போராட தோற்று, பட்டாம் பூச்சியை கொன்றுவிட்டான்" என, எண்ணுகின்றேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலியின் பட்டாம் பூச்சி இன்னும் சாகவில்லை.  அதற்கு இன்னும் உயிர்ப்பிருக்கிறது என்று காட்டுகிறது இக்கவிதை.

பட்டாம் பூச்சி பிழைத்துக்கொள்ளும்.

நல்ல கவிதை. 

வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனையைக் கிளறும் கவிதை.

வண்ணத்துப் பூச்சி என்றே எம்வழக்கில் பாவிப்பதால் பட்டாம் பூச்சி என்பதில் ஒரு அந்நியத்தன்மை தெரிந்தது. நிழலி பட்டாம் பூச்சி என்று கவிதையில் கையாண்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

2a8ep1i.jpg1z1d4ph.png

  • 3 years later...
  • தொடங்கியவர்

Facebook இல் இருக்கும் you have memories to look back on today எனும் தானியங்கி நினைவூட்டல் மூலம் நினைவூட்டப்பட்ட ஒரு கவிதை. யாழில் எழுதிய பின் 2 நாட்கள் கழிய Facebook இல் இதை பகிர்ந்து இருந்தேன். இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கின்றேன் என்ற ஒரு நினைவே எனக்கு இல்லை. கிருபன் கேட்டு இருக்கும் கேள்விக்கும் பதில் இப்ப நினைவில் இல்லை.

இப்ப இதே கவிதையை திருப்பி எழுதினால் எப்படி இருக்கும் என யோசித்து பார்க்கின்றேன். இப்படி முன்னர் எழுதிய ஒன்றை திருப்பி எழுதினால் எப்படி அமையும் என யோசித்து இருக்கிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.