Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதரவின்றி அந்தரித்தார் சூசையின் மனைவி: - அரவணைத்தார் விஜயகலா மகேஸ்வரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
soosai-wife-210315-200-seithy.jpg

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் புலம்பெயர் தமிழ்த் தேசியம் பேசும் ஆதரவாளர்களாலும் கைவிடபட்டுள்ள கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி உட்பட குடும்பத்தினருக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் விவகார பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இரகசியமாக உதவி செய்து வருவதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவியிடம் இருந்த அவர்களுக்கு சொந்தமான சிறு நிலம் ஒன்று அண்மையில் இலங்கை அரசு இராணுவ தேவைகளுக்கு அரச உடமையாகியது.

   

அதன் வர்த்தகமானி அறிவித்தலும் வெளிவந்திருந்த நிலையில் லண்டனில் வசித்துவரும் சூசையின் மனைவியின் சகோதரனால் சூசையின் மனைவி மற்றும் மகள் வாழ்வதற்கு என்று தமக்கு சொந்தமான நிலத்துண்டு ஒன்றை சன்மானமாக வழங்கி இருந்ததார். குறித்த நிலத்தை அரசுடமையாக்கியதை தொடர்ந்து சூசையின் மனைவி பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டு தனக்கு ஏற்பட்ட சிக்கலை எடுத்துக் கூறியதாக தெரிய வருகிறது.

 

விரைந்து செயற்பட்ட விஜயகலா மகேஸ்வரன் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவி புதல்வன் சுரேஸ்(22) மகள் மதி (23) உட்பட குடும்பத்தினர் மீது இலங்கை பாதுகாப்பு தரப்பினர் என சந்தேகிக்கபடுபவர்களால் தொடர்ந்து வரும் துன்புறுத்தல்களை நிறுத்துமாறு இலங்கை ஜனாதிபதியனதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

 

இதே நேரம் சூசையின் மனைவியிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலத்துண்டை மீளவும் ஒப்படைக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவி புதல்வன் சுரேஸ் மகள் மதி உட்பட குடும்பத்தினர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முற்பட்டவேளை அவர்களை கடற்படையினர் சிறைப்பிடித்து திருமலையில் கடற்படை முகாம் ஒண்றில் அடைத்து வைத்திருந்தமை குறிப்பிடதக்கது.

 

முன்னாள் போராளிகளை தீண்டத்தகாதவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்த்துவரும் நிலையில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

 

http://seithy.com/breifNews.php?newsID=128717&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்....

  • கருத்துக்கள உறவுகள்

soosai-wife-210315-200-seithy.jpg

 

முன்னாள் போராளிகளை தீண்டத்தகாதவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்த்துவரும் நிலையில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

 

http://seithy.com/breifNews.php?newsID=128717&category=TamilNews&language=tamil

 

 

செய்தி இப்படி இருக்கின்றது.

ஆனால் சுமந்திரன் வெளி நாட்டுப் பயணமே இப்படியானவர்களை எப்படிக்காப்பாற்றலாம் என்பதை ஆராய்வதற்கேயாம்

 

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி இப்படி இருக்கின்றது.

ஆனால் சுமந்திரன் வெளி நாட்டுப் பயணமே இப்படியானவர்களை எப்படிக்காப்பாற்றலாம் என்பதை ஆராய்வதற்கேயாம்

 

முன்னாள் புலிகளை சிங்கள அரசு வெளிநாடுகளிலா சிறை வைத்திருக்கிறது?

 

எது எங்கு சாத்தியம் இல்லையோ அதை பற்றி அங்கிருந்து பேசுவதே ராஜ தந்திரம்.

இதுக்குதான் படிக்க வேண்டும் என்று சொல்வது.

 

அப்படியே சுமந்திரன் வெளிநாட்டு பயணம் முடியும்போது

உகண்டா போய் தமிழர்களின் நில பறிப்பு பற்றி பேசிவிட்டு திரும்பினால் நன்றாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி இப்படி இருக்கின்றது.

ஆனால் சுமந்திரன் வெளி நாட்டுப் பயணமே இப்படியானவர்களை எப்படிக்காப்பாற்றலாம் என்பதை ஆராய்வதற்கேயாம்.

வாத்தியார்

 

ஆராய்வு

விசாரணை

அதற்கொரு கமிசன்  இதைத்தானே காலங் காலமாக காண்கிறேம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் சுமந்திரன்.. தாங்கள் சுத்தமானவை என்று சிங்களவனுக்கு நிரூபிக்க காலம் கடத்தினமே தவிர.. தமிழ் மக்களுக்கு உதவுவதாகத் தெரியவில்லை. 

 

மண்ணெண்ணை மகேஸ்வரனும் சரி.. இப்ப அவரின் மனைவியும் சரி.. ஏதோ இயன்றதை செய்ய முயல்கிறார்கள். தங்கள் வியாபாரத்தையும் பார்த்தப்படி.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரன் ஐதேக உறுப்பினராக இருந்த பொழுதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக துணிந்து குரல் கொடுத்த ஒருவர்.அவர் வழியில் அவரது மனைவியும் செயற்படுவது பாராட்டுக்குரியது.

சூசை,அவர் மனைவி இருவரையும் புலிகளில் சேர்த்துவிடடதே சுமந்திரன் தானே ?

 

அரசுடன் சேர்ந்து இருந்தால் துரோகியல்லவா ? பிறகு அவர் எப்படி  தமிழ் மக்களுக்கு உதவி செய்யலாம்  ?

இதென்னடா அதிசயமாக இருக்கு ? எல்லாம் ஏறுக்கு மாறாக இருக்கு .

சூசையின்  மனைவி  உயிருடன்  உள்ளார்  என்பது கூட  பல  இணைய  புரட்சியாளர்களுக்கு  இப்பத்தான்  தெரியும் ,அப்புறம்  எப்படி  முன்னமே உதவி  செய்வது  இனி  செய்வம்  பொறுங்கோ  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சூசையின் மனைவி உயிருடன் உள்ளார் என்பது கூட பல இணைய புரட்சியாளர்களுக்கு இப்பத்தான் தெரியும் ,அப்புறம் எப்படி முன்னமே உதவி செய்வது இனி செய்வம் பொறுங்கோ :rolleyes:

அஞ்சரன் ஏன் நீங்க உதவி செய்யலாம் தானே?

அஞ்சரன் ஏன் நீங்க உதவி செய்யலாம் தானே?

துரோகிகள்  செய்யமாட்டினம்  அதுக்கு  ஒரு  குழு  இருக்கு சுமத்திரன் பாணியில்  சொன்னால் ........கள் . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகள் செய்யமாட்டினம் அதுக்கு ஒரு குழு இருக்கு சுமத்திரன் பாணியில் சொன்னால் ........கள் . :rolleyes:

அவை செய்யிறதும் செய்யாமல் விடுவதும் அவர்கள் விருப்பம். உங்களை நீங்களே அறிந்து கொண்டது நன்று.

செய்தி இப்படி இருக்கின்றது.

ஆனால் சுமந்திரன் வெளி நாட்டுப் பயணமே இப்படியானவர்களை எப்படிக்காப்பாற்றலாம் என்பதை ஆராய்வதற்கேயாம்

 

சுமந்திரன், சம்பந்தன் ஒண்டும் செய்து கிழிக்கப்போறதில்லை. அவர்கள் தங்கடை சுகபோக வாழ்க்கையை மட்டும் தான் கண்ணும் கருத்துமா பாக்கினம். 

யாராவது தனிபட்ட முறயில் உதவினால் தன உண்டு. TNA அல்லது வேறு அரசியல் கட்சிகள் இவர்களுக்கு உதவி செய்வார்கள் என நினைக்க முடியாது.

Edited by Surveyor

சூசை,அவர் மனைவி இருவரையும் புலிகளில் சேர்த்துவிடடதே சுமந்திரன் தானே ?

அரசுடன் சேர்ந்து இருந்தால் துரோகியல்லவா ? பிறகு அவர் எப்படி தமிழ் மக்களுக்கு உதவி செய்யலாம் ?

இதென்னடா அதிசயமாக இருக்கு ? எல்லாம் ஏறுக்கு மாறாக இருக்கு .

வந்திட்டார் ஒரு புளொட் விண்ணர். முன்பு துரோகி என்று முத்திரை குத்தி எத்தனை பேரை ............. தள்ளினாரோ. ஒரத்த நாட்டில் வீரத்தை காட்டி விட்டு ஓடி வந்தவர்கள் அடக்கி வாசிப்பதும் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.