Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றோஸ் பாண்

Featured Replies

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் திருமலையை ஆட்டிப்படைத்த ராணுவ புலனாய்வாளர்களின் பெயரை ஐந்து வயது குழந்தை கூட சொல்லும்.

 

அந்த அளவுக்கு பிரபல்யம் வாய்ந்தவர்கள் பெர்னாண்டோ, பைத்துல்லா, ராஜப்த்தீன். அவர்கள் செய்த கொடுமைகள் சொல்ல இந்த கதை போதாது.

 

நிறைய குறுக்கு தெருக்களை கொண்ட திருமலை நகரின் மத்தியை நிறைந்த படையினரை கொண்டு அடைத்து விட்டு, நீல வானை கொண்டுவந்து, திருமலை மாவட்ட அடையாள அட்டை (முதலில் மஞ்சள் பின்னர் வெள்ளை) பரிசோதிக்கும் படையினரை இப்போ நினைத்தால் கூட வடிவேலு பாணியில் பில்டிங்கை ஸ்ட்ரோங் ஆக வைத்து கொண்டு பேஸ்மெண்டை நடுங்கும் பலரை இப்போதும் காணலாம்.

 

இவர்களது ஆட்டங்கள் கோலாச்சிய அந்த கால பகுதியில், திருமலை நகரின் மத்தியில் கல்லூரி வீதியையும் மூர் வீதியையும் இணைக்கும் அந்த மூலையில் இருக்கும் கோணேஸ்வரா இந்து கல்லூரியின் ஆரம்ப பாடசாலை வகுப்பறையின் கதிரைகளை இழுத்து போட்டுவிட்டு  தூங்கும் சுகமே எங்களுக்கு ஒரு தனி சுகம் தான்.

 

நாங்கள் நாலுபேர் மட்டும் தான் திருமலை நகரின் காவல் அணி. மின்மாற்றிகளை தகர்ப்பதோ,நிதி சேகரிப்போ, துரோகிகளை எச்சரிப்பதோ எல்லாம் எங்கள் நாலுபேரின் பணிகளுக்குள் தான் வரும்.

 

ஊரேல்லாம் உறங்கும் அதிகாலை மூன்று மணிக்கு தான் எங்களுக்கு சாப்பாடு. தவணை முறையில் ஆட்கள் மாறி மாறி காவல் நிற்போம். காவல் நிற்பவர்களை தவிர்த்து ஏனையவர்கள் அருகில் இருக்கும் முஸ்லிம் பேக்கரியில் போய் பாண் அல்லது கறி பணிஸ் வாங்கி வரவேண்டும்.  அந்த அதிகாலை நேரத்தில் சுட சுட வரும் ரோஸ் பாண், கறி பணிசின் சுவையே தனி சுவை. சுவைத்து பார்த்தவர்களுக்கு நான் எழுத்தில் அந்த அனுபவத்தை சொல்ல வேண்டியதில்லை.

 

அன்றும் அப்படி தான். நானும் கார்த்தீபனும் காவல் நிற்க கோகுல்ராஜ்ஜும் நியாஸும் பாண் வேண்டும் முறை. ஐம்பது ரூபாய் தாளுடன் ஆரம்ப பாடசாலை மதில் ஏறி அந்தோனியார் வீதி தாண்டினால் மூன்று நிமிட நடை தான் அந்த பேக்கரிக்கு. மதில் பாயும்போது சத்தம் கேட்காமல் இருக்க வெறும்காலுடன் வெளியே இருக்கும் மெட்ரோ (ஒறேஞ்) பேபோன் காட் போடும் தொலைபேசி கூண்டில் கால்வைத்து அருகில் ஓடும் கால்வாயின் ஓரத்தில்  இருக்கும் அழுக்கு  புற்களில் கால் பதிக்கலாம்.

 

அன்றும் கோகுல்ராஜ் மதில் மீது ஏறி தொலைபேசி கூண்டில் கால்பதிச்சு புல்லுக்கு மேலே வைக்கும் போது யாருடையதோ முதுகில் வைப்பது போன்ற உணர்வு. ச்சீ அப்படி இருக்காது என்று கொஞ்சம் ஊண்டியே காலைப்தித்து நிமிர்ந்தால் இராணுவம். மதில் நீட்டுக்கு படுத்திருந்தாங்கள். நியாஸை எச்சரிக்கை செய்யகூட அவகாசம் இல்லாமல் அவனும் சொப்பின் பையுடன் குதித்து விட்டான்.

 

உருளைக்கிழங்குவிற்கு யட்டி போட்டமாதிரி தான் கோகுல்ராஜ். அவன் துப்பாக்கி முனையில் யட்டியுடன் இருப்பதை பார்க்க நியாஸு க்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.  இராணுவத்துடன் வந்திருந்த ஈபிஆர்எல் எப் தோழர்களும் சிரித்தபடிதான் அவனிடம் கேட்டார்கள்.

 

இந்த நேரம் சொப்பின் பாக்கோட எங்கடா போறீங்கள்.

 

 

கெற்றபோல்  தடிக்கு துணி சுத்தினமாதிரி யட்டியுடன் இருந்த நியாஸ், மாலை கட்ட பூ புடுங்க வந்தனாங்கள் என்று சொல்ல வாயெடுக்கவில்லை. கோகுல்ராஜ் சொல்லிபோட்டான்.

 

நாங்கள் பாண் வேண்ட போறோம் அண்ணே.

 

யாருக்குடா புலிக்கு தானே அவனின் குரலில் மாற்றம் தெரிந்தது.

 

இல்லை அண்ணே எங்கள் இரண்டு பேருக்கும் தான். இன்னும் ஒரு வாரத்திலே பரீட்சை படிச்சு கொண்டு இருந்தனாங்கள் பசிச்சுது பாண் வேண்டுவம் என்று வந்தம்.

 

சரி ஒருத்தன் இரு. ஒருத்தன் போய் வாங்கி கொண்டு வா.

 

என்று சொல்லி முடிக்கவில்லை நியாஸ் எழும்பிவிட்டான் பையுடன்.

 

ஒரு இராணுவ வீரனின் காவலில் நியாஸ் பேக்கரிக்குள் புகும்போது வழமையான சலசலப்பு பேக்கரியினுள் இல்லை.

 

மனசை ஏதோ வருடினாலும் அங்கே  இருந்த முனீர் நானாவிடம் அண்ணே பாண் இருந்தால் தாங்கோ என்று ஐம்பது ரூபாயை நீட்டினான் நியாஸ்.

 

தம்பி உனக்கு விஷயம் தெரியாதா நாளைக்கு ரமலான் பண்டிகை நாங்கள் பாண் போடலை தம்பி.

 

எண்ட அல்லாவே...

 

அண்ணே ..இப்போ பாண் இல்லாமல் போனால் துவக்காலே அடிப்பான் என்ன இருந்தாலும் தாங்கோ அண்ணே.

 

தம்பி இண்டைக்கு பாண் போடவே இல்லை நேற்றையான் ரோஸ் பாண் இருக்கு என்று பழைய ரோஸ் பாணை சோப்பின் பாக்  நிறைய தந்து அனுப்பினார் முனீர் நானா. அன்றைக்கு அவர் தான் அல்லாவாக தெரிந்தார் நியாஸுக்கு.

 

பாண் கிடைத்த சந்தோசம் ஒரு தைரியத்தை கொடுத்தது நியாஸுக்கு, அண்ணை இப்போ ஆவது நம்புறீங்க தானே நாங்க சத்தியமா பாண் வாங்க தான் போனாங்கள் என்று   தோழரிடம் தைரியமாக சொல்லும்போதே தெரியவில்லை ஓணானை தேடி பிடிச்சு வேட்டிக்குள்ளே விடுறம் என்று.

 

இவ்வளவு பாணையும் நீங்க இரண்டு பேரும் தானா சாப்பிட போறீங்கள். பொய் சொல்லாதே புலிக்கு தானே சாப்பாடு.

 

இல்லை சத்தியமா நாங்கள் இரண்டு பேரும் தான் சாப்பிட போறோம்.

 

சரி அப்போ இங்கயே இப்பவே  சாப்பிடு.

 

 

 

 

 

 

கோகுல்ராஜ்ஜும் நியாஸும் எங்களிடம் வரும்போது விடிகாலை நாலு முப்பது, கண்கள் எல்லாம் சிவந்து அழுதது அப்படியே  தெரிந்தது.

 

 

ஒரு துண்டு கூட விடாமல் ஆறு றாத்தல் பழைய ரோஸ் பாணை துப்பாக்கி முனையில் யட்டியுடன் குந்தி இருந்து திண்டால் யாருக்கு தான் அழுகை வராது.  

 

 

 

(யாவும் கற்பனை)

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அஜித் பேக்கரி பேமஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பாணை கடையில விட்டுட்டு வந்திருக்கலாம்...!

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஒரு துண்டு கூட விடாமல் ஆறு றாத்தல் பழைய ரோஸ் பாணை துப்பாக்கி முனையில் யட்டியுடன் குந்தி இருந்து திண்டால் யாருக்கு தான் அழுகை வராது.  

------

 

ஆறு றாத்தல் பாணையும்.... சம்பல், கறி ஒண்டும் இல்லாமல் சாப்பிடுறது.... இலேசுப் பட்ட வேலை அல்ல. :D  :lol:

  • தொடங்கியவர்

இப்ப அஜித் பேக்கரி பேமஸ்.

 

நன்றி மீரா உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

 

மணிஸ் கபே நாங்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒன்று. இப்போ இருக்குதா தெரியவில்லை.

இரண்டு பாணை கடையில விட்டுட்டு வந்திருக்கலாம்...!

 

நன்றி சுவி அண்ணா. அப்போ இருந்த பதற்றத்தில் அவர்களுக்கு அது தோணவில்லை. பாணை  கண்டால் விட்டுவிடுவான்கள் என்று நம்பினார்கள்.

ஆறு றாத்தல் பாணையும்.... சம்பல், கறி ஒண்டும் இல்லாமல் சாப்பிடுறது.... இலேசுப் பட்ட வேலை அல்ல. :D  :lol:

 

நன்றி தமிழ்சிறி அண்ணா. இன்றைக்கும் அவர்களை ஞாபகபடுத்தும் ஒரு நிகழ்வாக ரோஸ் பாண் இருப்பதில் மகிழ்ச்சியே.

 

விருப்பங்களை தெரிவித்த நந்தன், இசை, நுணா, புத்தன் ஆகியோருக்கும் நன்றிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தடி சந்தியில் உள்ளதா ?

image.jpg

  • தொடங்கியவர்

இது தான் மீரா. சந்தியில் இருந்து புகையிரத நிலையம் நோக்கி செல்லும் வீதியில் இருக்கும் சனீஸ்வரன் கோவில் கூட எங்கள் சந்திப்பு இடங்களில் ஒன்றாகும். அதெல்லாம் ஒரு காலம்.நன்றி உங்கள் படத்திற்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோஸ் பாண் நல்லாயிருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

அன்றே வாசித்து விட்டேன், பகலவன்!

 

ஆனால் அப்போது எனக்கிருந்த  'கணணி வசதியில்' பச்சை போட மட்டும் தான் முடியும்!

 

உருளைக்கிழங்குக்கு 'ஜாக்கெட்' போட்ட மாதிரி...! :D

 

உங்கள் கதை பழைய 'பாண் சுவையை' நாக்கில் ஒரு நிமிடம் கொண்டு வந்து போனது என்பது மட்டும் உண்மை!

 

தொடர்ந்தும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்!

  • தொடங்கியவர்

நன்றி குசா அண்ணா மற்றும் புங்கை அண்ணா.

 

உங்கள் வருகையும் கருத்தும் என்னை மேலும் ஊக்குவிக்கின்றன.

 

விருப்புகளை வழங்கிய சுவி அண்ணா, தமிழினி ஆகியோருக்கும் நன்றிகள்.

மொறட்டுவ பஸ்ஸுக்குள்ள சிங்களபெட்டை என்டு காலச் சுறண்டினதும் இதே நியாஸுக்குத் தானோ ?  :rolleyes:
 
( அந்த திரிய தேடிப் பாத்தன். காணேல்ல..)   :unsure:
 
  • தொடங்கியவர்

உண்மை தான் ஈசன். உங்கள் ஞாபகசக்திக்கு தலை வணங்குகிறேன்.

நன்றி ஈசன்.

இதோ அந்த இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?/topic/116156-கொழும்பு-ஃபிகர்/

  • கருத்துக்கள உறவுகள்

ரோஸ்பாண் கதை நன்றாக இருக்கிறது பகலவன் சின்னவிடயங்கள்தான் கோர்வையாக்கி எழுதுவதில்தான் சுவார்சியமே அடங்கியிருக்கிறது. பாராட்டுக்கள்

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உண்மைச் சம்பவத்தை ஏன் "யாவும் கற்பனை" என்று எழுதியிருக்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.