Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகில் மயங்கிய சாமியார்: வாழ்வை தொலைத்த புதுப்பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக மாநிலத்தில் திருமணமான 3வது நாளில் ஆசிர்வாதம் வாங்க வந்த பெண்ணை, மடாதிபதி ஒருவர் பாலாத்காரம் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரா கிராமத்தை சேர்ந்த லதா (25) என்பவருக்கு, கொப்பல் அருகே ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 3–வது நாளில் லதா, தனது கணவருடன், குலதெய்வமான ராவணகி கரிபசப்பா கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் இருந்த மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.

அப்போது, லதாவின் அழகில் மயங்கிய மடாதிபதி, அவரை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், லதாவின் கணவரை, கடைக்கு சென்று பூஜைப் பொருட்களை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

அதன் பின்னர், லாதாவிடம் நான் சொல்வதை நீ கேட்டால் உனக்கு தெய்வீக சக்தி கிடைக்கும் என்று கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய கணவர், தனது மனைவியை மடத்தில் தேடியுள்ளார், அங்கு அவர் இல்லாத காரணத்தால், வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்து அவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

ஆனால், வீட்டில் லாதா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும், ஹனுமந்தப்பா பாகலியிடம் சென்று தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார்.

உடனே,மடாதிபதியும் பல பூஜைகளை நடத்தி, உனது மனைவி கொப்பல் அருகே உள்ள மாளேமல்லேஸ்வரா கோவிலில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து லதாவின் கணவர் அந்த கோவிலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு லதா தனியாக இருந்துள்ளார்.

திருமணம் ஆன 3–வது நாளிலே மாயமானதால் ஆத்திரமடைந்த கணவர், லதாவை அடித்து உதைத்து 4 நாட்களாக எங்கே சென்றாய்? என்று கேட்டு விசாரித்துள்ளார்.

தன்னை மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலி வசியம் செய்து கடத்திச் சென்று ஒரு தங்கும் விடுதியில் சிறை வைத்து 4 நாட்களாக கற்பழித்து விட்டார் என்று கூறி லதா கதறி அழுதுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கணவர் இனிமேல் நான் உன்னுடன் வாழமாட்டேன் என்று அந்த இடத்திலேயே அவரை விட்டு சென்றுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கொப்பல் மாவட்ட பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக லதா புகார் அளித்துள்ளார்.

தற்போது தலைமறைவான மடாதிபதியை பொலிசார் தேடி வருகின்றனர்

http://www.newindianews.com/

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

சாமி அருள் வாங்கப் போன லதாவுக்கு பூசாரி வரம் கொடுத்துவிட்டார்..

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான செய்தியை விட்டுப் போட்டியள், கொழும்பான்.

பொலீஸ் முறைப்பாட்டி, கணவர் விட்டிட்டு போனபடியால், சாமியாரோட சேர்த்து வைக்க கோரியுள்ளார்.

 

மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலி என்பவர் தன்னை வசியம் செய்து பலாத்காரம் செய்து விட்டார். இதை அறிந்த எனது கணவரும் என்னை கைவிட்டுவிட்டார். எனவே, மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என லதா தெரிவித்துள்ளார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரிக்க கொப்பல் புறநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கொப்பல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Thatstamil.com

இதுக்கு தான் அப்ப இருந்து கத்திறன், சாமியாராப் போறன் எண்டு!

யாரும் ஆசீர்வதித்து அனுப்பிற மாதிரி தெரியவில்லை. :D

Edited by Nathamuni

முக்கியமான செய்தியை விட்டுப் போட்டியள், கொழும்பான்.

பொலீஸ் முறைப்பாட்டிவ, கணவர் விட்டிட்டு போனபடியால், சாமியாரோட சேர்த்து வைக்க கோரியுள்ளார்.

இதுக்கு தான் அப்ப இருந்து கத்திறன், சாமியாராப் போறன் எண்டு!

யாரும் ஆசீர்வதித்து அனுப்பிற மாதிரி தெரியவில்லை. :D

கெதியில ஆச்சிரமத்த திறவுங்க

நான் சீடனா வந்திட்றன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கர்ப்பக்கிரகத்தில் காளியோடு இருப்பதைப் பார்க்க எமக்கும் ஆசைத்தான், சிலசமயம் காராக்கிரகத்தில் களியோடு இருந்தால்.... அதுதான் யோசிக்கிறம்...! இப்ப சீடனும் வந்தபடியால் அனுப்பிட வேண்டியதுதான்...!  :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சாமி அருள் வாங்கப் போன லதாவுக்கு பூசாரி வரம் கொடுத்துவிட்டார்..

 

 

அது தானே... :icon_mrgreen:

 

அது நேற்று...

அடுத்த செய்தி என்னப்பா....? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கர்ப்பக்கிரகத்தில் காளியோடு இருப்பதைப் பார்க்க எமக்கும் ஆசைத்தான், சிலசமயம் காராக்கிரகத்தில் களியோடு இருந்தால்.... அதுதான் யோசிக்கிறம்...! இப்ப சீடனும் வந்தபடியால் அனுப்பிட வேண்டியதுதான்...! :lol::D

கவித்துவமான பதில், சுவி! :D

  • கருத்துக்கள உறவுகள்

கெதியில ஆச்சிரமத்த திறவுங்க

நான் சீடனா வந்திட்றன்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் மித்திரனில் வேலை செய்துள்ளார் போல உள்ளது.:D

  • கருத்துக்கள உறவுகள்
புருஷன் அருகில் இருக்கும்போது அருள்  வேண்ட ஏன் இவர்கள்
சாமியிடம் போகிறார்கள் ??? 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் மித்திரனில் வேலை செய்துள்ளார் போல உள்ளது. :D

 

 

:lol:  :D

 

70களின் இறுதியில் மித்திரன் வாசித்த ஞாபகம். இதில் பூலான் தேவியின் வாழ்க்கை தொடர்கதையாக வரும்.
 
இவைகளும் சமூக காணப்படும் பிரச்சினகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.