Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா?

Featured Replies

1. உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா?

2. உங்கள் மனைவி ஒட்டுப்பொட்டு வைப்பதை அனுமதிப்பீர்களா?
 
குறிப்பு:
 
கவனம் இரண்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, பதில்களை வினா இலக்கத்துடன் பதியவும்

சலுகை:

ஒரு கேள்விக்கு பதில் அளிப்பவர்கள், அடுத்த கேள்விக்கு பிந்தியும் பதிலளிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

1) நாங்கள் என்ன அனுமதிக்கிறது.. அவையளே வேலை நாட்களில் வைக்கிறதில்லை.. :lol:

2) வைபவங்களுக்கு மட்டும் ஒட்டுப் பொட்டு. (கோயிலுக்குப் போனால் குங்குமப்பொட்டு..) :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

1. உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா?

2. உங்கள் மனைவி ஒட்டுப்பொட்டு வைப்பதை அனுமதிப்பீர்களா?

 

குறிப்பு:

 

கவனம் இரண்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, பதில்களை வினா இலக்கத்துடன் பதியவும்

சலுகை:

ஒரு கேள்விக்கு பதில் அளிப்பவர்கள், அடுத்த கேள்விக்கு பிந்தியும் பதிலளிக்கலாம்

 

 

உண்மையைச்சொன்னால்

அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை

பார்க்க எனக்கு நேரமில்லை...

அது அவரவர் விருப்பம்..

 

இந்தக்கேள்விக்குப்பின்னர் தான் யோசித்துப்பார்த்தேன்

வேலைக்குப்போவதால் அநேகமாக பொட்டு வைக்கமாட்டார்

எம்மவர்களின்  விழாக்களுக்கு போகும் போது மட்டும் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வார்..

 

(அநேகமாக புலம் பெயர் தேசங்களில் இது தான் நடைமுறை என நினைக்கின்றேன்)

 

ஆனால் மனைவிக்கும் பெண் பிள்ளைகளுக்கும் கடுமையான ஒரு  உத்தரவுண்டு

காதில்  தோடு போடாது எனக்கு முன்னுக்கு வரக்கூடாது

இரவு நித்திரைக்கு போகும் போது களட்டி வைத்துவிட்டாலும்

எனக்கு முன் வரும் போது போட்டுக்கொண்டு தான் வருவார்கள்..

பெண்கள் எப்பொழுதும் யொலித்துக்கொண்டிருக்கணும் என்பது என் விருப்பம்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் கட்டாயம் போட்டு வைக்க  வேண்டும் என எனது ஆதங்கத்தைத் தெரிவிக்க இருக்கின்றேன். :D

இதுக்கு எல்லாமா ஆத்துக்காரரை கேட்டிட்டு இருப்போம், தாலியையே கழட்டி வைக்க சொல்லிட்டினமாம்....

  • கருத்துக்கள உறவுகள்
பெண்கள் கலாச்சார அடையாளங்களை சுமக்கும் கழுதைகளாக இருப்பது எனக்கு ஒருபோதும் பிடிப்பதில்லை.
பொட்டு வைப்பதில் ஏதேனும் பலன் இல்லாவிடின் 
அதை சும்மா வைத்துகொண்டு திரிய வேண்டும் என்று நான் எண்ணுவதில்லை.
தலைமயிர் வளர்ப்பதிலும் எனக்கு ஒரே எண்ணம்தான்.
கட்டையான தலைமுடி கூடுதலான சுதந்திரம் என்றால் வெட்டிவிட வேண்டும்.
 
அழகுக்கு மெருக்கூட்டல் எனும் அர்த்தத்தில் 
எப்போ தேவை படுகிறதோ அப்போது வைத்து கொள்ளலாம். 

1. உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா?

 

என்னைக் கேட்டு மனைவி பொட்டு வைக்கவில்லை. பொட்டு வைத்துவிட்டு, பொட்டு வைக்காமல் விட்டால், அது நிச்சயமாக எனது மனதுக்கு கஸ்டமாகத்தான் இருக்கும். அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் இதுவரை ஏற்படவில்லை. ஏற்பட்டால் அதை என்னை உசாதீனப்படுத்துவதாகக் கருதி, அதன் எதிர்தாக்கத்தை எனது செயற்பாடுகளில் காண்பிப்பேன் என நினைக்கிறேன்.

2. உங்கள் மனைவி ஒட்டுப்பொட்டு வைப்பதை அனுமதிப்பீர்களா?

 

ஒட்டுப்பொட்டுத்தானே கெதி.. அது இப்ப நெற்றியில மட்டும் இல்லாமல், 'பாத்ரூம்' சுவரளையும் பதம் பார்க்குது.  :o  :lol: 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அழகாக தெரிகிறது. அதனால் பெண்கள் பொட்டு அணிவது அழகு என்றே படுகிறது. அழகென்று விரும்பாதவர்கள் அணிவதை தவிர்க்கலாம்.

 

மருதங்கேணி அண்ணன்.. நீங்கள் பெண்கள் மீதான கலாசார திணிப்பை எதிர்க்கிறீர்களா.. அல்லது ஒட்டுமொத்த மனித கலாசார வடிவங்களையும் எதிர்க்கிறீர்களா. அப்படி என்றால் மனிதன் உரிஞ்சு போட்டு காட்டுக்குள் தான் வாழனும். வசதி எப்படி. சும்மா... சும்மா.. வைக்கிற பொட்டிலும்.. போடுற தாலியிலும் பெண்களின்.. வீரம்.. ஆளுமை.. அடக்கப்படுகுது என்ற பசப்பு பிரச்சாரங்களில் நம்பிக்கை இல்லை.

 

எத்தனையோ முஸ்லீம் பெண்கள்.. முஸ்லிம் அடையாளத்தோடு ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள். பொட்டை கழட்டி வைச்சால்.. தாலியை கழட்டி வைச்சால் தான் மூளை சிந்திக்கும் என்று சொல்லுதா..?! விரும்பிறவை அணியலாம். விரும்பாதவை தவிர்க்கலாம். அது அவரவர் சுய விருப்பம். அதைவிட்டு பொட்டும் தாலியும் தான் பெண்களுக்கு சுமை என்பது.. சுத்தப் போலித்தனமான.. ஒரு ஆழ்ந்த சிந்தனையும் அற்ற வாதம். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்போது பொட்டுக் காலமாக்கும்.

அனுமதி கொடுக்க அடிமைகளையா தமிழ் ஆண்கள் வைத்திருக்கின்றார்கள்? இப்படியான கேள்விகளே பிழை.

  • தொடங்கியவர்

யாழில் இப்போது பொட்டுக் காலமாக்கும்.

அனுமதி கொடுக்க அடிமைகளையா தமிழ் ஆண்கள் வைத்திருக்கின்றார்கள்? இப்படியான கேள்விகளே பிழை.

வைச்சிருக்குறவைக்கு பொட்டு என்ன பூவென்ன......

இங்கு அழகான குடும்பத்தில் இருபவர்களிடம் தான் கேள்வி

தமிழ் கலாச்சாரத்தை பேணுவதே நோக்கம் ஒழிய இங்கை ஒருத்தரையும் அடிமைப்படுத்தவில்லை

அன்புக்கட்டளை என்று ஒண்டு இருக்கு தெரியுமோ?

கருத்தெளுதுவதை விட்டு தீர்ப்பு எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறேன்

 

 

 

இப்பதிவில் அழகான கருத்தெளுதிய அனைவருக்கும் நன்றிகள்...உங்களின் ஊக்கம் எங்களுக்கு தேவை

தொடர்ந்தும் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரத்தைப் பேணுகின்றோம் என்ற போர்வையில்தான் இப்படியான பிற்போக்குத்தனமான கேள்விகள் வருகின்றன.

"உங்கள் அழகான குடும்பப் பாங்கான மனைவி பொட்டு அணியாமல் இருந்தால் மனம் வருந்துவீர்களா?" என்று கேட்டிருக்கலாம். அன்புக் கணவன்களது அங்கலாய்ப்பும், உள்ளக்கிடக்கையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கும். :wub:

"அனுமதிப்பீர்களா?" என்ற கேள்வி அழகான குடும்பத்து மனைவி கணவனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்ற கருத்தை மறைமுகமாகச் முன்வைக்கின்றது. :icon_idea:

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மனைவிகளை வைத்திருப்பவர்களும், மனைவிமாரின் கட்டுப்பாட்டுக்குள் பொத்திக்கொண்டு இருப்பவர்களும், ஒருவரும் இல்லாத தனிக்கட்டைகளும் ஓடிவந்து கருத்து வைப்பார்கள் :icon_mrgreen:
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் கட்டாயம் போட்டு வைக்க  வேண்டும் என எனது ஆதங்கத்தைத் தெரிவிக்க இருக்கின்றேன். :D

 

 

சும்மா ஆதங்கத்தை வெளிப்படுத்தபோய் கடைசியில் உங்கள் நெற்றியில் இரத்த பொட்டை பெறாவிட்டால் சரி.  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுப்பொட்டுத்தானே கெதி.. அது இப்ப நெற்றியில மட்டும் இல்லாமல், 'பாத்ரூம்' சுவரளையும் பதம் பார்க்குது.  :o  :lol:

 

சோழியான்.... மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்...... இருப்பது புரிகின்றது. :D

  • தொடங்கியவர்

கலாச்சாரத்தைப் பேணுகின்றோம் என்ற போர்வையில்தான் இப்படியான பிற்போக்குத்தனமான கேள்விகள் வருகின்றன.

"உங்கள் அழகான குடும்பப் பாங்கான மனைவி பொட்டு அணியாமல் இருந்தால் மனம் வருந்துவீர்களா?" என்று கேட்டிருக்கலாம். அன்புக் கணவன்களது அங்கலாய்ப்பும், உள்ளக்கிடக்கையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கும். :wub:

"அனுமதிப்பீர்களா?" என்ற கேள்வி அழகான குடும்பத்து மனைவி கணவனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்ற கருத்தை மறைமுகமாகச் முன்வைக்கின்றது. :icon_idea:

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மனைவிகளை வைத்திருப்பவர்களும், மனைவிமாரின் கட்டுப்பாட்டுக்குள் பொத்திக்கொண்டு இருப்பவர்களும், ஒருவரும் இல்லாத தனிக்கட்டைகளும் ஓடிவந்து கருத்து வைப்பார்கள் :icon_mrgreen:

ஆம் ஒருவரும் இல்லாத தனிக்கட்டைகளுக்கும், இருந்தும் இல்லாமல் இருக்கும் தனிக்கட்டைகளுக்கும்இது குத்துவாதையா தான் இருக்கும்

நீங்கள் கூறும் வசனநடை மாற்றங்கள் வரவேற்கத்தக்கது

மற்றும்படி பின்னுக்கு நிண்டு பார்த்த ஒருபோக்கா தான் விளங்கும்.... கொஞ்சம் சுத்தி வளைச்சு பார்த்தால் எல்லாப்போக்கும் விளங்கும்

புரியாதவிடத்து பூதக்கண்ணாடியின் பிரயோகம் வரவேற்கதக்கது

பூதக்கண்ணாடி என்றவுடன் சிறிய பொட்டு ஞாபகம் வருகுறது, வேலைக்கு செல்லும் போது இதை பாவிக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அழகாக தெரிகிறது. அதனால் பெண்கள் பொட்டு அணிவது அழகு என்றே படுகிறது. அழகென்று விரும்பாதவர்கள் அணிவதை தவிர்க்கலாம்.

 

மருதங்கேணி அண்ணன்.. நீங்கள் பெண்கள் மீதான கலாசார திணிப்பை எதிர்க்கிறீர்களா.. அல்லது ஒட்டுமொத்த மனித கலாசார வடிவங்களையும் எதிர்க்கிறீர்களா. அப்படி என்றால் மனிதன் உரிஞ்சு போட்டு காட்டுக்குள் தான் வாழனும். வசதி எப்படி. சும்மா... சும்மா.. வைக்கிற பொட்டிலும்.. போடுற தாலியிலும் பெண்களின்.. வீரம்.. ஆளுமை.. அடக்கப்படுகுது என்ற பசப்பு பிரச்சாரங்களில் நம்பிக்கை இல்லை.

 

எத்தனையோ முஸ்லீம் பெண்கள்.. முஸ்லிம் அடையாளத்தோடு ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள். பொட்டை கழட்டி வைச்சால்.. தாலியை கழட்டி வைச்சால் தான் மூளை சிந்திக்கும் என்று சொல்லுதா..?! விரும்பிறவை அணியலாம். விரும்பாதவை தவிர்க்கலாம். அது அவரவர் சுய விருப்பம். அதைவிட்டு பொட்டும் தாலியும் தான் பெண்களுக்கு சுமை என்பது.. சுத்தப் போலித்தனமான.. ஒரு ஆழ்ந்த சிந்தனையும் அற்ற வாதம். :icon_idea::)

குளிர்நாட்டுக்கு வந்தாலும் பெண்கள் சேலை அணிய வேண்டும் 
ஆண்கள் வெள்ளைக்காரன் என்ன அணிகிறானோ ? அப்படியே வசதியை கைப்பற்றி விட வேண்டும் எனும் எண்ணம் 
ஒரு ஆணாதிக்க சிந்தனை.
ஏன் மேற்கு நாடுகளில் காலியான வீடுகளுக்கு பெண்கள் குளிருக்கேற்ற ஆடை அணிய முடியாது?
அல்லது ஆண்கள் எல்லோரும் வேட்டி கட்ட முடியாது ? 
 
மனிதனின் முன்னேற்றத்திற்கு எது தடையாக இருக்கிறதோ அது இடைவழியில் கைவிடபட்டே ஆகும்.
அதற்காக எல்லாம் காட்டுக்கு போக தேவை இல்லை.
பெருகிவரும் மனித இனம் 
அழிந்து வரும் இயற்கை வளங்கள்  
புதிய தொழினுட்பங்கள் என்பன 
மனித வாழ்வை வடிவமைப்பதில்  பெரும் பங்காற்றி கொண்டு இருக்கின்றன.
 
திருப்பதிக்கு ஒன்லைனில் அர்ச்சனை செய்கிறார்கள்.
நீங்கள் கிரெடிட் கார்டை இழுத்துவிட்டால் அங்கு அர்ச்சனை நடக்கும்.
மாதவிலக்கு என்று பெண்கள் அர்ச்சனை செய்யமுடியவில்லையே என்று கவலை பட தேவை இல்லை 
க்ரெடிட் கார்டு இருந்தால் ஐ போனில் பாத்ரூமில் இருந்தே இழுத்துவிடலாம். 
 
நாடு ஒத்து வராதவர்கள் காட்டு பக்கம் நகர்ந்து கொள்ளலாம் 
எல்லோரும் நகர தேவை இல்லை.
நிர்வாணமாக கொஞ்ச நேரம் அலைவதால் தமக்கு பல பாரங்கள் குறைந்து மனம் சுகம் அடைவதாக கூறிக்கொண்டு 
நிர்வாண கடற்கரைகளில் இப்போ அதிகம் பேர் கூடுகிறார்கள்.
ஆடைகளை களைந்து திரிவதால் காட்டுக்கு போக வேண்டும் என்று இல்லை.
கலாச்சாரத்தை ஒரு சுமையாக சுமக்க தொடங்கினால் 
யாரும் இறக்கி வைக்கத்தான் யோசிப்பான். 
 
ஆணோ 
பெண்ணோ 
வாழ்வை ஒரு இயல்பு நிலையில் வாழ்ந்து மகிழ்வோடு சாகவேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.
 
ஊருக்கும் பிடிக்கும் என்பதனால் 
செடில் குத்தி காவடி ஆடும் கழுதைகளாக மனிதன் இருந்தால் ...?
கடவுளுக்குதான் அவமானம்.
இதை விட சற்று கூடுதலான அறிவை இவர்களுக்கு கொடுக்க முடியாதா ?
என்று கடுவுளைதான் ஏளனமாக பார்ப்பார்கள். 
 
pb-110801-beach-crowd-7a.photoblog900_ep
  • கருத்துக்கள உறவுகள்
ஆணோ 
பெண்ணோ 
வாழ்வை ஒரு இயல்பு நிலையில் வாழ்ந்து மகிழ்வோடு சாகவேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

 

 

இந்தப் பொதுமைப்பாட்டை விட்டு விலகி பெண்கள் தான் ஏதோ எல்லா கலாசார பாரங்களையும் சுமக்கிறார்கள் என்பது போல அமைந்த தங்கள் முன்னைய கருத்தில் இருந்து பின்னையது  நிறைய திருந்தி இருக்கிறது.

 

பொட்டு தாலி.. மோதிரம்.. கூலிங்கிளாஸ்.. ஆடை... அடுப்படி.. இதெல்லாம்.. அவரவர் விருப்பு. பெண் விரும்பினால் செய்யலாம்.. இல்லது விடலாம். ஆண் விரும்பினால் செய்யலாம்.. இல்லது விடலாம்.

 

அழகாக இருக்கிறது என்று சொல்ல எல்லோருக்கும் சுதந்திரமுள்ளது. அதை ஆக்கபூர்வமாக கருத்தில் எடுக்க விரும்பிறவை எடுக்கலாம்.. இல்லது விடலாம்.

 

கடற்கரையில் காத்து வாங்க விரும்பிறவை அங்க வாங்கட்டும்.. காட்டில வாங்க விரும்பிறவை அங்க வாங்கட்டும். இதில திணிப்பு.. பாரம் என்பது எல்லாம்.. தேவையற்ற பதங்கள். உங்களுக்கு விரும்பினதை உங்கள் சொந்த சிந்தனை நிமித்த.. நீங்கள் செய்ய கடைப்படிக்க சந்தர்ப்பம் உள்ள நிலையில்.. அதைச் செய்யாமல்.. கலாசாரம் திணிக்குது.. நாகரிகம் திணிக்குது.. சமூகம் திணிக்குது என்று கூப்பாடு போடுவதில் பயனில்லை என்பது தான் எங்கள் கருத்தாக்கம் இங்கு ஆகும். ஒருவருடைய சிந்தனைக்கு செயலுக்கு.. பொட்டு தடை போட முடியாது.  :lol::D

 

  • கருத்துக்கள உறவுகள்

மருது இது ஆணாதிக்க சிந்தனை இல்லையா

image.jpg

வெள்ளையின்ட கலியாண வீட்டிற்கு இன்னும் போகல போல

சோழியான்.... மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்...... இருப்பது புரிகின்றது. :D

 

https://www.youtube.com/watch?v=NaeKkH0hPus

:o  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.