Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை! வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Featured Replies

ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாதத்தின்  இரண்டாம் வாரத்தில்  இந்தியா ஆந்திரமாநிலம்  திருப்பதிக்கு அருகில்  20 தமிழர்கள் செம்மரக் கடத்தலுடன்  தொடர்புள்ளவர்கள் என்று கூறி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம்  தொடர்பில்  இன்று நடைபெற்று வரும் 28 ஆவது வடக்கு மாகாண சபையின்  மாதாந்த கூட்டத்தில்  வடக்கு முதல்வரால்  சபையில்  எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த செயற்பாட்டிற்கு கண்டன தீர்மானமும்  நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் க.வி. விக்கினேஸ்வரன் ,

20 தமிழர்கள்  எதுவித விசாரணையும்  இன்றி சுட்டுக்கொலை செய்யப்பட்டதனால்  அங்கு தொடர் பதட்டம் நிலவியது. அத்துடன்  இவர்கள்  தமிழர்கள்  என்ற காரணத்தினால்  தானா விசாரணைகள்  மேற்கொள்ளப்படவில்லை என்றும்  சந்தேகிக்கம் எழுகின்றது.

இந்த செயற்பாடு கடந்த காலங்களில்  இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துகின்றது. எனவே இவ்வாறான செயற்பாட்டினை அப்பாவி  தமிழ் மக்கள்  மீது மிலேச்சைத்தனமான மனித உரிமை மீறல் செயற்பாட்டிற்கு வடக்கு மாகாண சபை கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

அத்துடன்  கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு அனுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும்  அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் என்றும்  அவர்  மேலும் தெரிவித்தார்.

அதே போல்  நேபாளத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இறந்த மக்களுக்கு வடக்கு மாகாண சபையில்  அஞ்சலி  செலுத்தப்படட்டது.

வடக்கு மாகாண சபையின்  28 ஆவது மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டட தொகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் அவைத்தலைவர்  சீ.வி.கே சிவஞானம்  தலைமையில் ஆரம்பமாகியது.

சபை அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் கடந்த வாரம் நேபாள நாட்டில்  இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பல ஆயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டி வடக்கு மாகாண சபையில் அனைவரும் ஏகமனதாக இறந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் நேபாள நாட்டில் இறந்த மக்களது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இரங்கலும் தெரிவித்து வடக்கு முதல்வர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/39676/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல விடயம் !

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

.. http://www.pathivu.com/news/39676/57//d,article_full.aspx

 

பரவாயில்லையே, தமிழக தமிழர்களின் விடயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்ல முன்னேற்றம்தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே, தமிழக தமிழர்களின் விடயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்ல முன்னேற்றம்தான்.

 

ஆமாங்க நம்ம ஆட்கள் டெல்லியில் யாருடன் கூட்டு வைக்கலாம் என அலைவதில் வெரி பிசி :D  :D 

ஐ சே யூ கெட் அவுட்!!

vijayakanth-delhi-press-meet-reactions%2

ஒண்ணு கவனிச்சீங்களா? அத்தனை படத்திலும் பொன்னார் ஒரே ரியாக்‌ஷன்தான்!

vijayakanth-delhi-press-meet-reactions%2

நன்றி விகடன் 

#தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க

vijayakanth-delhi-press-meet-reactions%2

சுதீஷ்: 'மச்சான்.. பப்ளிக்..பப்ளிக்

vijayakanth-delhi-press-meet-reactions%2

கோவத்த பாரு சின்ன கவுண்டருக்கு!

vijayakanth-delhi-press-meet-reactions%2

இது எல்லாத்தையும் பார்க்கும்போது நம்ம ரியாக்‌ஷன்!

vijayakanth-delhi-press-meet-reactions%2

நன்றி விகடன் 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண முதலமைச்சர் விக்கிக்கு.... நன்றி. :)

 

பரவாயில்லையே, தமிழக தமிழர்களின் விடயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்ல முன்னேற்றம்தான்.
 

 

கிண்டல் பண்ணுற மாதிரி இருக்கு... வன்னியன் சார். :rolleyes:

நாங்கள் எப்போதும், தொப்புள் கொடி உறவுகளின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே, தமிழக தமிழர்களின் விடயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்ல முன்னேற்றம்தான்.

 

தமிழ் மீது பற்று உடைய எவனும் மதுரைக்கு வந்துதானே ஆகவேண்டும்.
 
சிலரின் சில்லறை அறிவுக்கு உலகம் சுற்றுவது புரிவதில்லை.
சில்லறைகளை தவிர்த்தால் ....
மற்றவர்களுக்கு தமிழனின் பலம் பலவீனம் தெரிந்துதான் இருக்கிறது.  
  • கருத்துக்கள உறவுகள்

..கிண்டல் பண்ணுற மாதிரி இருக்கு... வன்னியன் சார். :rolleyes:

நாங்கள் எப்போதும், தொப்புள் கொடி உறவுகளின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள்.

 

கிண்டலுக்கு சொல்லவைல்லை சிறி, ஆச்சரியத்தில் சொன்னேன். :)

 

ஏன் ஈழத்தமிழர்கள் எதையுமே பாஸிடிவாக எடுத்துக்கொள்ளமாட்டேங்கிறீர்கள்? :o

 

சந்தேகக்கோடு, அது சந்தோசக்கேடு! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பம் இந்த அறிக்கையை பார்த்த பின்பாவது தமிழக அரசியல் வாதிகளுக்கு ரோசம் வருதா என ...இந்த 20 பேர் விடயத்தில் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

vijayakanth-delhi-press-meet-reactions%2

 

 

தலையெழுத்து, இந்தமாதிரி கூத்தாடிகளுக்கும் வாழ்வு, தமிழ்நாட்டில்! :(:huh:

  • கருத்துக்கள உறவுகள்

தலையெழுத்து, இந்தமாதிரி கூத்தாடிகளுக்கும் வாழ்வு, தமிழ்நாட்டில்! :(:huh:

m.g.r பார்த்து சூடு போட்ட பூனைகள் வரிசையில் இவர் கடைசி ஆள் .

இவருக்கு தேர்தலில் விழும் அடியை பார்த்து மற்ற பூனைகள் அடங்கும் இவர் திருந்துவது வலு கடினம் .

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு சிறீலங்கா கடற்படையினால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டாலும் கண்டிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  நல்ல செய்தி

 

புலமும்  தாயகமும் ஒரே கோட்டில் செல்வதை உணரமுடிகிறது...

புலமும்  தாயகமும் தமிழகமும்  ஒரே கோட்டில் செல்லணும்

அதற்கு இவை வழி வகுக்கும்..

 

நன்றி ஐயா

நீதிபதியான தங்களின் இந்த தீர்ப்பு பலரையும் மாற்றும்

மாற்றட்டும்........

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திக்கு   தமிழக செய்தி ஊடகங்கள் குடுத்த முக்கியத்தை பார்த்திர்களா ராஜவன்னியன் சார் .


அவர்களுக்கு 

மதுபோதையில் பொது நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகை ஊர்வசி.

இந்த ஒரு லைன் காணும் ஒரு கிழமைக்கு மற்ற படி தமிழாவது தமிழனாவது  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்மாதிரியான செயல்..!

இந்த செய்திக்கு தமிழக செய்தி ஊடகங்கள் குடுத்த முக்கியத்தை பார்த்திர்களா ராஜவன்னியன் சார் .

அவர்களுக்கு மதுபோதையில் பொது நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகை ஊர்வசி.

இந்த ஒரு லைன் காணும் ஒரு கிழமைக்கு மற்ற படி தமிழாவது தமிழனாவது :icon_mrgreen:

அவர்கள் தமிழக உளவுத்துறையுடன் தொடர்பில் இருப்பவர்கள்.. இந்த உளவுத்துறையை கட்டுப்படுத்துபவர்கள் இலங்கையில் சீலை விற்கும் பெரியவா.. :o:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக தமிழகம் குரல் கொடுக்கல்லையே என்று அங்கலாய்க்கும் நாம் தமிழகத்துக்கு ஒரு கோதாரியும் செய்ததில்லை. ஆனால்.. ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பாமான பின் தமிழகம் மீதான ஈழத்தமிழர் அக்கறை அதிகரித்துள்ளது. அதிலும் முள்ளிவாய்க்காலின் பின் தமிழகத்தின் முக்கியத்துவம் சரிவர உணர ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழகமும் ஈழத்தமிழர் உறவின் முக்கியம் உணர்கிறது. இந்த நிலையில் தமிழக துன்பியல் ஒன்றை இட்டு நாம் வாழாதிருந்திட முடியாது. அதற்காக குரல் எழுப்ப வேண்டிய தார்மீகக் கடமை உள்ளது.

 

வடக்கு மாகாண சபை அதைச் செய்துள்ளது. கிழக்கும் இதைச் செய்யனும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் நடந்த இந்த இலங்கையை போன்ற பாதக செயல் தமிழக தமிழர்களை வெகுண்டு எழ செய்துள்ளது. ஆனால் நான் முன்பு சொன்னது போல் ஒரு பிரச்சனைக்கு ஒரு வாரம் தான் தமிழகத்தில் சூடாக இருக்கும். அதற்கு பிறகு ஆறி போய்விடும். ஏன் என்றால் மக்கள் அவ்வளவு பிஸி போலும். ஈழ பிரச்னை போன்ற போராட்டங்களும் இதே நிலைமையை சந்தித்தது.  தமிழ் அமைப்புகள் இங்கு சரியாக ஒருங்கிணைக்க படாத நிலையில் உள்ளது. தலைவர்களும் கொஞ்சம் அதிக வேலை செய்து மக்களை சென்றடைய வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.