Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் விடுவிக்கப்பட்ட செய்தியை இன்று கேட்பீர்கள்! மக்களிடம் சம்பந்தன் உறுதி

Featured Replies

sama.jpg

 

"இராணுவத்தின் பிடியிலிருக்கும் சம்பூர் கிராமம் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டது என்ற செய்தியை (நாளை) இன்று வியாழக்கிழமை கேட்பீர்கள்." - இவ்வாறு சம்பூர் மக்களிடம் உறுதி தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன்.
 
அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திருகோணமலையின் சம்பூர் கிராமத்தை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவம் அபகரித்துள்ளது. இதனால் 818 ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களை சம்பந்தன் எம்.பி. நேற்று சந்தித்தார். இதன்போது "நாளை (இன்று) வியாழக்கிழமை ஜனாதிபதி, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் உயர்மட்ட பேச்சு இடம்பெறவுள்ளது. இதன் பின்னர் சம்பூர் விடுவிக்கப்பட்டது என்ற் செய்தியை கேட்பீர்கள். "இதற்கு நீங்கள் நடத்திய போராட்டங்களே காரணம். இந்த வார முடிவில் நீங்கள் அங்கு மீளக்குடியேற முடியும்" -என்றார்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை இந்தத் திரியை பார்வையிட மீண்டும் வருவேன்.
சம்பூர் விடுவிக்கப் பட்டிருக்கவிட்டால்... சம்மந்தனுக்கு வாயில் வந்த படி கேட்ட வார்த்தைகளால் பேசுவேன்.
அதை தாங்கிக் கொள்ள, சம்பந்தன் ரெடியாய்.... இருக்க வேணும்.

  • தொடங்கியவர்
இன்­றைய தினம் சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக ஜனா­தி­ப­தி­யுடன் உயர்மட்டப் பேச்­சு­வார்த்­தை­யொன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது முடி­வொன்றை காண்பேன் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.
 
 
சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக பட்­டித்­திடல் கிளி­வெட்டி முகாம்­களில் தங்­கி­யி­ருக்கும் சம்பூர் மக்­க­ளு­ட­னான விஷேட சந்­திப்­பொன்று நேற்­றைய தினம் இடம்­பெற்­றது. இச்­சந்திப்­பின்­போதே சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
மக்கள் மத்­தியில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
 
சம்பூர் மக்­களின் மீள்­கு­டி­யேற்றப் போராட்டம் இறு­திக்­கட்­டத்­துக்கு வந்­துள்­ளது. இது எவ்­வாறு எனில் ஓட்­டப்­பந்­த­ய­மொன்றில் முடி­வுப்­புள்­ளியை நோக்கி ஓடு­வது போன்­ற­தாகும். உங்­க­ளு­டைய போராட்­டத்­திற்கு வெற்றி கிடைத்­துள்­ளது. அடுத்த வார முதற் பகு­தியில் நீங்கள் குடி­யேற்­றப்­ப­டு­வீர்கள்.
 
நாளை (இன்று) காலை ஜனா­தி­ப­தி­யு­ட­னான உயர்­மட்­டப்­பேச்­சு­வார்த்­தை­யொன்று சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக இடம்­பெ­ற­வுள்­ளது. நாமும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்­ணான்டோ ஆகியோர் ஜனா­தி­ப­தியை சந்­திக்­க­வுள்ளோம். ஜனா­தி­ப­தி­யு­ட­னான இன்­றைய சந்­திப்பில் சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக ஒரு முடி­வைக்­காண்பேன். நீங்கள் மறு­வாரம் குடி­யேற்­றப்­ப­டு­வீர்கள். குடி­யேறும் போது நானும் அங்கு வருவேன்.
 
ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­வுக்கு அமைய நாளை அல்­லது நாளை மறு­தினம் முத­லீட்டு வல­யத்­துக்கு தாரை வார்த்­துக்­கொ­டுக்­கப்­பட்ட சம்பூர் காணி 818 ஏக்­கரும் வர்த்­த­மானி மூலம் இரத்து செய்­யப்­பட்டு பொது­மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­படும். இதே­போன்றே இவ்­வார முடி­விலோ அல்­லது அடுத்த வார முற்­ப­கு­தி­யிலோ கடற்­படை முகா­மி­ருக்கும் காணி­களும் மக்­க­ளுக்­காக விட்­டுக்­கொ­டுக்­கப்­படும்.
 
கடற்­ப­டை­யினர் கடற்­க­ரை­யண்­டிய பகு­திக்கு இட­மாறிச் செல்­ல­வி­ருக்­கி­றார்கள் என்ற நல்ல செய்­தி­யையும் உங்­க­ளுக்கு தெரி­விக்க விரும்­பு­கின்றேன். கடற்­ப­டை­யி­ன­ருக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருக்கும் காணி அரச காணியே தவிர மக்­க­ளு­டைய காணிகள் அல்ல என்­ப­தையும் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சில வாரங்­களில் கடற்­படை முகா­மி­ருந்த 237 ஏக்கர் நிலத்­திலும் மக்கள் குடி­யேற்­றப்­ப­டு­வார்கள்.
 
நீங்கள் வன்­மு­றைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றீர்கள், பல்­வேறு வித­மான கஷ்­டங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றீர்கள். உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உணவு வேண்­டு­மென்றே நிறுத்­தப்­பட்­டது அப்­ப­டி­யி­ருந்தும் உங்கள் சொந்த மண்­ணுக்கு போக வேண்­டு­மென போராடி வந்­தி­ருக்­கி­றீர்கள். நீங்கள் தொடர்ந்து போரா­டி­யதன் கார­ண­மா­கவே நல்ல முடி­வொன்று கிடைத்­தி­ருக்­கி­றது. உங்கள் உறுதி குலைந்­தி­ருக்­கு­மாயின் நீங்கள் வேறு இடத்தில் குடி­யே­றி­யி­ருப்­பீர்கள். ஆனால் நீங்கள் போராடி இன்­றைய வெற்­றியை பெற்­றி­ருக்­கி­றீர்கள்.
 
நான் சம்பூர் குடி­யேற்றம் சம்­பந்­த­மாக பாரா­ளு­மன்­றத்தில் பல­முறை இறுக்­க­மாக பேசி­யி­ருக்­கிறேன். நீங்கள் சம்பூர் மக்­களை மீள் குடி­யேற்­ற­வில்­லை­யாயின் அந்த மக்­களை ஏன் வற்­பு­றுத்­து­கி­றீர்கள் எனப் பாரா­ளு­மன்­றத்தில் கேட்­டி­ருக்­கிறேன். அப்­பொ­ழு­தெல்லாம் அர­சாங்கம் எனக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தது. சம்பூர் மக்­களை மீள்­கு­டி­யேற்­றுவோம் அவர்­களை மாற்று இடத்­துக்கு கொண்டு செல்­ல­மாட்­டோ­மென்று கூறி­னார்கள். நீங்கள் காட்டி வந்த உறு­தி­யான நிலைப்­பாடே இன்­றைய இந்த வெற்­றிக்கு கார­ண­மாக இருக்­கி­றது.
 
நீங்கள் அமைதி காக்க வேண்டும், குழப்பி விடக்­கூ­டாது, நீங்கள் உங்கள் சொந்­தக்­கா­ணியில் குடி­யேறும் காட்­சியை காண நானும் வருவேன். போராட்­டத்தின் கடை­சிக்­கட்­டத்­துக்கு வந்­தி­ருக்­கின்றோம். ஓட்­டத்தின் முடிவை எட்­டிக்­கொண்­டி­ருக்­கிறோம் என்­பதை சம்பூர் மக்­க­ளா­கிய நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த வித­மான பிரச்­சி­னைகள் வரு­கின்ற போதும் அதை ஜனா­தி­ப­தி­யுடன் பேசித்­தீர்க்க நான் தயாராக இருக்கின்றேன்.
 
சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருந்தபோதும் அதற்கு முடிவு காணப்பட்டுள்ளது. இன்றைய தினமோ நாளைய தினமோ வர்த்தமானி அறிவித்தல் மூலம் சம்பூர் விடுவிக்கப்பட்ட செய்தியை அறிவீர்கள் என சம்பந்தன் தெரிவித்தார்.
 
இவ்விஷேட சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் க. துரைரட்ணசிங்கம் பிரதேச சபை உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 

இன்றைய தினம் சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது முடிவொன்றை காண்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக பட்டித்திடல் கிளிவெட்டி முகாம்களில் தங்கியிருக்கும் சம்பூர் மக்களுடனான விஷேட சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே சம்பந்தன்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சம்பூர் மக்களின் மீள்குடியேற்றப் போராட்டம் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. இது எவ்வாறு எனில் ஓட்டப்பந்தயமொன்றில் முடிவுப்புள்ளியை நோக்கி ஓடுவது போன்றதாகும். உங்களுடைய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. அடுத்த வார முதற் பகுதியில் நீங்கள் குடியேற்றப்படுவீர்கள்.

நாளை (இன்று) காலை ஜனாதிபதியுடனான உயர்மட்டப்பேச்சுவார்த்தையொன்று சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக இடம்பெறவுள்ளது. நாமும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ ஆகியோர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளோம்.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஒரு முடிவைக்காண்பேன். நீங்கள் மறுவாரம் குடியேற்றப்படுவீர்கள். குடியேறும் போது நானும் அங்கு வருவேன்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நாளை அல்லது நாளை மறுதினம் முதலீட்டு வலயத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட சம்பூர் காணி 818 ஏக்கரும் வர்த்தமானி மூலம் இரத்து செய்யப்பட்டு பொதுமக்களுக்கு கையளிக்கப்படும்.

இதேபோன்றே இவ்வார முடிவிலோ அல்லது அடுத்த வார முற்பகுதியிலோ கடற்படை முகாமிருக்கும் காணிகளும் மக்களுக்காக விட்டுக்கொடுக்கப்படும்.

கடற்படையினர் கடற்கரையண்டிய பகுதிக்கு இடமாறிச் செல்லவிருக்கிறார்கள் என்ற நல்ல செய்தியையும் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

கடற்படையினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் காணி அரச காணியே தவிர மக்களுடைய காணிகள் அல்ல என்பதையும் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சில வாரங்களில் கடற்படை முகாமிருந்த 237 ஏக்கர் நிலத்திலும் மக்கள் குடியேற்றப்படுவார்கள்.

நீங்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள், பல்வேறு விதமான கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட உணவு வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது அப்படியிருந்தும் உங்கள் சொந்த மண்ணுக்கு போக வேண்டுமென போராடி வந்திருக்கிறீர்கள்.

நீங்கள் தொடர்ந்து போராடியதன் காரணமாகவே நல்ல முடிவொன்று கிடைத்திருக்கிறது. உங்கள் உறுதி குலைந்திருக்குமாயின் நீங்கள் வேறு இடத்தில் குடியேறியிருப்பீர்கள். ஆனால் நீங்கள் போராடி இன்றைய வெற்றியை பெற்றிருக்கிறீர்கள்.

நான் சம்பூர் குடியேற்றம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பலமுறை இறுக்கமாக பேசியிருக்கிறேன். நீங்கள் சம்பூர் மக்களை மீள் குடியேற்றவில்லையாயின் அந்த மக்களை ஏன் வற்புறுத்துகிறீர்கள் எனப் பாராளுமன்றத்தில் கேட்டிருக்கிறேன்.

அப்பொழுதெல்லாம் அரசாங்கம் எனக்கு வாக்குறுதியளித்தது. சம்பூர் மக்களை மீள்குடியேற்றுவோம் அவர்களை மாற்று இடத்துக்கு கொண்டு செல்லமாட்டோமென்று கூறினார்கள். நீங்கள் காட்டி வந்த உறுதியான நிலைப்பாடே இன்றைய இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

நீங்கள் அமைதி காக்க வேண்டும், குழப்பி விடக்கூடாது, நீங்கள் உங்கள் சொந்தக்காணியில் குடியேறும் காட்சியை காண நானும் வருவேன். போராட்டத்தின் கடைசிக்கட்டத்துக்கு வந்திருக்கின்றோம். ஓட்டத்தின் முடிவை எட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை சம்பூர் மக்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த விதமான பிரச்சினைகள் வருகின்ற போதும் அதை ஜனாதிபதியுடன் பேசித்தீர்க்க நான் தயாராக இருக்கின்றேன்.

சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருந்தபோதும் அதற்கு முடிவு காணப்பட்டுள்ளது. இன்றைய தினமோ நாளைய தினமோ வர்த்தமானி அறிவித்தல் மூலம் சம்பூர் விடுவிக்கப்பட்ட செய்தியை அறிவீர்கள் என சம்பந்தன் தெரிவித்தார்.

இவ்விஷேட சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் க. துரைரட்ணசிங்கம் பிரதேச சபை உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://www.tamilwin.com/show-RUmtyFTbSUityH.html

 

 

சம்பந்தரின் இன்றைய ஜோக்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

நாளை தெரியும்...

அண்ணாச்சி தெரியாமல் சவால் விட்டுள்ளார் ... இந்த கிழ வயதில் தேவையா ?   திண்ரமா உறங்கினாமா என்ற வழமையான வேலைகளை விட்டுட்டு அதென்ன புதுசா இந்த வெட்டி பேச்சு ..

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு உத்தரவாதம் அண்ணாச்சி காதில ஏற்கனவே விழுந்திருக்கு அதுதான் இந்த துள்ளல்.

சம்பூர் இராணுவ ஆக்கிரமிப்பு வலையம் விடுதலை பெறும்: கிழக்கு மாகாண ஆளுநர்
[ வியாழக்கிழமை, 07 மே 2015, 03:31.33 PM GMT ]
kilakku_aalunar_001.jpg
சம்பூர் கடற்படை முகாமின் பயிற்சி நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியளார்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,

திருகோணமலை மாவட்டம் சம்பூர் கடற்படை முகாமின் பயிற்சி நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

இலங்கை கடற்படையினரின் பொறுப்பில் கடற்படையினருக்கான பயிற்சி நிலையம் அமைந்திருந்த 237 ஏக்கர் காணியும் அந்தக் காணிகளின் உரிமையாளர்களான இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் திருப்பிக் கையளிக்கப்படும் எனவும் கூறினார்.

சம்பூர் கடற்படை முகாமின் பயிற்சி நிலையம் கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத் தளத்தையும் கடற்பரப்பை அண்டியதாகவும் அமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் மீள் இணைவு அல்லது இதுபோன்ற வெளிச்சக்திகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இது பெரிதும் உதவி வந்ததாகத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

http://www.tamilwin.com/

 

அப்ப இது ஆளுநரின் செல்வாக்கில் நடந்து இருக்கின்றது ... அதுகேன் இந்த துள்ளல் சம்பந்தன் அண்ணாச்சி ...
நானும் ஏதோ இவரின் வெட்டி பேச்சால் தான் எல்லாம் என்று நினைத்துவிட்டன் .....
 
ஆனாலும் இந்த துள்ளல் ரொம்ப ஓவர் அண்ணாச்சி ....
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது செய்யும்போது தட்டிக்கொடுக்க வேண்டும் என்பது எனது கொள்கை..! :D தேர்தலுக்காக என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இதில் கூட்டமைப்பு பங்காற்றியுள்ளது என்பதை நம்புகிறேன்.. வாழ்த்துக்கள் கூட்டமைப்பிற்கு..!! :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அப்பவே சொன்னமல்ல மைத்திரி வந்தால் டமிழ்ஸ்க்கு விடிவு வரும் என்று :D

நல்லது செய்யும்போது தட்டிக்கொடுக்க வேண்டும் என்பது எனது கொள்கை..! தேர்தலுக்காக என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இதில் கூட்டமைப்பு பங்காற்றியுள்ளது என்பதை நம்புகிறேன்.. வாழ்த்துக்கள் கூட்டமைப்பிற்கு..!!

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை விடுவிச்சு? எனத்தை ஆக்கிரமிச்சு? புலம்பெயர் டமில்ஸுக்கு ஒரு விடிவு வருகுதில்லையே! அதுவரை ம்கூம் நாங்க விடமாட்டம்!

  • கருத்துக்கள உறவுகள்

இது டக்கிளஸ் தேர்தலுக்கு தேர்தல்.. மணிக்கூட்டு கோபுரவீதி.. விக்ரோரியா வீதி.. வேம்படி வீதின்னு.. விடுவிச்ச கணக்கா இருக்குது. போர் முடிஞ்சு புலிகள் அழிஞ்சு 6 வருசமாகுது. இன்னும் இராணுவ இருப்பும்.. காணி பறிப்பும் விலக்கப்படல்ல. மாறாக.. இவை வாக்கு அரசியலாக பரினாம வளர்ச்சி கண்டுள்ளன. இது இன்னும் எத்தினை தேர்தலுக்கு மூலதனமாக இருக்கப் போகுதோ.. எல்லாம் அன்று தந்தை செல்வா கூப்பிட்ட ஆண்டவனுக்கே வெளிச்சம். :rolleyes::(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் ஆக்கிரமிப்பு விலகல்.. (இன்னும் முற்றாக விலகவில்லை.).. நில விடுவிப்பு என்று பரினாம வளர்ச்சி கண்டு.. வாக்கு அரசியல் மூலதனமாக்கப்பட்டு விட்டது. இது எமது நில விடுவிப்பு என்பது எனி தேர்தல் கால திருவிழா அம்சம் போலவே அமையப் போகிறது. இதனால்.. எமது நில ஆக்கிரமிப்பு விலகல் என்பது இன்னும் பல ஆண்டுகால அரசியலாக அமையப் போகிறது என்ற அபாய எச்சரிக்கையும் இதில் கலந்துள்ளது.

 

இதன் பின்னால் உள்ள அரசியலை மக்களுக்கு தெளிவுபடுத்தி.. தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு முற்றாக நிறுத்தப்பட்டு.. ஆக்கிரமிப்பு நில விடுவிப்பு என்பது எந்த முன் நிபந்தனைகளும் அரசியல் நிகழ்ச்சி நிரலும் இன்றி நடக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடம் தெளிவாக முன் வைத்து.. எமது மக்கள் சொந்த இடங்களில்.. இராணுவ ஆக்கிரமிப்பு.. இருப்பு அச்சுறுத்தல் இன்றி வாழும் சிவில் சூழலை சர்வதேச சமூகம் ஏற்படுத்திக் கொடுக்க வகை செய்ய வேண்டும்.

 

இன்றைய யாழ் பிராந்திய சிவில் அலுவலர் ஒருவரின் அறிவிப்பு.. இராணுவத்தின் மத்தியில் விடுவிக்கப்பட்ட குறிச்சிகளில் போய் இருந்து கொள்ளுங்கள். எனி அதுதான் வாழ்கை என்பது இராணுவ ஆக்கிரமிப்பை மக்கள் மத்தியில் திணித்து அதனை வழக்கப்படுத்திக் கொள்ளும்.. நில ஆக்கிரமிப்பை பல்வேறு வகைகளில் தொடரும் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கான தொடக்கமோ என்று அஞ்ச நேரிடுகிறது.

 

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சம்பந்தன் வெளிபடையாகப் பேச வாய்ப்பில்லை. ஏனெனில் அவரின் அரசியல் என்பது.. மைத்திரி நல்லாட்சி நடத்துகிறார் என்பது. அந்த வகையில்.. சிங்கள அரசுகளின் உள்நோக்கங்களுடன் கூடிய மறைமுக நகர்வுகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்க வேண்டிய பொறுப்பு.. சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு.. தமிழ் தேசிய விடுதலை முன்னணியினர் போன்ற உண்மையான தமிழ் மக்களின் விடிவில் அக்கறை கொண்டுள்ள அரசியல் தலைமைகளைச் சாரும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பேரம் பேசும் பொருறன்று..

ஒவ்வொரு பெருநாளுக்கும்

ஒவ்வொரு பிரமுகர் வரும்போதும் ஆட்களை வெளியில் விடுவது போல் இதைக்கொண்டுவரக்கூடாது

இது மக்களின் அடிப்படை மனிதஉரிமை சம்பந்தமான சிக்கலாகும்

உரிமை சார்ந்த ஒரு சிக்கலை அரசியலாக்கவதோ

அதற்குள் மக்களை முடக்குவதோ

அவர்களை அலைக்கழிப்பதோ நிறுத்தப்படணும்...

 

நல்லது நடக்கும் என நம்புவோமாக...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.